Sila Vellai Iravugalum Oru Karuppu Pakalum
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsVivek, Vishnu, Oru Vidukathai! Rating: 3 out of 5 stars3/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5
Related to Sila Vellai Iravugalum Oru Karuppu Pakalum
Related ebooks
Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsYetho... Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Neruppu! Rating: 3 out of 5 stars3/5Kathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Kaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsYethirthu Vazhga Rating: 0 out of 5 stars0 ratingsPachai Poiyum Sivappu Unmaiyum Rating: 0 out of 5 stars0 ratingsArai Milli Meettaril Oru Aabathu Rating: 5 out of 5 stars5/550kg Tajmahal Rating: 4 out of 5 stars4/5Vivek Ashok Rajesh Rating: 0 out of 5 stars0 ratingsKutram Kutrame! Rating: 5 out of 5 stars5/5Pookkal Un Vasamadi Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsRajini Raajyam Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Puthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsAduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrave Irave Vidiyaathey! Rating: 0 out of 5 stars0 ratingsOru Theeppantham Theebamagirathu and Pasparas Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKandupidiyungal Rating: 5 out of 5 stars5/5Birunthaa Anbirunthaa Rating: 5 out of 5 stars5/5Pistal Vazhthu Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsPuthumai Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsThinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsThaduthal Kooda Tharuvean Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Sila Vellai Iravugalum Oru Karuppu Pakalum
0 ratings0 reviews
Book preview
Sila Vellai Iravugalum Oru Karuppu Pakalum - Rajeshkumar
ராஜேஷ்குமார்
‘நெட்’டில் அரட்டை
தானம் - தர்மம்! என்ன வித்தியாசம்?
நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக, கோவில்களுக்கும், ஒரு நல்ல காரியத்தை செய்ய முற்படும் பெரியவர்களுக்கும் நாம் பொருளைக் கொடுத்தால் அது தானம். தர்மம் என்பது நம்மைவிட பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் நாம் கொடுப்பது. தானமாக இருந்தாலும் சரி, தர்மமாக இருந்தாலும் சரி மன மகிழ்வோடு செய்வதுதான் முக்கியம்.
1
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் பத்தாவது ப்ளாட்பாரத்தில் சேரன் எக்ஸ்ப்ரஸ் 10.20-க்கு புறப்பட்டுப் போக விநாடிகளை எண்ணிக் கொண்டு இருந்தது. ஸ்டேஷன் வெளிச்சத்திலும் இரைச்சலிலும் ததும்பித் திணறிக் கொண்டிருக்க A1 ஏ.சி.கோச்சில் ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன். 32 வயது. 6 அடி உயரம். 65 கிலோ.
ஒண்ணும் கவலைப்படாதே...! மூணு மணிக்கெல்லாம் சேலத்தில் இருப்பேன். நாளைக்குக் காலையில் பத்து மணிக்குத்தானே நம்ம ஃபங்க்ஷன். அதுக்குள்ளே ‘கஸ்டமர்ஸ் மீட்’டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிடலாம்... இதோ பார்... அருள்...! எதுவுமே செய்கிற வரை மலைப்பாய்த்தான் இருக்கும்.... நீ சாப்பிட்டு ஒரு தூக்கம் போடு... நான் வந்ததும் வேலையை ஆரம்பிச்சிடலாம்...! அப்புறம்...
எக்ஸ்க்யூஸ்மீ...!
குரல் கேட்டு நிமிர்ந்தான் உதயச்சந்திரன்.
டி.டி.ஈ. கறுப்புக் கோட்டில் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நின்றிருந்தார். கையில் வைத்திருந்த பேடில் பாஸஞ்சர்ஸ் லிஸ்ட் கற்றையாய் தெரிந்தது.
