Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irave Irave Vidiyaathey!
Irave Irave Vidiyaathey!
Irave Irave Vidiyaathey!
Ebook135 pages36 minutes

Irave Irave Vidiyaathey!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Irave Irave Vidiyaathey!

Read more from Rajeshkumar

Related to Irave Irave Vidiyaathey!

Related ebooks

Related categories

Reviews for Irave Irave Vidiyaathey!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irave Irave Vidiyaathey! - Rajeshkumar

    25

    1

    "ஹேப்பி பர்த்டே டூ யூ சுமிக்குட்டி..."

    கண் விழித்த அந்த பத்து வயது சுமிதா, தனக்கு ‘ஹேப்பி பர்த்டே’ சொன்ன அம்மா ராகினியை முறைத்தாள்.

    அப்பா ஊர்லேயிருந்து வந்தாச்சா...?

    இப்ப மணி என்னாச்சு... ஆறுதானே...? - அப்பா வர்ற சேரன் எக்ஸ்பிரஸ் எட்டு மணிக்குத்தான் சென்ட்ரலுக்கு வந்து சேரும். நீ எந்திரிச்சு குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டு ரெடியாறதுக்குள்ளே அப்பா வந்துடுவார்.

    நிஜம்மா...?

    போர்வையை உதறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் சுமிதா. முகஜாடையில் ராகினியை அப்படியே உரித்துக் கொண்டு வந்திருந்தாள். ஆனால் குணத்தில் மட்டும் அப்பா மோகன்ராஜ்.

    அம்மா...

    ம்...

    அப்பா எனக்கு பர்த்டே ப்ரஸண்ட்டா என்ன வாங்கிட்டு வருவார்...?

    எனக்கென்ன தெரியும்...?

    உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையா...?

    சொல்லலை...!

    ஊ...ஹு...ம்...

    சுமிதா தன் வலது உள்ளங்கையை நீட்டிக் கொண்டே கேட்டாள்.

    ப்ராமிஸா சொல்லலை...?

    சொல்லலை.

    பொய்யி...

    அட நிஜமாத்தான்... உங்கப்பாவுக்கு எதையுமே சர்ப்ரைஸ்ஸா பண்றதுதான் பிடிக்கும்.

    அப்பா எனக்கு என்ன ப்ரஸண்ட் பண்ணுவார்ன்னு எனக்குத் தெரியும்...

    சொல்லு பார்க்கலாம்...

    ரொம்ப நாளா நான் கேட்டுட்டு இருந்த மேஜிக் பென்ஸில் பாக்ஸ்... ஸெட்...

    பார்க்கலாம் - என்னத்தைக் கொண்டு வர்றார்ன்னு... நீ எந்திரிச்சு பல்லைத் தேய்...

    க்ளிங்.

    வாசலில் காலிங்பெல் கூப்பிட்டது.

    ராகினி வேகவேகமாய் போய் ஹாலைக் கடந்து வாசல் கதவுக்குப் போய் தாழ்ப்பாளை விலக்கினாள்.

    திறந்த கதவுக்குப் பின்னால் வேலைக்காரி ருக்மணி. இருபத்தைந்து வயது வேலைக்காரி. மாநிறமாய் இருந்தாலும் திருத்தமாய் - அழகாய் இருந்தாள். அந்நேரத்துக்கே குளித்திருந்தாள். கன்னக் கதுப்புகளில் மஞ்சளின் மினுமினுப்பு ஒட்டியிருந்தது.

    ராகினி மலர்ந்தாள்.

    பரவாயில்லையே. இன்னிக்கு வேலைக்கு ஆறு மணிக்கே வந்துட்டே... மழை கொட்டப் போகுது.

    என்னம்மா... இப்படிச் சொல்லிட்டீங்க. இன்னிக்கு நம்ம பாப்பாவுக்கு பொறந்த நாளு. அய்யா வேற ஊர்லயிருந்து வர்றார். வேலை எவ்வளவு இருக்கும்னு எனக்குத் தெரியாதா...?

    புரிஞ்சுகிட்டு வந்திருக்கியே... அது போதும்...

    பாப்பா எந்திரிச்சாச்சாம்மா...?

