Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalliravu Seithi and Kannilladikuthu Minnal
Nalliravu Seithi and Kannilladikuthu Minnal
Nalliravu Seithi and Kannilladikuthu Minnal
Ebook300 pages1 hour

Nalliravu Seithi and Kannilladikuthu Minnal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nalliravu Seithi and Kannilladikuthu Minnal

Read more from Rajeshkumar

Related to Nalliravu Seithi and Kannilladikuthu Minnal

Related ebooks

Related categories

Reviews for Nalliravu Seithi and Kannilladikuthu Minnal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalliravu Seithi and Kannilladikuthu Minnal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    நள்ளிரவுச் செய்தி

    1

    டெல்லி.

    லேசாய் மழை தூறிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரம் பனிரெண்டு மணி. கன்னாட் பிளேசில் ஐந்தாவது குறுக்குத் தெரு. மரங்கள் சூழ்ந்த. அந்த மினி பங்களாவின் மாடியில், கண்ணாடி ஜன்னல்களில் குழல்விளக்கு வெளிச்சம் ஒட்டிக் கொண்டிருக்க, உள்ளே மேசைக்கு முன்னால் உட்கார்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தான் சித்ரவேல். மழைக் காற்று பனிக்கட்டியின் சில்லிப்போடு முகத்தில் மோத ஒரு விநாடி நேரம் கலைத்தான்.

    "எழுந்து ஜன்னலை மூடலாமா? - என்று யோசித்த சித்ரவேலுக்கு இருபத்தைந்து வயது. ஒரு நல்ல வேலைக்காக முயற்சி செய்யும் எம்.ஏ.பட்டதாரி. அப்பா கங்காதரன். ரெயில்வேயில் பெரிய வேலை. அம்மா கோகிலவாணி. டெல்லி கல்லூரி ஒன்றில் பேராசிரியை. இரண்டு பேருக்கும் கை வலிக்க வலிக்க சம்பளம். சித்ர வேலுக்கு அம்மாவின் முகச்சாயல். அப்பாவின் உயரம், அம்மாவின் நிறம். அப்பாவின் சுருட்டைமுடி. அம்மாவின் இரக்க குணம். அப்பாவின் பிடிவாதம்.

    பின்பக்கம் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, எழுதிக் கொண்டிருந்த பேப்பரை மறைத்துக் கொண்டான் சித்ரவேல்.

    கோகிலவாணி உள்ளே நுழைந்தாள். தொளதொளப்பான நைட் கவுனுக்குள் காற்றோட்டமாய் புகுந்திருந்தாள்.

    டேய்... சித்ரா...

    ம்...

    இன்னும் என்னத்தையடா எழுதிட்டிருக்கே? மணி எவ்வளவுன்னு தெரியுமா?

    தெரியும்... தெரியும். ஒரு வேலைக்காக அப்ளிகேஷனை எழுதிட்டிருக்கேன். நாளைக்குத்தான் கடைசி நாள்.

    கோகிலவாணி மகனுக்குப் பக்கத்தில் நின்று அவனுடைய

    தலையைக் கோதினாள். சித்ரா! உங்கப்பா உன்னைப்பத்தி ரொம்பவும் கவலைப்படறார்.

    எனக்கு என்னவாம்?

    நீ ரொம்ப இளைச்சுட்டியாம். முன்னே மாதிரி சிரிச்சு பேசறதில்லையாம். உனக்கு என்னாச்சுன்னு என்கிட்டே கேக்கிறார்.

    எனக்கு ஒன்னும் ஆகலை. நல்லாத்தான் இருக்கேன்.

    டேய்! நான் உன்னை பெத்தவ! இந்த ஒரு வாரமா உன்னைக் கவனிச்சுட்டுதான் வர்றேன். நீ சரியா சாப்பிடறதில்லை. சீசரைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போறதில்லை. சாயந்தரம் டென்னீஸ் ஆடப் போறதில்லை. டெக்ல கேசட் போட்டு பார்க்கிறதில்லை. அப்புறம் சரியா உடை...

    அம்மா! உன்னோட பட்டியலைக் கொஞ்சம் நிறுத்தறியா?

    ஏண்டா இப்படி கோபப்படறே? உன் மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு என்கிட்டே சொல்லக் கூடாதா?

    என் மனசுக்குள்ளே எதுவுமே இல்லை... நான் எப்பவும் மாதிரிதான்... இருக்கேன்...

    வேலை கிடைக்கலையேன்னு கவலையா?

    அதெல்லாம் ஒன்னுமில்லை...

    பின்னே...?

