Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

December Nila and Irandil Ondru Paarthu Vidu
December Nila and Irandil Ondru Paarthu Vidu
December Nila and Irandil Ondru Paarthu Vidu
Ebook252 pages1 hour

December Nila and Irandil Ondru Paarthu Vidu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
December Nila and Irandil Ondru Paarthu Vidu

Read more from Rajeshkumar

Related to December Nila and Irandil Ondru Paarthu Vidu

Related ebooks

Related categories

Reviews for December Nila and Irandil Ondru Paarthu Vidu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    December Nila and Irandil Ondru Paarthu Vidu - Rajeshkumar

    27

    1

    தன் கல்லூரித் தோழிகளிடம் அவளது ஜோக்குகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள் ஆஷா.

    ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். ஓடிக் கொண்டிருந்தவள் சட்டென்று நின்று விட்டாள். ஏன் தெரியுமா...?

    ஏன்...?

    வாழ்க்கையோட காம்பௌண்ட் சுவர் வந்துடுச்சி...

    தோழிகள் சிரித்தார்கள்.

    இன்னொன்று...

    ஆஷா யோசித்துவிட்டு சொன்னாள். ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா... நாயை மட்டும் வளர்க்கலை. ஏன் தெரியுமா...?

    தோழிகள் விழித்து விட்டு தெரியலை என்றார்கள்.

    அந்த ஆத்தா ஏற்கனவே தெரு நாய்க்கிட்ட கடி வாங்கி தொப்புளைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுகிட்டது. நாய்ன்னா பயம்.

    சிரித்தார்கள்.

    ஆஷா தொடர்ந்து சொன்னாள்.

    ஜக்கம்மா...! போகும் போது உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன். ஏன் என்றே தெரியவில்லை...

    சாயந்தரம் வந்ததும் கண் டாக்டர்கிட்டே போலாம். இப்ப போர்க்குப் போய்ட்டு வாங்க...

    ஆஷாவும், தோழிகளும் சிரித்த சிரிப்பில்- அவர்களுக்கு பக்கத்தில் இருந்த சரக்கொன்றை மரத்திலிருந்த பூக்கள் அவசர அவசரமாய் உதிர்ந்தன.

    டீ... ஆஷா... இன்னும் சொல்லேண்டி...

    இன்னிக்கு ஸ்டாக் இவ்வளவுதான்.. நடங்க ஐஸ் க்ரீம் பார்லர்க்குப் போலாம்.

    எழுந்தார்கள்.

    இன்னிக்கு யார் வாங்கிக் குடுக்க வேண்டிய டர்ன்?

    லாவண்யா...!

    என்ன லாவ்... பணம் கொண்டு வந்திருக்கியா...?

    ம்...

    எவ்வளவு..?

    அவள் நூறு ரூபாய் நோட்டொன்றை ஜாக்கெட்டின் மடிப்பில் இருந்து எடுத்துக் காட்டினாள்.

    நோட்டை வாங்கி செக் பண்ணுடி... கிழிஞ்ச நோட்டை கொண்டு வந்திருக்கப் போறா...

    ஒருத்தி நோட்டை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதே- கல்லூரி ஆபீஸ் ப்யூன் மாரிச்சாமி குரல் கொடுத்துக் கொண்டே ஓடி வந்தான்.

    ஆஷாம்மா... ஆஷாம்மா...

    வர்றாண்டி மைக்கேல் மதன காமராஜன்...

    வழுக்கையைப் பாரு... லாமினேஷன் போட்ட மாதிரி மின்னுது...

    பாவம் வயசானவர்... ஏண்டி... கமெண்ட் பண்றீங்க?

    இவனா வயசானவன்...? சரியான ஜொள்ளு பார்ட்டி. பாய் ஸ்டூடண்ட்ஸ் வாலிபால் ஆடினா நின்று பார்க்க மாட்டான். அதே கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் ஆடட்டும்... கண்ணை இமைக்காம பார்த்துட்டு நிப்பான்...

    மாரிச்சாமி பக்கத்தில் வந்தான்.

    ஆஷாம்மா... உங்களுக்குப் போன் வந்திருக்கு.

    போனா...? யார்கிட்டயிருந்து...?

    உங்க அப்பாதான் பேசினார்... லைன்ல காத்திட்டிருக்கார். வர்றீங்களா...?

    மாரிச்சாமிக்குப் பின்னால் வேகமாகப் போனாள். மனதில் யோசனை அலைந்தது.

    ‘அப்பா எதற்காகப் போன் பண்ணியிருப்பார்...?’

    ‘அவர் இப்படி காலேஜ்க்கு போன் பண்ணுவது இரண்டாவது தடவை. ஆறு மாதங்களுக்கு முன்னால் கார் சாவியை எங்கே வைத்தாய் என்று கேட்பதற்காக போன் பண்ணினார்.’

    ‘இப்போது எதற்காக..?’