    இப்பத்தான் எந்திரிச்சா...

    அய்யா எத்தினி மணிக்கு வர்றாரு...?

    எட்டு மணிக்கு...! நீ வளவளன்னு பேசிட்டு இருக்காமே மொதல்ல போய் வாசலைக் கூட்டி தண்ணி தெளி...

    ருக்மணி தலையாட்டிவிட்டு உள்ளே போனாள். ராகினி மறுபடியும் படுக்கையறைக்கு வந்த போது - சுமிதா இன்னமும் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தாள். ராகினிக்கு கோபம் வந்தது.

    ஏண்டி... உன்னை பல்லைத் தேய்க்கச் சொன்னேன் இல்லையா?

    அம்மா...

    எ... ன்... ன... டி...?

    அப்பா வந்துடுவார் இல்லையா..?

    கண்டிப்பா வந்துடுவார்.

    கோயமுத்தூர்ல இருக்கிற ரகு மாமா வீட்டுக்குத்தானே போனார்?

    ஆமா...

    ரகு மாமாவுக்கு போன் பண்ணி அப்பா எந்த ட்ரெய்ன்ல புறப்பட்டார்ன்னு கேளேன்.

    அப்பாதான் முந்தாநாளே போன் பண்ணி ‘நான் சேரன்ல புறப்பட்டு வர்றேன்’னு சொன்னாரே...?

    சொன்னார்தான்... இருந்தாலும் கேளேன்...

    உனக்குப் போன் நம்பர் தெரியுமில்ல... நீயே போன் பண்ணிக் கேளு... நல்ல அப்பா பொண்ணு...

    சுமிதா கட்டிலை விட்டு இறங்கி அறையின் மூலையில் இருந்த டெலிபோனை நோக்கிப் போனாள். ரிஸீவரை எடுத்துக் கொண்டு கோயமுத்தூர்க்குரிய எஸ்.டி.டி. கோட் நெம்பரையும் - டெலிபோன் எண்களையும் - ஞாபகத்துக்கு கொண்டு வந்து கோடு பட்டன்களைத் தட்டினாள்.

    மறுமுனையில் டெலிபோன் அடித்தது. ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ...

    ஹலோ... இது ரகு அங்கிள் வீடா...?

    ஆமா...

    அங்கிள் இருக்காரா...?

    அவர் வாக் போயிருக்காரே...

    நீங்க யாரு...?

    நான் இங்கே வேலைக்காரன்... நீ யாரம்மா?

    என் பேர் சுமிதா! சென்னையிலிருந்து பேசறேன். எங்கப்பா மோகன்ராஜ், ரகு அங்கிளைப் பார்க்கிறதுக்காக கோயமுத்தூர் வந்திருந்தார். நேத்து ராத்திரி அவர் அங்கேயிருந்து புறப்பட்டிருப்பார். எந்த ரயில்ல புறப்பட்டார்ன்னு தெரியுமா...?

    தெரியாதம்மா...

    ரகு அங்கிள் எத்தனை மணிக்கு வாக் போயிட்டு திரும்புவாரு...?

    அவர் வாக் போயிட்டு - அப்படியே டென்னிஸ் கோர்ட்டுக்கு போய் விளையாடிட்டு எட்டரை மணிக்கு மேல்தான் திரும்புவாரு.

    சுமிதா ரிஸீவரை வைத்தாள்.

    ராகினி சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

    என்ன பேசிட்டியா...?

    அங்கிள் - வீட்ல இல்லேம்மா... வாக் போயிருக்காராம். எட்டரை மணிக்கு மேல்தான் வருவாராம்.

    சரி போய் குளி... உங்கப்பா எப்படியும் சேரன் எக்ஸ்பிரஸ்ல வந்துடுவார்.

    அப்பாவுக்கு ஆபீஸ்தாம்மா முக்கியம். வேற ஏதாவது ஒரு ஊர்ல வேலை இருக்கிறது ஞாபகத்துக்கு வந்துட்டா என்னை மறந்துட்டு அப்படியே கிளம்பிப் போயிடுவார்.

    "அப்படியெல்லாம் போக மாட்டார். சேரன் எட்டு மணிக்கு வரும். எட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1