Kilakku Sivakkaiyile
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsPanchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kilakku Sivakkaiyile
Related ebooks
Poomaalai Neeye Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Thurathum Thorogangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Chinna Missdeath Rating: 5 out of 5 stars5/5Mattroru Naal Rating: 4 out of 5 stars4/5Mohana Mupathu Naal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Un Paarvai Naan Ariven Rating: 4 out of 5 stars4/5Kekkathey - Kidaikkathu! Rating: 0 out of 5 stars0 ratingsNillamal Odi vaa… Rating: 3 out of 5 stars3/5Nizhalin Kural Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Pathavi Pali! and Iruttil vaitha Kuri Rating: 0 out of 5 stars0 ratingsPaathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Viyalakkilamai Vidintha Pothu Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Murayil Maranam Rating: 0 out of 5 stars0 ratingsKuttraalathil Oru Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsEttaavathu Yecharikkai Rating: 5 out of 5 stars5/5Piragu Naan Kondren Rating: 5 out of 5 stars5/5Pagai Enakku Pagai Rating: 0 out of 5 stars0 ratingsVidupattavai Viraivil...! Rating: 5 out of 5 stars5/5Vaa En Muthal Ethiriye Rating: 5 out of 5 stars5/5Iruttil Oru Vaanampaadi Rating: 5 out of 5 stars5/5Micro Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsSnehavin Sivappu Diary Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Preethi, 545, Beach Road, Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsIndhu Maha Sarithram Rating: 0 out of 5 stars0 ratingsIranthu Kidantha Thendral! Rating: 5 out of 5 stars5/5Ithu Raathiri Neram Rating: 0 out of 5 stars0 ratingsIlamaiyil Kol Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kilakku Sivakkaiyile
0 ratings0 reviews
Book preview
Kilakku Sivakkaiyile - Rajeshkumar
19
1
கிழக்குத்திசை செம்மண் நிறத்தில் விடிந்து கொண்டிருந்த அந்த அதிகாலை வேளையில் பஸ் பூவாணி கிராமத்தைத் தொட்டது.
கண்டக்டர் குரல் கொடுத்தார்.
யார் பூவாணி கிராமம் இறங்கறது?
செண்பகராமன் சூட்கேஸை எடுத்துக் கொண்டு எழுந்தான். இருபத்தைந்து வயது இளைஞன். ஜீன்ஸ் பேண்ட்டும் பனியனும் அவனுடைய ஆறடி உயர உடம்பைக் கச்சிதமாய்க் கவ்வியிருந்தன. கழுத்தில் மினுமினுப்பான தங்கச் சங்கிலி புரண்டது.
கண்டக்டர் மறுபடியும் குரல் கொடுத்தார்.
சீக்கிரமா வாங்க ஸார்...! அன்னநடை போட்டுக்கிட்டே வந்தா எப்படி? பஸ் கிளம்ப வேண்டாமா?
செண்பகராமன் அந்த கனமான சூட்கேஸை மூச்சைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு வேகவேகமாய் வந்து பஸ்ஸை வீட்டுக் கீழே இறங்கினான்.
பஸ் கறுப்பாய் புகை தள்ளிவிட்டு பெரிதாய் இரைச்சலிட்டுக் கொண்டு நகர்ந்தது.
செண்பகராமன் சுற்றும் முற்றும் பார்த்தான். சூரியனின் இளம் மஞ்சள் வெளிச்சத்தில் கிராமம் புதிதாய் பிறந்த ஒரு குழந்தையைப் போல் அழகாய் இருந்தது. தொலைதூரத்தில் மலைகள் ஒரு யானைக்கூட்டம் மாதிரி தெரிய - கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வயல்வெளிகளும், தென்னந் தோப்புக்களும் தெரிந்தன. காற்றில் நெல் மனம்.