    அம்மா...! நீ போய் படுக்கப்போறியா... இல்லையா...?

    கோகிலவாணி மறுபடியும் மகனின் அடர்ந்த கிராப்பை தடவினாள். இப்ப போறேன்! ஆனா நாளைக்கு காலையில் நீ என்கிட்டே காரணத்தை சொல்லியாகனும். இல்லேன்னா விடமாட்டேன்...

    அம்மா வெளியேறியதும், சித்ரவேல் எழுந்து போய் கதவைத் தாழிட்டுவிட்டு வந்தான். நாற்காலிக்கு பெருமூச்சோடு சாய்ந்து – சற்று முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த அந்தக் கடிதத்தை எடுத்தான். எழுதி முடித்த வரிகளில் பார்வை கனமாய் படர்ந்தது.

    என் பாசத்துக்குரிய அம்மாவுக்கும், அன்புக்குரிய அப்பாவுக்கும் உங்கள் மகன் சித்ரவேலின் கடைசி வணக்கம். இந்த கடைசி வணக்கம் வார்த்தையைப் படித்ததும் - உங்கள் இருவருக்கும் அதிர்ச்சியாய் இருக்கும். ஆனால் எனக்கு இப்போது 'கடைசி வணக்கம்' என்று சொல்ல வேண்டிய நிலைமை. கடந்த சில நாட்களாகவே நான் நானாக இல்லை. காரணம் எனக்குள் இருந்தவள் இப்போது இல்லை. ஒருத்தியை நேசித்தேன். அவள் எனக்கு கிடைக்கவில்லை. எனவே மரணத்தை நேசிப்பது என்று முடிவு செய்துவிட்டேன். என் மரணம் இந்த அறையில்.

    கடிதம் இந்த வரியில் நின்று போலிருக்க சித்ரவேல் பால்பாயின்ட் பேனாவை பிதுக்கிக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மறுபடியும் எழுத ஆரம்பித்தான்.

    நிகழ்வதை நான் விரும்பவில்லை. என் உடல் உங்களுக்குக் கிடைத்து - அதைப் பார்த்து நீங்கள் கதறி அழுவதை நான் விரும்பவில்லை. மரணத்தில் மட்டுமே எனக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் என்பதற்காக - மரித்துப் போகிற இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். எனக்காக சிறிது நேரம் அழுங்கள் போதும். அழுவதையே தினசரி வழுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.

    உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்கி விடைபெறும்,

    சித்ரவேல்

    கடிதத்தை இரண்டு முறை படித்துப் பார்த்த சித்ரவேல் அதை நான்காய் மடித்து - அதை மேசையின் மேல் வைத்து பேப்பர் வெயிட் கண்ணாடி குண்டை அதன்மேல் கவிழ்த்தாள். எழுந்தான். பார்வை சுவர் கடிகாரத்திற்கு போயிற்று.

    12.15

    ஹேங்கரில் இருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கதவை நெருங்கி தாழ்ப்பாளை மெள்ள விலக்கி வெளியே எட்டிப் பார்த்தான்.

    அறை இருட்டில் இருந்தது.

    அப்பா, அம்மா இருந்த படுக்கையறையின் நீலநிற ஜீரோ வாட்ஸ் வெளிச்சம், வெண்டிலேட்டரின் கண்ணாடிச் சதுரத்தில் தெரிந்தது.

    கதவை மறுபடியும் சாத்திவிட்டு மாடியின் பின்பக்கம் இருந்த சிட்-அவுட்டுக்கு வந்தான் சித்ரவேல் மலை லேசாய் தூறிக்கொண்டிருந்தது. மழையை பொருட்படுத்தாமல் சிட்-அவுட்டின் கிரில் கம்பியைப் பற்றிக்கொண்டு மளமளவென்று கீழே இறங்கி தரையில் கால் பாவினான். மழை நீரில் ஊறிக்கிடந்த தோட்டத்து மண்ணில் நடந்து பின்பக்க காம்பவுண்ட் சுவருக்கு வந்து அதன் விளிம்பைப் பற்றி 'தம்' பிடித்து ஏறி மறுபக்க ரோட்டில் குதித்தான். மழைச் சேறு எகிறியது.

    நடக்கையில் வீட்டைத் திரும்பிப் பார்த்தான்.

    அப்பாவும், அம்மாவும் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. கிருகப்பிரவேசம் ஒரு கல்யாணம் மாதிரி நடந்தது. இந்த டெல்லியில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தவர்கள் அதிகம். எந்த ஒரு விழாவை ஏற்பாடு செய்தாலும்போதும் குறைந்த பட்சம் ஐநூறு பேர் கூடிவிடுவார்கள். அப்பாவின் நண்பர்கள் அவரிடம் அடிக்கடி கேட்கிற கேள்வி, இதுதான்.

