Naan Nizhal Illadhavan
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsRaja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5
Related to Naan Nizhal Illadhavan
Related ebooks
Ondrum+Ondrum=Ondru Rating: 0 out of 5 stars0 ratingsUyiradangu Utharavu Rating: 0 out of 5 stars0 ratingsThee Nila Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsUyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsOru Everst Thavaru Rating: 5 out of 5 stars5/5Hongkong Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Murayil Maranam Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Drogangal Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kaathali Rating: 0 out of 5 stars0 ratingsUyir Thirudargal Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Minnalakal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsIdi Minnal Indira Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsThavanai Muraiyil Maranam! Rating: 5 out of 5 stars5/5Unakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsSikappu Tajmahal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravai! Rating: 0 out of 5 stars0 ratingsThirakkaaatha Jannalgal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Raththirigal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Kadhal Kaalam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Naan Nizhal Illadhavan
0 ratings0 reviews
Book preview
Naan Nizhal Illadhavan - Rajeshkumar
27
1
"விக்ன விநாயக பாதம் நமஸ்தே!"
சுலோகத்தை சொல்லி முடித்து பூஜையறையிலிருந்து வெளிப்பட்டார் ராகவேந்திரன். வயது அறுபதை நெறுங்கிக் கொண்டிருந்தாலும் முடி கொட்டாத மண்டையும் திடகாத்ரமான உடம்பும் அவரை ஐம்பது வயதுக்காரராக பிடிவாதமாய் காட்டிக்கொண்டிருந்தது. ஐ.ஏ.எஸ். படிப்புக்குரிய ஒரு எக்ஸ்ட்ரா வெளிச்சம் நெற்றியின் அகலத்திலும் கண்களிலும் தெரிந்தது.
பூஜையை முடிச்சுட்டீங்களா...?
- அவருடைய மனைவி பர்வதவர்த்தினி டைனிங் அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள். மஞ்சள் பூசி குளித்த முகம். நெற்றியில் காலைச் சூரியனாய் குங்குமப்பொட்டு. நரைக் கூந்தலில் அலட்சியமாய் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரம்.
என்ன...பர்வதம்...?
டிஃபன் எடுத்து வைக்கட்டுமா...?
ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணேன்...
எதுக்கு...?
பத்திரிகை நிருபர்கள் ட்ராயிங் ரூம்ல வந்து வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்க... போய் அனுப்பிட்டு வந்துடறேன்.
லேட்டாயிடும்...
உடனே.. போயிட்டு வந்துடறேன்...
ஒரு வாய் காப்பியாவது குடிச்சுட்டுப் போங்க.
எல்லாமே வந்துதான்...
ராகவேந்திரன் ஒரு சர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு ட்ராயிங் ரூமூக்கு வர - அங்கே காத்திருந்த பதினைந்துக்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்கள் எழுந்து நின்றார்கள்.
குட்மார்னிங் ஸார்...
குட்மார்னிங் டு எவ்ரிபடி
உட்காந்தார்கள்
ராகவேந்திரன் கேட்டார் :
காப்பி சாப்பிடறீங்களா...?
வேண்டாம்...ஸார்... நாங்க எல்லாரும் சாப்பிட்டுட்டுதான் வந்தோம்...
உங்களை ஒரு பத்து நிமிஷம் பேட்டி எடுக்கணும் ஸார்.
ராகவேந்திரன் புன்னைத்தார்.
தாராளமாக...
ஒரு நிருபர் புன்னகையோடு கேட்டார்.
நாங்க ஒரு விஷயம் கேள்விப்பட்டோம். உண்மையா?
என்ன கேள்விப்பட்டீங்க...!
இன்னும் ரெண்டு மூணு மாசத்துல கவர்ன்மெண்ட் சர்வீஸிலிருந்து ரிடையராகப் போகிற நீங்க ஏதோ ஒரு புத்தகம் எழுதப் போறதா கேள்விப்பட்டோம்.
