Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavukkul Iruttu and Velvet Kanavugal!
Nilavukkul Iruttu and Velvet Kanavugal!
Nilavukkul Iruttu and Velvet Kanavugal!
Ebook253 pages1 hour

Nilavukkul Iruttu and Velvet Kanavugal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nilavukkul Iruttu and Velvet Kanavugal!

Read more from Rajeshkumar

Related to Nilavukkul Iruttu and Velvet Kanavugal!

Related ebooks

Related categories

Reviews for Nilavukkul Iruttu and Velvet Kanavugal!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    very interesting... And susbanse novel.. It is very thrilling novel. I very like this novel.

Book preview

Nilavukkul Iruttu and Velvet Kanavugal! - Rajeshkumar

17

1

பத்திரிகை நிருபர்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்தாள் மிருதுளா. சுகாசினியை நினைவுபடுத்தும் முகம். இருபத்தி மூன்று வயதுக்குரிய வாளிப்பான உடம்பு. கழுத்தை மூடிய ஜாக்கெட். தங்கம் உடம்பின் எந்தப் பாகத்திலும் இல்லை. இடது கை மணிக்கட்டில் சின்னதாய் கைக்கடிகாரம். நீலப் புள்ளிகள் இறைக்கப்பட்ட வெண்ணிற சேலை.

கேள்விகள் நாலா பக்கமிருந்தும் வந்தது.

தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது...?

மிருதுளா ஒரு புன்னகையோடு அந்த நிருபரை ஏறிட்டாள். இறந்து போன என் அப்பாவும் சரி... என் அம்மாவும் சரி... ஒரு மில்லில் தொழிலாளர்களாக வேலை பார்த்தவர்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது- தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொள்வார்கள். தொழிலாளர்கள் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள், அவர்களுக்கு எந்த சந்தோஷமும் இல்லை என்கிற மாதிரியான ரீதியில் பேசிக் கொள்வார்கள். அவர்கள் அப்படி பேசிக் கொண்டது- என் மனதில் பதிவாகியிருந்த காரணத்தினால்தான் எனக்கு வாய்ப்பும் வசதியும் வந்தபோது இந்த இயக்கத்தை ஆரம்பித்தேன். இது என் ஆத்மதிருப்திக்காக செய்யப்படும் ஒரு சிறிய சமூகப் பணி தான்...

இதுவரைக்கும் இந்த இயக்கத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

நான் தனி ஒரு பெண்ணாக நின்று எந்த காரியத்தையும் செய்ததாக சொல்லிக் கொள்ள மாட்டேன். ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்படுகிறார்கள். நான் மில் அதிபர்களோடு பேசுகிறேன். அவர்களும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு- தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார்கள்...

ஆண் தொழிற்சங்க தலைவர்களுக்கு இல்லாத துணிச்சல் உங்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறதே... அது உண்மையா?

எனக்கு துணிச்சல் இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் தொழிலாளர்களின் பிரச்சினைகளை- குறிப்பாக பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்கிறேன். இதை நீங்கள் துணிச்சல் என்று நினைத்தால் அது துணிச்சல்தான்...

உங்களுடைய அன்றாட பணி என்ன?

மொபெட் வைத்திருக்கிறேன். தினசரி பத்து மில்களுக்காவது சென்று தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடுகிறேன். பிரச்சினைகள் ஏதாவது இருந்தால் அந்த விநாடியே மில் அதிபர்களை சந்தித்து பேசுகிறேன்...

நீங்கள் செய்வது நல்ல காரியம் என்றாலும்... உங்களுக்கும் நிறைய எதிரிகள் இருப்பார்களே...?

மிருதுளா சிரித்தாள். எந்தத் துறையில்தான் எதிரிகள் இல்லை...? நான் நல்ல நண்பர்களைப் பார்த்து பயப்படுவேன். எதிரிகளைப் பார்த்து பயப்படவே மாட்டேன்...

நீங்கள் திருமணம்...?

கண்டிப்பாக செய்து கொள்வேன். என் இயக்கத்திற்கு தீவிர ஆதரவு கொடுத்து வரும் ஒருவரை நான் விரும்புகிறேன். அவரும் என்னை விரும்புகிறார். கூடிய சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, நாங்கள் இருவரும் இந்த சமூகப் பணியை மேற்கொள்ளப் போகிறோம்...

உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

சாரி...! நேரம் வரும்போது தெரியும்.

வரப்போகிற தேர்தலில் நீங்கள் நின்றால் என்ன?