    சித்ரவேலுக்கு எப்ப கல்யாணம்...?

    அவன் ஒரு வேலையில் அமரட்டும்... அதுக்கடுத்த மாசமே கல்யாணம்தான்...

    பெரிய மண்டபமா பார்த்து வையுங்க... இல்லேன்னா வர்ற கூட்டத்தை உங்களால சமாளிக்க முடியாது... சித்ரவேலுக்கு கல்யாணம் நடந்தா அது ஒரு இளவரசனுக்கு முடிசூட்டுகிற விழா மாதிரி பிரமாண்டமா இருக்கும்...

    "பின்னே...?

    அப்பாவும் அம்மாவும் வாய்கொள்ளாமல் சிரிப்பார்கள்.

    பிசுபிசுவென்று தூறிக்கொண்டிருந்த மழையில் வேக வேகமாய் நடந்தான் சித்ரவேல். தலைக்குமேல் வானம் உறுமி, இலவசமாய் மின்னல் கோலம் ஒன்று போட்டது. குளிர் சின்னச் சின்ன குண்டூசிகளாய் மாறி உடை இல்லாத பகுதிகளில் தைத்ததது.

    ட்ர்ர்... ட்ர்ர்...

    பின்னால் சத்தம் கேட்டது. திரும்பினான்.

    மழைநீரை இறைத்துக்கொண்டு ஆட்டோ.

    சார்தாஜி டிரைவர் எட்டிப் பார்த்தான்.

    ஆட்டோ... சாகியே சாப்...?

    ஏறிக்கொண்டான்.

    கிதர் ஜானே கா...?

    ரெயில்வே ஸ்டேஷன்...

    ஆட்டோ வேகமெடுத்துக் கிளம்பியது. அந்த நள்ளிரவில் கன்னாட்பிளேஸ் பஜார் வெறிச்சோடியிருந்தது ஒன்றிரண்டு அசைவ ஓட்டல்கள் மட்டும் கடந்து போயின.

    டிரைவர் திரும்பிப் பார்த்து கூப்பிட்டான்.

    சாப்...

    ம்...

    இந்தியில் கேட்டான்.

    உங்ககிட்டே சிகரெட் இருக்குமா...?

    இல்லை....

    சிகரெட் என்றதும் சித்ரவேலுக்கு பிரீதாவின் ஞாபகம் 'திடுப்' பென்று மனசுக்குள் மோதியது.

    'மைடியர்... சித்...' பிரீதா கொஞ்சினாள்.

    'ம்...'

    'நாம் காதலிக்கத் தொடங்கி இப்ப எவ்வளவு நாளாச்சு?'

    'சரியா எண்ணி சொல்லட்டுமா?'

    'ம்...'

    'இருபது நாள்...'

    'இந்த இருபது நாள்ல... என்கிட்ட பிடிக்காதா அம்சம் ஏதாவது இருக்கா...?'

    'இல்லை.'

    'ஆனால் எனக்கு பிடிக்காத அம்சம்... ஓண்ணு உங்ககிட்டே இருக்கு.

    'எ... என்ன?'

    'உங்ககிட்ட இருந்து வர்ற சிகரெட்டு வாசனை! எனக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத விஷயம் இரண்டு, ஒன்று கரப்பான்பூச்சி, இரண்டாவது சிகரெட் நீங்க சிகரெட் பிடிக்கத்தான் வேணுமா?'

    'இன்னிக்கு என்ன கிழமை?'

    'சனிக்கிழமை.'

    'மணி என்ன?'

    ‘6.15.'

    'இதனால், தெரியப்படுத்துவது யாதென்றால் சகல லோகங்களிலும் இருக்கிற முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக - பஞ்ச பூதங்கள் சாட்சியாக இன்று சனிக்கிழமை ஆறு மணி பதினைந்து நிமிடத்திலிருந்து சித்ரவேல் என்கிற நான் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டேன். அனைத்துலக தெய்வங்களின் மேல் இது சத்தியம் இந்த சத்தியத்தை மீறி நான் சிகரெட்டைப் பிடித்துவிட்டால் எந்த தெய்வமும் என்னைத் தண்டிக்கலாம். நரகத்தில் 1000 வருடம் தலைகீழாகத் தொங்கவும் நான் தயார்."

    ஆட்டோ ஒரு குழியில் ஏறி இறங்க - பிரீதாவின் நினைவுகளிலிருந்து சட்டென்று அறுபட்டான் சித்ரவேல்.