ராகவேந்திரன் சிரித்தார்.
உண்மைதான்...
அந்த புத்தகத்தோட தலைப்பு ஸ்லீப்பீங் ட்ரூத்ஸ்...
அதாவது ‘உறங்கும் உண்மைகள் ன்னும் கேள்விப்பட்டோம்...
உண்மைதான்...!
. ராகவேந்திரன் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தார்.
அந்த புத்தகத்துல நீங்க இதுவரைக்கும் நாலு முதலமைச்சர்கள்கிட்ட வேலை பார்த்ததிலேர்ந்து ஏற்பட்ட அனுபவங்களை எழுதப்போறதாகவும் கேள்விப்பட்டோம்...
உண்மைதான்...!
அது பிரச்சனைகைளை உண்டு பண்ணாதா?
நான் உண்மைகளை மட்டும் எழுதப்போறேன். அதனால பிரச்சனைகள் வந்தா வரட்டுமே... எனக்கு பிரச்சனைகள்ன்னா ரொம்பவும் பிடிக்கும். அதை ஃபேஸ் பண்ண தயாராயிருக்கேன்...
எதைப்பத்தியெல்லாம் எழுதப்போறீங்க...?
எல்லாத்தையும் எழுதப்போறேன். கடந்த ஐம்பது வருஷகாலமா நாலு சீஃப் மினிஸ்டர்ஸ்கிட்டே பி. ஏ.வா இருந்திருக்கேன். அந்தக் காலத்தில் எத்தனையோ வி.வி.ஐ.பிக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பும் எனக்கு கிடைச்சிருக்கு. அதுல நிறைய கசப்பான உண்மைகள். அந்த உண்மைகளையெல்லாம் வெளியே கொண்டுவர்றதுதான் இந்த புத்தகத்தோட நோக்கம்.
அப்படீன்னா நாலு சீஃப் மினிஸ்டர்களைப் பத்தியும் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையைப் பத்தியும் எழுதுவீங்க...!"
கண்டிப்பா...
நீங்க புத்தகம் எழுதறது தேவையில்லாத வேலைன்னு ஒரு முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்காரே...?"
அவர் சொல்லிட்டு போகட்டும் அதைப்பத்தி எனக்குக் கவலையில்லை...
சமீபத்திய ஆட்சி மாற்றத்தைப்பத்தி என்ன நினைக்கறீங்க...?
மக்கள் ஒரு தெளிவான தீர்ப்பு மூலம் நங்கள் முட்டாள்கள் இல்லை... புத்திசாலிங்கிறதை ஆணியடிச்ச மாதிரி சொல்லியிருக்காங்க. இந்த அரசியல் விழிப்புணர்ச்சி எப்பவுமே அவங்கள்ட்ட இருந்துட்டா அரசியல்வாதிகளால் எதுவும் பண்ண முடியாது...
ஒரு முக்கியமான கேள்வி...
கேளுங்க... நான் ஒரு திறந்த புத்தகம்...எதை வேணும்னாலும் கேட்கலாம்...
இதுக்கு முந்தி நீங்க வேலை பார்த்த மாஜி முதலமைச்சர் கலைச்செல்வன் பல்வேறு வழக்குகளில் மாட்டிகிட்டு முழிக்கிறார். அவர் மீது சாட்டப்பட்டிருக்கிற குற்றங்கள் எல்லாமே உண்மைதானா...?
ராகவேந்திரன் சிரித்தார்.
மாஜி முதலமைச்சர் கலைச்செல்வன் சம்பந்தப்பட்ட உண்மைகளில் பத்து பர்செண்ட்தான் வெளியே வந்திருக்கிறது. மீதி தொண்ணூறு பர்சென்ட் அங்கங்கே ஒளிஞ்சு எட்டிப் பார்த்துட்டிருக்கு...
