Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hello Dead Morning
Hello Dead Morning
Hello Dead Morning
Ebook158 pages47 minutes

Hello Dead Morning

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Hello Dead Morning

Read more from Rajeshkumar

Related to Hello Dead Morning

Related ebooks

Related categories

Reviews for Hello Dead Morning

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hello Dead Morning - Rajeshkumar

    25

    1

    அந்த டெலிபோன் அழைப்பு வந்தபோது விவேக் கனத்த கம்பளிப் போர்வைக்குள் இருந்தான். விடியற்காலை குளிர்க்கு இதமாய் சுகமான தூக்கத்தில் - சென்ற வாரம் கல்யாணத்திற்கு பெண் பார்த்துவிட்டு வந்த இனிமையான நினைப்புகளில் (ஒரு நிமிஷம் வாசகர்களே! உங்கள் விவேக் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்து சென்ற வாரம் பெங்களூர்க்கு போய் ரூபலா என்கிற பெயருள்ள அழகான பெண்ணையும் பார்த்து வந்தாயிற்று. திருமண தேதி முடிவான பின் உங்களுக்கு பத்திரிகை வரும்) மிதந்து தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    அருகே மேஜையின் மேலிருந்த டெலிபோன் வறட்டுக் கத்தாய்க் கத்த ரூபலாவின் ஞாபகங்களினின்றும் கழன்று - தூக்கத்தைக் கெடுத்த டெலிபோனின் மேல் எரிச்சலாகி அதைக் கண்டு பிடித்தவனின் மேல் ஆத்திரமாகி -

    போர்வையை விலக்கிக் கொண்டு -

    எழுந்து உட்கார்ந்தான். பின்னந்தலையைத் தடவிக் கொண்டு - திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி கதறிக் கொண்டிருந்த டெலிபோனையே சில விநாடிகள் முறைத்தான்.

    ‘கறுப்புப் பிசாசே! காலங்கார்த்தாலே என்ன நியூஸை தர்றதுக்காக இப்படிக் கத்தறே...?’ கேட்டுக் கொண்டே ரிஸீவரை எடுத்தான் விவேக்.

    ஹலோ விவேக் ஹியர்...

    நான் கோகுல்நாத்...

    குட்மார்னிங் கோகுல்நாத்...

    ஸாரி... விவேக்... ஸே.... டெட் மார்னிங்...

    கொட்டாவி விட்டான் விவேக்.

    கேஸ் வந்தாச்சு... போச்சுடா...! கோகுல்நாத்! போன வாரம் பெங்களூர்க்கு போய் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துட்டு வந்தோமே...

    ஆமா...

    அந்தப் பொண்ணு பேரென்ன?

    ரூபலா...

    பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா...?

    உங்களுக்கு ஏற்ற ஜோடி...

    அப்போ... நான் கல்யாண காரியங்களைக் கவனிக்கணுமா... வேண்டாமா?

    வேணும்...

    அப்படீன்னா... இப்போ சொல்லப் போற கேஸை நீங்களே ஹேண்டில் பண்ணுங்க... என்னை விட்டுடுங்களேன் ப்ளீஸ்... இந்த விடியற்காலையில் வர்ற தூக்கமும் சரி... திருநெல்வேலி அல்வாவும் சரி... என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டுமே இனிப்பு... ரிஸீவரை வெச்சுடட்டுமா...?

    விவேக்...

    சொல்லுங்க...

    கேஸ் ரொம்பவும் சிக்கலாயிருக்கு...

    விக்டிம் யாரு... கோகுல்நாத்... ஆணா...? பெண்ணா...?

    ஆண்...

    வயசு...?

    முப்பது...

    எப்படி செத்திருக்கான்?

    கழுத்துல சுருக்கு மாட்டி செத்திருக்கான்...

    சூஸையிட்...?

    அப்படி எனக்குத் தோணலை விவேக்...

    ஏன்...?

    நேர்ல வந்து பாருங்க உங்களுக்கே தெரியும்...

    நான் அரைமணி நேரத்துல வந்தா போதுமா...?

    போதும்...

    எந்த இடம்...?

    ஜெயில் ரோட்ல ‘இந்திரா பார்க்’ தெரியுமா உங்களுக்கு?

    தெரியும்...

    அந்தப் பார்க்குக்குப் பக்கத்துல ஒரு வாட்டர் டேங்க் இருக்கு... சம்பவம் அங்கே தான் நடந்திருக்கு...

    வர்றேன்...

