Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vanakkathirkuriya Kutram
Vanakkathirkuriya Kutram
Vanakkathirkuriya Kutram
Ebook206 pages36 minutes

Vanakkathirkuriya Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vanakkathirkuriya Kutram

Read more from Rajeshkumar

Related to Vanakkathirkuriya Kutram

Related ebooks

Related categories

Reviews for Vanakkathirkuriya Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vanakkathirkuriya Kutram - Rajeshkumar

    17

    1

    அது ஒரு சுமாரான லாட்ஜ்.

    சுத்தத்தை மறந்து போயிருந்த சுவர்கள். கொஞ்சம் டிப்-டாப்பான பேர்வழிகளை உள்ளே நுழையத் தயங்க வைக்கும். அழுக்கு மேல் சட்டை மாதிரி அணிந்திருந்த போர்டு எம்.சி.லாட்ஜ் என்ற எழுத்துக்களை சிரத்தை இல்லாமல் அறிவித்துக் கொண்டிருந்தது. லாட்ஜ் காம்பவுண்ட் சுவர் ஓரமாகக் குழி பறித்து, வேலை அற்ற நான்கைந்து கைலி ஆசாமிகள் கோலி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த சின்ன லாட்ஜில் இருபதே அறைகள்தான்.

    ‘டொக்’ ‘டொக்’.

    லாட்ஜின் பதினெட்டாவது எண் அறை தட்டப்பட்டபோது - உள்ளே கட்டிலில் படுத்திருந்தவன் சாவகாசமாகக் கதவை திரும்பி பார்த்தான். கையில் இருந்த புகை ததும்புகிற சிகரெட்டை இரும்பு கட்டிலின் விளிம்பில் தேய்த்து அணைத்தபடியே -

    யாரு? என்றான்.

    நான்தான் சார் லாட்ஜ் பையன் குரல் கேட்டதும் -

    சும்மாதான் சாத்தியிருக்கு. உள்ளே வாய்யா சொல்லிக் கொண்டே நெகிழ்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டினான். வெற்று மார்பில் ‘கிர்’ காடுகளாய் ரோமப் பயிர். கொஞ்சம் விக்ரமின் சாயலை பெற்றிருந்தான். நிறம் மட்டும் நீக்ரோத்தனமாக இருந்தது.

    கதவைத் திறந்து கொண்டு ஒரு அரை டிராயர் சிறுவன் உள்ளே வந்தான். பிஞ்சிலேயே பழுத்த ஞானம் முகத்தில் ப்ரேம் போட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

    இந்தாங்க சார்... நீங்க கேட்ட ஆல்பம்.

    செவ்வக சைசில் இருந்த ஒரு சின்ன ஆல்பத்தை அவனிடம் நீட்டினான் லாட்ஜ் பையன்.

    அப்படி வெச்சிட்டு போடா.

    செலக்ட் பண்ணி வையுங்க சார்... ஒரு அரை மணி நேரம் கழிச்சு வர்றேன். சொல்லி விட்டு அவன் நகர்ந்த விநாடி - லுங்கி பேர்வழி பையனை கூப்பிட்டான்.

    ஒரு நிமிஷம் நில்லுடா.

    என்ன சார்?

    இந்த ஆல்பத்துல எத்தனை அயிட்டம் இருக்கும்?

    இருபது குட்டிங்க இருக்கும் சார்.

    இவங்கள்ல யாரை வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் அழைச்சுட்டு வருவியா?

    தாராளமா சார்.

    எங்கிருந்து இவங்களை கூட்டிட்டு வருவே?

    எதுக்கு சார் கேக்கறீங்க?

    சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னுதான்.

    அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு சார்?

    ஒரு ஆர்வம்தான்... சொல்லு.

    அவங்க எங்கிருந்து வர்றாங்கன்னு எனக்கு சுத்தமா தெரியாது சார். நான் போய் மாரிமுத்தண்ணன்கிட்டே சொல்லுவேன். அவர்தான் அனுப்பிச்சுடுவார். வேணும்னா மாரிமுத்தண்ணன்கிட்டே கேட்டு சொல்றேன் சார்.

    சரி போய்ட்டு அப்புறமா வா.