தேர்தல் மூலம் மக்களுக்கு எந்தவிதமான தேறுதலையும் சொல்லிவிட முடியாது. நான் எந்த அரசியல் கட்சிக்கும் அனுதாபி இல்லை. தேர்தலில் ஜெயித்து ஒரு எம்.எல்.ஏ. பட்டம் வாங்கினால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா என்ன...?

அடுத்த கேள்விக்காக ஒரு நிருபர் வாயைத் திறந்த அதே விநாடி-

வீட்டு வாசலில்-

அந்த சைக்கிள் வேகமாக வந்து நின்றது. சைக்கிளிலிருந்து ஒரு இளைஞன் கலைந்த தலையும், வியர்வை முகமுமாய் இறங்கினான். நேராக உள்ளே வந்தான். மிருதுளாவுக்கு பக்கத்தில் வந்து நின்று சொன்னான்.

உங்ககிட்டே ஒரு விஷயம் சொல்லணும்...

சொல்லுங்க...

தனியாத்தான் சொல்லணும்...

நீங்க எங்கிருந்து வர்றீங்க...?

தெய்வநாயகி காட்டன் மில்லில் இருந்து...

மிருதுளா எழுந்தாள். நிருபர்களைப் பார்த்து,மன்னியுங்கள்... என்று சொல்லிவிட்டு, அந்த இளைஞனோடு பக்கத்து அறைக்குள் நுழைந்தாள். திரைச்சீலையை தள்ளி விட்டுவிட்டு கேட்டாள்.

உங்க பேரென்ன?

தாமோதரன்...

தெய்வநாயகி காட்டன் மில்லில் வேலை பார்க்கறீங்களா?

ஆமா...

என்ன வேலை...?

ப்ளோ ரூம்ல பிட்டரா இருக்கேன்...

சரி... வந்த விஷயத்தை சொல்லுங்க...

எங்க மில்லுல... ரீலிங் பிரிவில் வேலை பார்க்கிற கல்யாணி என்கிற ஒரு பொண்ணை மில்லு முதலாளி தப்பான காரியத்துக்கு கூப்பிட்டிருக்கார்...

மிருதுளா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

தப்பான காரியம்ன்னா...?

படுக்கைக்கு கூப்பிட்டிருக்கார்...

ராஸ்கல்...!

ஆனா இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரியாது...

உங்களுக்கு எப்படித் தெரியும்...?

இந்த விஷயத்தை நான்தான் உங்களுக்கு சொன்னேன்னு வெளியே யார் கிட்டேயும் நீங்க சொல்ல மாட்டீங்களே?

சொல்ல மாட்டேன்... சொல்லுங்க...

தொழிற்சங்கத் தலைவர் கன்னியப்பன் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் என்னோட வீடு. இன்னிக்கு காலையில் ஆறு மணிக்கு- கல்யாணியோட அப்பா நாச்சியப்பன் அழுத கண்களோடு கன்னியப்பனை பார்க்க வந்தார். கொஞ்ச நேரத்துல திரும்பவும் வெளியே வந்து- வீட்டுக்கு போய் கல்யாணியை கூட்டிக்கிட்டு வந்தார். அந்தப் பொண்ணு அழுதுகிட்டே வந்திச்சு. நான் காரணத்தை தெரிஞ்சுக்கிறதுக்காக- கன்னியப்பனோட வீட்டுக்கு பின்பக்கமா போய் நின்னுகிட்டு அவங்க பேச்சை ஒட்டுக்கேட்க ஆரம்பிச்சேன்...

அப்படி ஒட்டுக் கேட்டதுல கிடைச்ச செய்தியா இது?

ஆமா...

சம்பவம் என்னிக்கு நடந்ததாம்...?

நேத்திக்கு சாயந்தரம்...

கல்யாணி சொன்னதைக் கேட்டுட்டு கன்னியப்பன் என்ன சொன்னார்...?

முதலாளியை நியாயம் கேட்கப் போறதாகவும்... கல்யாணிகிட்டே மன்னிப்பு கேட்க வைக்கப் போறதாகவும் சொன்னார்...

சொன்ன மாதிரி அவர் செய்வாரா...?

செய்வாரா... இல்லையான்னு எனக்குத் தெரியாது...

உங்க மில்லு முதலாளி பேரு சுந்தரமூர்த்திதானே?

ஆமா...

இப்ப அவர் மில்லுல இருக்காரா...?

இல்ல. பதினொரு மணிக்கு மேலத்தான் வருவார்...

உங்களுக்கு இப்போ ஷிப்ட் இல்லையா...?

எனக்கு நைட் ஷிப்ட். மத்தியானம் நாலு மணிக்கு மேல்தான் வேலைக்குப் போகணும்...

முதலாளி வம்பு பண்ணின அந்தப் பொண்ணோட பேரு என்னான்னு சொன்னீங்க...?

