Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul
Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul
Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul
Ebook271 pages1 hour

Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul

Read more from Rajeshkumar

Related to Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul

Related ebooks

Related categories

Reviews for Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sendra Idamellam Irappu and Kannukkul Oru Mul - Rajeshkumar

    19

    1

    தலை பூராவும் ரத்தமயமாய் - ஸ்ட்ரெச்சரில் வைத்து வேகவேகமாய் தள்ளப்பட்டு இன்டென்சிவ் வார்டுக்குள் கொண்டு போகப்பட்டார் செல்வ கிருஷ்ணன். கதவின் நெற்றியில் சிவப்பு விளக்கு ஒளிர - வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் சத்தமில்லாமல் சாத்தப்பட்டன. வார்டுக்கு வெளியே வராந்தாவில் பதட்டமாய் ஒரு சின்ன கும்பல். கும்பலுக்கு நடுவே இருட்டடித்த முகங்களோடு-

    சசிதரன், மனோகர், ரசிகா.

    ரசிகா அழவே ஆரம்பித்திருந்தாள். பெ... பெரியப்பாவுக்கு ஒண்ணும் ஆ... ஆயிடாதே... ம...ம.... மனோகர்..?

    ஒண்ணும் ஆகாது...

    எவ்ளோ ரத்தம்...! மண்டை ரெண்டா உடைஞ் சிருக்குமா?

    சசிதரன் கொஞ்சம் பயமாய் எச்சில் விழுங்கிவிட்டு சொன்னான். அ... அதெல்லாம் ஒண்ணுமில்லை... நெத்தியில் மட்டும் ஒரு சின்ன பொத்தல். வழிஞ்ச ரத்தம் எல்லா பக்கமும் பரவி - பார்க்கிறதுக்கு வயித்தைக் கலக்குது. அவ்வளவுதான்.

    எக்ஸ்க்யூஸ்மீ...

    தன் முதுகுக்குப் பின்னால் குரல் கேட்டு திரும்பினான் சசிதரன். இன்ஸ்பெக்டர் ஒருவர் தொப்பியைக் கழற்றி - கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தார். புருவங்களுக்கு மேல் வியர்த்திருந்தார்.

    எஸ்...

    மிஸ்டர் செல்வகிருஷ்ணன் உங்க பெரியப்பாதானே?

    ஆமாம்...

    அவர்க்கு எப்படி அடிபட்டதுன்னு சொல்ல முடியுமா...?

    மனோகர் ஆச்சர்யமாகி குறுக்கிட்டு கேட்டான். அவர் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கிறதா... உங்களுக்கு யார் சொன்னாங்க இன்ஸ்பெக்டர்..?

    ஒரு ஃபோன் கால் வந்தது. பேசினவங்க தன்னோட பேரைச் சொல்லிக்க விரும்பாமே, விஷயத்தை மட்டும் சொல்லிட்டு ரிஸீவரை வெச்சுட்டாங்க...

    ஃபோன்ல என்னான்னு சொன்னாங்க...?

    செல்வகிருஷ்ணன் ரத்த காயமடைஞ்சு ஹாஸ் பிட்டல் கொண்டு போகப் பட்டிருக்கிறார். அந்தக் காயம் அவர்க்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதை போலீஸ் கண்டுபிடிக்கணும்ன்னு சொன்னாங்க... அதான் உண்மையைத் தெரிஞ்சிட்டு போக வந்தேன்...

    ரசிகா சிறிது கோபமான குரலோடு - இன்ஸ்பெக்டரை ஏறிட்டாள். இன்ஸ்பெக்டர்! எங்க பெரியப்பாவுக்கு ஏற்பட்ட ரத்தக் காயம் சம்பந்தமா... எங்களை நீங்க சந்தேகப்படறீங்களா...?

    நோ... நோ... ரத்தக் காயம் அவருக்கு எப்படி ஏற்பட்டதுங்கிறதை சொன்னா போதும்.... நான் போய்கிட்டே இருப்பேன்.

    மனோகர் சொன்னான். பெரியப்பா பேப்பர் பார்த்துகிட்டே மாடிப்படிகளில் இறங்கிட்டிருந்தார். திடீர்ன்னு கால் பிசகி உருண்டுட்டார். எல்லாமே கருங்கல்லாலான மாடிப்படிகள். ஏதோ ஒரு படியில தலை மோதி பொத்திகிச்சு...