வயல்வெளிக்கு நடுவே ஒரு கோவிலின் கோபுரம் உச்சியில் பொன்னிறக் கலசங்களோடு மின்ன, ஒலிபெருக்கியில் திருவெம்பாவை பாட்டு சன்னமான குரலில் வழிந்து கொண்டிருந்தது.
செண்பகராமன் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு மெல்ல நடைபோட்டான். மண்ரோடு கோணல்மாணலாய் அவனைக் கூட்டிப் போயிற்று.
இரண்டு நிமிஷ நேரம் நடந்திருப்பான்.
எதிரே வைக்கோல் போரை அம்பாரமாய் ஏற்றிக் கொண்டு ஒரு மாட்டு வண்டி வந்தது.
செண்பகராமன் கைகாட்டினான்.
வண்டிக்காரரே...! ஒரு நிமிஷம் நில்லுங்க.
வண்டி நின்றது. கேட்டான்.
கிராமத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?
இங்கிருந்து சரியா ஒரு கல்லு தூரம் போகணும்.
இதே மண்ரோடுதானா?
ஆமா... ஆனா கொஞ்சதூரம் போனதுமே ஒரு வேப்பமரத்துக்குப் பக்கத்துல ரோடு பிரிஞ்சு ஒண்ணு கோணவாய்க்கல் பாளையத்துக்கு போகும். அந்த வழியா போயிடாதீங்க. வலதுகைப் பக்கமா பிரியற ரோட்ல போங்க... ஊருக்குப் போய் சேர்ந்துடலாம். நீங்க பட்டணத்திலிருந்து வர்றீங்களா...?
ஆமா...
இங்கே யாரைப் பார்க்கணும்?
பள்ளிக்கூட வாத்தியார் பெருமாளைப் பார்க்கிறதுக்காக வந்தேன்...
வண்டிக்காரன் தன் வெற்றிலைக் கறை பற்களைக் காட்டிச் சிரித்தான். "ஓ... வாத்தியாரய்யாவை பார்க்க வந்தீங்களா? அப்படீன்னா இந்த கண்மாய் ஓரமாவே அரைக் கல்லு தூரம் நடந்து போங்க. பெரிசா ஒரு ஊருணி வரும். அந்த ஊருணிக்கு தொட்ட மாதிரியே மாரியம்மன் கோவில் தெரு. தெருவுக்குள்ளே நுழைஞ்சதுமே மொத வீடு வாத்தியாரோடதுதான். அது சரி... நீங்க அவங்களுக்கு சொந்தமா?
இல்ல... இன்னிக்குதான் முதல்தடவையா அவரைப் பார்க்க வர்றேன்
சொல்லிவிட்டு விறுவிறுவென்று கண்மாய்க்கரை ஓரமாய் நடக்க ஆரம்பித்தான் செண்பகராமன். கண்மாய்க்கரை ஓரமாய் வளர்ந்திருந்த வேப்பமரங்கள் காற்றுக்குக் கிளைகளை அசைத்துக் கொண்டிருக்க பறவைகள் இரைச்சலோடு பறப்பதும் உட்கார்வதுமாய் இருந்தது.
கண்மாயில் தண்ணீர் காரட் நிற சூரிய கிரணங்களை வாங்கிப் பிரதிபலித்தது. பெண்கள் மார்பு வரைக்கும் ஏற்றிக் கட்டிய சேலைகளோடு மஞ்சள் தேய்த்து சர்வ ஜாக்கிரதையாய் குளியலை நடத்திக் கொண்டிருக்க - ஆண்கள் உழவு மாடுகளை ஒட்டிக் கொண்டு வயல்வெளிகளை நோக்கி நடந்தார்கள்.
செண்பகராமனுக்கு, சுவாசிக்கிற அந்த கிராமத்துக்கு காற்று நுரையீரல்கள் வரைக்கும் போய் இனித்தது. இந்தக் காலை நேரங்களை தரிசிப்பதற்காகவே இந்த கிராமத்தில் நிரந்தரமாய் தங்கிவிடலாம் போல் இருக்கிறதே...!