    லாட்ஜ் பையன் வெளியேறினதும் அவன் அந்த ஆல்பத்தை புரட்டினான். முதல் பக்கத்திலேயே உடை விஷயத்தில் ‘கவர்ச்சி நடிகை’ ஷகிலாவோடு போட்டி போடுகிற மாதிரி ஒரு பெண் தெரிந்தாள். காமிராவைப் பார்த்து லேசாய் சிரித்து வைத்திருந்தாள். முன் வரிசை பல் லேசாய் உறுத்தியது. மார்புகள் தூக்கலாய் செயற்கைத்தனமாய் கண்களை குத்தியது.

    விரல்கள் அடுத்த பக்கத்தை புரட்ட எத்தனித்த விநாடி -

    மீண்டும் ‘டொக்’ ‘டொக்’.

    அறைக் கதவு தட்டப்பட்டது.

    ஆல்பத்தை மூடியபடியே யாரது? என்றான்.

    கதவைத் திறந்து கொண்டு வெற்றிலை குதப்புகிற வாயோடு ஒரு நாற்பத்தைந்து வயதுக்காரர் நுழைந்தார். நெற்றியில் திருநீறலங்காரம். தலைமுடி எண்ணெயில் குளித்து ஒரு மாதிரி சிலுப்பிக் கொண்டிருந்தது. லெதர் பேக் ஒன்றை கக்கத்தில் பவ்யமாக அடக்கியிருந்தார்.

    வணக்கம். தூங்கிட்டிருந்தேளா? தொந்தரவு பண்றேனா?

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மாதான் படுத்திருந்தேன். உட்காருங்க.

    பக்கத்து நாற்காலியை இழுத்து தன்னருகே நகர்த்திக் கொண்டு, அந்த வீடு தேடி தரும் புரோக்கர் தோள் துண்டால் இருக்கையை துடைத்துக் கொண்டபின் உட்கார்ந்தார். உதட்டு இடுக்கில் வழியப் பார்த்த சிவப்பு தாம்பூல வெற்றிலை சாற்றை உறிஞ்சியபடியே கேட்டார்.

    எதுவும் அம்சமா கிடைக்கலை. ஆமா... உங்களுக்கு எதுக்காக வீடு?

    வீடு எதுக்காக பார்க்கச் சொல்லுவாங்க? குடியிருக்கத்தான்.

    எங்காவது வேலைக்குப் போறேளா?

    அதெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் ஆகணுமா?

    வீடு கொடுக்கறவா கேட்டா நான் சொல்ல வேண்டாமா? அது போக உங்களுக்கு எங்க வேலையோ அந்த ஏரியாவிலேயே பார்த்துடலாமோல்லியோ...?

    எத்தனை தடவைய்யா உங்களுக்கு படிச்சு படிச்சு சொல்றது? ஏதோ ஒரு ஏரியா! இந்த ஊருக்குள்ளே ஒரு வீடு வேணும். அவ்வளவுதான்...

    எங்கிருந்து வரேள்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறேள். ஏன் வந்தேள்னு கேட்டா பதில் இல்லை. எங்கிருந்து உங்களுக்கு வீடு கிடைக்கும்?

    நீங்க வீடு புரோக்கர்தானே?

    ஏன்... சந்தேகமா?

    எங்கிருந்து வரேன், எதுக்காக வந்தேன்னு கேள்வி மேலே கேள்வி அடுக்காத வீட்டுக்காரன் யாராவது இருந்தா பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

    அதுக்கு நீங்க லாட்ஜ்லேயே இருந்துடலாம்.

    லாட்ஜ் வசதிப்படாமதான் லாட்ஜ் மேனேஜர் மூலமா உங்களை வரச் சொல்லிவிட்டேன். நீங்க வீடு பார்த்து தருவீங்களா? உங்களாலே முடியலைன்னா சொல்லிடுங்க.

    புரோக்கர் வெற்றிலைக் காவி பல்வரிசை தெரிய சிரித்தார்.

    கவலைப்படாதீங்க. கையோடு ஒரு வீட்டை முடிச்சுக்கிட்டுதான் வந்திருக்கேன். உங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னுதான் விசாரிச்சுப் பார்த்தேன். இப்ப என் கூட வந்தேள்ன்னா வீட்டைப் பார்த்துடலாம். வீடு பிடிச்சுப் போய் தலையை ஆட்டிட்டா... ஒன்றரை மாச வாடகையை புரோக்கரேஜா தந்துடுங்கோ.

