Thazhambu Naagangal! and Irandavathu Mugam
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Thazhambu Naagangal! and Irandavathu Mugam
Related ebooks
Neethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsPuthaithu Vaitha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nimishangal! and Oru Megathin Thaagam! Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratings19 vayathu Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thappikkum Velai and Arukil Oru Naragam! Rating: 0 out of 5 stars0 ratingsMaandavan Kattalai Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu! Nee Yaroodu…? Rating: 5 out of 5 stars5/5Urainthu Pona Unmai! Rating: 4 out of 5 stars4/5Miss Preethi 545 Beach Road Mumbai Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Jannal Rating: 0 out of 5 stars0 ratingsIrandil Ontru Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathavu Thattapadukirathu Rating: 5 out of 5 stars5/5Avan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUyiroduthan Vilaiyaduven! Rating: 5 out of 5 stars5/5Uravukal Pirivathillai Rating: 3 out of 5 stars3/5Hongkong Vizhigal and Vidinthal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVaranum Maruththaal Maranam Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaarani Thappu Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Thendral Rating: 0 out of 5 stars0 ratingsYaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathivelai Rating: 5 out of 5 stars5/5Thinam Thinam Thigil Thigil Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnoduthan Rating: 0 out of 5 stars0 ratingsSatthamillatha Samuthiram and Soorya Thagam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Thazhambu Naagangal! and Irandavathu Mugam
0 ratings0 reviews
Book preview
Thazhambu Naagangal! and Irandavathu Mugam - Rajeshkumar
23
1
காலை பதினோரு மணி. அமைச்சர் நேசமணியின் அறையில் இண்ட்டர்காம் கிணுகிணுத்தது. முந்திரி பக்கோடாவை மென்று - காப்பியை குடித்துக் கொண்டிருந்த அமைச்சர் ரிசீவரை எடுத்தார். அசை போட்டுக் கொண்டே பேசினார்.
ஹலோ...
சார்...! நான் முதலமைச்சரோட பி.ஏ. கஜபதி பேசறேன்.
என்ன விஷயம்?
சி.எம். உங்களைக் கூப்பிட்டார்...
பக்கோடாவை மென்று கொண்டிருந்த வாய் சட்டென்று மவுனம் அனுஷ்டித்தது. குரலில் பதட்டம் ஏறிக் கொள்ள - கேட்டார்.
முதலமைச்சர் கூப்பிட்டாரா...? எதுக்கு?
தெரியலை சார். நீங்க ஓய்வா இருந்தால் உடனே உங்களை அவரோட அறைக்கு வரச் சொன்னார்...
அமைச்சர் நேசமணி நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுந்தார். வாஷ்பேசனில் வாய் கொப்பளித்து மேல் துண்டால் ஈரத்தை ஒற்றிக் கொண்டு வெளியே வந்தார். அவரை பார்ப்பதற்காக காத்திருந்த கட்சி ஆட்கள் தலைவரே!
என்று அவசர அவசரமாய் சேவிக்க - இப்ப வந்துடறேன். சி.எம். கூப்பிட்டாராம்...
என்றபடி அமர்த்தலாய் நடந்து போனார். உள்ளுக்குள் இதயம் அறுந்த கோழியாய் உதறிக் கொண்டது.
‘எதுக்காக கூப்பிட்டிருப்பார்?’
‘எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக் கொடுத்ததில் சில லட்சங்கள் என் கைக்கு மாறியது அவர் காதுக்கு போயிருக்குமோ?’
‘இல்லை, ஆஸ்பத்திரியில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு வீடுகளை கட்டித் தந்த திட்டத்தில் - நான் பண்ணின கையாடல் வெளியே வந்திருக்குமோ?’
யோசித்தபடியே நடந்தார் நேசமணி. ‘இவரெல்லாம் ஏன் அரசியலுக்கு வரணும். முதல் அமைச்சரா வந்து உட்கார்ந்துகிட்டு உயிரை வாங்கறார். ஆட்சிக்கு வந்ததுமே... மக்களுக்கு உழைக்கிற மந்திரிகளுக்கு அவ்வளவு சம்பளம் எதுக்குன்னு சம்பளத்தை பாதியா குறைச்சார். தனக்கு சம்பளமே வேண்டாம்ன்னு சொல்லிட்டார். இந்த ஆட்சி காலாவதியாகி - தேர்தல் வர்றதுக்குள்ளே ஒரு கணிசமான தொகையை சேர்த்துக்கலாம்ன்னு பார்த்தா முடியாது போலிருக்கே...’
முதலமைச்சர் அறை வந்தது.
காவலர் சல்யூட் போட பி.ஏ. கஜபதி எதிர்கொண்டார்.
