Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthithu, Puthithu, Kutram Puthithu!
Puthithu, Puthithu, Kutram Puthithu!
Puthithu, Puthithu, Kutram Puthithu!
Ebook134 pages37 minutes

Puthithu, Puthithu, Kutram Puthithu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Puthithu, Puthithu, Kutram Puthithu!

Read more from Rajeshkumar

Related to Puthithu, Puthithu, Kutram Puthithu!

Related ebooks

Related categories

Reviews for Puthithu, Puthithu, Kutram Puthithu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthithu, Puthithu, Kutram Puthithu! - Rajeshkumar

    18

    1

    "நீங்க எந்த பத்திரிகையிலிருந்து வர்றீங்க...?"

    மதுமலர்.

    சினிமா பத்திரிகையா?

    இல்ல... இலக்கிய பத்திரிகை...

    உங்க பேரு...?

    வலம்புரி லெட்சுமணன். வலம்புரி லேனான்னு சொல்வாங்க...

    அம்மாகிட்டே அப்பாயிண்ட்மெண்ட் மொதலிலேயே வாங்கிட்டீங்களா?

    ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ‘பத்தினி பாஞ்சாலி’ ஷூட்டிங் நடக்கிற போதே அம்மாகிட்டே பேட்டி கேட்டேன். வீட்டுக்கு வந்து பாருங்கன்னு சொன்னாங்க.

    டயம்...?

    ஏழு டூ எட்டு...

    அவ்வளவு நேரமெல்லாம் அம்மா பேட்டி தரமாட்டாங்க... ஏழரைமணிக்கு ஒரு இந்திப்பட கன்ஸல்டேஷனுக்காக ஹோட்டல் ரெட் ஸ்டார்க்கு போகப் போறாங்க. ஒரு இருபது நிமிஷத்துக்குள்ளே பேட்டியை முடிச்சுடுங்க.

    சரிங்க...

    உள்ளே போங்க.

    அந்த வற்றலான - ஒடிசலான வலம்புரி லெட்சுமணன் ஒரு ஜோல்னா பையை தோளில் தொங்கப் போட்டபடி - உள்ளே போனார்.

    பாமரேனியன் குரைத்தது.

    டெலிபோனில் நடிகை ஊர்மிளாவின் எண்பது கிலோ அம்மா - பங்காரம்மா சர்வ இழுப்பான தெலுங்கில் எந்த பட அதிபரிடமோ குழைந்து கொண்டிருந்தாள். நேனு அந்திகி செப்பலேதண்டி... பாப்பா... யீ... தெல்லா வால்லு ஜாகரம் உண்டி.... ஆ... சூட்டிங்க்ல கலசி ஒக்க நிமிஷம் உண்டண்டி.

    பங்காரம்மா ரிஸீவரின் வாயை தன் முறம் போன்ற உள்ளங்கையால் மூடிக்கொண்டு - வலம்புரி லெட்சுமணனைப் பார்த்து -

    யாரய்யா.. நீ... என்றாள்.

    மதுமலர் பத்திரிகையிலிருந்து வர்றேன்.

    என்ன... பேட்டியா?

    ஆமாம்மா.

    பாப்பா வெளியே போகப் போகுது.

    ஒரு சில நிமிஷ பேட்டிதான்... ஏ.வி.எம்.ல அம்மா பார்த்து வரச் சொன்னாங்க...

    பத்திரிகையோட பேரென்ன...?

    மதுமலர்.

    இந்த பத்திரிகையோட பேரைக் கேள்விப் பட்டதேயில்லையே?

    இது ஒரு இலக்கிய பத்திரிகை..

    இருக்கட்டும். இன்னொரு நாளைக்கு வா... பாப்பா இப்போ ஹிந்திப்பட கன்ஸல்டேஷனுக்காக வெளியே போகணும்...

    பத்தே நிமிஷம். ஒரு மினி பேட்டி.

    உன்னை யாரய்யா உள்ளாற விட்டது?

