Nenjellam Nerinjimul
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nenjellam Nerinjimul
Related ebooks
Nenjamellam Nerinjimul Rating: 0 out of 5 stars0 ratingsVaa Arugil Vaa and Kagitha Ayuthangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulirkaala Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSumathi Engira Sumai Rating: 0 out of 5 stars0 ratingsNylon Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Iruttu Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru Vizhithiru Rating: 0 out of 5 stars0 ratingsDecember Pournami Rating: 0 out of 5 stars0 ratingsNeethana... Nijamthana? Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanam Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsRed Rose! Guest House! Rating: 0 out of 5 stars0 ratingsKaanamal Pona Mugam Rating: 5 out of 5 stars5/5January Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsYaro Parkkirarkal and Vilaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsSorkkam En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsEnna Saththam Intha Neram Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal and Aaagaiyal Naan Kolai Seithen Rating: 0 out of 5 stars0 ratingsIndiyanaai Iru Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi sottu Iraththam Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Pirivathillai Rating: 3 out of 5 stars3/5Kavitha Nagar Kadaisi Theru Rating: 0 out of 5 stars0 ratingsYetho Nadakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsKannukkulle Unnai vaithen Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Pommai Nanum Pommai Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsNitthiyavin Nimishangal Rating: 0 out of 5 stars0 ratingsIrakka Piranthaval Sindhu Rating: 0 out of 5 stars0 ratingsOru Eastmen Nirak Kolai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Nenjellam Nerinjimul
0 ratings0 reviews
Book preview
Nenjellam Nerinjimul - Rajeshkumar
26
1
வங்கக் கடல் தூரத்தில் இரைந்து கொண்டிருக்க - வளர்மதி கடற்கரை மணலில் தன் ஆட்காட்டி விரலால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
எதிரே - கடந்த ஒரு வருட காலமாய அவளை காதலித்துக் கொண்டிருக்கும் சாந்தகுமார். இருவருடைய முகங்களிலும் கவலை கனமாய் உட்கார்ந்திருந்தது. வளர்மதியின் சந்தன வண்ண முகத்தில் சற்று அதிகப்படியான கவலை.
மணலில் கோலம் போடுகிற அவளுடைய ஆட்காட்டி விரலை மெல்ல பற்றினான் சாந்தகுமார்.
வளர்மதி...
உம்...
உன்னோட அக்கா கல்யாணத்துக்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?
சரியா பதினாறு நாள்.
கல்யாணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்க முடியாதா?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அழைப்பிதழ் அச்சடிச்சு கல்யாணத்துக்கு கூப்பிடவும் ஆரம்பிச்சுட்டாங்க. இப்பப் போய் கல்யாணத்தை தள்ளி வைக்கணும்னு சொன்னா... அவங்க என்ன நினைப்பாங்க? அது சரியில்லை. அக்காவோட செவ்வாய் தோஷ ஜாதகத்துக்கு பொருத்தமாய் இந்த மாப்பிள்ளை கிடைச்சதே பெரிய விஷயம்.
நீ ஒரு தப்பு பண்ணிட்டே வளர்மதி...
என்ன?
மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்டே இருபது பவுன் நகை போடறேன்னு சொல்லியிருக்கக்கூடாது. அதை பத்து பவுனா குறைச்சிருந்தா பணத்துக்காக இப்படி அல்லாட வேண்டியிருக்காது.
நான் சொன்னேன்... அம்மா கேட்கலை. அக்கா கவுரிக்கு வாய்ச்சிருக்கிற நல்ல இடம் தட்டிப் போயிடக் கூடாதேங்கிற ஆதங்கத்துல புரோக்கர் சொன்ன எல்லாத்துக்கும் அம்மா ஒத்துக்கிட்டா.
சரி. கல்யாணச் செலவு - சீர் செலவுக்கு இப்போ பணம் எவ்வளவு தேவைப்படும்?
அம்பதாயிரம்! சிட்பண்ட்ஸ் சதாசிவம் எப்படியம் சீட்டுத் தொகை எடுத்துத் தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டார்... புது ஆபீசுல வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம்தான் ஆச்சு. லோன் எதுவும் கேட்கமுடியாது... பழைய ஆபீசுல வேலை பார்த்த வகையில் இருபதாயிரம் ரூபாய் அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. போய் பணம் கேட்டா தலைமை ஆபீசிலிருந்து ஒப்புதல் ஆகி வரலைன்னு சொல்றாங்க...
பழைய கம்பெனி மானேஜரைப் போய் பார்த்தியா?