உள்ளே போங்க சார். சி.எம். வெயிட் பண்ணிட்டிருக்கார்.
சி.எம். மூட் எப்படியிருக்கு?
கஜபதி உதட்டைப் பிதுக்கினார். ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலை சார். ஒரு நிமிடம் சந்தோஷமாயிருக்கார். அடுத்த நிமிடமே எரிஞ்சு விழறார். போன கால் மணி நேரத்துக்கு முன்னாடி வரை அடுத்த வாரம் நடக்கப் போகிற தன் பெண்ணோட கல்யாணத்தைப் பற்றி யார்கிட்டயோ டெலிபோன்ல சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டிருந்தார்.
நேசமணி பயமாய் எச்சில் விழுங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். குனிந்து கும்பிடு போட்டார்.
வணக்கம் தலைவரே!
ஒரு ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் சத்தியமூர்த்தி நேசமணியை ஏறிட்டுப் பார்க்காமல் எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார்.
உட்காரய்யா...
நேசமணி நுனி நாற்காலியில் பிள்ளை பெறப் போகிற கர்ப்பிணிப் பெண்ணின் அவஸ்தையோடு உட்கார்ந்தார். மின்விசிறி ஓடிக் கொண்டிருக்கும் சத்தத்தின் பின்னணியில் இரண்டு நிமிட நேரம் பைலை பார்த்துவிட்டு அதை ‘டப்’பென்று மூடினார் சத்தியமூர்த்தி. மேஜையின் ஓரத்துக்கு ஃபைலை நகர்த்திவிட்டு - அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, கதர் சட்டையின் நுனியில் துடைத்துப் போட்டுக் கொண்டே கேட்டார்.
உனக்கு என்ன வயசாகுது?
தலைவரே...!
வயசு எவ்வளவாச்சுன்னு கேட்டேன்.
நாற்பத்தியாறு.
உன் மூத்த பெண்ணுக்கு என்ன வயசு?
இ... இருபது...
இருபது வயசுல ஒரு பெண்ணை வீட்ல வைச்சுகிட்டு... ஒரு அயோக்கியத்தனமான காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கியே... உன்னை என்ன பண்ணலாம்?
த... தலைவரே... நீங்க... எ... என்ன சொ... சொல்றீங்க?
போன வாரம் சின்னவேடம்பட்டி கிராமத்துக்கு எதுக்காக போனே?
வந்து... வந்து...
சொல்லய்யா...
ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைக்கிறதுக்காகப் போனேன்.
அதை திறந்து வைச்சுட்டு அன்னிக்கே சென்னை திரும்பாமே பஞ்சாயத்து யூனியன் தலைவரா இருக்கிற வரதப்பன் பங்களாவில் ஏன் தங்கினே?
அ... அவரு... என்னோட பால்ய சிநேகிதரு... தலைவரே... அதான் ஒருநாள் இருந்துட்டு போலாம்ன்னு...
முதலமைச்சர் சத்தியமூர்த்தி கையமர்த்தினார். நீ ஏன் அவரோட பங்களாவில் தங்கினேன்னு நான் சொல்லட்டுமா?
த... தலைவரே...
நெற்றியில் - வழுக்கையில் வியர்வை மின்ன வாய் திக்கினார் நேசமணி. சத்தியமூர்த்தி தொடர்ந்தார். ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழாவுக்கு போன உன்னோட பார்வையில் - ரொம்ப அழகாயிருந்த ‘செண்பகம்’ங்கிற நர்ஸ் பட்டுட்டா. ராத்திரி அவளை தொட்டு பார்த்துடற எண்ணத்துல யூனியன் தலைவர் பங்களாவில் தங்கிட்டே! நினைச்ச மாதிரியே அந்தப் பெண்ணையும் தொட்டுட்டே. இல்லையா?
த... தலைவரே...!
தோளில் போட்டிருந்த துண்டால் வியர்வையில் சொத சொதத்து போயிருந்த முகத்தை ஒற்றிக் கொண்டார் நேசமணி.
அந்த நர்ஸ் செண்பகம் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணு. கறைபட்ட உடம்போடு வாழப் பிடிக்காமே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போனாளாம். நம்ம ஆளும் கட்சி பேர்ல களங்கம் வந்துடக் கூடாதுங்கிறதுக்காக போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணோட தற்கொலைக்கு வேற காரணத்தைச் சொல்லி - கேசை குளோஸ் பண்ணிட்டாங்களாம். ஒரு மணி நேரத்துக்கு முந்தி ‘ஹாட் லைன்’ல எனக்கு செய்தி வந்தது...
ம... மன்னிக்கணும் த... தலைவரே... ஏதோ சபலப்பட்டு...