    வீடு இப்ப காலியாத்தான் இருக்கா...?

    ஆமா. இந்த நிமிஷம் அட்வான்சை தந்தோம்னா சாவி நம்ம கைக்கு வந்துடும்.

    அட்வான்ஸ் எவ்வளவு?

    சொன்னார். பத்தாயிரம்.

    சூட்கேசில் இருந்து பணத்தை எடுத்து அவரிடம் நீட்டினான்.

    உங்களுக்கு சேர வேண்டிய புரோக்கரேஜும் இதிலேயே இருக்கு. ஹவுஸ் ஓனர்கிட்டே அட்வான்சை கொடுத்து சாவியை வாங்கி வையுங்க.

    நான் சாவி வாங்கி வச்சுகிட்டு என்ன செய்யப் போறேன்? சாயந்தரமே இங்கே வர்றேன். உங்களை கூட்டிட்டுப் போய் வீட்டை ஒப்படைச்சுடறேன்.

    சாயந்தரம் வேண்டாம். நாளைக்குக் காலைல வாங்க! ராத்திரி இங்கே ஒரு முக்கியமான வேலை இருக்கு என்றான் அந்த ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டே. வீட்டு புரோக்கரின் பார்வை ஆல்பத்தின் மேல் தாவியது.

    அதென்ன ஆல்பம் தம்பி?

    நாட்டில் இருக்கிற கற்புக்கரசிகளோட ஆல்பம்.

    புரிஞ்சு போச்சு! பலான ஆல்பமா?

    நீங்க கிளம்பறீங்களா? அவன் வாசலைக் கை காட்டினான்.

    வீட்டு புரோக்கர் காதுவரை இளித்தார்.

    தம்பி கண்ட கழிசடைகளை ஏன் தொடணும்? காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்கலாமே? நான் வேணும்னா ஒரு பொண்ணை பார்க்கட்டுமா?

    எனக்கு வீட்டுச் சாப்பாடு ஒத்துக்காது.

    தம்பி... நான் என்ன சொல்ல வர்றேன்னா...

    போயிட்டு நாளைக்கு காலைல வாங்க... - அவன் கடுமையான குரலில் சொல்ல - வீட்டு புரோக்கர் நடையை கட்டினார் வேகவேகமாய். அவர் வெளியே போன அடுத்த நிமிஷம் லாட்ஜ் பையன் உள்ளே வந்தான்.

    என்ன சார்... ஆல்பத்தைப் பார்த்துட்டீங்களா?

    இனிமேலத்தான் பார்க்கணும்.

    சீக்கிரமா பார்த்துச் சொல்லுங்க சார்! நான் போய் கூட்டிட்டு வரவேண்டாமா?

    அவன் ஆல்பத்தை எடுத்துப் புரட்டினான். ஒவ்வொரு பக்கமாய் பார்த்து உதட்டை பிதுக்கிக் கொண்டே வந்தான்.

    ச் கொட்டினான்.

    என்ன சார் பிடிக்கலையா?

    ஊ...ஹூ...ம்...

    இவ அமுதா சார். அம்சமா இருப்பா.

    உதடு சரியில்லை.

    இது சரோ. சினிமாவில் கூட தலையை காட்டியிருக்கு.

    அப்படீன்னா... சாக்கடை ஆகியிருப்பா. வேண்டாம்.

    இவ மாலா சார்... பையன் இன்னொருத்தியை காட்டினான்.

    வேற ஆல்பம் இல்லையா?

    இருக்கிறதே இது ஒண்ணுதான் சார்.

    சரி. இவளைக் கூட்டிட்டு வா - அவன் போட்டோவில் இருந்த - கடைசியாய் சிரித்த பெண்ணைக் காட்டினான்.

    லாட்ஜ் பையன் முகம் மாறியது.

    இவ சுதா சார்.... கரிக்கட்டை மாதிரி இருப்பா.

    இவதான் எனக்கு வேணும்... போய் சீக்கிரம் கூட்டி வா லாட்ஜ் பையன் தலையில் மெல்ல அடித்துக் கொண்டு ஆல்பத்தோடு அறையை விட்டு வெளியேறினான்.

    2

    பளபள உடம்போடு இருந்த லான்சர் கார் அந்த சூப்பர்செம்

    Enjoying the preview?
    Page 1 of 1