    மிஸ்டர் செல்வகிருஷ்ணனுக்கு என்ன வயசு இருக்கும்?

    அறுபத்தி நாலு...

    அவர்க்கு சன்னோ டாட்டரோ இல்லையா..?

    இல்லை...

    அவங்க ஒய்ஃப் எப்போ இறந்தாங்க..?

    பெரியம்மா இறந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது...

    நீங்க மூணுபேரும் பெரியப்பா கிட்டேதான் வளர்ந்தீங்களா?

    ஆமா... எங்க ஃபாதர் மதர் இறந்ததும்... பெரியப்பா ஊர்ல இருந்த எங்களை இங்கே கூட்டிட்டு வந்துட்டார். அவர்தான் எங்களை வளர்த்தார். படிக்க வெச்சார். இன்னிக்கு அவரோட கம்பெனியிலே - எங்க மூணுபேர்க்கும் பொறுப்புகளைக் குடுத்து - கம்பெனி நிர்வாகத்தை கவனிக்கச் சொல்லியிருக்கார். பெரியப்பா மேலே நாங்க பாசத்தை வைக்கலை. பக்தியையே வெச்சிருக்கோம்... யாரோ போன் பண்ணி ஏதோ சொன்னாங் கங்கிறதுக்காக எங்களை விசாரிக்க வந்தது சரியில்லை மிஸ்டர் இன்ஸ்பெக்டர்...

    ஸாரி... எங்களுக்கு ரிப்போர்ட் எங்கேயிருந்து வந்தாலும் சரி... அது உண்மையா பொய்யான்னு விசாரிக்க வேண்டியது எங்க கடமை...

    உங்களுக்கு ஃபோன் எத்தனை மணிக்கு வந்தது இன்ஸ்பெக்டர்..?

    அரைமணி நேரத்துக்கு முன்னாடி...

    ஃபோன்ல பேசினவனோட குரல் எப்படியிருந்ததுன்னு சொல்ல முடியுமா?

    ஒரு சாதாரண ஆண் குரல். பேசின நபர்க்கு நடுத்தர வயது தாண்டியிருக்கலாம்.... - இன்ஸ் பெக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே-

    இன்டென்சிவ் வார்டின் அறைக் கதவுகள் - சத்தமில்லாமல் திறக்கப்பட்டு டாக்டர் ஞானமூர்த்தி வெளியே வந்தார்.

    சசிதரன், மனோகர், ரசிகா மூன்று பேரும் அவரை நோக்கிப் பாய, இன்ஸ்பெக்டரும் அவர்களைத் தொடர்ந்தார்.

    டாக்டர்...! பெரியப்பாவுக்கு இப்போ எப்படியிருக்கு?

    டாக்டர் சோர்வாய் கண்களை மூடித் திறந்தார். இப்போ எதுவுமே சொல்ல முடியாத நிலைமை. ரத்தம் நிறைய சேதமாகியிருக்கு. ரத்தம் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கோம். ரத்தத்தை உடம்பு ஏத்துகிட்டதும் - ஒரு ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கும்...

    ரசிகா குரல் தழுதழுப்போடு குறுக்கிட்டாள். டாக்டர்... பெரியப்பாவோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இல்லையே...?

    அதை இப்போ எப்படிம்மா.. சொல்ல முடியும்...! அடிபட்டது இளைஞனாக இருந்திருந்தா... இந்த ரத்த சேதத்தை அவன் தாங்கியிருப்பான்... ஆனா இவர் ஏஜ்... தாங்க முடியலை...

    எக்ஸ்க்யூஸ்மீ டாக்டர்...

    மனோகரை ஒதுக்கிக் கொண்டு - அந்த இன்ஸ் பெக்டர் முன்னால் வந்தார். டாக்டர் ஏறிட்டார்.

    எஸ்!

    மிஸ்டர் செல்வகிருஷ்ணன் அடிபட்டது சம்பந்தமா ஒரு சின்ன என்கொய்ரி...

    என்ன கேக்கப் போறீங்க..?

    அவர் எப்படி அடிபட்டார்..?

