Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappu Sei Thappi Sel!
Thappu Sei Thappi Sel!
Thappu Sei Thappi Sel!
Ebook181 pages59 minutes

Thappu Sei Thappi Sel!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thappu Sei Thappi Sel!

Read more from Rajeshkumar

Related to Thappu Sei Thappi Sel!

Related ebooks

Related categories

Reviews for Thappu Sei Thappi Sel!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappu Sei Thappi Sel! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    நான் படித்ததில் வியந்தது:

    சஞ்சீவி மலை என்பது ராமாயணத்தில் வரும் ஒரு மலை. லட்சுமணன் போர்க்களத்தில் அம்பால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த போது லட்சுமணனைக் காப்பாற்ற ஆஞ்சநேயர் மூலிகைகள் நிறைந்த மலையைத் தேடிப் போனார். லட்சுமணனின் மயக்கத்தை தெளிவிக்கும் மூலிகை எது என்று தெரியாத குழப்பத்தில் அந்த மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு பறந்து வந்தார். அவர் அப்படி தூக்கி வந்த சஞ்சீவி மலையில் அதி முக்கியமான நான்கு மூலிகைகள் இருந்தன. முதலாவது: சாவர்ணகரணி, இரண்டாவது: விசல்யகரணி, மூன்றாவது: சந்தானகரணி, நான்காவது: மிருத சஞ்சீவினி. இந்த நான்கு மூலிகைகளில் எந்த மூலிகை லட்சுமணனுக்கு உபயோகப்படுத்தப்பட்டது என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கு இரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பதில் காத்திருக்கிறது.

    1

    ரோம் ஏர்போர்ட்டான லியோ நார்டோ - டாவின்ஸியை விமானம் 716 தொட்டபோது மத்தியானம் பன்னிரெண்டு மணி. இத்தாலிய வானம் மேக மூட்டத்தோடு மழை பெய்யலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது.

    ஏர்போர்ட் லௌன்ஞ்சில் பொக்கே ஒன்றை வைத்துக் கொண்டு காத்திருந்த இந்திய தூதரகத்தின் செயலாளர் சத்ரபதி, தூதர் லலித் சர்மாவை ஏறிட்டார்.

    ஸார்! விமானம் லேண்ட் ஆகிவிட்டது. ரிசப்ஷன் செல்லுக்கு போய்விடலாமா...?

    ஓவர்கோட் அணிந்து நல்ல உயரத்தில் இருந்த லலித்சர்மா தன் முன்புற வழுக்கையில் ஒட்டியிருந்த வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றியபடி நடந்தார். அந்த பிரம்மாண்டமான விமான நிலையத்தின் எல்லாத் திசைகளிலும் விமானங்கள் பறக்கக் காத்திருந்தன. பயணிகள் கொத்து கொத்தாய் ஆங்காங்கே நின்று எலக்ட்ரானிக் போர்டுகளில் மாறிக் கொண்டிருந்த இத்தாலிய மொழி அறிவிப்புகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    நடந்து கொண்டிருந்த இந்திய தூதர் லலித்சர்மா தனக்கு இணையாய் நடந்து வந்து கொண்டிருந்த செயலாளரிடம் திரும்பினார்.

    சத்ரபதி!

    ஸார்...

    ஏதாவது ‘கெஸ் ஒர்க்’ பண்ண முடிந்ததா?

    எதைப்பற்றி ஸார்?

    ராணுவத்தின் துணை அமைச்சர் சதுர்புஜன் திடீர் பயணமாக ரோம் புறப்பட்டு வருவது பற்றி?

    ஸாரி ஸார்...! ஐ ஹேவ் நோ ஐடியா... பட்... சின்னதாய் ஒரு சந்தேகம்...!

    என்ன...?

    இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த ஒரு நாடுமே நம்பிக்கைக்கு உரியதாய் இல்லை. அதிலும் சீனா போடுகிற ஆட்டம் நம்முடைய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கொட்டத்தை அடக்குவதற்காகவே நாம் நம் ராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. இன்றைக்கு உள்ள நிலையில் இத்தாலிய ராணுவம் பலம் வாய்ந்த ஒன்றாய் இருக்கிறது.

    அதனால்...?

    "அதனால் நம் இந்திய ராணுவத்தின் துணை அமைச்சர் சதுர்புஜன் இந்த நாட்டில் உள்ள ராணுவ அமைச்சர் ப்யூஜிரோவை சந்தித்துப் பேச வந்து இருக்கலாமே?"

    அப்படியொரு சந்திப்பு நிகழ்வதாய் இருந்தால் இத்தாலிய அரசு எனக்கு அஜண்டா அனுப்பியிருக்குமே?

    ஸோ.. திஸ் ஈஸ் நாட் அஃபிஷியல்?

    எஸ்...! எதுக்காக இந்த ஆஃப் த ரிக்கார்ட் ரோம் விஜயம் என்று தெரியவில்லை...

    டோண்ட் ஒர்ரி ஸார்... இன்னும் சிறிது நேரத்தில் ராணுவ துணை அமைச்சர் சதுர்புஜனை நாம் பார்க்கப் போகிறோம். மதிய உணவுக்குப் பின் ஓய்வறையில் உட்கார்ந்து அவரோடு பேசப்போகிறோம். அப்படி பேசும் போது இத்தாலிக்கு இந்திய தூதரான உங்களிடம் அவர் எல்லா விபரங்களையும் சொல்லித்தானே ஆக வேண்டும்!

