Oru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol!
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Rattham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol!
Related ebooks
Vaigarai Nila Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kaathali Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Vellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsNeeya? Naana? Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Ethirukal Thevai Rating: 5 out of 5 stars5/5Karpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsDecember Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattume Therintha Hema Rating: 0 out of 5 stars0 ratingsSumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum Kili Rating: 0 out of 5 stars0 ratingsOru Maranathin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsIntha Aagayam Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsPanneer Poopanthal Rating: 0 out of 5 stars0 ratingsThazhambu Naagangal! and Irandavathu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsIndhuvin Irandavathu Idhayam and Sinthu Raththam Sinthu... Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyaai Oru Akiramam Rating: 5 out of 5 stars5/5Oru Eastmen Nirak Kolai Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Iravukal! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Oru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol!
0 ratings0 reviews
Book preview
Oru Theekkuchiyin Velichathil! and Naalum Therinthu Kol! - Rajeshkumar
18
பதவி : ஜனாதிபதி
குறைந்த பட்ச வயது : 35
பதவிக்காலம் : 5 ஆண்டுகள்
தேர்வு செய்வது : மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட லோக்சபா, ராஜ்யசபா, மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்,
பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
சம்பளம் : ரூ.50000,
பதவி நீக்கம் : இரு அவைகளிலும் 2/3 பெரும்பான்மை மூலம்
1
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலுக்குள் நிருபமா நுழைந்தபோது கருடாழ்வார்க்கு தீபாராதனை நடந்து கொண்டிருந்தது.
கூட்டம் அவ்வளவாக இல்லை. பிரதான சந்நிதியில் மட்டும் ஆஞ்சநேயர்க்கு சாத்திய வடைமாலையை கோயில் பட்டர் பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருந்தார். மிளகு வடை வாசம் அந்த சாயந்தர நேரக் காற்றில் கலந்து நிருபமாவின் நாசியை விநாடி நேரம் தடவி விட்டு போயிற்று.
குழாயடிக்குப் போய் முகம், கை, கால் அலம்பிக் கொண்ட நிருபமாவுக்கு இருபத்தி மூன்று வயது. மாநிறத்துக்கும் கீழே ஒரு மாற்று கம்மியாக இருந்தாலும் களையான முகம். பெரிய விழிகளில் உறைந்து போயிருந்த சாந்தம் முகத்திற்கு ஒரு போனஸ் களையைக் கொடுத்தது. சாதாரண வாயல் சேலைதான் என்றாலும் கட்டியிருந்த நேர்த்தியில் ஒரு அற்புதத்தைக் காட்டியது.
விநாயகருக்கு ஸ்தோத்திரம் சொல்லி வணங்கிவிட்டு ஆஞ்சநேயர் சந்நிதிக்குள் நுழைந்தாள் நிருபமா. பிரசாதத்தை விநியோகித்து முடித்திருந்த கோவில் பட்டர் நெற்றியில் ஸ்ரீ சூரணத்தோடு அம்சமாய் சிரித்தார்.
வாம்மா... குழந்தே... ட்யூட்டி முடிஞ்சு வர்றியா...?
இல்லே. போயிட்டிருக்கேன். நைட் ட்யூட்டி
நிருபமா புன்னகைத்தாள்.
இன்னிக்கு ஆஞ்சநேயரைப் பார்த்தியா...? திவ்ய அலங்காரம். ஆயிரத்தெட்டு வடை மாலை. அஞ்சு கிலோ வெண்ணெய்...
நிருபமா நிமிர்ந்தாள்.
கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு பிரம்மாண்டமாய் நின்றிருந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் உடம்பு பூராவும் வெண்ணெய் மினுமினுத்தது.
இன்னிக்கு ஏதாவது கட்டளையா...?
ஆமா... மில் ஓனர் ஒருத்தர் ரொம்ப நாளாக செய்யணும்னு நினைச்சிட்டிருந்த கட்டளை. இன்னிக்கு வந்து நிறைவேத்திட்டு போயிட்டார்...
அலங்காரம் திவ்யமா இருக்கு... அங்கேயே ஒரு ஓரமா உட்கார்ந்து ஆஞ்சநேயரை கண் கொட்டாமே பார்த்துட்டேயிருக்கணும் போல தோணுது...
பேஷா உட்கார்ந்து பாரம்மா...
நேரம் இல்லையே... பஸ்சைப் பிடிச்சு ஹாஸ்பிட்டல் போயாகணுமே...