கல்யாணி...

டெம்பரரியா...? பர்மனென்ட்டா...?

பர்மனென்ட்தான்...

அந்தப் பொண்ணோட அப்பா பேரு...?

நாச்சியப்பன்...

போதும்...! நீங்க புறப்படுங்க... நான் பதினொரு மணிக்கு மேலே உங்க மில்லுக்கு வந்து எம்.டி.யைப் பார்த்துப் பேசறேன்...

அவன் கிளம்பினான்.

2

காலை மணி 10.50.

ஏர்கண்டிஷனர் உறுமும் அறைக்குள் மில் முதலாளி சுந்தரமூர்த்தி, ஆடிட்டர் ராமநாதனோடு உட்கார்ந்து அந்த மாதத்திய பாலன்ஸ் ஷீட்டை சரிபார்த்துக் கொண்டிருந்தார். சுந்தரமூர்த்தி ஐம்பது வயதை தொட்டிருந்தாலும்- உடம்பு கருங்கட்டை மாதிரி உரமேறிப் போயிருந்தது. உடம்பின் சகல பாகங்களிலும் ஆரோக்கியம் காட்டினார்.

ஆடிட்டர் சார்... இந்த மாத பாலன்ஸ் ஷீட்டை கொஞ்சம் மாத்திப் போடணும். விற்பனையை இவ்வளவு காட்டியிருக்கக் கூடாது...

நீங்க எப்படிச் சொல்றீங்களோ... அப்படி போட்டுடலாம்...

தொழிலாளர்கள் வரவர புத்திசாலி ஆயிட்டு வர்றாங்க சார்... நூல் பேல்களை ஏத்திக்கிட்டு வெளியே போகிற லாரிகளை கணக்கு வெச்சே- இந்த மாதம் முதலாளிக்கு இவ்வளவு லாபம் வந்திருக்கும்ன்னு துண்டு சீட்ல கணக்கு போட்டுடறாங்களாம்... போதாக்குறைக்கு அந்த மிருதுளா வேறே தொழிலாளர்களுக்கு பயங்கர சப்போர்ட்...

ஆடிட்டர் ராமநாதன் சட்டென்று குரலை தாழ்த்திக் கொண்டு கேட்டார். நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே... சுந்தரமூர்த்தி! அது உண்மையா...?

என்ன...?

உங்க தங்கச்சி பையன் திலீப்பும், அந்த மிருதுளாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதா வெளியே பேச்சு அடிபடுதே... உண்மையா?

என் காதுக்கும் அந்தப் பேச்சு வந்தது...

நீங்க கூப்பிட்டு கேட்கலையா?

கூப்பிட்டு கேட்கிறதுக்கு தயக்கமாயிருக்கு சார். சின்ன வயசிலேயே அப்பா, அம்மாவை இழந்துட்ட அவனை நான்தான் படிக்க வைச்சேன். என்னோட உதவியாளனாகவும் வைச்சுக்கிட்டேன். என் பொண்ணு மதுபாலாவையும் அவனுக்கே கட்டிக் கொடுக்கவும் மனசுல நினைச்சுட்டிருக்கேன். அந்த மிருதுளா... இங்கே தொழிலாளர்கள் பிரச்சினைகளைப் பத்தி பேச வரும்போது- இவனும் அவகூட பேசியிருக்கலாம். தொழிலாளர் கோர்ட்லேயும் பார்த்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் திலீப் நல்ல பையன். என் பொண்ணு மதுபாலாவைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் அவன் கட்டிக்க மாட்டான்...

ஆடிட்டர் குரலை இழுத்தார்.

இல்லே... வெளியே... ஒரு மாதிரி பேசிக்கறாங்க...

சுந்தரமூர்த்தி சிரித்தார். ஆடிட்டர் சார்... நான் ஒரு கேள்வி கேக்கறேன். பதில் சொல்லுங்க. எனக்கு எவ்வளவு சொத்து தேறும்?

கிட்டத்தட்ட ஐந்து கோடி...

சரி. எம் பொண்ணு மதுபாலா பார்க்கிறதுக்கு அவலட்சணமாவா இருக்கா?

சேச்சே! சிவகாசி காலண்டர்ல வர்ற மகாலட்சுமி மாதிரி அம்சமா இருக்கா...

"ஐந்து கோடி ரூபாய் சொத்தையும், மகாலட்சுமி மாதிரி இருக்கிற பொண்ணையும் விட்டுட்டு எந்தப் பைத்தியக்காரனாவது தொழிலாளர் பிரச்சினை, அது, இதுன்னு அலையற ஒரு

Enjoying the preview?
Page 1 of 1