    ரிஸீவரை கவிழ்த்துவிட்டு - பீறிட்டு வந்த கொட்டாவியோடு எழுந்தான் விவேக்... ‘மாசத்துல பாதி நாள் சாவுச் செய்தியைக் கேட்டுக்கிட்டே படுக்கையிலிருந்து எந்திரிக்க வேண்டியிருக்கு... மிஸ் ரூபலா என்னைக் கட்டிக்கிட்டு என்ன பாடுபடப் போறியோ...?’

    குளிரில் நடுங்கிக் கொண்டே போய், பல்லைத் தேய்த்து குளித்து - டிரஸ்ஸை மாட்டி - அதற்கு மேல் ஸ்வெட்டரைக் கவிழ்த்து - வாசல் திட்டோரத்தில் கான்வாஸ் போர்வைக்குள் எருமை மாடாய் நின்றிருந்த ஹோண்டா பைக்கில் இடுப்பை உதைத்து - அது ‘தட் தட்’ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே அதன் முதுகில் நிரம்பி கிளம்பினான்.

    காம்பௌண்ட் கேட்டைத் தாண்டும்போது - மணிக்கட்டிலிருந்த சிட்டிஸன் குவார்ட்ஸைப் பார்த்தான்.

    6.05.

    கோவை நகரத்தின் கிழக்கு வானம், சவுக்கடி பட்ட நீக்ரோ முதுகு மாதிரி தெரிய - சூரிய விதை முளைவிட நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று கோயில் ஸ்பீக்கர்கள் சொல்லிக் கொண்டிருக்க - வாசலில் சுண்டலும் பொங்கலும் வாங்க ஒரு கும்பல் பக்திப் பரவசத்தோடு காத்துக் கொண்டிருந்தது. வெறிச்சோடிப் போயிருந்த ரோடுகளில் பனியின் ஈரம் தெரிந்தது.

    விவேக் குளிர்காற்றை அறுத்துக் கொண்டு பறந்தான். ராம் நகருக்குள் ஊடுருவி லோகமான்யா தெருவுக்குள் நுழைந்து - டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் வெளிப்பட்டு - இந்திரா பார்க்கை நெருங்கினான்.

    ஒரு சின்ன கும்பலுக்குள் போலீஸ் ஜீப் தெரிய - எல்லார்க்கும் முன்பாய் பிரதானமாய் கோகுல்நாத் தெரிந்தார்.

    பைக்கை உருட்டிக் கொண்டு போய் - அவரருகே நிறுத்தி ஸ்டாண்ட் இட்டான்.

    வாங்க விவேக்...

    கும்பல் வழிவிட அவரருகே போனான் விவேக்... பாடி எங்கே?

    கூட்டிக் கொண்டு போனார் கோகுல்நாத். வாட்டர் டாங்க்கிற்குக் கீழே இருந்த அந்த சிறிய அறைக்கு முன்பாக கொண்டு போய் நிறுத்தினார் விவேக். மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தார். விவேக்... இந்த சின்ன ரூமுக்கு ஒரு பக்கம்தான் கதவு. மத்த மூணு பக்கத்திலும் - ஒரு ஜன்னல் கூட கிடையாது... கருங்கல்லால் ஆன ரூம்...

    சரி...

    மோவாயைத் தேய்த்தான் விவேக்.

    கதவு உள் பக்கமா தாழ் போட்டிருக்கு...

    ம்...

    இந்தக் கதவுச் சந்து வழியா கண்ணை வெச்சு கொஞ்சம் உள்ளே பாருங்க விவேக்... கோகுல்நாத் சொல்ல - விவேக் குனிந்து - கதவின் சந்து வழியே வலது கண்ணை வைத்துப் பார்த்தான்.

    இருதயம் ஒரு விநாடி ‘திடுக்’கென்றது.

    அறையின் நடுவே போயிருந்த - இரும்பு உத்தரத்திலிருந்து - அவன் நேர்க்கோடு மாதிரி தொங்கிக் கொண்டிருந்தான். சிமெண்ட் நிற ஷர்ட் - கொஞ்சம் அழுக்கான வெள்ளைப் பேண்ட். கயிறு கழுத்தை இறுக்கியதில் இரண்டு கண்களில் ஒரு விழி வெளிப்பக்கமாய்க் துருத்தி தெரிய - நாக்கு, பற்களுக்கு நடுவே மெலிதாய் எட்டிப் பார்த்திருந்தது. கால்களுக்கு கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1