சிரித்து சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த டம்பப் பையைப் பிரித்து உள்ளே வைத்திருந்த காகிதத்தை எடுத்து நீட்டினாள்.
பட்டர் புன்னகைத்தார்.
இன்னிக்கு எத்தனை பேருக்கு அர்ச்சனை பண்ணனும்?
மொத்தம் பத்தொன்பது பேருக்கு. இதுல ரெண்டு பேருக்கு நாளைக்கு ஹார்ட்ல ஆபரேஷன். ஆஞ்சநேயருக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா அர்ச்சனை பண்ணனும்...
அமர்க்களமா பண்ணிடறேன்
என்றவர் சற்று நெகிழ்ச்சியோடு நிருபமாவை ஏறிட்டார்.
இந்த கோவிலுக்கு எத்தனையோ பேர் வர்றா போறா... இங்கே வர்றவங்க அத்தனை பேரும் தன்னோட குடும்பம் ஷேமமா இருக்கணும்ங்கிறதுக்காகத்தான் அர்ச்சனை பண்ணுவாங்க... ஆனா... நீ ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலை பார்த்தாலும்... அதை சம்பளம் தர்ற வேலையா மட்டும் நினைக்காமே அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிற அத்தனை பேரும் குணமாகி வீட்டுக்குப் போகணும்ங்கிற நல்ல எண்ணத்தோடு வாரா வாரம் வந்து அவங்க பேர்க்கெல்லாம் அர்ச்சனை பண்ற இந்த நல்ல குணம் எத்தனை பேர்கிட்ட இருக்கும்...?
நிருபமா புன்னகைத்தாள்.
துதி பாட ஆரம்பிச்சுட்டீங்களா...?
இது துதி இல்லேம்மா...! யாராவது ஒருத்தர் ஒரு நல்ல காரியம் பண்ணினா... அதை மனசு விட்டு பாராட்டணுமோ இல்லையோ...?
அவங்க பேர்க்கெல்லாம் அர்ச்சனை பண்றது ஒரு பெரிய காரியமே இல்லை... நோயினால் அவங்க படற கஷ்டத்தைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாயிருக்கும்... டாக்டர்ஸ் சொல்றபடி மருந்து தர்றது மட்டும்தான் என்னோட வேலை... அவங்களை குணப்படுத்தறது இந்த ஆஞ்சநேயரோட வேலை...
உன்னோட நல்ல மனசுக்கேத்த மாதிரி கூடிய சீக்கிரமே உனக்கு ஒரு நல்ல வரன் அமையணும்...
பட்டர் சொல்லிக் கொண்டே கற்பூர ஆரத்தித் தட்டோடு கருவறைக்குள் நுழைந்தார். கணீரென்ற குரலில் அர்ச்சனையை ஆரம்பித்தார்.
யஸ்யஸ்ரீ அனுமான் அனுக்ரக பலாதீர்த்துவாம். புதிர் லீலாலயா லங்காம் ப்ராப்ய நிஸாம்ய...
கையில் இருந்த காகிதத்தைப் பார்த்து ஒவ்வொரு பெயராய் பார்த்து படித்து அர்ச்சனையை முடிக்க பதினைந்து நிமிஷமாயிற்று.
கற்பூர ஆரத்தி முடித்து பிரசாதம் கொடுத்த பட்டர் கேட்டார்.
அம்மாவுக்கு இப்போ உடம்பு பரவாயில்லையாம்மா?
உம்... தேவலை... மாத்திரை பலத்துல தான் ஓடிட்டிருக்கு...
அண்ணனுக்கு வேலை ஏதாவது...?
தெரியாத்தனமா சிவில் என்ஜினீயரிங் படிச்சுட்டு துபாய்ல வேலை கிடைக்குமா அபுதாபியில் வேலை கிடைக்குமா என்று யார் யாரையோ பார்த்து முயற்சி பண்ணிட்டிருக்கார்... கிடைச்சாத்தானே...
மெட்ராஸ்ல வாழ்க்கைப்பட்டிருக்கிற அக்கா நல்லாயிருக்காளா...?
ஏதோ இருக்கா...
ஏம்மா அப்படி சொல்றே...?
