Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjum vanjanai!
Konjum vanjanai!
Konjum vanjanai!
Ebook134 pages49 minutes

Konjum vanjanai!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Konjum vanjanai!

Read more from Rajeshkumar

Related to Konjum vanjanai!

Related ebooks

Related categories

Reviews for Konjum vanjanai!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjum vanjanai! - Rajeshkumar

    12

    1

    வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த லலிதா மிக்ஸியை நிறுத்தி விட்டு ஜன்னலில் எட்டிப் பார்த்தாள்.

    பெரிய சூட்கேஸ்களை ஆட்டோவிலிருந்து கீழே வைத்தபடி கணவன் தியாகு தெரிந்தான்.

    வேகமாய் ஹாலைக் கடந்து வெளி வாசலுக்கு வந்தாள் லலிதா.

    போன்ல நேத்திக்கே வர்றதா சொன்னீங்க? உங்களை ஆளையே காணோம்... எந்தத் தகவலும் இல்லை... நேத்திக்குப் பூரா தவிச்சுப் போயிட்டேன். என்னாச்சு?

    ஆட்டோ சார்ஜைக் கொடுத்துக் கொண்டே சுள்ளென்று விழுந்தான் தியாகு.

    ஏன் நேத்திக்கு வரலை... ஏன் நேத்திக் வரலைன்னு... தெருவில் நின்னுகிட்டு ஒரு மைக் செட்டைக் கையில் பிடிச்சிக்கிட்டு கத்து...

    தியாகு சீறி விழுந்ததும் சட்டென்று கரண்ட் கட் ஆனதைப் போல அமைதியானாள் லலிதா.

    அவனைப் பார்த்ததில் ரோஜாப்பூ மாதிரி மலர்ந்திருந்த அவள் முகம்... அவன் சீறி விழுந்ததும் தீயில் பொசுங்கிய பாலிதீன் காகிதம் மாதிரி சுருங்கிப் போனது.

    சார்ஜை வாங்கிக் கொண்டு ஆட்டோ தவளைக் கத்தலோடு தெருவில் தேய்ந்து மறைந்தது.

    லலிதா ஒரு சூட்கேஸை எடுத்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

    நடக்க... நடக்க... அவன் முகத்தை ஆராய்ந்த லலிதாவுக்குள் திகைப்பு அலைகள் ஓடிக் கொண்டே இருந்தன.

    கல்யாணமான இந்த ஓரிரு வருடங்களில் இப்படி முகம் சுண்டிப் போய் அவனை அவள் ஒரு நாள் கூடப் பார்த்ததில்லை.

    ஆபீஸ் டூர் முடிந்து எப்போது திரும்பி வந்தாலும் - பத்து நாள் அவளைப் பிரிந்திருந்த ஏக்கம் முகம் பூராவும் வியாபித்திருக்க... ரயில்வே ஸ்டேஷன் வாயிலில் வாங்கிச் சுருட்டிய குண்டு மல்லிகைப் பூவைக் கையில் சுருட்டிப் பிடித்தபடி... லலிதா... - என்று வாய் நிறையக் கூப்பிட்டபடியேதான் ஆட்டோவை விட்டே கீழே இறங்குவான்.

    இன்றைக்கு அத்தனையும் தலைகீழ்...

    வந்ததும் ஒன்றுமில்லாத விஷயத்திற்குச் சீறி விழுகிறான்.

    ஒன்றுமில்லாத விஷயமா...? அல்லது ஏதோ விஷயம் இருக்கிறதா?

    ‘நிச்சயமாய் ஏதோ இருக்கிறது. அதைக் கேட்டுத் தெரிந்தாக வேண்டும்.’

    லலிதா மனசுக்குள் தீர்மானித்தபோது ஹாலின் இடதுபுறம் சுழன்று ஏறிய மாடிப் படிகளில் தடதடத்துச் செல்ல ஆரம்பித்தான். அவன் பின்னாலேயே சூட்கேஸை சிரம மூச்சோடு தூக்கிக் கொண்டு வந்த லலிதா... படுக்கையறையைத் தொட்டதும் - டிரஸ்ஸிங் டேபிள் அருகே கையில் இருந்த சூட்கேஸை வைத்தாள்.

