Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thigil Thiruvizha!
Thigil Thiruvizha!
Thigil Thiruvizha!
Ebook139 pages54 minutes

Thigil Thiruvizha!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thigil Thiruvizha!

Read more from Rajeshkumar

Related to Thigil Thiruvizha!

Related ebooks

Related categories

Reviews for Thigil Thiruvizha!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thigil Thiruvizha! - Rajeshkumar

    14

    1

    அந்த நள்ளிரவு வேளையில் விவேக்கின் செல்போன் விழித்துக் கொண்டு குரல் கொடுக்க, விவேக் கொஞ்ச மாய் தூக்கம் கலைந்து வலது கையை தலைமாட்டுக்குக் கொண்டுபோய் செல்போனை எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

    எஸ்...

    மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

    பேசறது விவேக் ஸார்தானே...?

    ஆமா...

    ஸார்... என் பேர் பூமா. ‘ஸ்பீடி ரெகவர்’ ஹாஸ்பிட்டலுக்கு எதிர்ப்புறம் எஸ்.டி.டி. பூத் வெச்சு நடத்திட்டு வர்றேன்.

    சரி...!

    உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஸார்.

    விவேக் சுவர் கடிகாரத்துக்குப் பார்வையைக் கொண்டுபோனான். நேரம் 12.15.

    என்ன பேசணும்...?

    ஒரு முக்கியமான விஷயம் ஸார். போலீஸுக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன். போலீஸுக்கு விஷயத்தைக் கொண்டு போனா என்னோட பேர் வெளியே வரும். அதையெல்லாம் நான் விரும்பலை ஸார்...

    சரி... என்ன விஷயம்... சொல்லு.

    ஒரு நிமிஷம் ஸார்... கஸ்டமர் ஒருத்தர் போன் பண்ண வர்றார். அவர் போனதும் நானே உங்களுக்கு போன் பண்றேன். ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் ஸார்... மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டுவிட விவேக் செல்போனை மறுபடியும் தலைமாட்டுக்குக் கொண்டு போனான்.

    ரூபலா உல்லன் போர்வைக்குள்ளிருந்து கேட்டாள்: யார்ங்க அது போன்ல...?

    யாரோ... பூமாவாம்...!

    என்னவாம்...?

    ஏதோ முக்கியமான விஷயமாம். பேசணுமாம்... ஸ்பீடி ரெகவர் ஹாஸ்பிட்டலுக்கு எதிர்ப்புறம் எஸ்.டி.டி. பூத் வெச்சிருக்காளாம்.

    என்ன விஷயம்ன்னு சொன்னாளா?

    அதுக்குள்ளே போன் பண்ண யாரோ கஸ்டமர் வந்துட்டாங்களாம். மறுபடியும் போன் பண்றதா அந்த பொண்ணு சொல்லியிருக்கா.

    என்னங்க இது... ராத்திரியில் தூங்கக்கூட முடியாமே தொந்தரவு...? செல்போனை ஆஃப் பண்ணி வையுங்க... விஷயம் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்...

    ஏதோ... ஒரு முக்கியமான விஷயம் இருக்கப் போய்த்தான் அந்தப் பெண் போன் பண்ணியிருக்கா...! பார்க்கலாம் என்ன சொல்றான்னு...

    விவேக் காத்திருந்தான். ரூபலா மறுபடியும் தூக்கத்துக்குப் போய்விட - விவேக்கிற்கு தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்து ஜன்னல் வழியே இருட்டு வானத்தில் ஒட்டியிருக்கும் வைரத்துணுக்குகளாய் மின்னும் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்தான்.

    நேரம் கரைந்து 12.30 ஐத் தொட்டுவிட்டு 12.45 ஐ நெருங்கியது.

    ‘ஒரு கஸ்டமர் அரைமணி நேரமாகவா பேசிக் கொண்டிருப்பான்...?’

    ரூபலா இடையே ஒரு தடவை கண் விழித்து என்ன... உங்க பூமா போன் பண்ணினாளா...? என்று கேட்டாள்.

    இல்லை... அங்கே அவளுக்கு என்ன அவஸ்தையோ...?

    அவ போன் பண்றவரைக்கும் இப்படியே உட்கார்ந்துட்டிருக்கப் போறீங்களா...?

