Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nirangal Iranthana
Nirangal Iranthana
Nirangal Iranthana
Ebook153 pages52 minutes

Nirangal Iranthana

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nirangal Iranthana

Read more from Rajeshkumar

Related to Nirangal Iranthana

Related ebooks

Related categories

Reviews for Nirangal Iranthana

Rating: 2 out of 5 stars
2/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nirangal Iranthana - Rajeshkumar

    தருவேன்.

    1

    செம்பட்டி கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே ஆயிரத்து ஐநூற்று அறுபத்தி ரெண்டு பேர்தான். இதில் ஆண்கள் எழுநூற்று சொச்சம் பேர். மீதிப் பேர் பெண்கள். ஒரு அய்யனார் கோயில். ஒரு மாரியம்மன் கோயில். ஊருக்கு நடுவே ஒரு குளம்; குடி தண்ணீர்க்காக ஒரு கிணறு. ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம். ஒரு பிரைமரி ஹெல்த் சென்ட்டர். ஆறு கிலோ மீட்டர் தள்ளி ஒரு போலீஸ் ஸ்டேஷன். லைசென்ஸ் காலாவதியாகி திரும்பவும் புதுப்பிக்கப்படாத ஒரு டூரிங் டாக்கிஸ்.

    இத்தனை லட்சணங்களோடு சுபிட்சமாய் இருந்த அந்த கிராமத்தில் மூன்று நாட்களாய் ஒரு உஷ்ணப் புகைச்சல். நீங்கள் இந்த வாக்கியத்தை படிக்கும் போது - கிராமத்திலிருக்கும் மொத்த ஆண்களும் - மாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலிருந்த - அந்த பிரும்மாண்டமான ஆலமரத்துக்கு கீழே - குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள். ஆலமரத்து சிமெண்ட் மேடையில் - பட்டாமணியம் முத்துவேலர் கழுத்து நரம்பு புடைக்க - ஜனங்களைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.

    நாம எல்லோரும் ஒரு தாயிக்கு... ஒரு தகப்பனுக்கு பொறந்தவங்களாயிருந்தா.. இன்னும் கொஞ்ச நேரத்துல... நடக்கப் போகிற அநியாயத்தை தடுத்து நிறுத்தோணும்... அய்யனார் கோயிலும், மாரியம்மன் கோயிலும் பரம்பரை பரம்பரையா நம்ம சாதி ஜனங்களுக்கு மட்டும் பாத்தியப்பட்டது. கடந்த அம்பது வருஷ காலமா கோயில் பக்கமா வராமே இருந்த.. அந்த அலும்பு புடிச்ச சாதிப் பசங்களுக்கு திடீர்ன்னு ஞானோதயம் பொறந்திருக்கு.. ரெண்டு கோயிலுக்கும் உள்ளார போற உரிமையும்.. அய்யனார் சந்நிதானத்துல கல்யாணம் பண்ற உரிமையும் அந்த பரதேசிபசங்களுக்கு வேணுமாம். உடம்புல எவ்வளவு கொழுப்பு இருந்தா.. இப்பேர்ப்பட்ட திமிர் பேச்செல்லாம் வரும்...

    கும்பல் கொந்தளித்தது.

    அந்த திமிரை அடக்குவோம்... அடக்குவோம்...

    பட்டாமணியம் தொடர்ந்தார்.

    கடந்த ரெண்டுநாளா அவங்க சாதி சனங்களைச் சேர்ந்த பெரியவங்களைக் கூப்பிட்டு புத்தி சொல்லிப் பார்த்தோம். அதுல சிலர் நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை ஒத்துக்கிட்டாங்க... சிலர் ஒத்துக்கலை... நமக்கு கடைசியா வந்த தகவல்படி.. இன்னும் கொஞ்ச நேரத்துல... நாய்களைத் திங்கற அந்த சாதிப் பசங்க.. கூட்டமா வந்து - நம்ம அய்யனார் கோயில் சந்நிதியில் - ஒரு கல்யாணத்தை நடத்தப் போறாங்களாம். நீங்க எல்லோரும் அதை பார்த்திட்டிருப்பீங்களா?

    மாட்டோம்.. மாட்டோம்... கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த வெட்டரிவாளையும் - வீச்சரிவாளையும் உயர்த்திக் காட்டின.

    நம்ம பக்கம் அஞ்சு பொணம் விழுந்தா.. அவங்க பக்கம் அம்பது பொணம் உளுவணும். உயிர்க்கு பயந்தவன்களும், பெண்டாட்டி கழுத்துல தாலி நிக்கணுமேன்னு நினைக்கிறவங்களும்.. இப்பவே எந்திரிச்சு ஊட்டுக்கு போயிடலாம்.

