Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ettaavathu Yecharikkai
Ettaavathu Yecharikkai
Ettaavathu Yecharikkai
Ebook117 pages37 minutes

Ettaavathu Yecharikkai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ettaavathu Yecharikkai

Read more from Rajeshkumar

Related to Ettaavathu Yecharikkai

Related ebooks

Related categories

Reviews for Ettaavathu Yecharikkai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ettaavathu Yecharikkai - Rajeshkumar

    25

    1

    விநோத் டெலிஃபோன் டைரக்டரியில் நம்பரைப் பார்த்து ஆட்காட்டி விரலால் டயலைச் சுழற்றினான். மறுமுனையில் ரிங் போகத் துவங்கியது.

    டிசம்பர் குளிருக்கு இதமான ஜெர்கின் அணிந்திருந்த விநோத் ஆறடி உயரம் வளர்ந்து - சதை பிடிப்பான மூக்குக்குக் கீழே அடர்த்தியாக மீசை வைத்து இருந்தான். வாயில் சூயிங்கம் அரைபட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பற்றி மேலே சொல்வதற்குள் - அடுத்த முனையில் யாரோ ரிஸீவரை எடுத்தார்கள்.

    ஹலோ..!

    குரல் கேட்டதைத் தொடர்ந்து விநோத் பேச ஆரம்பித்தான்.

    இஸிட் டூ த்ரீ டபுள்ஃபைவ் ஃபோர்?

    எஸ்...

    மிஸ்டர் நாராயணன் இருக்காரா?

    ஹோல்டிங்

    நாராயணன்! நீங்க உடனே ரகுராம் டிஸ்பென்ஸரிக்கு வாங்க...

    ரகுராம் டிஸ்பென்ஸரிக்கா? எதுக்கு?

    மிஸஸ் கீதா உங்க ஒய்ஃப் தானே?

    ஆமா.

    சீக்கிரமா டிஸ்பென்ஸரிக்கு வாங்க. திரும்பவும் விநோத் சொல்ல -

    மறுமுனை நாராயணன் பதட்டமான குரலில் கேட்டார். நீங்க யார் பேசறீங்க? எங்கிருந்து பேசறீங்க? கொஞ்சம் விபரமா சொல்லுங்க...

    டிஸ்பென்ஸரியிலிருந்து தான் பேசறோம். உங்க ஒய்ஃப் கீதாவை இங்கே அட்மிட் பண்ணி இருக்கு. நான் கீதாவோட ஆபீஸ் கொலீக்.

    அ... அவளுக்கு என்னாச்சு?

    ஆபீஸ் முடிஞ்சு வர்ற வழியில ஒரு ஆக்சிடென்ட். ரோட்டை கிராஸ் பண்ணும் போது ஒரு கார் வந்து அடிச்சிருக்கு...

    கீ... கீதாவுக்கு இப்ப எப்படி இருக்கு...?

    நிலைமை ஸீரியஸ் தான். நீங்க உடனே வாங்க சொல்லிவிட்டு ரிசீவரை சாத்தினான் விநோத்.

    2

    எல்லாமே துல்லியமாய்த் திட்டமிட்டுச் செய்திருந்தான் மருது. போன விநாடி நேர்ந்த தவறு எதிர்பாராதது.

    போன மாதம் - ஜெயிலுக்குப் பின்பக்கம் தோட்டத்து மண்ணை மண்வெட்டியால் கொத்திக் கொண்டிருந்தபோதுதான் தப்பிக்கிற திட்டம் உதயமானது. மண்ணுக்கிடையே கிடைத்த அந்தத் துருப்பிடித்த சாவிதான் அவனுக்குள் உத்வேகத்தைக் கிளப்பிவிட்டிருந்தது.

    சிறையில் தினமும் ராத்திரி விளக்கணைக்கப்பட்ட பின் சுவர் மொர மொரப்பில் தேய்த்துத் தேய்த்து சாவியை, ஒரு மாதிரி ஷேப்புக்குக் கொண்டு வந்திருந்தான். ஒரு மாச உழைப்பில் ஜெயில் கதவில் தொங்குகிற பூட்டுடன் பொருந்துகிற நிலைக்கு வந்தது சாவி.

    பாரா வார்டன் கடந்து போனதும் - உள்ளிருந்தபடியே சாவியைப் பூட்டில் சிக்க வைத்து சில விநாடி போராடி - ‘க்ளக்’ என்று பூட்டு வாயைப் பிளந்ததும் வராந்தாவில் பாய்ந்து தூணுக்கு ஒதுங்கினான்.

    கான்ஸ்டபிள் சலனம்கேட்டுத் திரும்பிவரத் துவங்கியபோது தூணுக்கு அப்பால் இருந்த இருட்டுக்குள் குதித்து ஓட ஆரம்பித்திருந்தான்.

    ஏற்கெனவே தீர்மானித்து வைத்திருந்தபடி வலப்பக்க மதில் சுவர்வரை அசுர ஓட்டம்... ஓடினான். பின் சுவரில் பாய்ந்து ஓடினான்.

    ஆங்காங்கே செங்கல் உதிர்ந்திருந்த அந்த இடத்துச் சுவரில் ஓரளவு க்ரிப் கிடைத்தது. சரசரவெனத் தொற்றி மதில் சுவரின் மேற்பரப்புக்குத் தாவியபோது ஜெயிலுக்குள் பரபரப்பு அரும்பியிருந்தது.

    விளக்குகள் பட்பட்டென உயிர் பெற்று நீளமான விசில் சப்தங்கள் காற்றில் கலக்க ஆரம்பித்தன. பதட்டம் கலந்த காலடியோசைகள் தபதபவென கேட்டன.

    மதில்சுவருக்கு மறுபக்கம் குதித்து சத்தமில்லாமல் நழுவ நினைத்த மருது மறுபக்க இருட்டுக்குள் ஒரு ஜீப் நின்றிருக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மண் தரையில் குதிப்பதாக நினைத்து ஜீப் பானட்மேல் விழ - ‘தொம்’

    ஒரு பெரிய சப்தம் உற்பத்தியானது.

    ஜெயிலின் பிரதான கதவுக்கு முன்னால் நீள ரைஃபிளோடு குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்த கான்ஸ்டபிளின் கவனத்தை - குதித்த சப்தம் வெகுவாக ஈர்க்க-

    பானட் மேலே இருந்து குதித்து - மசமச உருவமாய் இருட்டில் கரைகிற மருதுவை வேகமான ஓட்டத்தில் துரத்த ஆரம்பித்தார்.

    3

    குல்ஷன்ராயின் முகத்தில் இடம்பிடித்திருந்த தடித்த கண்ணாடியும் முன்புற வழுக்கையுமே அவர் ஒரு அதிக ஐக்யூ பேர்வழி என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடும். கசங்காத சாம்பல் நிறக் கோட்டுடன் ஏ.ஸி. காரைக் கையாண்டு கொண்டிருந்தார். மிதமான வேகம்.

    சில நிமிஷ பயணத்திற்குப் பின் -

    Enjoying the preview?
    Page 1 of 1