    இல்லை...! விவேக் தன் செல்போனில் பதிவாகியிருந்த பூமாவின் பூத் எண்களை செல்லில் தட்டினான்.

    ரிஸீவர் உடனே எடுக்கப்பட்டது.

    யாரு...?

    பேசறது யாரு... பூமாவா...?

    ஆமா...

    நான் விவேக் பேசறேன்.

    விவேக்கா..! எந்த விவேக்...?

    விவேக்கின் பின்னந்தலையில் சின்னதாய் ஒரு அதிர்ச்சி. எந்த விவேக்கா...? பனிரெண்டே கால் மணிக்கு நீ எந்த விவேக்குக்கு போன் பண்ணினியோ அந்த விவேக்...!

    பனிரெண்டே கால் மணிக்கு நான் உங்களுக்கு போன் பண்ணினேனா...?

    ஆமா... போன் பண்ணினே... என்கிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப்பத்தி பேசணும்ன்னு சொன்னே...!

    ஸாரி... ஸார்... யாரோ உங்கக்கிட்டே விளையாடியிருக்காங்க. நான் சாயந்தரத்திலிருந்து யார்க்கும் போன் பண்ணவேயில்லை.

    நிஜமா... நீ போன் பண்ணலையா...?

    இல்ல ஸார்...

    விவேக் குழப்பமாய் செல்போனை அணைத்தான். ரூபலா கேட்டாள். என்னங்க... சொல்றா... அந்த பூமா...?

    அவ எனக்கு போன் பண்ணலையாம்...

    பின்னே போன் பண்ணினது யார்...?

    ரூபி...! இதே பூமாதான் பனிரெண்டேகால் மணிக்கு என்கிட்டே பேசினா... குரல் அதே குரல்... நோ டவுட்...!

    போன் பண்ணிட்டு இப்ப ஏன் இல்லைன்னு சொல்றா...?

    அதுதான் புரியலை...

    சரி... படுத்துத் தூங்குங்க...!

    இல்ல ரூபி...! அந்த பூமாகிட்டே ஏதோ தப்பு இருக்கு. என்னோட செல்போன் நம்பர் டிபார்ட்மெண்ட் பீப்பிளுக்கு மட்டுந்தான் தெரியும். ஆனா அந்த பூமா என்னோட செல்லுக்கு போன் பண்ணியிருக்கா. ஏதோ சொல்லவும் முயற்சி பண்ணியிருக்கா. அதுக்கப்புறம் அவ மனசு மாறியிருக்கலாம்...

    சரி... அதுக்காக இப்போ உங்களால என்ன செய்ய முடியும்...?

    இப்போதைக்கு செய்யக்கூடிய காரியம் இது ஒண்ணுதான்...! சொன்ன விவேக் செல்போனில் எண்களை ஒற்றி எடுத்தான். மறுபக்கம் ரிங் போய் உடனே ரிஸீவர் எடுக்கப்பட்டு ஹலோ என்ற குரல் கேட்டது.

    டேய்... விஷ்ணு...!

    பாஸ்... நீங்களா...! என்ன பாஸ் இந்த நேரத்தல போன்...?

    ஏண்டா...! இன்னும் நீ தூங்கலையா...? போன் மணி அடிச்சதுமே எடுத்துட்டே...?

    "அது... பாஸ்... ‘எஃப்’ டீ.வி.யில் இன்னிக்கு ஸ்ட்ரிக்ட்லி அடல்ட்ஸ் படம். கோப்தா பென்னி ஒரு

    முழந்துணியை மட்டும் உடம்புல சுத்திக்கிட்டு ரெண்டரை மணி நேரம் நடிச்ச படம். இப்பத்தான் முடிஞ்சுது... அதுக்குள்ளே ஸ்டார் வீஸ்ல இன்னொரு ஜில்பா படம்...!"

    டேய்...! நீ திருந்தவே மாட்டியா...?

    அதுக்கு சான்ஸே இல்ல பாஸ்...! சரி மோகினிப் பிசாசு வாக்கிங் போகிற இந்த நேரத்துல இந்தப் பொடியனுக்கு எதுக்காக போன்...?

    உன்னால ஒரு காரியம் ஆகணும்.

    உடனேவா...?

    சுடச்சுட...

    சொல்லுங்க பாஸ்.

    Enjoying the preview?
    Page 1 of 1