டிக்கெட் ப்ளீஸ்
- அவர் கையை நீட்ட, அருள்! நான் அப்புறமாய் பேசறேன்
என்று சொன்ன உதயச்சந்திரன் தன் பாக்கெட்டில் வைத்து இருந்த இ.மெயில் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கி சரிபார்த்த டி.டி.ஈ. மறுபடியும் கையை நீட்டினார். ஐ.டி.கார்ட் ப்ளீஸ்
பான் கார்டை அவரிடம் நீட்டியவன் கேட்டான்.
ஸார்! வண்டி... சேலம் எத்தனை மணிக்கு போகும்?
மூணு மணியாயிடும்!
என்னைக் கொஞ்சம் எழுப்பிவிட முடியுமா ஸார்? மறந்துபோய் தூங்கிட்டா அப்புறம் ஈரோடுதான்!
செல்போன்ல அலாரம் வெச்சுக்கோங்களேன்...!
என்னோட செல்போன்ல அலாரம் ஆப்ஷன் சரியான ஆக்டிவேஷன்ல இல்லை ஸார்... அதான் உங்களை எழுப்பிவிடச் சொன்னேன்.
நோ... ப்ராப்ளம்... நான் உங்களை சேலத்துல எழுப்பறேன்.
தேங்க்யூ ஸார்.
டி.டி.ஈ. நகர்ந்து போய்விட உதயச்சந்திரன் தன் மணிக்கட்டில் இருந்த வாட்ச்சைப் பார்த்தான். சேரன் புறப்பட்டுப் போக இன்னமும் பத்து நிமிடம் பாக்கியிருந்தது. சற்று முன்னால் வாங்கிய வார இதழைப் பிரித்து வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.
இரண்டாவது பக்கம் அந்த துணுக்குச் செய்தி பிரசுரமாகியிருந்தது. ஒரு பழைய செய்திதான். சுவாரஸ்யம் காட்டாமல் படித்தான்.
ஒரு முக்கியமான விஷயமாக காந்தியிடம் ஆலோசனை பெற அப்போதைய பாரதப் பிரதமர் நேரு சென்றார். அப்பொழுது அதிகாலை 4.30 மணி. காந்திஜி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்ப விரும்பாத நேரு காத்து இருக்க ஆரம்பித்தார். ஆறு மணிக்கு எழுந்த காந்திஜி, நேரு காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு இந்தியப் பிரதமரா இந்த ஏழைக்காகக் காத்துக் கொண்டு இருப்பது?
என்று கேட்டார். அதற்கு நேரு, உழைத்த களைப்பில் பாரதம் உறங்கிக் கொண்டு இருக்கும் போது அதன் தூக்கத்தைக் கெடுக்க பாரதப் பிரதமரானாலும் எனக்கு உரிமை கிடையாது
என்றார்.
அந்தத் துணுக்குச் செய்தியை ஒரு புன்னகையோடு உதயச்சந்திரன் படித்துக் கொண்டு இருக்கும் போதே காதருகே ஒரு பெண் குரல் கேட்டது.
எக்ஸ்க்யூஸ்மீ...
சுமாரான அழகோடு - ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். தலையில் இடம் பிடித்திருந்த மல்லிகை மணத்தது.
எஸ்...
என்னோட பெர்த் நெம்பர் தர்ட்டி ட்டூ. லோயர் பெர்த். லக்கேஜை சீட்டுக்குக் கீழே வைக்கணும். கொஞ்சம் தள்ளி உட்கார்றீங்களா?
பை ஆல் மீன்ஸ்
உதயச்சந்திரன் தள்ளி உட்கார்ந்தான்.
அந்தப் பெண் தனக்குப் பின்னால் இருந்த போர்ட்டரைத் திரும்பிப் பார்த்தபடி சொன்னாள். எல்லா லக்கேஜ்ஜையும் உள்ளே தள்ளி வெளியே தெரியாதபடிக்கு சரியாய் வைய்யப்பா.
திடகாத்ரமாய் இருந்த அந்த போர்ட்டர் மூன்று சூட்கேஸ்களையும் ஒரு ஏர்பேக்கையும் சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு வியர்வை முகமாய் நிமிர்ந்தான். இளம்பெண் தன் கையில் வைத்து இருந்த பர்ஸைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தாள்.
