Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Thedum Paravai!
Thisai Thedum Paravai!
Thisai Thedum Paravai!
Ebook138 pages42 minutes

Thisai Thedum Paravai!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thisai Thedum Paravai!

Read more from Rajeshkumar

Related to Thisai Thedum Paravai!

Related ebooks

Related categories

Reviews for Thisai Thedum Paravai!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Thedum Paravai! - Rajeshkumar

    13

    1

    போர்டிகோவிற்குள் புதைந்து நின்ற காரைப் பார்த்ததும்- வினய்பிரசாத்தின் இதயம் விலுக்கென்று துடித்தது.

    செர்ரி நிறத்தில் பளபளப்பாய் இருந்த சியல்லோவிலிருந்து பர்வதமும், காசிநாதனும் இறங்கினார்கள். இரண்டு பேரின் முகங்களிலும் சோகம் அடர்த்தியாய் அப்பியிருந்தது. ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்த வினய்பிரசாத் மெல்ல எழுந்து வந்தான்.

    அவன் முகப்பரப்பு பூராவும் நாலைந்து நாள் தாடி முள்முள்ளாய் பயிராகியிருந்தது. தூக்கத்தை தொலைத்து விட்டதற்கு அடையாளமாய் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் உற்பத்தியாகியிருந்தன. சந்தன நிறத்தில் தொளதொள பைஜாமா அவனுடைய ஆறடி உயர தேகத்தை விழுங்கியிருந்தது.

    போர்டிகோ படியேறி ஹாலுக்குள் பிரவேசித்த பர்வதத்தையும், காசிநாதனையும் எதிர்கொண்டான் வினய்பிரசாத்.

    பலஹீனமான குரலில் வரவேற்பு சொன்னான்.

    வாங்க மாமா... வாங்க அத்தை...

    காசிநாதன் மனசை சற்றே திடகாத்திரமாய் வைத்திருக்க- பர்வதம் உள்ளே நுழையும் போதே சேலைத் தலைப்பினால் வாயை பொத்திக் கொண்டு கேவத் தொடங்கினாள்.

    வினய்பிரசாத் எதிர்கொண்டதும்- பெரிய குரலில் ஹோவென்று அழ ஆரம்பித்தாள்.

    மா...ப்...பி...ள்ளே... சுமதி இப்படி... அநியாயமா நம்மையெல்லாம் ஏமாத்திட்டுப் போவான்னு நான் கனவுலகூட நினைக்கலியே...

    தடுமாறிய பர்வதத்தை கைத்தாங்கலாகப் பிடித்து கூட்டிப் போய் சோபாவில் அமர வைத்தார் காசிநாதன்.

    சோபாவுக்கு நேர் எதிரில் மாட்டியிருந்தது என்லார்ஜ் செய்யப்பட்ட சுமதியின் புகைப்படம். உயிர்ப்பான கண்களோடும், லட்சுமிகரமான புன்னகையோடும் போட்டோவில் தெரிந்தாள். சந்தன மாலை மெலிதாய் அசைந்தது. ஊதுபத்திப் புகை போட்டோவைச் சுற்றி வளையம் வளையமாய் அலைந்து கொண்டிருந்தது.

    அதைப் பார்வையில் வாங்கியதும் பர்வதத்தின் அழுகை இன்னும் அதிகமானது.

    இப்படி எல்லாம் ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா நான் பாழாப்போன டூர் போயிருக்க மாட்டேனே... கடைசியா ஒரு தடவை முகத்தைக் கண்ணால கூட பார்க்க முடியாமல் போய்ச் சேர்ந்துட்டாளே...

    கேவிக் கேவி பெரிய குரலில் அழ ஆரம்பித்தாள் பர்வதம்.

    காசிநாதன் அவள் முதுகைத் தட்டி சமாதானப்படுத்த முயன்றார்.

    பர்வதம்... அழக் கூடாது. மாப்பிள்ளை ஏற்கெனவே நொந்து போயிருப்பார்... நாம வேற அவரோட துக்கத்தை அதிகப்படுத்தற மாதிரி நடந்துக்கக் கூடாது...

    வினய்பிரசாத் குறுக்கிட்டு சொன்னான்.

