Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

November Nila!
November Nila!
November Nila!
Ebook275 pages1 hour

November Nila!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
November Nila!

Read more from Rajeshkumar

Related to November Nila!

Related ebooks

Related categories

Reviews for November Nila!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    November Nila! - Rajeshkumar

    24

    1

    "ஹலோ...மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?"

    அந்த சுபத்ரா என்கிற அக்னிபுத்ரி சிரித்தாள்.

    பேட்டி இப்போ முடிகிற மாதிரி இல்லை...

    ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள பேட்டியை முடிச்சுக்க முடியுமா?

    ஏன்... என்ன விஷயம்?

    இப்போ மணி என்ன?

    ஆறு பத்து...

    நீ சரியா ஏழு மணிக்கெல்லாம் சென்ட்ரல் ஸ்டேஷன்ல 11-வது ப்ளாட்பாரத்துல இருக்கணும். 7.10க்கு மும்பை-சென்னை எக்ஸ்ப்ரஸ் வரும். அந்த ரயில்ல வர்ற பொண்ணை நீ ரிஸீவ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும்...

    அக்னிபுத்ரி லேசாகத் திகைத்தாள்.

    ஒரு பொண்ணை ரிஸீவ் பண்ணனுமா... யார் அந்த பொண்ணு?

    அந்த விபரத்தையெல்லாம் அப்புறமாய் நேர்ல வந்து சொல்றேன். நிருபர்களுக்கு முன்னாடி இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்...

    ஒரு நிமிஷம் நீங்க லைன்லேயே இருங்க, நான் நம்ம ரூமுக்குப்போய் பேரலல் லைன் ரிஸீவரை எடுத்து பேசறேன்... சொன்னவள் ஹாலின் இடது கோடியில் இருந்த அறையை நோக்கிப் போனாள்.

    உடம்பில் பதட்டம். இதயத்தில் படபடப்பு. நெற்றியில் வியர்வை. யார் அந்த பெண்...?

    பரபரவென்று அறைக்குள் நுழைந்து ரிஸீவரை எடுத்தாள்.

    சொல்லுங்க... யார் அந்தப் பொண்ணு?

    இதோ பார் சுபத்ரா... நான் இப்ப என்ன சொல்றேனோ, அதை மட்டும் செய்... என்னை க்ராஸ் கொஸ்டீன் பண்ணிட்டிருக்காதே!

    எப்படிங்க க்ராஸ் கொஸ்டீன் பண்ணாமே இருக்க முடியும்? நீங்க இன்னிக்குக் காலையில்தான் ஒரு மெடிக்கல் கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்க பெங்களூர் புறப்பட்டு போனீங்க... நீங்க சென்னையில் இருந்தாலாவது பரவாயில்லை...! சரி... யார் அந்தப் பொண்ணு? அதையாவது சொல்லுங்க...

    நீ விடமாட்டியே...! அந்தப் பொண்ணோட பேரு நிலா

    என்னது... நிலாவா?

    நிலாவேதான்...! என்னோட ஃப்ரண்ட் ஒருத்தரோட பொண்ணு...

    யார் அந்த ஃப்ரண்ட்?

    உனக்குத் தெரியாது சுபத்ரா...

    எனக்குத் தெரியாத ஒரு ஃப்ரண்டா? ஆச்சரியமாய் இருக்கே!

    சுபத்ரா... தொணதொணன்னு பேசிட்டிருக்காதே! நீ இப்போ கேட்கிற கேள்விக்கெல்லாம் என்னால விலாவாரியாய் விளக்கமாய் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. இப்ப நான் என்ன சொன்னேனோ அதைச் செய்...

    சரி... எந்த ட்ரெய்ன்னு சொன்னீங்க?

    மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ்... சரியா 7.10-க்கெல்லாம் 11-வது ப்ளாட்பாரத்துக்கு வந்துடும்... கோச் நெம்பர் நோட் பண்ணிக்க...

    சொல்லுங்க...

    பி-3... பர்த் நெம்பர் 41... பொண்ணோட பேரு நிலா... அழகா இருப்பா... மஞ்சள் நிற சுடிதார் சுருட்டை முடி...

    நான் பார்த்து ரிஸீவ் பண்ணிக்கிறேன்...

    அப்புறம்... இன்னொரு முக்கியமான விஷயம்...

    என்ன?

