Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodu Thandathey!
Kodu Thandathey!
Kodu Thandathey!
Ebook160 pages49 minutes

Kodu Thandathey!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kodu Thandathey!

Read more from Rajeshkumar

Related to Kodu Thandathey!

Related ebooks

Related categories

Reviews for Kodu Thandathey!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kodu Thandathey! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    காதலிப்பவர்களுக்கு மட்டும்:

    காதல் மொழி வலி -1

    * காதல் தோல்வியின் சின்னம் என்ன?

    ** தாஜ்மஹால்.

    * காதல் வெற்றியின் சின்னம்?

    ** இதுவரை இல்லை.

    * என்ன காரணம்?

    ** ஜெயித்தவன் காதலை மதிப்பதில்லை.

    தோற்றவன் காதலை மறப்பதில்லை.

    1

    வெற்றிகரமாய் ஆப்ரேஷன் ஒன்றை முடித்துவிட்டு டாக்டர் தனஞ்செயன் தன்னுடைய அறைக்கு திரும்பியபோது அந்தப் பெண் சுவரோரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.

    அந்தப் பெண்ணுக்கு ஐம்பது வயது இருக்கலாம். அவிழ்ந்த கூந்தல்; அழுத கண்கள். உடம்பு ஒரு நடுக்கத்துக்கு உட்பட்டு இருந்தது.

    டாக்டரைப் பார்த்ததும் அவள் ஓடிவந்து அவருடைய கால்களில் விழுந்தான். அய்யா! டாக்டர் அய்யா... எம்புள்ளையைக் காப்பாத்துங்கய்யா... எனக்கு அவன் ஒரே புள்ளை...!

    டாக்டர் தனஞ்செயன் பக்கத்தில் இருந்த நர்ஸைப் பார்த்தார். யார் இந்த அம்மா...?

    டாக்டர்...! ரெண்டு நாளைக்கு முன்னாடி ரயில்ல அடிபட்டு இப்போ ஐ.ஸி.யூ.வில் இருக்கிற அந்த இளைஞனோட அம்மாதான் இவங்க. பையன் வெளியூர் போயிருக்கான்னு நினைச்சு தேடாமே இருந்திருக்காங்க. இன்னிக்குத்தான் விபரம் தெரிஞ்சு வந்து இருக்காங்க...

    டாக்டர் அந்த அம்மாவை ஏறிட்டார்.

    உங்க பேர் என்னம்மா...?

    மரகதம்...

    பையன் பேரு...?

    ராமராஜ்...

    அவனுக்கு வயசு என்ன...?

    "இருபத்தஞ்சய்யா... வேலை வெட்டி இல்லாமே ஊரைச் சுத்திகிட்டு இருந்தான். அவன் திருப்பூர்லதான் இருப்பான்னு நினைச்சுட்டு இருக்கும்போது இன்னிக்கு காத்தால ராமராஜோட ஃப்ரண்ட் ஜப்பார் ஓடி வந்து பேப்பரைக் கொண்டாந்து காட்டினான். ‘ரெயிலில் அடிபட்டு உயிர்க்கு போராடும் இந்த வலிபர் யார்? போலீஸ் தீவிர விசாரணை’ என்ற செய்திக்குக் கீழே இருந்த என் மகனோட போட்டோவைப் பார்த்ததும் அப்படியே அதிர்ந்து ஆடிப் போயிட்டேன்யா... ஆஸ்பத்திரிக்கு ஓடியாந்து மகனைப் பார்க்க வந்தேன். உள்ளே விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க."

    தனஞ்செயன் அவளைக் கையமர்த்தினார். இதோ பாரம்மா...! உன்கிட்டே இப்பவே உண்மையைச் சொல்லிடறேன். உன்னோட பையனுக்குத் தலையில் அடிபட்டதால மூளை செயல் இழந்து போச்சு. அதாவது மூளை செத்துப்போச்சு. ஆனா உடம்போட மத்த உறுப்புகள் எல்லாம் இயங்கிட்டிருக்கு. இதயம் துடிக்குது, சிறுநீரகம் வேலை செய்யுது. அதனால அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. இனிமே நாங்க செய்யக்கூடிய ஒரே வேலை அவனோட அந்த உறுப்புகளை எடுத்து அந்த உறுப்புகள் தேவைப்படற வேற நோயாளிகளுக்கு பொருத்தி அவங்களோட உயிர்களைக் காப்பாத்தறதுதான். அம்மாக்காரியான நீ சம்மதம்னு சொல்லி கையெழுத்து போட்டுட்டியானா...

    டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த அம்மாள் அப்படியே மயங்கி சுவரோரமாய் சரிந்தாள்.