இந்த வாரத்துல அந்த ஆபீசுக்கு மூணு தடவை போயிட்டேன். அவரை பார்க்கவே முடியலை. வெளியூர் போயிட்டாராம்.
பழைய மானேஜர் சுபாவத்துல எப்படி?
ரொம்ப நல்லவர். அனுசரணையா பேசக் கூடியவர். நான் லீவ் கேட்டாலோ, அட்வான்ஸ் கேட்டாலோ முகம் சுளிக்காதவர்.
வெளியூரிலிருந்து அவர் எப்போ வருவாராம்?
கேட்டால் தெரியாதுன்னு சொல்றாங்க.
மானேஜர் பேர் என்ன?
பரசுராம்.
"அவரைப் பார்த்தால் காரியம் ஆகுமா?'
அது பார்த்த பின்னாடிதானே தெரியும். அவர் தலைமை ஆபீசுக்கு சிபாரிசு பண்ணினால், பணம் எனக்கு உடனடியா கிடைக்கும். நம்ம கெட்ட நேரத்துக்கு அவர் ஊர்ல இல்லை.
மானேஜர் பரசுராமுக்கு வீடு எங்கே?
தரமணி போற வழியில் 'சூர்யா நகர்'ன்னு ஒரு காலனி வரும். அங்கே மகள் வீட்டுல தங்கியிருக்கிறார். அடுத்த ரெண்டு வருஷத்தில் ரிடையர் ஆனதும் கிராமத்துக்கு போயிடப் போறதா சொல்லியிருக்கிறார்.
வீட்டுக்கு போன் இருக்கா?
இருக்கு.
பின்னே வீட்டுக்கு போன் பண்ணி அவன் பொண்ணுகிட்டே அப்பா எப்போ வருவார்னு கேட்டுப் பார்க்கிறதுதானே?
போன் பண்ணினேன். ரிசீவரை யாரும் எடுக்கலை. போன் மணி அடிச்சுட்டேயிருந்தது. வீட்டுல யாரும் இல்லைன்னு நினைக்கிறேன்.
சரி, வளர்மதி. நான் ஒரு காரியம் பண்றேன்.
என்ன?
இன்னிக்கு ராத்திரி நான் சேரன் எக்ஸ்பிரசில் கிளம்பி கோயமுத்தூர் போறேன்.
போய்...?
அங்கே எனக்கு குமாரவேல்னு ஒரு நண்பன் இருக்கான். அவன் ஒரு மில் அதிபரோட பையன். அவனைப் போய் பார்த்து நிலைமையைச் சொல்லி பணம் வாங்கிட்டு வர்றேன்.
உங்கள் நண்பர் கொடுப்பாரா?
கடனாத்தானே கேட்கப் போறேன்.
எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. பணம் கேட்காத வரைக்கும்தான் நண்பர்கள். பணம் கேட்டுட்டா ரெண்டு பேருக்கும் மத்தியில் ஒரு அந்நியம் வந்துடும்.
இந்த குமரவேல் அப்படிப்பட்டவன் இல்லை. இன்னிக்கு சேரன்ல கோயமுத்தூர் போய் நாளைக்கு அவனைப் பார்த்து - பணத்தை வாங்கிட்டு மறுநாள் கலையில் உன்னை வந்து பார்க்கிறேன்.
உங்க நண்பர் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?
நீ பார்க்கத்தானே போறே?
சொன்ன சாந்தகுமார் தன் மணிக்கட்டில் இருந்த வாட்சைப் பார்த்தான். மணி ஆறு.
சூரிய வெளிச்சம் காணாமல் போயிருக்க - அந்த சாயந்திர நேரத்தை இருட்டு திருட்டுத்தனமாய் விழுங்கிக் கொண்டிருந்ததது. வெளியூர் மக்கள் மெரீனா கடற்கரையை பிரமிப்பாய்ப் பார்த்தபடி ஆங்காங்கே தெரிய - படகு மறைவுகளில் திருட்டுக் காதலர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். பட்டாணி சுண்டல் பையன்கள் தகர டின்களோடு திரிந்தார்கள்.
கிளம்பலாமா வளர்மதி?
உம்...
இருவரும் எழுந்து - பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு வெளிச்சமான ரோட்டை நோக்கி நடந்தார்கள். தொலைகாட்சி கோபுரத்தின் உச்சியில் இருந்த சிவப்பு விளக்கு ஒரு விநாடி அணைவதும், மறுவிநாடி எரிவதுமாய் இருந்தது.
வளர்மதி பெருமூச்சு ஒன்றை விட்டாள். போனதும் அம்மா கேட்பா...