    மாடிப்படிகளில் இறங்கி வரும்போது - கால் பிசகி கீழே உருண்டு வந்திருக்கிறார். நெற்றி, படிக் கட்டில் மோதியதில் - காயம் ஏற்பட்டிருக்கிறது.

    அது படிக்கட்டில் மோதிய காயம்தானா டாக்டர்...?

    யூ... மீன்..?

    செல்வகிருஷ்ணன் ஏதாவது ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்காரான்னு தெரிஞ்சுக்கத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

    நோ... சர்ட்டன்லி நாட்...! செல்வகிருஷ்ணன் யாராலும் தாக்கப்படலை. இது எதிர்பாராத விபத்து தான்.

    அவர்க்கு... இப்போது நினைவிருக்கிறதா டாக்டர்?

    நினைவில்லை...

    நினைவு எப்போ திரும்பும்..?

    ரெண்டு மணி நேரமாகலாம்...

    டாக்டர்! அவர்க்கு நினைவு திரும்பினதும் - எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. நான் அவர்கிட்டே வாக்குமூலம் வாங்கணும்....

    வாக்குமூலமா... எதுக்கு..? - மனோகர் சீற...

    இதென்ன மர்டர் கேஸா..? - சசிதரன் பொரும...

    இன்ஸ்பெக்டர் புன்னகைத்தார். நீங்க என்மேல கோபப்படறதையும் ஆத்திரப்படறதையும் பார்த்தா... எனக்கு ஆச்சர்யமாயிருக்கு. மிஸ்டர் செல்வ கிருஷ்ணன் இந்த சிட்டியில் ஒரு பெரிய மில்லினர். அவர் அடிபட்டு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு வரப் பட்டிருக்கார். அந்த அடி ஏற்பட்டது குறித்து யாரோ ஒருத்தர் எங்களுக்கு ஃபோன் பண்ணி விசாரிக்க சொல்லியிருக்கார். அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க நாங்க விசாரணை பண்ணணுமா வேண்டாமா..?

    மனோகர் கேட்டான். அப்போ.. நாங்க சொன்னதை நீங்க நம்பலையா...?

    பாதிக்கப்பட்டவங்களோட வாக்குமூலம்தான் போலீஸுக்கு நம்பிக்கையைத் தர்ற டானிக்...

    டாக்டர், இன்ஸ்பெக்டரை ஏறிட்டார்.

    ஓ.கே. இன்ஸ்பெக்டர்! நீங்க இங்கேயே வெயிட் பண்ணலாம். மிஸ்டர் செல்வகிருஷ்ணனுக்கு நினைவு திரும்பினதுமே... நீங்க அவர்கிட்டே வாக்கு மூலம் வாங்கிக்கலாம்...

    தேங்க்யூ டாக்டர்! - சொன்ன இன்ஸ்பெக்டர் வராந்தா ஓரமாய் போடப்பட்டிருந்த ஒரு வினைல் நாற்காலியில் போய் உட்கார்ந்து - தலையிலிருந்த தொப்பியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டார்.

    டாக்டர் மறுபடியும் இன்டென்சிவ் வார்டுக்குள் போய்விட - மனோகரும், சசிதரனும் ஒருத்தரை யொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

    போலீஸுக்கு யார் ஃபோன் பண்ணியிருப் பாங்கன்னு நீ நினைக்கிற மனோகர்...?

    இன்ஸ்பெக்டர் சொன்னதிலிருந்து நானும் அதைத்தான்... யோசிச்சு யோசிச்சு பார்த்துட்டிருக்கேன்.

    பெரியப்பா மாடிப்படியிலிருந்து உருளும் போது நாம மூணு பேரும் ஹால்லதான் இருந்தோம். ஸ்பாட்ல வேற யாருமே இருக்கலை...

    ரசிகா குறுக்கிட்டு சொன்னாள்.

    நமக்கு வேண்டாதவங்க யாரோ... இந்த சம்பவத்தை பூதாகாரப் படுத்த நினைக்கிறாங்க போலிருக்கு...

    சினிமாவிலேயும்... பத்திரிகையிலேயும் வர்ற மாதிரி - சொத்துக்காக நாம பெரியப்பாவை தீர்த்துக் கட்ட முயற்சி பண்றோம்ன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு. அதான் போலீஸுக்கு ஃபோன் பண்ணியிருக்காங்க...