    வராந்தாவில் நடந்து ஆபீஸ் அறைக்குள் நுழைந்தார்கள். அறை வெறிச்சிட்டது. மதிய மூன்று மணி காப்பிக்காக ஊழியர்கள் காண்ட்டீனுக்கு சென்று விட்டிருந்தனர். ரிஸீவர் மேஜையில் மல்லாந்து கிடந்தது.

    ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.

    ஹலோ... டாட்..

    ஸாரி ஆஷா... பேசறது உன்னோட டாடியில்லை. உன்னோட அத்தை பெற்ற சீமந்த புத்திரன் சீனிவாசன்...

    சீனு... நீங்களா...?

    நானே தான்...

    என்ன திடீர்னு போன்..?

    தப்பா நினைச்சுக்காதே... ஆஷா...! சந்தோஷத்தை என்னால தாங்கிக்க முடியல. அதை உன்கிட்டே பகிர்ந்துட்டே ஆகணும்ங்கிற மாதிரி என் மூளைக்குள்ளே ஒரு நமைச்சல்... அதான் போன் பண்ணிட்டேன்...

    அப்படியென்ன சந்தோஷம்...?

    எனக்கு வேலை கிடைச்சுடுச்சு...

    ஈஸிட்..? எங்கே..?

    ‘கெப்ளர் டேட்டா’ங்கிற கம்பெனியில.

    அது என்ன கம்பெனி?

    கம்ப்யூட்டர்களை நிர்மாணம் பண்ற கம்பெனி. இந்தியாவில மூணே மூணு இடத்துலதான் அது மாதிரியான கம்பெனி இருக்கு. டெல்லி, பாம்பே, மெட்ராஸ்...

    உங்களுக்கு இப்ப எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு?

    டெல்லி.

    கம்பெனியில உங்க டெஸிக்னேஷன் என்ன?

    அஸிஸ்டெண்ட் என்ஜினீயர்... சம்பளம் ஸ்டாட்டிங் ஸ்கேல் எவ்வளவு தெரியுமா...?

    எவ்வளவு..?

    ஏழாயிரம்..

    அத்தைகிட்டே விஷயத்தை சொல்லிட்டீங்களா..?

    சொல்லாமே இருப்பேனா...? தபால் இப்பத்தான் வந்தது. பிரிச்சு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைப் பார்த்ததும் தூங்கிக்கிட்டிருந்த் அம்மாவை எழுப்பி நிக்க வெச்சு கால்ல விழுந்துட்டேன்... அம்மாவும் சந்தோஷத்தில திணறிப் போயிட்டாங்க...

    கங்கிராட்ஸ் சீனு... கடந்த ரெண்டு வருஷமா உங்க படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்காமே கஷ்டப்பட்டதுக்கு இப்ப பலன் கிடைச்சிருக்கு..

    அப்புறம்... ஒரு முக்கியமான விஷயம் ஆஷா...

    என்ன...?

    மாமா ஊர்ல இருக்காரா..?

    எங்கப்பா தானே..? இருக்கார்...

    ஏதோ நாக்பூர் போயிருக்கிறதாய் கேள்விப்பட்டேன்.

    ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துட்டார். நாக்பூர்ல போலீஸ் ஆபீஸர்ஸ் செமினார் நடந்தது. ரெண்டு நாள் செமினார். அட்டெண்ட் பண்ணிட்டு வந்துட்டார்...

    எங்கம்மா உங்க அப்பாவை பார்க்க வர்றாங்க...

    வரட்டும்... தங்கச்சி அண்ணனை பார்க்க வர்றதுல என்ன தடை...?

    எதுக்கு வர்றாங்க தெரியுமா..?

    எதுக்கு..?

    உன்னை எனக்குப் பெண் கேட்கத்தான்...

    ஆஷா மௌனித்தாள்.

    என்ன ஆஷா... பேச்சையே காணோம்..?

    இவ்வளவு அவசரம் தேவையா..?

    கல்யாணத்தை எப்ப வேணுமின்னாலும் வெச்சுக்கலாம். ஆனா நீ எனக்குத்தான்ங்கிற உறுதி மொழியை உங்கப்பாக்கிட்டயிருந்து- எங்கம்மா வாங்கிக்க பிரியப்படறாங்க...

    சீனு..! அப்பாவோட குணம் முன்னே மாதிரி இல்லை. இன்ஸ்பெக்டரா இருந்தப்ப மனிதர்களை நேசிப்பார். இப்ப எஸ்.பி.யானதும் பணத்தை நேசிக்கிறார். அவரைப் பார்த்து ஹேண்டில் பண்ணனும்...

    அம்மாவுக்கு அதெல்லாம் தெரியும்...

    ஒரு விஷயம் சீனு..

    என்ன..?

    என்னோட கல்யாண விஷயத்துல எங்கப்பா என்ன சொல்றாரோ... அதுதான் என்னோட முடிவும். அவரை மீறி நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்...

    அது ஏற்கெனவே நீ சொன்னது தானே...?

    ரிசீவரை வெச்சுடட்டுமா..? காலேஜ் ஆபீஸ் ஸ்டாஃப் வந்துட்டிருக்காங்க...