    டில்லி சென்ட்ரல் ரெயில்வெ ஸ்டேஷன் வெளிச்சமாய் நெருங்கிக் கொண்டிருந்தது. 'இந்த நேரத்திற்கு எந்த ரெயில் இருந்தாலும் சரி, அதில் ஏறிவிட வேண்டியதுதான். அது காஷ்மீர் போனாலும் சரி, கன்னியாகுமரி போனாலும் சரி.

    'கண் காணாத இடத்திற்குப் போய் உயிரை விட வேண்டும்.'

    'என், உடல் யாருக்குமே தட்டுப்படக் கூடாது.'

    மறுபடியும் அம்மா ஞாபகம் வந்தது.

    'அம்மா, ஆர்ப்பாட்டமாய் அழுவாள். என் பிரிவைத் தாங்கிக் கொள்வது கஷ்டம்.'

    'அப்பா என் மரணத்தை எப்படி எடுத்துக் கொள்வார்? அவர் தத்துவம் பேசுகிற ஆசாமி. 'இந்த கலியுகத்தில் முப்பது வயசுக்கு மேல் உயிர் வாழ்வதே போனஸ் மாதிரி. ஒருவனுக்கு நாற்பது வயதாகும் போதே இயற்கை ஒவ்வொரு ஜன்னலாய் சாத்த ஆரம்பித்துவிடுகிறது' அப்பா இப்படி பேசுகிற ரகம்.

    'என் மரணம் அவரைப் பாதிக்குமா? பாதிக்காதா?' உணர்வுக்கு மீண்டபோது ரெயில்வே ஸ்டேஷன் வெளிச்ச உலகம் தெரிந்தது.

    இறங்கினான்

    கித்னா?

    கியாரா ரூப்பா.

    சித்ரவேல் பணத்தைக் கொடுத்துவிட்டு ஸ்டேஷன் படி ஏறினான்.

    ஸ்டேஷன் ஆரவாரமாய் இருந்தது. அந்த நள்ளிரவிலும் பயணிகள் சூட்கேஸ்களோடு திரிந்தார்கள். டிராலிகள் உருண்டன. ஒலிபெருக்கி இந்தி மொழியில் கரகரத்தது. கேட்டில் இருந்த டிக்கெட் கலெக்டரை நெருங்கினான் சித்ரவேல். ஆங்கிலத்தில் கேட்டான்.

    எந்த ரெயில் இப்போது புறப்படத் தயாராக உள்ளது

    சென்னை வரைக்கும் போகிற ஸ்பெஷல் ரெயில்.

    எத்தனை மணிக்கு புறப்படும்.

    சரியாய் ஒரு மணிக்கு.

    நன்றி!

    சித்ரவேல் நகர்ந்தான். மனம் ஆச்சரியப்பட்டது.

    சென்னை மண்ணில் பிறந்த எனக்கு அந்த மண்ணே மரணத்தைக் கொடுக்க விரும்புகிறதா?

    டிக்கெட் கவுண்டரை நோக்கி நடந்தான்.

    பத்தடி நடந்திருப்பான்.

    தோளில் ஒரு கை மிருதுவாய் விழந்தது.

    சித்ரவேல் திரும்பினான்.

    வியப்பில் புருவங்கள் உயர்ந்தன.

    2

    இந்திய ராணுவத்திற்கு சொந்தமான கட்டிடம். கட்டிடத்தின் மேல் மாடி மொட்டை சுவரில் குத்திட்டு நின்று இரும்புக் குழாயின் உச்சியில் தேசியக் கொடி சோம்பலாய் பறந்து கொண்டிருந்தது. கட்டிடத்திற்கு சொந்தமான முன்புற மைதானத்தில் நிறைய ஜீப்புகள் நின்றிருக்க இராணுவ அதிகாரிகளின் பச்சை நிற சீருடையின் நடமாட்டம் ஆங்காங்கே தெரிந்தது.

    மேஜர் கல்யாணின் அறைக்கு முன்பாய் காத்திருந்தான் செகண்ட் லெப்டினென்ட் பதவியில் இருக்கும் விமல்ராஜ். இருபத்தைந்து வயதான விமல்ராஜ்க்கு சொந்த ஊர் கோயமுத்தூர். கொஞ்சம் அதிகப்படியான நாட்டுப்பற்று. தேசியகீதம் பாடும் பொழுது யாராவது அசைந்தால் அங்கேயே அறைகிற ரகம். 'தேசம், தேசம்

    Enjoying the preview?
    Page 1 of 1