    காரை நீயே ட்ரைவ் பண்ணிட்டு போ... ட்ரைவர் வேண்டாம்

    ஏன்...?

    சுபத்ரா... திரும்பத் திரும்ப எதிர்கேள்வி கேட்டுகிட்டு இருக்காதே! நான் சொல்றதை மட்டும் இப்போ செய்... உன்னோட எல்லாக் கேள்விகளுக்கும் சென்னை வந்து சேர்ந்ததும் பதில் சொல்றேன். அப்புறம்...

    சொல்லுங்க...

    அந்தப் பொண்ணு நிலாவை ஸ்டேஷன்லேர்ந்து வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போது அவகிட்டே எதையும் கேட்க வேண்டாம்...

    நான் அவளோட மூஞ்சியையே பார்க்கலை... போதுமா? - அக்னிபுத்ரி கோபமாய் பேசிவிட்டு ரிஸீவரை வைத்தாள். முகம் பூராவும் வியர்வை அரும்பியிருந்தது.

    ‘யார் அந்த நிலா...? இவருக்கும் அந்த நிலாவுக்கும் என்ன தொடர்பு? ஃப்ரண்டோட பெண் என்று சொன்னார். உண்மையிலேயே ஒரு ஃப்ரண்டோட பெண்தானா அவள்? இத்தனை நாளும் இல்லாமல் இது என்ன புது உறவு...?’- இருதயம் பூராவும் கேள்விகள் மொய்த்துக் கொண்டிருக்க அக்னிபுத்ரி அறையினின்று வெளிப்பட்டாள்.

    காத்திருந்த நிருபர்கள் அவளை பழைய உற்சாகத்தோடு மொய்த்தார்கள்.

    மேடம்... உங்களோட இயற்பேர் சுபத்ரா... ‘அக்னிபுத்ரி’ன்னு பேர் வெச்சுக்கிட்டதுக்கு என்ன காரணம்?

    .............

    மேடம்... உங்களைத் தான்...!

    ஸாரி... இப்ப நான் பேட்டி கொடுக்கக்கூடிய நிலைமையில் இல்லை. போன்ல ஒரு முக்கியமான செய்தி வந்தது. நான் கொஞ்சம் வெளியே போகணும். பேட்டியை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்...

    வர்ற சண்டே வரட்டுமா மேடம்..?

    ப்ளீஸ்... அக்னிபுத்ரி கைகளைக் குவிக்க - நிருபர்கள் எல்லோரும் கலைந்தார்கள்.

    சென்னை சென்ட்ரல்.

    அக்னிபுத்ரி பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திய போது மணிக்கட்டு கடிகாரத்தில் சரியாய் ஏழு மணி.

    சென்ட்ரல் ஏராளமான மின்சாரத்தை சாப்பிட்டு ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல் வெளிச்சமாய் இருக்க, அக்னிபுத்ரியின் மனசு மட்டும் ஒரு இருட்டான சந்தைப் போல இருந்தது.

    ‘நிலா! யார் அவள்...?’ - யோசித்துக் கொண்டே நடந்தாள்.

    ப்ளாட்பாரம் டிக்கெட் வாங்கிக் கொண்டு 11-வது ப்ளாட்பாரத்தை நோக்கி கும்பலில் நடக்க ஆரம்பத்த போது அவளுடைய செல்போன் அழைத்தது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தாள். அவளுடைய கணவர் ராஜசேகரன்தான்.

    என்ன சுபத்ரா... ஸ்டேஷனுக்கு வந்துட்டியா?

    ம்... வந்துட்டேன்... 11-வது பிளாட்பாரத்தை நோக்கிப் போய்ட்டிருக்கேன்.

    காரை நீதானே ட்ரைவ் பண்ணிட்டு வந்தே?

    ஆமா... ஆமா... ஆமா!

    உனக்கு ஏதோ கோபம் போலிருக்கு...?

    ஏதோ கோபம் இல்லைங்க... மஹா... மஹா... கோபம்...

    சரி... சரி... ட்ரெய்ன் லேட்டான்னு பாரு...

    லேட்டாய் இருந்தா என்ன பண்றது? ரயில்வே மினிஸ்டருக்கு போன் பண்ணி ஏன் லேட்டுன்னு கேக்கிறதா?

    ஓ.கே... ஓ.கே..! உன்னோட கோபம் எனக்குப் புரியுது! நேர்ல வந்து நான் விஷயத்தை சொல்லும் போது உன்னோட கோபம் எல்லாம் காணாம போயிடும்!