போர்ட்டர் பணத்தை வாங்காமல் அந்தப் பெண்ணையே பார்க்க, அவள் புருவங்களை உயர்த்தினாள்.
என்ன பார்க்கிறே?
என்னம்மா...! இருநூறு ரூபா தர்றீங்க?
பின்னே எவ்வளவு...? பேசினது அவ்வளவுதானே?
என்னது... இருநூறா...! சரியாய் போச்சு...! காதுக்கு ஒரு செவிட்டு மெஷினை மாட்டுங்கம்மா... பேசின அமௌண்ட் ஐநூறு.
அந்தப் பெண்ணின் முகத்தில் கோபச் சிவப்பு பரவியது.
காதுக்கு செவிட்டு மெஷினை மாட்ட வேண்டியது உனக்குத்தான்! நீ மொதல்ல ஐநூறு கேட்டே. நான் முடியாதுன்னு சொன்னதும் நானூறு கேட்டே. அதுக்கும் நான் ஒத்துக்காத போது முந்நூறு கேட்டே. நான் மாட்டேன்னு சொல்லிட்டு வேற போர்ட்டரைக் கூப்பிட நினைச்ச போது ‘சரி இரு நூறு ரூபாய் குடுங்கம்மா’ன்னு சொன்னே. நானும் ட்ரெயினுக்கு லேட்டாகுதுங்கிற எண்ணத்துல போனால் போகுதுன்னு ஒத்துகிட்டேன். இப்ப இங்கே வந்து தகராறு பண்றியே?
போர்ட்டர் தோளில் போட்டிருந்த சிவப்புத்துண்டை எடுத்து வேகமாய் தலைக்குக் கட்டிக் கொண்டான்.
என்னம்மா! தகராறு பண்றது நீயா நானா? பேசியபடி ஐநூறு ரூபாய் என் கைக்கு வரணும். இல்லேன்னா நடக்கிற கதையே வேறே!
பார்த்துக் கொண்டிருந்த உதயச்சந்திரனுக்கு பொறுக்கவில்லை. மெதுவான குரலில் குறுக்கிட்டான். ஏம்பா! உனக்கே இது நியாயமாய் இருக்கா...? ஸ்டேஷன் வாசலில் இருந்து இந்த ஏ.ஸி.கோச் நூறு மீட்டர் தூரம் கூட இருக்காது. மூணு சூட்கேஸையும் ஒரு கேரி பேக்கையும் தூக்கிட்டு வர்றதுக்கு ஐநூறு ரூபாயா? உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா?
போர்ட்டர் உதயச்சந்திரனிடம் திரும்பினான்.
ஸார்! இது எனக்கும் இந்த பொண்ணுக்குமான பிரச்சினை. நீங்க பேசாதீங்க...
உதயச்சந்திரன் கோபமாய் எழுந்தான்.
இதோ பார்! ஒரு அநியாயம் கண்ணு முன்னாடி நடந்தா யார் வேணும்ன்னாலும் தட்டிக் கேட்கலாம். இரு நூறு ரூபாய் கூலிக்கு ஒத்துகிட்டு இப்போ ஐநூறு ரூபாய் கேட்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. ஒழுங்கு மரியாதையாய் இருநூறு ரூபாய் பணத்தை வாங்கிட்டு கிளம்பு!
என்ன ஸார் மிரட்டரியா...?
குரலை உயர்த்திக் கொண்டு உதயச்சந்திரனுக்குப் பக்கத்தில் வந்தான். அவன் விட்ட மூச்சுக்காற்றில் டாஸ்மாக் நாறியது.
நீ இப்படி அடாவடித்தனமாய் பேசறதுக்கு என்ன காரணம்னு இப்பப் புரியுது. குடிச்சிருக்கியா...?
"ஆமா!