Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rani Irandaayiram
Rani Irandaayiram
Rani Irandaayiram
Ebook129 pages39 minutes

Rani Irandaayiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Rani Irandaayiram

Read more from Rajeshkumar

Related to Rani Irandaayiram

Related ebooks

Related categories

Reviews for Rani Irandaayiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rani Irandaayiram - Rajeshkumar

    15

    ஒரு முக்கியமான முன்னுரை

    முதல் அத்தியாயத்துக்குள் நுழையும் முன்பாக -

    வாசகர்களே!

    உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்

    ராணியையும் 2000 - வது வருடத்தையும் இணைத்து எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல், என் வாசகர்களுக்கு சற்று புதுமையாக இருக்கக் கூடும். காரணம் இந்த நாவல் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் விசயங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ராணி ஒரு சராசரி பெண்ணல்ல... இருபத்தியோராவது நூற்றாண்டுக்கு ஏற்ற பெண் என்பதை நாவலைப் படிக்கும் போதே உங்களுக்கும் புரிந்துவிடும்.

    - ராஜேஷ்குமார்.

    1

    அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டப வாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் ஈஸ்ட்மென் நிற பெயிண்ட் உடம்புகளோடு சன்பாத் எடுத்துக்கொண்டிருக்க - மண்டபத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நெருக்கமாய் மனிதத் தலைகள்.

    நாதஸ்வர இசை காற்றோடு காதல் செய்து கொண்டிருந்தது. குளோஸ்டு சர்க்யூட் டி.வி.திரைகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணவறையை குளோனிங் செய்து கொண்டு இருந்தது.

    ராணி - வெட்ஸ் - ரவிச்சந்திரன் என்ற மெகா சைஸ் எழுத்துக்களின் பின்னணியில் சிவப்பு வெல்வெட் வேய்ந்த பிரின்ஸ் நாற்காலிகளில் ராணியும் ரவிச்சந்திரனும் உட்கார்ந்து இருந்தார்கள். இரண்டு பேர்களின் கழுத்துகளிலும் கனமான ரோஜா மாலைகள்.

    ஆறடி உயரத்தில் கம்பீரமாய் இருந்த ரவிச்சந்திரன் இப்போது சினி ஃபீல்டில் இருக்கும் கதாநாயகர்களைவிட அழகாக இருந்தான்.

    மணமேடையை ஒட்டி அமைக்கப்பட்ட கார்ப்பெட் படிகளில் பரிசு பெட்டிகளோடு வருபவர்களை இருவரும் ஏறிட்டு வாய் வலிக்க புன்னகை செய்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

    ராணி... ரவிச்சந்திரன் அவள் காதருகே கிசுகிசுத்தான்.

    ம்...

    இந்த ரோஜா மாலையை உனக்குப் போட்டது வேஸ்ட்...

    ஏன்...?

    இந்த ரோஜாவோட நிறத்துக்கும் உன்னோட நிறத்துக்கும் வித்தியாசமே தெரியலை...

    இது ரொம்பவும் ஓவர் - புதுப்பெண்டாட்டியை இப்படியெல்லாம் ஐஸ் வைக்கக்கூடாது...

    இது ஐஸ் கிடையாது ராணி! நிஜமாத்தான்!

    ரவிச்சந்திரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சபாரி அணிந்த அந்தப் பெரியவர் கையில் பொக்கேயுடன் பக்கத்தில் வந்தார். ராணி மலர்ந்தாள் பெரியதாய்.

    ஹலோ... சார் என்றவள் கணவனிடம் திரும்பி சொன்னாள்.

    என்னங்க... இவர் மிஸ்டர் சோப்ரா, யூரோ ஸாஃப்ட் டெக்னாலஜிஸ் ஜெனரல் மானேஜர்.

    அந்த சோப்ரா பொக்கேயை ராணியின் கையில் திணித்து கங்கிராட்ஸ் சொல்லிவிட்டு ரவிச்சந்திரனிடம் திரும்பினார்.