என்னான்னு?
பணத்துக்கு ஏற்பாடு பண்ணியான்னு.
பண்ணியிருக்கேன்! ரெண்டு நாள்ல கிடைச்சுடும்னு சொல்லு.
நிச்சயமா பணம் கிடைக்குமா?
பணத்தோடு வர்றேன். போதுமா?
எனக்கென்னமோ நம்பிக்கையே வர மாட்டேங்குது.
நம்பு... நம்பு...
வளர்மதியின் கையைப் பிடித்து தன் தலை மேல் வைத்துக் கொண்டான் சாந்தகுமார்.
பஸ் நிறுத்தம் வந்தது. சாந்தகுமார் புறப்பட்டு போக வேண்டிய பஸ் கூட்டம் இல்லாமல் காத்திருக்க - அவன் ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.
வரட்டுமா?
நாளை மறுநாள் வந்துடுவீங்களா?
கண்டிப்பா! பணத்துக்காக மனதைப் போட்டு குழப்பிக்காதே... கல்யாண காரியங்களை கவனிச்சிட்டு இரு
சாந்தகுமார் ஜன்னலில் குனிந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் புறப்பட, வளர்மதி கையை அசைத்தாள்.
சாந்தகுமார் புறப்பட்டு போனதும் - தன்னுடைய பஸ்சை பிடிப்பதற்காக ரோட்டைக் கடந்து எதிரில் இருந்த பஸ் நிறுத்தத்துக்கு வந்து நின்றாள். பஸ் ஏதும் இல்லாமல் நிறுத்தம் காலியாக இருந்தது.
வீட்டுக்கு போனதும் அம்மாவும், அக்காவும் பணம் கிடைத்ததா?' என்கிற ஒரே கேள்வியோடு பார்ப்பார்கள்.
'என்ன பதிலைச் சொல்ல?'
'இரண்டு நாளில் பணம் கிடைத்துவிடும் என்று சொன்னால் எப்படி என்று கேட்பார்கள்?'
'சாந்தகுமாரை காதலிக்கிற விஷயம் அவர்களுக்குத் தெரியாது யோசனையில் இருந்தவளின் பார்வை பஸ் நிறுத்தத்துக்கு கொஞ்சம் தள்ளியிருந்த பொதுத் தொலைபேசி கூண்டுக்கு போயிற்று.
'பழைய கம்பெனியின் மானேஜர் பரசுராம் வீட்டுக்கு போன் செய்து பார்க்கலாமா?'
அவருடைய மகள் வீட்டில் இருந்தால் அவர் எப்போ திரும்புவார் என்று கேட்டு தெரிந்து கொள்ளலாமே?'
யோசனையை செயல்படுத்த தொலைபேசி கூண்டை நோக்கி போனாள். கூண்டுக்குள் நுழைந்து கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு ரிசீவரை எடுத்து பரசுராம் வீட்டுக்கு டயல் செய்தாள்.
மறுமுனையில் மணி அடித்தது.
ஒரு தடவை...
இரண்டு தடவை...
மூன்றாவது தடவை ரிசீவர் எடுக்கப்பட்டு ஒரு பெண் குரல் கேட்டது.
"அலோ...
மானேஜர் பரசுராம் இருக்காரா?
ஒரு நிமிடம் லைன்ல இருங்க
சொன்னவள் அப்பா! உங்களுக்கு போன்' என்று குரல் கொடுக்கும் சத்தம் கேட்டது.
வளர்மதியின் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. 'அம்மாடி! மேனேஜர் வெளியூரிலிருந்து திரும்பிவிட்டார். இனி எப்படியாவது பேசி பணத்தை வாங்கிவிடலாம்!'
ரிசீவர் எடுக்கப்பட காத்திருந்தாள். அடுத்த சில விநாடிகளுக்குள் குரல் கேட்டது. பரசுராமின் குரல்.
யாரு?
சார்... நான் வளர்மதி...
ஓ... நீயா? என்னம்மா எப்படி இருக்கே?
நல்லாயிருக்கேன் சார்.
புது வேலையெல்லாம் எப்படியிருக்கு?
நல்லா இருக்கு சார்! உங்களைப் பார்த்து பேசறதுக்காக போன வாரம் பூராவும் முயற்சி பண்ணிட்டிருந்தேன் சார்...
என்ன விசயம்?
உங்ககிட்ட கொஞ்சம் நேர்ல பேசணும் சார்... நாளைக்கு ஆபிசுக்கு வரட்டுமா சார்?
நாளைக்கு பம்பாய் போறேன்மா... திரும்பி வர ஒரு வாரமாயிடும்.