சத்தியமூர்த்தி பேப்பர் வெயிட்டை ஆவேசமாய் உருட்டினார்.
என்னய்யா பெரிய சபலம்? நீ மந்திரி வேலை பார்க்க வந்தியா...? இல்லே மதனகாமராசன் வேலை பார்க்க வந்தியா...? மக்கள் ஓட்டு போட்டு உன்னை மந்திரியாக்கினது எதுக்காக? எந்தப் பொண்ணு அழகா இருக்கான்னு பார்த்து அதுகூட படுக்கிறதுக்கா...? வீட்ல பெண்டாட்டியை வைச்சுக்கிட்டு... கல்யாண வயசுல பெண்ணையும் வைச்சுக்கிட்டு ஏன்யா... உனக்கு இந்த சாக்கடை புத்தி? பூ மாதிரி இருந்த ஒரு பெண்ணை புழுதியில் போட்டு மிதிச்சுட்டியே...?
த... தலைவரே...!
தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிட்டார் நேசமணி.
இதோ பார்! மக்களை ஏமாத்தறதுக்காக நீ போடற இந்த போலி கும்பிடை எனக்கும் போடாதே! உன் கால்ல செருப்பு போட்டிருக்கியா?
மவுனித்தார் நேசமணி.
செருப்பு போட்டிருக்கியான்னு கேட்டேன்?
போ... போட்டிருக்கேன் தலைவரே!
அதைக் கழட்டி என்னை ரெண்டு அடி அடி... உனக்குப் போய் மந்திரி பதவியைக் கொடுத்தேன் பார்...
நேசமணி குரல் தழுதழுத்தார். நீங்க இப்படி பேசறதைப் பார்த்தா என் இதயமே வெடிச்சுடும் போலிருக்கு தலைவரே!
இந்த பொதுக்கூட்ட வசனமெல்லாம் என்கிட்டே வேண்டாம். நீ செய்த காரியத்துக்கு பிராயச்சித்தமா என்ன பண்ணணும்ங்கிறதை நான் சொல்றேன். அதை பண்ணிடு.
சொல்லுங்க தலைவரே! நான் என்ன பண்ணணும்? என் தலையை அறுத்து உங்க காலடியில் வைக்கணுமா? வைச்சுடறேன்.
உன்னோட தலையெல்லாம் எனக்கு வேண்டாம். நீ பேசாமே ராஜினாமாக் கடிதம் எழுதி கொடுத்துடு.
த... தலைவரே!
மின்சாரக் கம்பியை மிதித்த மாதிரி நேசமணி அலறினார். அ... அது மட்டும் வேண்டாங்க தலைவரே... நான் பதவியில் இல்லேன்னா கட்சியில யாரும் என்னை மதிக்க மாட்டாங்க. சாக்கடை ஓரத்துல முளைச்சிருக்கிற புல்லு மாதிரி நினைச்சுடுவானுக.
நீ தொடர்ந்து மந்திரி பதவியில் இருந்தால் என் பேரும் கட்சிப் பேரும் கெட்டுப் போயிடுமேய்யா. நல்லவிதமா ராஜினாமா பண்ணிடு.
ராஜினாமாவுக்கு காரணம் என்னான்னு கேட்டு... பத்திரிகைக்காரங்க குதறி எடுத்துடுவாங்க தலைவரே! என்ன காரணத்தைச் சொல்றது?
உனக்குத் தெரியாத காரணமா? ‘எனக்கு பதவி பெரிசில்லை. கட்சிப் பணிதான் முக்கியம். கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக இருக்கத்தான் பிரியப்படறேன். இந்த மாதிரி பதவிங்கிற அலங்காரக் கிரீடம் எனக்கு வேண்டாம்’ - அப்படீன்னு ஒரு அறிக்கை விட்டுட வேண்டியதுதானே?
தலைவரே...!
என்ன?
கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிக்கக் கூடாதா?
நீ பண்ணியிருக்கிற சின்னத்தனமான காரியத்துக்கு பெரிய மனசு பண்ணி எப்படி மன்னிக்க முடியும்? பேசாமே ராஜினாமா கடிதத்தை எனக்கு அனுப்பிச்சுட்டு ஊர் போய்ச் சேரு. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் கட்சிக் காரியங்களை ஒழுங்கா கவனி. கள்ளச் சாராயம் காய்ச்சப் போயிடாதே...
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே - மேஜையின் மேலிருந்த ஆறு நிற டெலிபோன்களில் ஒன்று தொண்டையைக் கனைத்தது.
சத்தியமூர்த்தி ரிசீவரை எடுத்தார்.
எஸ்...
பி.ஏ. பேசினார். "சார்! டி.ஜி.பி உங்களைப் பார்த்துப் பேசறதுக்காக