Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Aarum Paathai Maarum!
Gangai Aarum Paathai Maarum!
Gangai Aarum Paathai Maarum!
Ebook121 pages37 minutes

Gangai Aarum Paathai Maarum!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Gangai Aarum Paathai Maarum!

Read more from Rajeshkumar

Related to Gangai Aarum Paathai Maarum!

Related ebooks

Related categories

Reviews for Gangai Aarum Paathai Maarum!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Aarum Paathai Maarum! - Rajeshkumar

    1

    கங்கா தன் மொபெட்டை அந்த பிரம்மாண்டமான காம்ப்ளக்ஸ் கட்டடத்தின் டூ-வீலர்ஸ் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே போனாள்.

    சாயந்தர நேரம். காம்ப்ளக்ஸுக்குள் ஜன வெள்ளம். பெரும்பாலும் பெண்கள். மிடிகள், சல்வார் கம்மீஸ்கள், சேலைகள். ஆண்கள் வெகு சொற்பம். போனால் போகிறதே என்று மனைவிமார்களைக் கூட்டி வந்திருந்தார்கள்.

    கங்கா லிஃப்ட்டை உபயோகப்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறினாள். பின்னால் கல்லூரி மாணவிகள் போல் தெரிந்த கும்பல் ஒன்று கலகலத்தபடி தொடர்ந்தது.

    ஏண்டி ஷோபா... இன்னிக்கு நீ என்ன பர்சேஸ் பண்ணப்போறே...?

    லிப்ஸ்டிக், ஹேர் ஆயில்... ஸ்டேஃப்ரி...

    ஜெயந்தி... நீ...?

    வட்டுடை...

    ‘பிரா’வைச் சொல்றியா...?

    ஆமா...

    இதோ பார்டி... நீ தமிழ் வாத்யாரோட பொண்ணுங்கிறதை ஒத்துக்கிறோம். அதுக்காக இப்படி போட்டு கடிக்காதே...

    டீ... கலா... நமக்கு முன்னாடி ப்ளூ கலர்ல பிரிண்டட் சில்க் ஸாரி கட்டிட்டுப் போறாளே ஒருத்தி...

    கங்கா கட்டியிருந்தது ப்ளூ கலர் பிரிண்டட் சேலைதான். தன்னைப் பற்றித்தான் ஏதோ கமெண்ட் பண்ணப்போகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட கங்கா, நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினாள்.

    அவளுக்கென்னவாம்...?

    உடம்பை எப்படி வெச்சிருக்கா பார்த்தியா...?

    இந்தி நடிகை மாதுரி தீட்சித் மாதிரி இருக்கா... வளைய வேண்டிய இடத்துல உடம்பு வளைஞ்சு... சதை பிடிக்க வேண்டிய இடத்துல பிடிச்சு சும்மா அசத்தறா...

    வயசு எவ்வளவு இருக்கும்ன்னு நினைக்கிறே...?

    மீறிப்போனா... இருபத்தியொண்ணு...

    காதுல போட்டிருக்கிற கம்மலைப் பார்த்தியா...? புது மோஸ்தர். எங்கே பண்ணினான்னு கேக்கலாமா?

    வேண்டாம் விடு...

    அவர்கள் பேசுவதையெல்லாம் - புன்னகையோடு செவிமடுத்தபடி - போய்க் கொண்டிருந்த கங்கா மூன்றாவது மாடி வந்ததும் திரும்பி - ‘புத்தகப் பிரிவு’ என்று போட்டிருந்த நீளமான வராந்தாவில் நடந்தாள். தான் அழகாய் இருப்பதற்காக கங்கா என்றைக்குமே பெருமைப்பட்டுக்கொண்டதில்லை. கண்ணாடிக்கு முன்னால் வெகுநேரம் நிற்கும் பழக்கமும் இல்லை. லேசான பௌடர் பூச்சுக்காகவும் - நெற்றியின் மையத்தில் ஸ்டிக்கர் இட்டுக் கொள்வதற்காகவும் மட்டுமே கண்ணாடி முன் நிற்பாள்.

    வராந்தாவில் நடந்து - புத்தக ஸ்டாலை நெருங்கிய விநாடி - அவள் தோள் மேல் ஒரு கை விழுந்தது.

    திரும்பினாள்.

    வினிதா நின்றிருந்தாள்.

    கல்லூரி நாட்களின் தோழி.

    ஏய்... வினி... நீயா...?

    நானே தான்...

    நீ பெங்களூர்க்குப் போய் பி.ஜி. கோர்ஸ்ல ஜாய்ன் பண்ணிட்டதா சரோஜா சொன்னா...?

    வாஸ்தவம்தான்... ஆனா அதை டிஸ்கண்ட்டினியூ பண்ண வேண்டியதாயிடுச்சு...

    ஏண்டி...?

    வா... அந்த ஐஸ்க்ரீம் ஸ்டாலுக்குப் போய் ‘டூட்டி - ஃப்ரூட்டி’ சாப்ட்டுகிட்டே பேசுவோம்...

    வராந்தாவின் மறுகோடியில் இருந்த ஐஸ்க்ரீம் பார்லரை நோக்கி மெதுவாய் நடந்து போனார்கள்.

    என்ன கங்கா...? புஸ்தகம் வாங்க வந்தியா...?

    ஆமா... லேட்டஸ்ட்டா... ஏதாவது கவிதை புஸ்தகம் வந்திருந்தா... வாங்கிட்டு போலாம்ன்னு வந்தேன்...

    காலேஜ் டேஸ்லதான் கவிதை புத்தகங்களை விழுந்து விழுந்து படிச்சிட்டிருந்தே...! இப்பவுமா...?

    கங்கா சிரித்தாள்.

    இப்பத்தான் அதிகம்... நான் ரிசப்ஷனிஸ்ட்டா வேலை பார்க்கிற அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல அவ்வளவா வேலை கிடையாது. கௌண்ட்டர்ல எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்துட்டிருக்கிறது...?

    அந்த ஹோட்டல் பேர் என்ன சொன்னே...?

    ஹோட்டல் ட்வின்க்கிள்...

    ஈக்காட்டுதாங்கலில் தானே இருக்கு...?

    ஆமா...! சிட்டியை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கிறதுனால... கூட்டம் அவ்வளவா இல்லை... ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை ஸ்மைல் பண்ணினா போதும்...

    ஐஸ்க்ரீம் பார்லர்க்குள் நுழைந்தார்கள். கூட்டம் அவ்வளவாக இல்லை. சுடிதாரில் இருந்த இரண்டு குண்டு பெண்கள் மட்டும் கோன் ஐஸ்க்ரீம் சப்பி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அறையின் மூலையில் இருந்த பாலிவினைல் நாற்காலிகளில் உட்கார்ந்து டூட்டி - ஃப்ரூட்டியை வாங்கிக் கொண்டு மர ஸ்பூனால் கொத்தினார்கள்.

    கங்கா கேட்டாள்.

    "பெங்களூருக்கு போய் பி.ஜி. கோர்ஸ்ல சேர்ந்த நீ எதுக்காக அதை டிஸ்கண்ட்டினியூ பண்ணிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1