    மிஸ்டர் ரவிச்சந்திரன்! நீங்க போன ஜென்மத்துல எக்கச்சக்கமா புண்ணியம் பண்ணியிருக்கணும். இல்லேன்னா ராணி உங்களுக்கு மனைவியாகியிருக்க முடியாது. ராணியை ஒரு சாதாரண பொண்ணா நினைச்சுடாதீங்க. ஹி... ஈஸ்... வெரி... வெரி கிளவர். நமக்கெல்லாம் தலையில் மட்டும்தான் மூளை. ராணிக்கு உடம்பெல்லாம் மூளை. அதுவும் கம்ப்யூட்டர் மூளை.

    அவர் வாழ்த்திவிட்டு போனதும் ரவிச்சந்திரன் ராணியிடம் திரும்பினான்.

    பெரிசு உன்னை இப்படி புகழ்ந்துட்டு போகுதே... அவருக்கு உன்னால ஏதாவது காரியமாகணுமா...?

    சேச்சே...! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரும் ஒரு கம்ப்யூட்டர் பர்ஸன்தான். அவரால செய்ய முடியாத இன்னோவேடிவ் சாஃப்ட்வேர் புரோக்ராம்களை நான் பண்ணி பேர் வாங்கிட்டேன். அப்பயிருந்து இப்படித்தான் எல்லார்கிட்டேயும் சொல்லி புலம்பிட்டிருப்பார்...

    ராணி சொல்லச் சொல்ல - ஒரு பெண் பெரிதாய் கொண்டை போட்டுக்கொண்டு கிஃப்ட் பாக்கெட்டுடன் வந்தாள். ராணியின் கையில் பரிசு பாக்கெட்டை திணித்துவிட்டு சொன்னாள்.

    வாழ்த்துகள் ராணி.

    என்னங்க... ஷி... ஈஸ்... வைசாலி. ஒரு பெரிய கம்பெனிக்கு ஜி.எம்...

    அந்த வைசாலி ரவிச்சந்திரனைப் பார்த்து சிரித்தாள்.

    மிஸ்டர் ரவிச்சந்திரன்...! பி வேர் ஆஃப் ராணி. இவள்கிட்ட நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். இல்லேன்னா உங்களை எடுத்து முழுங்கி சைபர் பண்ணிடுவா...

    ரவிச்சந்திரனின் முகம் சட்டென்று மாறி இருட்டுக்கு போயிற்று. வைசாலி நகர்ந்து போனதும் இரண்டு அமெரிக்கர்கள் மேடையேறி வர ராணி பரவசமாகி தன் கணவனிடம் திரும்பினாள்.

    என்னங்க... ஹி... ஈஸ் மார்ட்டீன் அண்ட் பிரெட்ரிக். யு.எஸ்.ஏ.யில் மிகப்பெரிய கம்ப்யூட்டர் கம்பெனிக்கு டைரக்டர்கள்.

    மார்ட்டீனும் பிரெட்ரிக்கும் அமெரிக்க ஆங்கில உச்சரிப்போடு வாழ்த்துச் சொல்லி ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு கீழே இறங்கிப் போனார்கள்.

    ரவிச்சந்திரன் புகைகிற மனதோடு ராணியிடம் திரும்பினான். ஃபாரின்ல கூட உனக்கு ஃபிரண்ட்ஷிப் இருக்கும் போலிருக்கே?

    ராணி அவனுடைய எரிச்சலை புரிந்துகொள்ளாமல் புன்னகைத்தாள்.

    "இது இன்டர்நெட் யுகம். உள்நாடு வெளிநாடு என்கிற எல்லைக் கோடுகள் எல்லாம் மெலிஞ்சு போய் உலகம் ஒரு சின்ன கிராமமா சுருங்கிட்டு வருது. இவங்க ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1