Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruttil Oru Karuppu Poonai!
Iruttil Oru Karuppu Poonai!
Iruttil Oru Karuppu Poonai!
Ebook212 pages1 hour

Iruttil Oru Karuppu Poonai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Iruttil Oru Karuppu Poonai!

Read more from Rajeshkumar

Related to Iruttil Oru Karuppu Poonai!

Related ebooks

Related categories

Reviews for Iruttil Oru Karuppu Poonai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruttil Oru Karuppu Poonai! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    படித்ததில் பிடித்தது:

    நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் - இந்த நான்கு நாடுகளையும் ஒன்றாக இணைத்து ‘ஸ்காண்டி நேவியன் கண்ட்ரீஸ்’ என்று சுற்றுலாப் பயணிகள் அழைக்கிறார்கள். இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இந்த நாடுகள் உலகின் டாப்டென் பணக்கார நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது. இந்த நாடுகளில் இரவும் பகலும் சமமாய் இருப்பது இல்லை. இங்கு ராத்திரி என்பது நான்கு மணி நேரம் மட்டுமே. 20 மணி நேரம் பகலாகவே இருக்கும். அதாவது சூரியன் அதிகாலை மூன்று மணிக்கே உதிக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு ராத்திரி 11 மணி அளவில் அஸ்தமனமாகிறது. ஹோட்டல் அறைகளில் திரைச்சீலைகளை மூடிக் கொண்டுதான் தூங்க முடியும். ஒரு வருடத்தின் எல்லா மாதங்களிலும் இந்த நாடுகளைப் பார்க்க முடியாது. ஜூலை, ஆகஸ்ட்தான் ஏற்ற சீசன். வடதுருவத்தின் மிக அருகில் இருப்பதால் பிற மாதங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு இந்த நான்கு நாடுகளையும் ஒரு கனமான போர்வை போர்த்திக் கொள்ளும்.

    1

    "அனுமதி கிடைக்குமா... கிடைக்காதா?"

    கண்டிப்பாய் கிடைக்கும்.

    எனக்கென்னவோ நம்பிக்கையில்லை...! பத்திரிக்கையிலிருந்து வர்றோம்ன்னு சொன்னாலே போதும். அந்த ஜெயில் சூப்ரிண்டெண்ட் தாடியும் கமண்டலமும் இல்லாத ஒரு துர்வாசமுனிவராய் மாறிடுவார்! அவரோட ஒரு கண்ணுல அனலும் இன்னொரு கண்ணுல கனலும் பறக்கும்

    இதோ பார் கஜா...! நம்ம பத்திரிக்கைக்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு... ‘காகித ஆயுதம்’ என்கிற நம்ம பத்திரிக்கை யாரையும் காயப்படுத்தாமல் நியாயங்களை மட்டும் எடுத்துச் சொல்லுகிற பத்திரிக்கை. பத்திரிக்கை விக்கணும்ங்கிறதுக்காக இல்லாததையும் பொல்லாததையும் எழுதுற பத்திரிக்கை அல்ல. உண்மை எதுவோ அதை மட்டும் எழுதற பத்திரிக்கை...!

    பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த கஜா என்கிற அந்த முப்பது வயது இளைஞன் தனக்குப் பின்னால் உட்கார்ந்து இருந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்து பெப்பர்மின்ட் வாசனையோடு இருந்த இனியாவைத் திரும்பிப் பார்த்தான் . உதட்டோரம் ஒரு கேலியான சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் பைக்கை ஓட்ட ஆரம்பித்தான்.

    இனியா அவனுடைய முதுகில் தன் இடதுகை முஷ்டியால் ஒரு குத்து குத்தினாள். கஜா! இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

    இப்படி உண்மையை மட்டும் எழுதறதாலத்தான் நம்ம பத்திரிக்கையில் உனக்கும் எனக்கும் மூணு மாசம் சம்பள பாக்கி.

    கஜா...! இன்னிக்கு நிலைமை இப்படி இருக்கலாம். ஆனால் நாளைக்கு நம்ம பத்திரிக்கை விற்பனையில் நெம்பர் ஒன் பத்திரிக்கையாய் இருக்கும். நியாயமான விஷயங்கள் தோற்றதாய் சரித்திரம் இல்லை. வெற்றிக் கோட்டைத் தொட்டே தீரும்!