    ஸார்...

    பின்னால் பெண் குரல் கேட்டு - மூன்று பேரும் திரும்பிப் பார்த்தார்கள். நர்ஸ் ஒருத்தி நின்றிருந்தாள்.

    என்ன சிஸ்டர்...?

    மிஸ்டர் மனோகர்?

    நான்தான்.

    உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு ஸார்... ரிசப்ஷன் கௌண்ட்டர்க்கு போனீங்கன்னா பேசலாம்...

    சொல்லிவிட்டு நர்ஸ் நகர்ந்து கொள்ள - மனோகர் ரிசப்ஷன் கௌண்ட்டரை நோக்கி வேகவேகமாய் போனான்.

    அரை நிமிட நடை... கௌண்ட்டரை நெருங்க - உள்ளேயிருந்த பெண் ரிஸீவரை எடுத்து நீட்டினாள். மனோகர் வாங்கி ஹலோ - என்றான்.

    ......................

    ஆமா... நான் மனோகர்தான் பேசறேன்.

    .......................

    ஓ..! பாலசண்முகம்... நீங்களா..? என்ன விஷயம்...

    .......................

    பரவாயில்லை... போன்லயே சொல்லுங்க...

    ........................

    நி...நி...நிஜமாவா...? எ...எப்போ..? மனோகரின் முகம் குப்பென்று வியர்க்க - கையிலிருந்த ரிஸீவர் ஒரு சருகு மாதிரி நடுங்கியது.

    2

    கபாலீஸ்வரர் கோயிலில் கூட்டம் நெரித்தது. ஆடி வெள்ளிக்கிழமைக்கென்றே ஸ்பெஷலாய் கசகசக்கும் கூட்டம். உயரத் தூக்கிய கைகளோடு வியர்வை கசியும் முகங்கள். தேங்காய் பழ பூக்கூடையோடு கும்பலில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி - கர்ப்பக்கிருகத்துக்கு பத்தடி தொலைவில் நின்று கொண்டாள் செல்வா. அவளுடைய இருபத்தாறு வயது உடம்பை கனமான பட்டுப் புடவை பேர்த்தியிருந்தது. நெற்றியிலும் நெற்றி வகிட்டிலும் குங்குமம். தலையில் மல்லிகை பாரம். செல்வாவுக்கு முன்னாலும் பின்னாலும் கும்பல் நெருக்க - அவள் சிரமப்பட்டு - அர்ச்சகரிடம் தட்டை நீட்டினாள்.

    சாமி பேர்க்கு ஒரு அர்ச்சனை பண்ணிடுங்கோ...

    அவர் வாங்கிக் கொண்டு நகர - சுற்றிலும் ஏராள இரைச்சல்.

    அட... ஏம்மா... இப்படி தள்ளிகிட்டு வர்றே...?

    நான் எங்கே தள்றேன்? நீ தான் தள்ளினே... நாலு ஆள் உடம்பை நீ ஒருத்தியே வெச்சுகிட்டு இப்படி கும்பல்ல வர்றியே? கும்பல் இல்லாத நேரத்துல... நீ வந்து சாமி கும்பிட்டா என்ன?

    என்னடி... சொன்னே?

    சின்னச் சின்ன சலசலப்புகள். தொடர்ந்து இரண்டு மாமிகள் செல்வாவுக்கு பின்னாலிருந்து - புது மோஸ்தர்ல ஒரு நெக்லஸ் பண்ணியிருக்கிறதா சொன்னியே? அது இதுதானா... ராஜி?

    ஊ.. ஹூம்... இதில்லை...

    பின்னே இது யாரோடது?

    என் நாத்தனாரோடது...

    பவளத்துக்குப் பதிலா... அமெரிக்கன் டயமண்ட்ஸ் வெச்சிருந்தா நெக்லஸ் எடுப்பாயிருந்திருக்கும்...

    அது ரசனை கெட்ட குடும்பம்...

    உள்ளே மணியோசையோடு - கற்பூர ஆரத்தி தெரிந்ததும்

    Enjoying the preview?
    Page 1 of 1