    சாயந்தரம் நானும் அம்மாவும் வீட்டுக்கு வர்றோம்.

    வாங்க...

    ரிசீவரை வைத்த ஆஷாவுக்கு வியர்த்திருந்தது. கர்ச்சீப்பால் முகத்தை ஒற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

    மரத்தடியில் காத்திருந்த தோழிகள் பிடித்துக் கொண்டார்கள்.

    போன்ல யாரடி...? அப்பாவா...? இல்ல அப்பாங்கிற பேர்ல எவனாவது ரோமியோவா..?

    அப்பாதான்...

    சரி... அதுக்கு ஏன் டல்லடிக்கிறே..?

    நான் உடனே வீட்டுக்குப் போயாகணும்...

    என்னடி... எனிதிங்க் சீரியஸ்...?

    சம் பர்ஸனல். நாம நாளைக்கு பார்க்கலாமா...?

    ஆஷா கிளம்பி விட்டாள்.

    அவளுடைய முதுகுக்குப் பின்னால் பேசிக் கொண்டார்கள்.

    இவளுக்கு என்னடி ஆச்சு...? பத்து நிமிஷத்துக்கு முன்னாடி லூட்டி அடிச்சவ... இப்ப சகலமும் அடங்கிப் போறா...

    போன்ல பேசினது அவ அப்பாவா இருக்காது...

    இவளை புரிஞ்சுக்கவே முடியலை...

    பேச்சுக்குரல்கள் காதில் விழுந்து கொண்டிருக்கும் போதே- ஆஷா வெளியே வந்தாள். காலியாய் போன ஆட்டோ ஒன்றை நிறுத்தினாள்.

    ஆட்டோ நின்றதும் டிரைவர் பவ்யமாய் கேட்டார்.

    அம்மா நீங்க எஸ்.பி.யோட பொண்ணுதானே?

    ஆமா...

    உட்கார்ங்கம்மா...

    உட்கார்ந்ததும் டிரைவர் ஆட்டோவைக் கிளப்பினார்.

    எங்கேம்மா போகணும்?

    பீச்சுக்கு...

    ஆட்டோ வேகம் எடுத்தது.

    பதினைந்து நிமிஷ பயணத்தில் பீச் வந்தது. மரங்கள் அடர்ந்த பகுதியாய் பார்த்து- ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள்.

    நின்றது.

    இறங்கி இருபது ரூபாயை நீட்டினாள்.

    வேண்டாம்மா...

    வாங்கிக்கங்க... அப்பாவுக்கு இப்படி ஓசி பயணம் போறது பிடிக்காது. எனக்கும் அதே பாலிஸிதான்...

    பணத்தை ஒரு பூஜை பொருள் மாதிரி வாங்கிக் கொண்டு பவ்யமாய் கேட்டார். வெயிட்டிங்க்ல இருக்கட்டுமாம்மா...?

    வேண்டாம்...

    ஆட்டோ கிளம்பிப் போனதும்- அந்த சாலையோர பூங்காவுக்குள் நுழைந்தாள். சிமெண்ட் பெஞ்ச்சுகளில் இரண்டொருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க- காலியாய் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சை ஆக்ரமித்தாள். கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து- ஒரு தாளைக் கிழித்து- ஜாக்கெட்டில் சொருகி வைத்திருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்து பிதுக்கிக் கொண்டு எழுத ஆரம்பித்தாள்.

    அன்புள்ள அப்பாவுக்கு...

    2

    விடியற்காலை ஐந்து மணி.

    எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கல்யாண மண்டபத்துக்குரிய பரபரப்போடு இருந்தது. மதுரையிலிருந்து வரும் ஒரு எக்ஸ்ப்ரஸ் ட்ரெயினை எதிர்பார்த்து- ஒரு கும்பல் காத்திருக்க - அந்த கும்பலை விட்டு ஒதுங்கி நின்றிருந்தார்கள் குமாரும், பிரமீளாவும்.

    குமாருக்கு முப்பத்தைந்து வயது வரைக்கும் சொல்லலாம். பருமன் உடம்பு. வயிறு தொந்தியாய் பரிணாமம் பெற்றிருக்க - முன் மண்டையில் முடி கொட்டி நெற்றி ஏறியிருந்தது. ஜிப்பாவும், வேஷ்டியும் அணிந்திருந்த அவன் இந்த நிமிஷம் உதட்டுக்கு சிகரெட்டைக் கொடுத்து அதை புகையாய் மாற்றிக் கொண்டிருந்தான்.

    பிரமீளாவுக்கு முப்பது வயது இருக்கலாம். ஷப்னா ஆஷ்மியை நினைவுபடுத்துகிற முகம். சேலையைக் கட்டியிருந்த விதத்தில் குடும்பப் பாங்கு தெரிந்தது. அந்நேரத்துக்கே குளித்ததுக்கு அடையாளமாய் - முகத்தில் மஞ்சளின் மினுமினுப்பு. தலையில் சின்னதாய் ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1