இப்போ உங்கள் வீட்டுக்கு வரலாமா சார்?
வாயேன். வீடு தெரியுமில்ல?
தெரியும் சார். உடனே புறப்பட்டு வர்றேன்
வளர்மதி ரிசீவரை வைத்துவிட்டு தொலைபேசி கூண்டிலிருந்து வெளியே வந்தாள். மனசுக்குள் சந்தோசப் பறவைகள் பறந்தன.
காலியாய் போன ஒரு ஆட்டோவை நிறுத்தினாள்.
வளர்மதி சூர்யா நகர் போய்ச் சேர்ந்தபோது ஏழு மணி.
சாலை போடுவதற்காக கருங்கல் ஜல்லி மணி பாதையில் கொட்டியிருந்ததால் ஆட்டோவை தெருமுனையிலேயே நிறுத்தி இறங்கிக் கொண்டு நடந்தாள் வளர்மதி. புதிதாய் உருவான காலனி அது. வீடுகள் தள்ளி தள்ளி - சொற்பமான குழல்விளக்கு வெளிச்சம் தெரிந்தது.
வளர்மதி சாம்பல் இருட்டில் இரண்டு குறுகிய தெருக்களைக் கடந்து மானேஜர் பரசுராமின் பங்களாவைத் தொட்டாள்.
சன்னல்களில் மெல்லிய வெளிச்சம்.
காம்பவுண்ட் கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போய் போர்டிகோவுக்கு வந்தாள். ஆட்கள் யாரும் இல்லை.
படிகள் ஏறி கதவுக்கு முன்பாய் நின்று அழைப்பு மணிக்கான பொத்தானைத் தொட்டாள்.
அது அடிக்கவில்லை.
கதவை லேசாய் தள்ளினாள்.
பளிச்சென்று திறந்துகொண்டது.
மெல்ல எட்டிப் பார்த்தாள்.
இருட்டில் அறை தெரிந்தது. பார்வைக்கு யாரும் தட்டுப்படவில்லை. சார்...
வளர்மதி குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
பதில் இல்லை.
சார்...
அறையின் மையத்துக்கு வந்து நின்று சுற்றும்முற்றும் பார்த்தவளின் காதுகளில் அந்த காலடிச் சத்தம் கேட்டது. டக்..டக்..டக்...!'
வளர்மதி மெல்ல சத்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பிப் பார்த்தாள். கண்கள் இரண்டையும் அதிர்ச்சி தத்து எடுத்துக்கொண்டது.
2
காலடிச் சத்தம் கேட்டு திரும்பிய வளர்மதி... கதவருகே மானேஜர் பரசுராம் சற்றே தள்ளாட்டமாய் கண்கள் சிவப்பேற நின்றிருப்பதை பார்த்தாள். அவருடைய விசாலமான வழுக்கைத் தலையில் வியர்வைத் துளிகள் மின்னின.
சிரித்தார்.
வாம்மா... வளர்மதி...
அவர் பேசிக்கொண்டே பக்கத்தில் வர... மூச்சுக் காற்றில் உயர்தர விஸ்கியின் நாற்றம். வளர்மதி லேசாய் பின்வாங்கி இடதுகை ஆட்காட்டி விரலால் மூக்கை தேய்த்து விட்டுக் கொண்டாள்.
உட்காரும்மா...
சார்...
என்னம்மா அப்படி பார்க்கிறே...? ஓ... நான்... குடிச்சிருக்கேன்னு... பயப்படுறீயா...? சாயந்தரம் ஏழு மணி ஆயிட்டா எனக்கு விஸ்கி பாட்டிலைத் திறந்தாகணும்... சும்மா ஒரு ரெண்டு பெக் அவ்வளவுதான். இது உள்ளே போகலைன்னா... எனக்கு தூக்கம் வராது. ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதேம்மா. வளர்மதி... நீ போன் பண்ணப்ப, உன்னை வரவேண்டாம்னு சொல்லத்தான் நினைச்சேன். நீ ஏதோ முக்கியமான விசயம் பேசணும்ன்னு சொன்னதால வரச் சொன்னேன். உட்காரும்மா.
வளர்மதி தயக்கமாய் உட்கார்ந்தாள். கண்கள் ஒரு முறை வீட்டைச் சுற்றி வந்தது.
என்னம்மா பார்க்கிறே...?
சார்... உங்கள் மகள்...?
"அவள் வீட்டில் இல்லை. இப்பதான் ஊருக்கு புறப்பட்டு போறா. அடுத்த