    அம்மா... - குரல் கொடுத்துக்கொண்டே பக்க அறையிலிருந்தும் வெளிப்பட்டாள் ஊர்மிளா. ரத்தச் சிவப்பில் சுடிதார் - வளப்பமாய் கண்களுக்கு சிக்கிய ஊர்மிளாவுக்கு - குண்டக்கல் முனிசிபாலிடி ரிக்கார்ட்படி இருபத்தி மூணு வயது. பத்திரிகை பேட்டிகளில் சொல்லும் வயது பதினேழு. கடந்த ஒரு வருஷ காலமாய் தமிழ் ஃபீல்டை கலக்கிக் கொண்டிருந்தாள். நடித்த முதல் இரண்டு படங்களும் - சில்வர் ஜூபிளி போக - நம் தமிழ்பட அதிபர்கள் கூட்டம் கூட்டமாய் - கால் ஷுட்டுக்காக வந்தார்கள். இரண்டு மாதத்தில் குடியிருந்த பங்களா - சொந்த பங்களாவாக மாறியது. கேஷ் பாலன்ஸ் பேங்குகளில் எகிறியது.

    பங்காரம்மா கேட்டாள்.

    பேட்டி எடுக்க நீயா வரச் சொன்னே?

    ஆமா...

    சரி... சரி... எதையாவது சொல்லி அனுப்பு. நாம ஏழரை மணிக்கெல்லாம் தேசாய்கிட்ட இருக்கணும்...

    ஊர்மிளா லெட்சுமணனை ஏறிட்டாள்.

    நீங்க உள்ளே வாங்க...

    சொல்லி உள்ளே கூட்டிப்போயி... சோபாவில் உட்கார வைத்து - தானும் எதிரே உட்கார்ந்தாள். உயர்த்திக் கட்டிய மார்புகள் லெட்சுமணனை இம்சைப்படுத்தியது.

    சீக்கிரமா கேக்க வேண்டிய கேள்விகளை கேளுங்க... நான் ஏழு இருபதுக்கெல்லாம் இங்கிருந்து கிளம்புவேன்...

    நீங்க சினிமாவுக்காக வெச்சுக்கிட்ட பேரு ஊர்மிளா. உங்க உண்மையான பேரென்ன...?

    அடுத்த கேள்வியைக் கேளுங்க...

    உங்களுக்கு சொந்த ஊர் குண்டக்கல்தானே...?

    ஆமாம்...!

    அப்பா குண்டக்கல்லில் இருக்காரா...?

    அடுத்த கேள்வியைக் கேளுங்க...

    சினிமாவில் நடிக்க வர்றதுக்கு முந்தி என்ன பண்ணிட்டிருந்தீங்க?

    அடுத்த கேள்வியைக் கேளுங்க...

    உங்களுக்கும் நடிகர் கௌரவ் குமார்க்கும் காதலாமே?

    அடுத்த கேள்வியைக் கேளுங்க...

    லெட்சுமணன் தன் மூக்கை சொறிந்து விட்டுக் கொண்டார்.

    நீங்க சினிமா சான்ஸுக்காக பட அதிபர்கள் கிட்டே ரொம்பவும் தாராளமா இருக்கிறதா ஒரு பேச்சு அடிபடுதே... அது உண்மையா...?

    உங்களுக்கு இதை யார் சொன்னாங்க...?

    குறிப்பா யாரும் சொல்லலை. ஒரு குத்து மதிப்பா பேசிக்கிறாங்க...

    ஊர்மிளா முகம் சிவந்து போய் பொரிந்தாள். நான் யார்க்கும் முந்தானை விரிச்சு - சான்ஸ் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நான் நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் ஹிட் - எல்லா ப்ரொட்யூஸர்ஸும் டைரக்டர்ஸும் என்னோட கால்ஷீட் கிடைக்காதான்னு தினசரி என்னோட அம்மாவை போன்ல போட்டு உயிரெடுத்துட்டிருக்காங்க...

    ஊட்டி படப்பிடிப்பின் போது நடிகை ஜெயரோகிணிக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்புல முடிந்ததா ஒரு நியூஸ் கேள்விப்பட்டேன். உண்மையா...?

    அடுத்த கேள்விக்கு போங்க...

    இந்தி பட சான்ஸ் உங்களை தேடி வந்திருக்கு போலிருக்கே?

    "ஆமாம். மன் பஸந்த், துமாரா சாத் மேரே ஹாத், ஆகாஷ் தீப் போன்ற கோல்டன் ஜூபிளி படங்களை தயாரிச்ச தேசாய் பிரதர்ஸ் தங்களோட அடுத்த பட கதாநாயகியா என்னை புக் பண்றதுக்காக

    Enjoying the preview?
    Page 1 of 1