அக்கா புருஷன் வேலை பார்த்த கம்பெனி லாக் - அவுட்ல இருக்கு. இனிமே அந்த கம்பெனி பழைய நிலைமைக்கு வராதுன்னு நிர்வாகம் சொல்லிடுச்சு... இனி அவர் வேற வேலை ஏதாவது தேடணும். வெறும் டிப்ளமா மட்டும் படிச்சிருக்கிற அவருக்கு அவ்வளவு சுலபத்துல வேலை கிடைச்சுடுமா என்ன?
எல்லாம் கிடைக்கும். தைரியமா இரும்மா... உன்னோட நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராது...
இந்த ஆசீர்வாதம் ஒண்ணே போதும்...
பட்டரிடம் விடை பெற்று கருடாழ்வாரை தரிசித்துவிட்டு வெளியே வந்தாள் நிருபமா. செருப்பு ஸ்டாலில் டோக்கனைக் கொடுத்து தன் மிதியடிகளை வாங்கி கால்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தபோது பின்பக்கம் குரல் கேட்டது.
அம்மா... நமஸ்காரம்...
திரும்பினாள்.
கல்யாணத் தரகர் துரையப்பன் கக்கத்தில் இடுக்கிய தோல் பையோடு தெரிந்தார்.
ஓ... நீங்களா...? எங்கே கோவில் வரைக்கும்?
உன்னைப் பார்க்கத்தாம்மா காத்திட்டிருக்கேன். அரைமணி நேரத்துக்கு முந்தி வீட்டுக்குப் போயிருந்தேன். நீ ட்யூட்டிக்கு கிளம்பிப் போயிட்டதாகவும் இப்ப போனா பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்ல பார்க்கலாம்னும் அம்மா சொன்னாங்க...
ஏதாவது முக்கியமான விஷயமா...?
இல்லேன்னா... உடனே ஒரு ஆட்டோவைப் பிடிச்சு உன்னைப் பார்க்கிறதுக்காக கோவில் வாசல்ல வந்து காத்துட்டிருப்பேனா...?
சொல்லுங்க... என்ன விஷயம்?
அப்படி ஓரமா போய் பேசலாமா...?
வாங்க...
நடந்து போய் ஒரு மரத்துக்கு கீழே நின்றார்கள். மரக்கிளைகளில் பறவைகள் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தன.
தரகர் தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். ஒரு வரன் வந்திருக்கு...
நிருபமா சற்றே கோபத்தோடு நிமிர்ந்தாள்.
வரனா...?
ஆமாம்மா...
எனக்குத்தான் இப்போ கல்யாணம் வேண்டாம்ன்னு அன்னிக்கே உங்ககிட்ட சொன்னேனே...?
தரகர் புன்னகைத்தார்.
என்ன சிரிக்கிறீங்க...?
விவரத்தை சொல்றதுக்குள்ளே நீ தப்பா புரிஞ்சு கிட்டம்மா... வரன் உனக்கில்லை.
பின்னே...?
உன்னோட தங்கச்சி பவ்யாவுக்கு...
பவ்யாவுக்கு வரனா...
ஆமாம்மா... கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு போயிட்டிருக்கிற பவ்யாவை மாப்பிள்ளை பார்த்திருக்கான். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு வீட்ல சொல்லியிருக்கான். பையனோட அப்பா எனக்கு வேண்டப்பட்டவர். விஷயத்தை என்கிட்ட சொன்னார். அதான் பேசிட்டு போகலாம்னு வந்தேன்... மூத்த பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்காமே இருக்கும்போது உன் தங்கச்சி கல்யாணத்தைப் பத்தி பேசறது தப்புதான்... இருந்தாலும் அது நல்ல காரியம்... பேசியாகணுமே...
நிருபமா சில விநாடிகள் மவுனமாய் இருந்து விட்டு பின் வாயெடுத்தாள்.
மாப்பிள்ளைக்கு என்ன வேலை...?
நேஷ்னலைஸ்ட் பேங்க்ல அக்கவுண்ட்டண்ட்டா இருக்கார்... வயது இருபத்தொன்பது. எம். காம் முடிச்சிருக்கார். ஒரே பையன்... அவனுக்கு கீழே ஒரு தங்கச்சி...
ஃபேமிலி...?
அப்பா அம்மா மட்டும்தான்... வசதியில்லாத குடும்பம்தான். மாப்பிள்ளைப் பையனை கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்காங்க...
பையன் எப்படியிருப்பான்...?
அந்தக் காலத்து ஜெமினிகணேசன் மாதிரி இருப்பான். சுண்டினா ரத்தம் தெறிக்கிற மாதிரியான நிறம்... நல்ல உயரம். பாஸ்கெட்பால் ப்ளேயர்.