    தனஞ்செயன் நர்ஸிடம் திரும்பினார். சிஸ்டர்! ஃபர்ஸ்ட் எய்ட் கொடுத்து அந்த அம்மாவுக்கு மயக்கம் தெளிய வை. சாப்பிட டீயோ காப்பியோ குடு... அப்புறமா அந்த அம்மாவ நம்ம ஹாஸ்பிடலோட கவுன்ஸிலிங் செல்லுக்கு கூட்டிட்டு போய் அவளோட மகனுக்கு ஏற்பட்டிருக்கிற மூளை மரணத்தைப் பற்றி சொல்லி உறுப்புதானம் பண்றதைப் பத்தி விளக்கி ஒரு ப்ரீப் கவுன்ஸிலிங் கொடுக்க சொல்லு...

    எஸ்... டாக்டர்...!

    டாக்டர் வெளியே வர - இன்ஸ்பெக்டர் தாமரைச்சந்திரன் எதிர்பட்டார். ஹலோ... குட் மார்னிங் டாக்டர்...

    குட்மார்னிங்!

    அந்த அம்மாவைப் பார்த்தீங்களா?

    ம்... பார்த்தேன்... பையனோட நிலைமையைப்பற்றி சொன்னதும் அந்த அம்மா மயக்கமாயிட்டாங்க... ஃபர்ஸ்ட் எய்ட் குடுத்துட்டு இருக்காங்க... ஹைலி பேதடிக்! அந்த பையன் வேலை தேடி திருப்பூர்க்குப் போறேன்னு சொல்லிட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடி கிளம்பியிருக்கான். எதிர்பாராத விதமாய் ரயிலில் அடிபட்டு...

    ஸாரி... டாக்டர்...! அவனுக்கு ஏற்பட்டது விபத்து இல்லை.

    நீங்கதானே விபத்துன்னு சொன்னீங்க...

    அது ரெண்டு நாளைக்கு முந்தின ரிப்போர்ட். இப்போ ரிப்போர்ட் வேற விதமாய் வந்திருக்கு....

    வேறவிதமாய்ன்னா... எப்படி...?

    அவனைக் கொல்ல முயற்சி நடந்திருக்கு...

    கொலை முயற்சியா...?

    எஸ்...! ஓடற ரயிலிலிருந்து யாரோ அவனைத் தள்ளி விட்டிருக்காங்க....

    இந்தத் தகவலை உங்களுக்கு சொன்னது யாரு...?

    இன்னிக்குக் காலையில் நான் நடந்த விபத்து சம்பந்தமாய் விசாரிக்கிறதுக்காக ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர்தான் இந்தத் தகவலைச் சொன்னார். அந்தப் பையன் ராமராஜும் கூட ஒரு பொண்ணும் ஒண்ணா ரயில்ல ட்ராவல் பண்ணியிருக்காங்க. ரெண்டு பேர்க்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. அதை அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்த கிறிஸ்டோபர் என்கிற டிக்கெட் பரிசோதகர் பார்த்திருக்கார். அதற்குப் பிறகு அவர் சூலூர் ஸ்டேஷனில் இறங்கி வேற ஒரு ட்ரெய்ன்ல ட்யூட்டி பார்க்க போயிட்டார். இன்னிக்குக் காலையில்தான் அந்த கிறிஸ்டோபர் பேப்பர் நியூஸை முழுமையாய் படிச்சிருக்கார். விபத்துக்குள்ளான பையனின் போட்டோவையும் பார்த்து இருக்கார். இது விபத்தா இருக்காதுன்னு அவர் மனசுக்குப்படவே ரயில்வே போலீஸ்ல வந்து அந்தப் பொண்ணைப் பற்றி சொல்லிட்டார். நடந்தது விபத்தாய் இருந்திருந்தா அந்தப் பொண்ணு கண்டிப்பாய் ‘ஸ்பாட்’ல இருந்து இருப்பா. ராமராஜ் மேல பிரியம் உள்ளவளாய் இருந்திருந்தா அழுது துடிச்சு, ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து இருப்பா... பட்... அந்தப் பொண்ணு வரலை...

    ஸோ... அந்தப் பொண்ணு விபத்து நடந்த ‘ஸ்பாட்’ல இல்லாததினால இது ஏன் ஒரு கொலை முயற்சியாய் இருக்கக்கூடாதுன்னு ‘கெஸ்’ பண்ணத்தோணுது...? டாக்டர் கேட்க இன்ஸ்பெக்டர் தலையசைத்தார்.

    ஆமா... டாக்டர்...!

    "ராமராஜை அந்தப் பெண்ணே ரயிலிலிருந்து தள்ளி விட்டிருக்கலாம்ன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1