    நீங்க நாளைக்கு வந்துடுவீங்களா?

    கண்டிப்பா!

    அக்னிபுத்ரி மேற்கொண்டு பேசும் முன்பு -‘எக்ஸ்க்யூஸ்மீ...’ - தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டுத் திரும்பனாள்.

    ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார். அவருடைய முகத்தில் நிறைய கலவரம்.

    2

    அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், கலவரம் படிந்த முகத்தோடு அக்னிபுத்ரியை பதட்டத்துடன் ஏறிட்டார்.

    மேடம்...! நீங்க ரைட்டர்தானே...?

    ஆமா...

    அக்னிபுத்ரி...?

    ஆமா...

    மேடம்... நீங்க காரை பார்க்கிங் பண்ணும்போது நான் கொஞ்சம் தள்ளி வேற ஒரு கேஸ் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். நான் உங்களோட நாவல்களை நிறைய படிச்சிருக்கேன். நான் உங்க ஃபேன்!

    ரொம்ப சந்தோஷம்! பட்... நீங்க ரொம்பவும் டென்ஷனாய் இருக்கீங்க... ஒரு ஃபேன் ஒரு ரைட்டர்கிட்டே பேசும்போது இப்படி வேர்த்து வழிய வேண்டாமே!

    மேடம்... நான் இப்படி வேர்த்து வழியறதுக்கு காரணமே வேறே...!

    என்ன காரணம்?

    நீங்க பார்க்கிங்கில் காரை நிறுத்திட்டு ஸ்டேஷன் நோக்கி போகும்போது யாரோ ஒரு நபர் உங்க காருக்குப் பக்கத்தில் வந்தான். சுற்றும் முற்றும் பார்த்துகிட்டு ஒரு நிமிஷம் நின்னான். அப்புறம் காருக்கு பின்னாடி போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்து குனிந்து கீழே பார்த்தான். அவனோட செய்கைகள் எல்லாம் மனசுக்கு வித்தியாசமாய் பட்டதால நான் அவனையே உன்னிப்பாய் பார்த்துட்டிருந்தேன். கொஞ்ச நேரம் குத்துக்காலிட்டு உட்கார்ந்தவன் தான் கொண்டு வந்த ஒரு சின்ன லெதர் பவுச்சை பிரிச்சு கறுப்பாய் ஏதோ ஒரு பொருளை எடுத்தான். இந்த இடத்துல நான் கொஞ்சம் அவசரப்பட்டு ‘டேய்’னு என்னையறியாமலே குரல் கொடுத்துட்டேன். திடுக்கிட்டுப்போய் திரும்பப் பார்த்த அவன் ஒரே பாய்ச்சலாய் எழுந்து ஓட ஆரம்பிச்சான். நான் துரத்தினேன். ஆனா அவன் ஆட்டோக்களுக்கு நடுவில் மின்னல் மாதிரி ஓடி பத்தே விநாடியில் மறைஞ்சுட்டான். எப்படி... எந்தப் பக்கம் போனான்னே தெரியலை. ரெண்டு கான்ஸ்டபிளை விட்டு தேடச் சொல்லியிருக்கேன். கண்ட்ரோல் ரூமுக்கும் தகவல் கொடுத்துட்டேன்...

    இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு அக்னிபுத்திரியின் முகமும் நிறமிழந்து போயிருந்தது.

    அந்த ஆள் எப்படியிருந்தான்?

    இளைஞன். முப்பது வயசுக்குள் இருக்கலாம். தாடிவெச்ச முகம். பிடரி வழிய முடி. முரட்டுத்தனமான ஸ்டோன்வாஷ் பேண்ட், ஒரு கறுப்பு நிற டீ சர்ட்...

    அக்னிபுத்ரியின் முகம் இப்போது வியர்த்து சொதசொதத்தது.

    இப்படிப்பட்ட அடையாளங்களோடு எனக்கு யாரையும் தெரியாதே...

    மேடம்... வந்த ஆள் சரியில்லை... அவன் உங்க கார்க்குக் கீழே எதையோ ஃபிக்ஸ் பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அது என்னான்னு தெரியலை. ஒருவேளை அது டைனமைட்டாய்க் கூட இருக்கலாம்.