    தலையைப் பற்றிக் கொண்டு படுக்கையறையில் உட்கார்ந்தவனிடம்... மெதுவான குரலில் கேட்டாள்.

    என்னாச்சுங்க...? உங்களுக்கு உடம்பு சரியில்லையா?

    இல்லை... நல்லாத்தான் இருக்கு...

    இப்படி நீங்க எரிஞ்சு விழுந்ததே இல்லையே? அதுவும் வந்ததும் வராததுமா என்கிட்ட சீறி விழுந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு...

    நீ கேட்டதும் எனக்குச் சட்டென்று கோபம் வந்துடுச்சு...

    கோபம் வர்ற அளவுக்கு அப்படி என்ன நான் கேட்டுட்டேன்...?

    லலிதா அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டு கேட்டதும்... சற்றே இறங்கிய குரலில் சொன்னான்.

    நீ கேட்டதில் தப்பில்லை. கேட்ட இடம் தான் தப்பு. வாசல்ல நின்னுகிட்டு... ‘ஏன் ஒரு நாள் லேட்டு’ன்னு கத்தணுமா...?

    என்னோட தவிப்பு உங்களுக்குப் புரியலை... உங்க டூர் புரோக்ராம்படி நேத்திக்கே நீங்க வந்திருக்கணும். ஆனா நேத்திக்கு நீங்க வரலை. உங்ககிட்ட இருந்து எந்தத் தகவலும் வரலை. எனக்குப் பதைபதைப்பா இருக்காதா?

    வாஸ்தவம்தான்! ஆனா... இது பிக்னிக் டூர் இல்லை லலிதா! ஆபீஸ் டூர். ஆபீஸ் வேலை கொஞ்சம் முன்னே பின்னே ஆகறது சகஜம் தானே! இதையெல்லாம் நான் விலாவாரியா விளக்கிட்டு இருக்கணுமா?

    நமக்குக் கல்யாணமாகி எவ்வளவு நாளாச்சு...?

    சுமார் ஒண்ணரை வருஷம்...

    ஒண்ணரை வருஷத்தில் எத்தனை தடவை ஆபீஸ் டூர் போயிருக்கீங்க?

    ஆல்மோஸ்ட் மாசம் ஒரு தடவை ஆபீஸ் டூர் போயிருக்கேன்...

    அதில் எப்பவாவது இப்படி ஆகியிருக்கா?

    எப்பவும் ஆகலை... இந்தத் தடவை ஆகியிருக்கு... அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?

    லேட்டானதை நான் பெரிசா எடுத்துக்கலை. நீங்க அங்கிருந்து ஒரு ஃபோன் அடிச்சுத் தகவல் சொல்லியிருக்கலாம். அல்லது அட்லீஸ்ட் வந்ததும் எரிஞ்சி விழாமலாவது பதில் சொல்லியிருக்கலாம்...

    சரி... ஏதோ டென்ஷன்ல நான் அப்படி எரிஞ்சு விழுந்துட்டேன். இப்ப அதுக்காக ஸாரி கேட்டுக்கறேன்... போதுமா...?

    போதாது...

    போதாதா? வேற என்ன பண்ணணும்?

    அப்படி ஒரு டென்ஷன் ஏற்பட்டதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்க...!

    லலிதா! நான் ஏற்கெனவே ஒரு நாள் லேட். இன்னிக்கு ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட். இப்போ நான் எட்டரை மணிக்கு ஆபீசில் இருக்கணும். உன்கிட்ட உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிச்சிட்டிருக்க எனக்கு நேரமில்லை... கெய்சர்ல வெந்நீர் போட்டின்னா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்...

    உங்க டென்ஷனுக்கான காரணத்தை நீங்க உங்க பொண்டாட்டிகிட்ட கூட சொல்ல மாட்டீங்க. அப்படித் தானே?

    லலிதா! ஆபீஸ் சமாச்சாரங்களை உன்கிட்ட பேசறதால என்ன பிரயோஜனம்?

    "வீட்டுக்கு வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1