    அவங்களை அழ விடுங்க மாமா... மூணு வருடம் குடித்தனம் நடத்தின நானே சுமதியோட இழப்பினாலே இடிஞ்சு போயிட்டேன்... பதினெட்டு வருடமா பொண்ணை பொத்திப் பொத்தி வளர்த்த அத்தைக்கு நிச்சயமா துக்கம் என்னைவிட பலமடங்கு அதிகமா இருக்கும்... அவங்க அழுது ஓயட்டும்...

    ஆமோதிப்பாய் தலையை அசைத்த காசிநாதன் கம்மிப்போன குரலில் கேட்டார்.

    என்ன நடந்தது மாப்பிள்ளை?

    காலைல எனக்கு காப்பி போட்டுக் கொண்டு வர்றப்ப நல்லாதான் இருந்தா... அதுக்கப்புறம் வழக்கம் போல யோகா சென்டருக்குப் போயிருக்கா...

    யோகா சென்டருக்கா?

    ஆமா... உங்களுக்குத் தெரியாதா...? மூணு மாசமா தினமும் காலைல ஆறரை மணிக்கெல்லாம் அவள் யோகா சென்டருக்குப் போயிடுவா... யோகா பிராக்டீஸ் பண்ணிட்டு எட்டு மணிக்கு வீடு திரும்புவா...

    அன்னிக்கும் யோகா சென்டருக்குப் போனாளா?

    போயிருந்தா! திரும்பி வர்றப்போ கார்லயே டிரைவர்கிட்டே... ‘எனக்கு என்னவோ போலிருக்கு பொன்னுரங்கம். கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது’ன்னு சொல்லியிருக்கா...

    பாவிப் பொண்ணு... வீட்டுக்கு வராமல் உடனே நேரா ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்கலாமே...?

    அவளுக்குத் தோணலை... பசியோட யோகா பிராக்டீஸ் பண்ணினதால அப்படி இருக்கலாம்ன்னு டிரைவர் சொல்லியிருக்கார். அவளும் அலட்சியமா நினைச்சிட்டா...

    வீட்டுக்கு வந்தப்புறமும் தலைசுத்தல் இருந்ததா?

    ஆமா...

    நீங்க அவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போகலையா?

    அவளோட நிலையைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு... உடனே ஃபோன் பண்ணி டாக்டரை இங்கே வரச் சொல்லிட்டேன்... ஆனா... டாக்டர் வர்றதுக்குள்ளே அவ... அவள்...

    பாதி வார்த்தைகளுக்கு மேல் பேசமுடியாமல் திணறினான் வினய்பிரசாத். அவன் கண்கள் சிவந்து போய் கண்ணீர் ஒரு குளம் மாதிரித் தேங்கியிருந்தது.

    டாக்டர் வந்து என்ன சொன்னார்?

    டாக்டர் வர்றப்போ அவள் உயிரை விட்டிருந்தா...

    மரணத்துக்கு என்ன காரணம்ன்னு சொல்லலியா?

    அலர்ஜி காரணமா இருக்கலாம்னு டாக்டர் சொன்னார்...

    அலர்ஜியா...?

    உடம்புக்கு ஒவ்வாத எதையாவது சுமதி சாப்பிட்டிருக்கலாம்ன்னு டாக்டர் ஃபீல் பண்ணினார். உடம்பில் பரவியிருந்த வெளிர் நிறத்தை வைச்சு அவர் அப்படிச் சொன்னார்... பின்னாடி நான் விசாரிச்சுப் பார்த்தப்ப அன்னிக்கு வெள்ளிக்கிழமைங்கறதால யோகா சென்டர்ல பிரசாதம் மாதிரி எதையோ கொடுத்திருக்காங்க...

    எல்லாரும்தானே அந்த பிரசாதத்தை சாப்பிட்டிருப்பாங்க...?

    ஆமா... அதிலிருந்த ஏதோ மூலிகை சுமதியோட உடம்புக்கு ஒத்துக்கலை... லட்சத்தில் ஒரு உடம்பு இப்படி இருக்கலாம்ன்னு டாக்டர் சொன்னார்... விதி அந்த பிரசாதத்தின் ரூபத்தில் அவளுக்கு வந்து சேரும்ன்னு நான் கற்பனை கூட பண்ணிப் பார்க்கலை மாமா...

    டவலால் வாயைப் பொத்தியபடி சில நிமிடங்கள் மவுனமாய் சோகத்தை விழுங்கிக் கொண்டிருந்த காசிநாதன் சற்று நேரம் கழித்து மீண்டும் குரலை வெளியிட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1