அரை கிலோ மீட்டர் தூரம் நடந்ததில் கண்மாய் முடிந்து போயிருக்க, ஒழுங்கில்லாத ஒரு வட்டத்தோடு ஊருணி வந்தது. ஊருணியைச் சுற்றிலும் வீடுகள். வீட்டு வாசல்களில் பெரிது பெரிதாய் கோலங்கள். பிடித்து வைக்கப்பட்ட சாணி உருண்டைகளில் பூசணிப் பூக்கள்.
செண்பகராமன் நடந்தான்.
பனை ஓலைகள் வேய்ந்த ஒரு டீக்கடை பாயிலர் கணப்போடு வந்தது. பால்கேனை இறக்கி வைத்துக் கொண்டிருந்த ஒரு நபரிடம் கேட்டான்.
மாரியம்மன் கோவில் தெரு எதுங்க?
அவன் செண்பகராமனை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் அதான்
என்று வலது பக்கமாய் கை காட்டிவிட்டு மறுபடியும் பால்கேனில் கையை வைத்தான்.
அவன் கைகாட்டிய பக்கம் போனான் செண்பகராமன். வரட்டி தட்டிக் கொண்டிருந்த பெண்கள் அவனை ஒரு ஆச்சர்யப் பார்வை பார்த்துக் கொண்டு சிரிக்க - மாரியம்மன் கோயிலுக்குப் போகும் வழி என்று சொன்ன போர்டுக்குக் கட்டுப்பட்டு உள்ளே போனான்.
கம்பி வலை ஜன்னலோடும் மல்லிகைப் பந்தல் வாசலோடும் அந்த முதல்வீடு கண்களுக்குக் கிடைக்க செண்பகராமன் நின்றான்.
'வாத்தியார் பெருமாள் வீடு இதுவாகத்தான் இருக்கணும்!"
மனசுக்குள் தீர்மானித்துக் கொண்டவனாய் வேலிப்படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே போனான்.
வாசல் திண்ணையில் கம்பளியைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு கிழவி வீட்டுக்குள்ளே எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
பச்சையம்மா... யாரோ வந்துருக்காங்க. வந்து என்னன்னு கேளு... பட்டணத்துக்காரர் மாதிரி தெரியுது. காது எனக்கு ஒழுங்கா இருந்தா நானே கேப்பேன்...
செண்பகராமன் தயங்கிக் கொண்டு நிற்க அந்த முப்பது வயது பச்சையம்மா பளிச்சென்ற குங்குமப் பொட்டோடு உள்ளே இருந்து எட்டிப் பார்த்தாள்.
ஆரது?
செண்பகராமன் உரக்கக் கேட்டான்.
இது வாத்தியார் பெருமாள் வீடுதானே?
ஆமா...
அவரைப் பார்க்கணும்.
நீங்க?
நான் பட்டணத்திலிருந்து வர்றேன். என் பெயர் செண்பகராமன். எனக்கு அவர் ஒரு லெட்டர் போட்டிருந்தார். நான் ஒரு பத்திரிகைக்காரன்.
உள்ளார வந்து உக்கார்ங்க.
செண்பகராமன் வாசற்படி ஏறி தயக்கமாய் உள்ளே போய் நீளமாய் போட்டிருந்த ஒரு மரப் பெஞ்சில் உட்கார்ந்தான். அந்தச் சிறிய அறை கஷ்டப்பட்டு ஒரு வரவேற்பறையாக மாறியிருந்தது. சுவரில் நிறைய போட்டோக்கள். காலண்டரில் கற்பக விநாயகர்.
உள்ளறையில் பச்சையம்மா குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
என்னங்க... பட்டணத்திலிருந்து யாரோ உங்களை பார்க்க வந்திருக்காங்க... எந்திரிங்க...
யாருன்னு கேட்டியா?
கேட்டேன்ங்க. பத்திரிகைக்காரராம்.
கட்டில் இழுபடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து இரண்டு