    நீ சொன்னா கண்டிப்பாய் நடக்கும். ஆனா என்ன... இன்னும் ஒரு அம்பது வருஷம் வெயிட் பண்ணனும்!

    மறுபடியும் கஜாவின் முதுகில் ஒரு குத்து விழுந்தது.

    கஜா! நீயும் நானும் இந்த ‘காகித ஆயுதம்’ பத்திரிக்கையில் ரிப்போர்ட்டர்களாய் வேலைக்கு சேரும்போது எடிட்டர் என்ன சொன்னார்?

    என்ன சொன்னார்?

    மாசம் ஒண்ணாம்தேதியானா சம்பளம் கிடைக்க இது ஒண்ணும் கவர்ன்மெண்ட் ஆபீஸ் கிடையாது. சம்பளம் கொஞ்சம் முன்னே பின்னேதான் கிடைக்கும். சில சமயம் ரெண்டு மாசம், மூணு மாசம் தள்ளிப்போகும்ன்னு சொன்னாரா இல்லையா?

    சொன்னார்.

    அப்புறம் என்ன?

    இனியா! உனக்கு இந்த பத்திரிக்கை ரிப்போர்ட்டர் வேலை ஒரு ‘டைம் பாஸ்’ வேலை. பட் எனக்கு அப்படியில்லை. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து என்னோட அண்ணன் வீட்ல தங்கியிருக்கேன். அண்ணன், அண்ணி, ரெண்டு குழந்தைகள்ன்னு இருக்கிற அந்த குடும்பத்துல நான் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ். அண்ணன் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து வாங்கற சம்பளம் வீட்டு வாடகைக்கும், வீட்டுச் செலவுகளுக்கும் சரியாய் போயிடுது. எதிர்பாராத ஒரு செலவு வந்தா அண்ணனும் அண்ணியும் படற அவஸ்தை இருக்கே... அதை என்னால கண் கொண்டு பார்க்க முடியாது. அந்த சமயத்துல என்னால அவங்களுக்கு உதவ முடியலையேன்னு நினைக்கும்போது...

    இனியா கஜாவின் இடுப்பை வலதுகையால் பிடித்துக் கொண்டு தன் இடது கை விரல்களால் அவனுடைய அடர்த்தியான தலைக்கேசத்தை கலைத்து விட்டாள்.

    புலம்பாதே...! இந்த கஷ்டமெல்லாம்.. கொஞ்ச நாளைக்குத்தான். நீ பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி ரிட்டன்ல பாஸ் பண்ணி இண்ட்டர்வ்யூவுக்கும் போயிட்டு வந்துட்டே! அதிலேயும் நீ பாஸ் பண்ணிடுவே. எப்படியும் உனக்கு அடுத்த ஆறுமாதத்துக்குள்ளே நிச்சயமாய் போஸ்டிங் போட்டுடுவாங்க... அப்புறம் உனக்கு என்ன கஷ்டம் இருக்கப் போகுது? மாசமானால் ரெவின்யூ ஸ்டாம்ப் மேல கையெழுத்துப் போட்டு கணிசமான சம்பளத்தை வாங்கப்போறே...!

    அது கனவாய் போயிடுமோன்னு பயப்படறேன்.

    கஜா! நீ என்ன சொல்றே?

    என்னதான் திறமையைக் காட்டி பாஸ் பண்ணினாலும் லோக்கல் எம்.எல்.ஏ.வுக்கு அஞ்சு லட்சம் கொடுத்தாத்தான் போஸ்டிங் போடுவாங்களாம்.

    அப்படீன்னு யார் சொன்னது?

    என்னோட ஃப்ரண்ட் ஒருத்தன்! சேதுபதின்னு பேரு. போன வருஷம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி டேலன்ட்ல பாஸ் பண்ணியும், எம்.எல்.ஏ-வுக்கு அஞ்சு லட்சம் குடுத்துத்தான் போஸ்டிங் வாங்கியிருக்கான்.

    யார் அந்த எம்.எல்.ஏ.ன்னு சொல்லு... நம்ம ‘காகித ஆயுதம்’ பத்திரிக்கையில் போட்டு கிழிச்சுடலாம்.