    இன்ஸ்பெக்டர்... நீங்க சொல்றதைக் கேட்க கேட்க எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. நான் ஒரு ரைட்டர். அதுவும் வுமன் ரைட்டர். அரசியல்வாதி கிடையாது. யாரோடும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. என்னைக் கொலை செய்யறதுல யாருக்கும் எந்த ஒரு லாபமும் கிடையாது...

    நோ மேடம்... உங்களுக்கு பிரச்சனையாய் தெரியாத பல விஷயங்கள் சிலருக்கு பூதாகரமான பிரச்சனைகளாய் தெரியலாம். உங்களுக்குத் தெரியாமலேயே நீங்க யாராவது ஒருத்தருக்கு எதிரியாய் மாறியிருக்கலாம். ஒருவேளை உங்க கணவருக்கு எதிரியாய் இருக்கிற நபர் உங்களை பழிதீர்க்க நினைத்து இருக்கலாம்... ம்... மேடம், உங்க ஹஸ்பெண்ட் பிசினஸா? இல்லை... வேலைக்கு போறாரா?

    அவர் ஒரு டாக்டர். பேரு ராஜசேகரன். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்.

    இன்ஸ்பெக்டர் தன்னுடைய கண்கள் நிறைய வியப்பு காட்டினார்.

    மேடம்! டாக்டர் ராஜசேகரன் உங்க கணவரா! கேட்கவே சந்தோஷமாய் இருக்கு மேடம். இதுல சந்தோஷப்பட என்ன இருக்குனு நீங்க கேட்கலாம். என்னோட ஃபாதருக்கு ஹார்ட்ல வால்வ் ரீ-பிளேஸ்மெண்ட் ஆபரேஷன் பண்ணி உயிரைக் காப்பாத்தியதே அவர்தான். ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது உங்க கணவரை நான் நினைக்காமல் இருந்தது இல்லை.

    ‘அப்படியா!’ என்கிற மாதிரி புன்னகைத்து வைத்தாள் அக்னிபுத்ரி. அதே விநாடி கான்ஸ்டபிள்கள் இரண்டு பேர் ஓட்டமும் நடையுமாய் வந்து இன்ஸ்பெக்டருக்கு எதிரே சல்யூட்டோடு நின்றார்கள். இன்ஸ்பெக்டர் அவர்களை ஏறிட்டார்.

    என்னாச்சு... ஆள் கிடைச்சானா?

    இல்ல ஸார்... பார்த்துட்டு இருக்கும்போதே பறந்துட்டான். எந்தப் பக்கம் எப்படி போனான்னே தெரியலை ஸார். கண்ட்ரோல் ரூம், பூந்தமல்லி ஹைரோடு பூராவும் இருக்கிற டிராபிக் கான்ஸ்டபிள்களை அலர்ட் பண்ணியிருக்கு... எப்படியும் ஆள் மாட்டுவான் ஸார். தப்பிக்க முடியாது...

    ரயில்வே பாம் ஸ்க்வாட் ஆட்கள் வந்துட்டாங்களா?

    வந்து செக் பண்ணீட்டு இருக்காங்க ஸார்...

    வெளியாட்கள் யார்க்கும் விஷயம் தெரியலையே?

    தெரியலை ஸார்... பப்ளிக் நார்மலாய் இருக்காங்க.

    சரி... நீங்க கார்கிட்ட போய் இருங்க. நான் மேடத்துகிட்டே பேசிட்டு வந்துடறேன்.

    கான்ஸ்டபிள்கள் திரும்பப் போக, இன்ஸ்பெக்டர் அக்னிபுத்ரியை ஏறிட்டார்.

    மேடம்... உங்க கணவர் இப்போ எங்கே இருக்கார்?

    வெளியூர்ல ஒரு மெடிக்கல் செமினாரை அட்டெண்ட் பண்றதுக்காக போயிருக்கார்.

    வெளியூர்னா.. எந்த ஊர்...?

    பெங்களூர்.

    நீங்க இங்கே சென்ட்ரலுக்கு வந்ததுக்கு என்ன காரணம்? ஏதாவது ஊருக்கு போறீங்களா?

    இல்லை... ஒரு பெண் மும்பையிலிருந்து வர்றா. அவளை ரிஸீவ் பண்ணி கூட்டிட்டுப் போறதுக்காக வந்தேன்.

    எந்த டிரெய்ன்?

    மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ்.

    "யார்

    Enjoying the preview?
    Page 1 of 1