Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Haritha Oru AchariyaKuri!
Haritha Oru AchariyaKuri!
Haritha Oru AchariyaKuri!
Ebook150 pages51 minutes

Haritha Oru AchariyaKuri!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Haritha Oru AchariyaKuri!

Read more from Rajeshkumar

Related to Haritha Oru AchariyaKuri!

Related ebooks

Related categories

Reviews for Haritha Oru AchariyaKuri!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Haritha Oru AchariyaKuri! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    மனித மூளை

    - இறைவன்

    நிர்மாணம் செய்த

    உலகத்தின்

    கம்ப்யூட்டர்!

    ஹரிதா...!

    கீழே அப்பாவின் குரல் கேட்டு மாடியில் ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்றிருந்த - சுத்த அழகான இருபத்தோரு வயது - ஹரிதா பதிலுக்கு குரல் கொடுத்தாள்.

    வந்துட்டேன்...

    சத்துள்ள முகத்துக்கு லேசாய் பவுடர் ஒற்றி நெற்றியின் மையத்துக்கு ஸ்டிக்கர் இட்டுக் கொண்டு மாடிப் படிகளில் தடதடத்து கீழே வந்தாள்.

    அப்பா திரவியம் சிமெண்ட் நிற சபாரி அணிந்து சோபாவில் சாய்ந்திருக்க, பக்கத்தில் பெரிய குங்குமப் பொட்டோடு அம்மா பாக்யம் உட்கார்ந்திருந்தாள்.

    என்னப்பா...?

    காலேஜுக்கு கிளம்பிட்டியாம்மா?

    மணி ஒன்பதரையாச்சே...! கிளம்பிட்டே இருக்கேன். இன்னிக்கு பர்ஸ்ட் ட்டூ ஹவர்ஸ் கெமிஸ்ட்ரி ப்ராக்டிகல்.. லேட்டா போனா லேபுக்குள்ளே விட மாட்டாங்க ப்ரொபசர்...

    ஒரு ரெண்டு நிமிஷம் அப்படி உட்காரும்மா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...

    ஹரிதா தன் அம்மாவை நெருங்கிக் கொண்டு சோபாவில் சாய்ந்தாள். சரியா... ரெண்டு நிமிஷம்தான் டயம்... அதுக்கு மேல எந்த காரணத்தை முன்னிட்டும் டயம் நீட்டிக்கப்பட மாட்டாது.

    அம்மா பாக்யம் மகளின் தோளைத் தொட்டாள்.

    என்ன முடிவு பண்ணியிருக்கே...?

    முடிவா...?

    ம்.. நேத்து சாயந்தரம் கல்யாண புரோக்கர் கொண்டு வந்து கொடுத்த நாலு வரன்களோட போட்டோக்களைப் பார்த்து யாருக்கு டிக்மார்க் போட்டே...?

    ஓ.. அதைக் கேட்கறியா.. நாலு பேர்ல ரெண்டு பேர் செமி ஃபைனல்ஸ் வரை வந்திருக்காங்க... அந்த ரெண்டு பேர்ல யார்ங்கிறதை இன்னும் முடிவு பண்ணலை...

    திரவியம் குறுக்கிட்டார். இதோ பாரம்மா.. உன் முடிவை நீ சீக்கிரமா சொல்லணும்... இன்னும் ஒரு மணி நேரத்துல புரோக்கர் வந்துடுவார். அவர்கிட்ட முடிவைச் சொல்லி அனுப்பினாத்தான்.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மேற்கொண்டு பேச முன்வருவாங்க...

    என்னப்பா நீங்க.. யோசிக்கக் கூட விடாமே...? காலம் பூராவும் வாழப் போகிறவரை செலக்ட் பண்ண அவகாசம் வேண்டாமா?

    பாக்யம் பொரிந்தாள். ஏண்டி... ராத்திரி பூராவும் யோசனை பண்ணியிருக்கலாமே...?

    ராத்திரி முழுக்க யோசனை பண்ணித்தான் அந்த எம்.பி.ஏ.வரனையும், டாக்டர் வரனையும் ஓ.கே.பண்ணி வெச்சேன். இனி ரெண்டு பேர்ல ஒருத்தரை டிக் பண்ணனும்.

    இப்பவே டிக் பண்ணு...