    நாம என்னதான் கிழிச்சாலும் ஆட்சி அவங்க கையில். நம்ம கையில் ஆதாரம் இல்லாமே எழுதினா நாமதான் மாட்டிக்கணும்! எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணனும்

    இதோ பார் கஜா! நீ பணத்தைப் பத்தி கவலைப்படாதே. நான் ஏற்பாடு பண்றேன்!

    நீ ஏற்பாடு பண்றியா... எப்படி?

    உன்னோட வருங்கால மாமனார்கிட்டேதான் கேட்கப்போறேன்!

    உன்னோட அப்பா கிட்டேயா?

    ஆமா...

    இவ்வளவு பணம் யார்க்குன்னு கேட்டா என்ன சொல்லுவே?

    உங்க வருங்கால மாப்பிள்ளைக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கப் போகுது, அதுக்காகன்னு சொல்லுவேன். என்னிக்கு இருந்தாலும் ஒரு நாள் நம்ம காதலை எங்க வீட்ல டிக்ளேர் பண்ணியாகணும். அதைக் கொஞ்சம் முன்னாடியே பண்ணிடப்போறன். அவ்வளவுதான்!

    இனியா!

    என்ன?

    உனக்கு ரொம்பவும்தான் தைரியம் ஜாஸ்தி.

    இல்லேன்னா ‘காகித ஆயுதம்’ மாதிரியான பத்திரிக்கையில் ஒரு ரிப்போர்ட்டராய் குப்பை கொட்டமுடியுமா?

    சரி! இப்போதைக்கு நம்ம சொந்தப் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு வந்த வேலையைப் பார்ப்போம். ஜெயில் காம்பௌண்ட் சுவர் வந்தாச்சு. கஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே இனியாவின் ஹேண்ட்பேக்கில் இடம் பிடித்திருந்த செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

    கஜா பைக்கின் வேகத்தைக் குறைக்க - இனியா செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

    ‘காகித ஆயுதம்’ பத்ாதிரிக்கையின் ஆசிரியர் ருத்திரமணி. செல்போனை இடது காதுக்கு ஒற்றினாள்.

    வணக்கம் ஸார்.

    என்ன இனியா! ஜெயில் சூப்பிரண்டெண்ட் வஜ்ரவேலுவை பார்த்துட்டீங்களா?

    இல்ல... ஸார்...இப்பத்தான் சிறைச்சாலை வளாகத்துக்குள்ளே நுழைஞ்சிருக்கோம். இன்னொரு பத்து நிமிஷத்துல அவரைப் பார்த்துடுவோம்.

    பொதுவாய் வஜ்ரவேலு பத்திரிக்கைகாரங்களை பார்க்க விரும்பறது இல்லை.. நீயும் கஜாவும் எப்படியாவது பேசி அனுமதி வாங்கிடுங்க.

    கண்டிப்பாய் ஸார்.

    அப்புறம்... பேச வேண்டிய விஷயத்தை பக்குவமாய்... நிதானமாய் பேசணும். அவர் கோபப்பட்டாலும் நீயும் கஜாவும் உங்க முகங்களில் கொஞ்சம் கூட கோபத்தை காட்டக்கூடாது. ஏன்னா இது ஒரு மனித உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். நம்ம பத்திரிக்கைக்கு பெருமை சேர்க்கிற விஷயமும் கூட.

    எங்களுக்குத் தெரியாதா ஸார்...? இந்த விஷயத்தை எவ்வளவு ஸ்மூத்தாய் ஹேண்டில் பண்ணனுமோ அப்படி பண்ணி ஒரு பாஸிட்டீவ் ரிசல்ட்டோட வர்றோம் ஸார்..!

    எனக்கு அந்த நம்பிக்கை இருந்ததாலத்தான் உன்னையும் கஜாவையும் அனுப்பி வெச்சேன்... வேலையை வெற்றிகரமாய் முடிச்சிட்டு வாங்க...!

    இன்னும் ஒருமணி நேரத்துல உங்களுக்கு போன் பண்றோம் ஸார். இனியா பேசிவிட்டு செல்போனை அணைத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள்.

    கஜா பைக்கை சிறைச்சாலைக்கு முன்புறம் இருந்த ஒரு மரத்துக்குக் கீழே நிறுத்திவிட்டு இனியாவிடம் கேட்டான்.

    என்ன சொல்றார் எடிட்டர்?

    "வழக்கம் போல புலம்பல்தான்.. இந்த வேலையை

    Enjoying the preview?
    Page 1 of 1