    எல்லோரும் அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள். பட்டாமணியம் தன் சிவப்பான விழிகளை உருட்டி கும்பலைப் பார்த்துக் கொண்டு தொடர்ந்தார்.

    நம்ம அய்யனார் கோயில்ல கல்யாணம் பண்ணிக்க வர்ற - அந்த கல்யாண ஜோடியை - கோயில் வாசலிலேயே நாலு துண்டா வெட்டிப் போடோணும்.. அப்படி பண்ணினாத்தான் அந்த சாக்கடைப் பசங்களுக்கு புத்தி வரும்.

    நாங்க வெட்டிப் போடறோம்.. பட்டாமணிக்காரரே...! கும்பலின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்த - நான்கைந்து வெற்று மார்பு இளைஞர்கள் - பளபளக்கும் அரிவாள்களை உயர்த்திக் கொண்டு எழுந்தார்கள்.

    சபாஷ்டா ராஜாக்களா... - பட்டாமணியம் மோதிர விரலால் தன் நரைமீசையை கோதிக்கொண்டார்.

    அதே விநாடி -

    தொலைவில் காவலுக்கு இருந்த - வெட்டியான் கையில் நீண்ட தடியோடு ஓடி வந்தான்.

    அய்யா...!

    என்னடா?

    ஒரு போலீஸ் ஜீப்பும், நம்ம தொகுதி எம்.எல்.ஏ. காரும் வருதுங்க...

    வரட்டும்.. வரட்டும்...

    கும்பல் திரும்பிப் பார்க்க- தூரத்தில் புழுதி மண் மரங்களுக்கு மத்தியில் தெரிந்தது.

    போலீஸும்.. கவைக்குதவாத நம்ம எம்.எல்.ஏ.வும் சமரசம் பண்ண வர்றாங்க! சமரசப் பேச்சு நமக்கு சாதகமா இருக்கணும்... இல்லேன்னா ஒத்துக்கக் கூடாது...

    செம்மண் புழுதியின் அடர்த்தி இப்போது அதிகமாய் தெரிந்தது. கூடவே காரும் ஜீப்பும் இரையும் சத்தம்.

    அடுத்த சில விநாடிகளில் - ஜீப்பின் முகமும், காரின் முகமும் பிரசன்னமாயிற்று. பட்டாமணியம் கத்தினார்.

    யாரும் எந்திரிக்க வேண்டாம். அப்படியே உட்கார்ங்க... காரும் ஜீப்பும் ஆலமரத்துக்கு பின்பக்கமாய் போய் நின்றது.

    ஜீப்பிலிருந்து ஒரு டி.எஸ்.பி.யும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் குதிக்க - காரிலிருந்து எம்.எல்.ஏ. சூர்யபிரகாசம் நெற்றியில் மின்னிய சந்தனப் பொட்டோடும்.... கும்பிட்ட கைகளோடும் இறங்கினார்.

    கும்பலைப் பார்த்து கும்பிட - எல்லோரும் அவரையே பார்த்தார்கள். டி.எஸ்.பி.யும் சூர்யபிரகாசமும் மேடையை நெருங்கினார்கள்.

    வாங்க...

    டி.எஸ்.பி. பட்டாமணியத்தை ஏறிட்டார். என்னங்க இது ஊருக்கு பெரியவங்க நீங்க...! நீங்களே இப்படி கும்பலை கூட்டி வெச்சுகிட்டு வன்முறைக்கு வித்திட்டா.. கிராமம் நாசமாயிடாதா...?

    பட்டாமணியம் சிரித்தார். என்னது...? வன்முறைக்கு நான் வித்திட்டேனா...? வலுச்சண்டைக்கு வர்ற.. அந்த கேடு கெட்ட சாதிக்காரங்களைப் போய் இந்த வார்த்தையைக் கேளுங்க...

    எம்.எல்.ஏ. சூர்யபிரகாசம் குறுக்கிட்டார். பட்டாமணியம்! அரசியல் சட்டம் அவங்களுக்கு சாதகமால்ல.. இருக்கு?

    அவங்களுக்கு சாதகமான்னா எப்படி..?

    ஊர்ல ஒரு பொதுவான கோயில் இருந்தா.. அந்த கோயிலுக்குள்ள.. யாரும் போலாம்.. வரலாம். யாரும் யாரையும் தடுக்க முடியாது... அப்படி தடுத்தா அது சட்டப்படி குற்றம்...

    "அடப் போங்கய்யா! நீங்களும் உங்க புண்ணாக்கு சட்டமும்! கோயில்ங்கிறது எவ்வளவு சுத்தமான இடம்? அந்த இடத்துல காலடி எடுத்து வெக்கிறதுக்கு ஒரு தராதரம் வேண்டாம்...? நாயையும், பூனையையும் அடிச்சு திங்கிற அந்தக் கூட்டம்

    Enjoying the preview?
    Page 1 of 1