போட்டோ இருக்கா...?
இல்லை... நீ ஒரு வார்த்தை சரின்னு சொன்னா நாளைக்கே அவங்களை உன் வீட்டுக்கு பெண் பார்க்க கூட்டிட்டு வர்றேன். அந்தச் சமயத்துல மாப்பிள்ளையை உன் தங்கச்சி பவ்யா உள்பட எல்லோருமே பார்த்துக்கலாம்...
நாளைக்கு நாள் நல்லாயிருந்தா... சாயந்தரம் அஞ்சு மணியில் இருந்து ஆறு மணிக்குள்ளே... வரச் சொல்லுங்க...
சொல்லிடறேன்...
என்றவர் குரலை இழுத்தார். ஒரு விஷயம்...
என்ன...?
பையனோட அப்பாவும் அம்மாவும் ஒரு கேள்வியைக் கேட்டாங்க...
என்ன கேட்டாங்க...
பெரிய பொண்ணு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுது...?
நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க...?
என்னமோ தெரியலைன்னு சொன்னேன்...
மறுபடியும் அவங்க அந்தக் கேள்வியைக் கேட்டா இப்படி பதில் சொல்லுங்க...
எப்படி...?
அது உங்களுக்கு தேவையில்லாத கேள்வின்னு...
மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே இப்படியெல்லாம் மூஞ்சியில அடிச்ச மாதிரி பேச முடியாதம்மா... நாம அவங்களுக்கு சரியான காரணத்தை சொல்லியாகணும்...
சொல்லலைன்னா?
ஏதாவது சந்தேகமா நினைப்பாங்க...
சந்தேகம்ன்னா...?
எனக்கு சொல்லத் தெரியல்லேம்மா...
இதோ பாருங்க தரகரே...! கல்யாணம் பண்ணிக்கிறதும் பண்ணிக்காததும் என்னோட தனிப்பட்ட பிரச்சினை. அதுக்கான காரணத்தை நான் யார்கிட்டேயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பவ்யாவை பெண் பார்க்க வர்றவங்க அவளைப் பார்க்க மட்டும் வரட்டும். வேண்டாத கேள்விகளோடு வரவேண்டாம்...
அம்மா...! நான் என்ன... சொல்ல வர்றேன்னா...!
சொல்லுங்க...
இதோ பாரம்மா... நான் வெறும் கல்யாணத் தரகர் மட்டும் இல்லை. செத்துப் போயிட்ட உங்கப்பாவுக்கு நான் பால்ய காலத்து சிநேகிதன். உங்கப்பா உயிரோடு இருந்தவரைக்கும் எனக்கு எவ்வளவோ உபகாரம் பண்ணியிருக்கார். அந்த நன்றிக்காவது அவரோட குடும்பத்துக்கு நான் ஏதாவது பண்ணியாகணும்...
நிருபமா புன்னகைத்தாள்.
அதான் பண்ணிட்டிருக்கீங்களே... அக்காவுக்கும் நீங்கதான் வரன் பார்த்து கல்யாணத்தை முடிச்சீங்க... இப்போ பவ்யாவுக்கும் வரன் பார்த்து கொண்டு வந்திருக்கீங்க...
உனக்கும் ஒரு நல்ல காரியம் நடக்க வேண்டாமா?
கல்யாணம்தானே... பண்ணிக்கலாம்...
எப்போம்மா...?
"சொல்றேன்...! நான் சொல்லும்போது நீங்க
எனக்கு வரன் பார்த்தா போதும்..."
பவ்யாவை அவங்களுக்கு பிடிச்சுட்டா கல்யாணத்தைப் பேசி முடிக்கிறதுல எந்த பிரச்னையும் இல்லை...
அவங்க நகை நட்டு அதிகமா எதிர்பார்ப்பாங்களா?
அந்த மாதிரியான குடும்பம் இல்லேம்மா அது... அவங்களுக்கு வேண்டியது பொண்ணுதான்... பவுன் பவுனா பொன்னு இல்லை...
அது போதும்... நாளைக்கே அவங்களை வரச் சொல்லுங்க. கும்பல் வேண்டாம். முக்கியமானவங்க ஒரு நாலைஞ்சு பேர் வந்தா போதும். ஸ்வீட் காரம் காப்பி கொடுத்து கட்டுப்படியாகாது...
நான் வர்றேம்மா...
தரகர் விடை