அதைப்பத்தியெல்லாம் உங்க ஸ்லீப்பிங் ட்ரூத்ஸ் பத்திரிகையில் எழுதுவீங்களா...?
‘என் பேனாவோட வேலையே அதுதானே...? ‘ மாஜி முதலமைச்சர் மட்டும் இல்லை. அதுக்கு முன்னாடி இருந்த முதலமைச்சர்களைப் பற்றியும் இப்போ ஆட்சி பண்ணிட்டிருக்கிற முதலமைச்சர் அவர்களைப் பற்றியும் எழுதப்போறேன். எல்லாமே உண்மைகள் தான். பொய் கொஞ்சம் கூட கிடையாது.
அந்த உண்மைக்கு ஆதாரங்கள்...?
இல்லாமலா கையில பேனாவை எடுப்பேன்...?
ஒருத்தர் மேல குற்றம் சாட்டறதுக்கு முந்தி வண்டி வண்டியா ஆதாரங்களை சேகரம் பண்ணிக்கிறது என்னோட பழக்கம்..."
இந்த துணிச்சலை உங்களுக்குக் கொடுத்தது யாரு...
எதிர்க்கட்சிகளா...?"
எதிர்க்கட்சிகளா...?
- கேட்டுவிட்டு பலமாய்ச் சிரித்தார் ராகவேந்திரன். எதிர்க்கட்சிகள்ல இருக்கிற அரசியல்தலைவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா...?அவங்களும் ஒரு காலத்துல ஆட்சி பொறுப்புல இருந்துகிட்டு மக்களோட வரிப்பணத்தைக் கோடி கோடியா கொள்ளை யடிச்சவங்கதானே...? கொள்ளையடிச்ச கோடிக்கணக்கான பணத்தையெல்லாம் டாலர்களா மாத்தி வெளிநாட்டு பேங்குகளில் கொண்டுபோய் போட்டுட்டு, இங்கே கதர் வேஷ்டியையும் தோள்ல ஒரு துண்டையும் போட்டுகிட்டு உங்களை ஏமாத்திட்டிருக்காங்க ...
அப்படீன்னா நீங்க எழுதப்போற புத்தகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களையும் விடமாட்டீங்க...?
யாரும் தப்ப முடியாது... கடந்த ஐம்பது வருஷ காலத்தில் ஊழல் பண்ணிய முதலமைச்சர்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எதிர்கட்சித் தலைவர்கள்... சிட்டியில் இருக்கிற சில வி.வி ஐ. பீஸ் இப்படி எல்லாரையும் என்னோட பேனா முனைக்குக் கொண்டு வரப்போறேன்.
இது ஆபத்தான காரியம்...இதனால...உங்க உயிர்க்கு ஏதாவது...?
வரட்டுமே...எனக்கு வயசு அறுபதாகப்போவுது. வாழ்க்கையில இதுவரைக்கும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்தது இல்லை. அன்பான மனைவி டாக்டருக்குப் படிச்ச பையன். ஒரு பெண்ணை பிரான்ஸ்ல இருக்கிற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். வாழ்க்கையோட எல்லா மகிழ்ச்சிகளையும் நான் தொட்டுப் பார்த்தவன். நான் இப்போ என் வாழ்நாளோட சாயங்காலப் பகுதியில் இருக்கேன். ஒரு தடவை எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு உடம்புல பி. பி இருக்கு. சுகர் இருக்கு...ஆண்டவன் என்னை எப்ப வேணும்ன்னாலும் பார்த்து கூப்பிட்டுக்கிற ஸ்டேஜ்... மரணத்துக்காக நான் என்னிக்குமே பயப்பட்டதில்லை... மரணம் எந்த வாசல் வழியா வந்தாலும் அதை வரவேற்க தயாரா காத்திட்டிருக்கிறேன்...
அரசியல் தலைவர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?
"எனக்கு பிடிச்ச