    சாரிம்மா... இப்ப என் மனசுக்குள்ளே ஒரு பட்டிமன்றம் நடந்துட்டிருக்கு. தலைப்பு என்ன தெரியுமா? ‘என்னை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளப் போகிறவர் எம்.பி.ஏ. படிச்ச மாப்பிள்ளையா... அல்லது எம்.எஸ். படிச்ச டாக்டர் மாப்பிள்ளையா...?

    திரவியம் வாய்விட்டு அண்ணாந்து சிரித்தார்.

    முடிவு எப்போ தெரியும்மா...?

    இன்னிக்கு சாயந்தரம்... நான் காலேஜ் விட்டு வீட்டுக்கு வரும் போது...

    சரி.. சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் உன்னோட முடிவு எனக்கு தெரிஞ்சாகணும்.. அதுக்கும் மேலே லேட் பண்ணிடாதேம்மா...

    பாக்யம் கணவரை முறைத்தாள். என்னங்க நீங்க, அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு.. ஒரு மாப்பிள்ளை பிடிச்சிருக்கு பிடிக்கலைன்னு சொல்றதுக்கு இவ்வளவு நாழி வேணுமா...?

    இதோ பார் பாக்யம்.. இந்த கல்யாண விஷயத்துல அவசரப்படக்கூடாது... மாப்பிள்ளை உனக்கும் எனக்கும் பிடிச்சா மட்டும் போதாது. முக்கியமா ஹரிதாவுக்கு பிடிக்கணும். சாயந்தரம் காலேஜிலிருந்து திரும்பினதும் ரெண்டு மாப்பிள்ளைகள்ல ஒரு மாப்பிள்ளையை பிடிச்சிருக்குன்னு சொல்லப் போறா. அதுவரைக்கும் உன்னால பொறுமையா இருக்க முடியாதா என்ன..?

    வெல் செட்... எழுந்து கொண்ட ஹரிதா, தன் தோளில் விழுந்த குட்டைக் கூந்தலை பின்னுக்கு தள்ளியபடி போர்டிகோவில் நின்றிருந்த காரை நோக்கிப் போனாள்.

    பாக்யம் பின்தொடர்ந்தாள்.

    ஹரிதா...

    ம்...

    காரை விரட்டாதே... மெதுவா ஓட்டிட்டு போ...

    சரி.. சரி...

    ஹரிதா காருக்குள் ஏறி உட்கார்ந்ததும், பாக்யம் அவள் பக்கமாய் குனிந்தாள்.

    ஹரிதா...

    என்னம்மா...?

    மாப்பிள்ளையை செலக்ட் பண்ற விஷயத்துல கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோ...

    புத்திசாலித்தனமா நடந்துக்கறதா..?

    ம்...

    எப்படி...?

    அந்த டாக்டர் மாப்பிள்ளையையே செலக்ட் பண்ணிடு.

    பட்டிமன்றம் நடந்து முடியட்டும். மனசு என்கிற நீதிபதி என்ன சொல்றாரோ.. அதுதான் என் முடிவு...

    காரின் இக்னீஷியனை உசுப்பினாள் ஹரிதா.

    சாயந்தரம் சீக்கிரமா வந்துடு.. லேட் பண்ணிடாதே...

    சரி.. சரி...

    மாருதி பீறிட்டு கிளம்பி காம்பவுண்ட் கேட்டைத் தாண்டியதும் மனசுக்குள் பட்டிமன்றம் ஆரம்பமாயிற்று.

    ‘யாரை செலக்ட் செய்யலாம்?’

    ‘டாக்டர் மாப்பிள்ளையையா.. இல்லை எம்.பி.ஏ. படித்த மாப்பிள்ளையையா...?’

    ‘அம்மாவுக்கு டாக்டர் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது. அப்பாவுக்கு எம்.பி.ஏ. மாப்பிள்ளையின் மேல் ஒரு கண்.’

    ‘இரண்டு மாப்பிள்ளைகளுமே கண்ணுக்கு லட்சணமாய் இருக்கிறார்கள். டாக்டர் மாப்பிள்ளைக்கு இருக்கிற ஒரே மைனஸ் பாயிண்ட் அவர் கண்ணாடி போட்டிருப்பதுதான். அதே போல் எம்.பி.ஏ. மாப்பிள்ளையிடம் இருக்கிற மைனஸ் பாயிண்ட் அடர்த்தி குறைவான

    Enjoying the preview?
    Page 1 of 1