    அவர் சொல்லுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியே அவர் ஏதாவது சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்.

    எதனால் உங்களுக்கு அப்படியொரு சந்தேகம் ஸார்?

    நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. இத்தாலியில் நான் இந்தியத் தூதராய் பணியாற்றினாலும் எனக்குத் தெரியாமல் இந்திய அரசு இத்தாலியில் உள்ள உயர் ராணுவ அதிகாரிகளோடு தொடர்பு வைத்துள்ளார்கள்.

    நீங்கள் சொல்வது உண்மையா?

    உண்மைதான்...! ஆனால் அதை உண்மை என்று சொல்லி நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் இல்லை...

    ஸார்! விமானத்திலிருந்து பயணிகள் இறங்கி வர ஆரம்பித்துவிட்டார்கள். நாம் இன்னும் சற்று முன்னால் போய் நின்று கொண்டால் அமைச்சரை வரவேற்க வசதியாய் இருக்கும்.

    இருவரும் முன்னால் சென்றார்கள். வரவேற்க வந்து இருக்கும் நபர்களோடு கலந்து நின்றார்கள்.

    விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க, லலித்சர்மா - சத்ரபதியின் கண்கள் ராணுவ துணை அமைச்சர் சதுர்புஜனைத் தேடின.

    அவர் பார்வைக்கு கிடைக்கவில்லை.

    பயணிகளின் கூட்டம் நிமிஷத்துக்கு நிமிஷம் அடர்த்தி குறைந்து இறுதியில் மொத்த பயணிகளும் காணாமல் போயினர்.

    என்ன ஸார்! ஆள் வரலை.

    அதுதான் எனக்கும் குழப்பம்.

    இந்த 716 ஃப்ளைட்தானே?

    ஆமாம்...! எனக்கு வந்த ஃபேக்ஸ் செய்தியில் 716 ஏர்பஸ்ஸில் அவர் வருவதாய்க் குறிப்பிட்டிருந்தார்கள்.

    ஃபேக்ஸ் பொய்யாய் இருக்க வாய்ப்பில்லையே?

    விமானத்தின் எண் சரியானதுதானா... என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். என்று லலித்சர்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் கோட் பாக்கெட்டிலிருந்து மெலிதாய் சிணுங்கியது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

    ஒரு புது எண்.

    மெல்ல குரல் கொடுத்தார்.

    எஸ்...

    மிஸ்டர் லலித் சர்மா?

    ஹோல்டிங்...

    நான் சதுர்புஜன்...

    லலித்சர்மா பதட்டமானார். மிஸ்டர் சதுர்புஜன்! நீங்கள் இப்போது எங்கிருந்து பேசுகிறீர்கள்? விமானநிலையத்தில் உங்களுக்காக நானும் என்னுடைய உதவியாளரும் காத்துக் கொண்டு இருக்கிறோம். விமான நிலையத்தின் எந்தப் பகுதியில் இப்போது இருக்கிறீர்கள்?

    நான் இப்போது விமான நிலையத்தில் இல்லை.

    பிறகு...?

    ரோமின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ‘டரீம்ஸ் ட்ரூ’ ஹோட்டலில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்.

    எப்போது ரோம் வந்தீர்கள்?

    நேற்று இரவே!

    எனக்குத் தகவல் இல்லையே! நீங்கள் இன்றைக்கு மதியம் 716 ஃப்ளைட்டில் வருவதாக எனக்கு இன்று காலை ஃபேக்ஸ் செய்தி வந்தது. அந்த ஃபேக்ஸ் செய்திப்படி உங்களை வரவேற்க வந்தேன்.

    ஸாரி! உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு என்னுடைய மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இத்தாலிப் பயணம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நம் இந்திய அரசு சில ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறது. அந்த ஏற்பாடுகிளில் இதுவும் ஒன்று...!

    எதற்காக இந்த ரகசியப் பயணம்?

    சொல்கிறேன்... நீங்கள் உடனடியாய் புறப்பட்டு நான் தங்கியிருக்கும் ‘ட்ரீம்ஸ் ட்ரூ’ ஹோட்டலுக்கு வாருங்கள். அறை எண் 455. ஹோட்டலில் இருக்கும் யார்க்கும் நான் இந்தியாவின் ராணுவ துணை அமைச்சர் என்பது தெரியாது. ஹோட்டலின் பதிவேட்டில் என்னை ஒரு சுற்றுலா பயணியாய் பதிவு செய்து இருக்கிறேன். நீங்கள் மட்டும் ஹோட்டலுக்கு வாருங்கள். உதவியாளர் யாரையும் அழைத்துக் கொண்டு வரவேண்டாம்.

    ஏதாவது பிரச்னையா...?

    "பிரச்னை இருக்கப் போய்த்தானே நான் ஒரு சுற்றுலாப் பயணியாய் மாறி ரோம் நகர்க்கு வந்து ஹோட்டலில்

    Enjoying the preview?
    Page 1 of 1