Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parappatharku Oru Vanam Vendum
Parappatharku Oru Vanam Vendum
Parappatharku Oru Vanam Vendum
Ebook116 pages32 minutes

Parappatharku Oru Vanam Vendum

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Parappatharku Oru Vanam Vendum

Read more from Rajeshkumar

Related to Parappatharku Oru Vanam Vendum

Related ebooks

Related categories

Reviews for Parappatharku Oru Vanam Vendum

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parappatharku Oru Vanam Vendum - Rajeshkumar

    22

    1

    நிலைக்கண்ணாடியைப் பார்த்து - தலைக்கு அடித்த டை சரியாக இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த ராமபாஷ்யத்தை ஸார் என்று கதவருகே அழைத்த குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

    அவருடைய பி.ஏ. மணிவாசகம்.

    என்ன மணி...?

    ஸார்... உங்களைப் பார்க்கிறதுக்காக ஒரு பெண் வந்து காத்திட்டிருக்கா...

    பெண்ணா... யாரது..?

    பேர்... ‘அபயா’ன்னு சொல்றா... மற்ற விபரங்களை உங்ககிட்டதான் சொல்லணுமாம்...

    இப்ப கம்பெனிக்கு கிளம்பிட்டிருக்கேன்... இந்த நேரத்திலே உட்கார்ந்து பேசிட்டிருக்க முடியுமா..? அந்தப் பெண்ணை சாயந்தரம் வரச் சொல்லுங்க...

    சொல்லிப் பார்த்தேன் ஸார். அவ கேட்கலை... இப்பவே பார்த்தாகணும்னு அடமெண்டா உட்கார்ந்திருக்கா...

    ராமபாஷ்யம் தன் காதோர கிருதாவை நிரடிக் கொண்டே கேட்டார்.

    பொண்ணுக்கு என்ன வயசு இருக்கும்?

    இருபத்தைஞ்சு...!

    ஏதாவது நன்கொடை கேஸ் மாதிரி தெரியுதா..?

    அப்படியும் தெரியலை ஸார்...

    பேர் என்னான்னு சொன்னீங்க?

    அபயா...

    உள்ளே வரச்சொல்லுங்க... பார்க்கலாம்...

    பி.ஏ. மணி வெளியேறிப் போக ராமபாஷ்யம் - வந்த பெண் யாராயிருக்கும் என்ற யோசனையோடு - அணிந்திருந்த சில்க் சட்டை கசங்கி விடாமல் ஜாக்கிரதையாய் சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்தார்.

    அந்த நிமிஷம் முடிவதற்குள் - அறைக் கதவருகே நிழல் தட்டியது. திரும்பினார்.

    சற்றே ஒடிசலான தேகவாகு - மாநிறம் - தீர்க்கமான பெரிய கண்கள் - நீலநிற பின்னணியில் வெள்ளைப்பூக்கள் இழைத்த வாயில் புடவை - அதற்கு மேட்சாய் ஜாக்கெட் - கழுத்தில் மெலிதாய் ஒரு சங்கிலி - கையில் ஒரு தோல்பை - இவைகளின் கலவையோடு அந்தப் பெண் தெரிந்தாள்.

    ராமபாஷ்யம் அணிந்திருந்த கண்ணாடி யைக் கழற்றிக் கொண்டு அவளை ஏறிட்டார். நான் இப்ப கம்பெனிக்கு புறப்பட்டு போயிட்டிருக்கிற நேரம். ரொம்ப நேரம் பேசிட்டிருக்க முடியாது...

    எனக்கு அஞ்சு நிமிஷம் போதும் ஸார்...

    சரி... விஷயம் என்ன..?

    உட்காரச் சொல்லமாட்டீங்களா..?

    ஒரு விநாடி திகைத்த ராமபாஷ்யம் - அந்த திகைப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ம்... உட்கார் என்று எதிரே இருந்த பாலிவினைல் நாற்காலியைக் காட்டினார்.

    அந்த அபயா உட்கார்ந்தாள்.

    ராமபாஷ்யம் கண்களை சுருக்கிக் கொண்டு கேட்டார்.

    என்ன விஷயம்..?

    அபயா தன் கையில் வைத்திருந்த தோல் பையின் ஜிப்பைத் திறந்து ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்து - அவரிடம் நீட்டியபடி கேட்டாள். இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியுமா..?

    அவர் போட்டோவை வாங்கிப் பார்த்து - நெற்றியில் சிறிதாய் ஆச்சர்யம் காட்டிவிட்டு கேட்டார்.

    யார் இது...?

    நிஜமா உங்களுக்குத் தெரியாதா..?

    தெரியாது...

    சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடுற பக்கு வத்தில் இருக்கிற நீங்க இப்படி பொய் சொல்றது சரியில்லை...

    ஏ...ஏ...ஏய்... என்ன... நீ... ஓவரா போயிட் டிருக்கே! மரியாதையா இடத்தை காலி பண்ணு...

    ஸாரி மிஸ்டர் ராமபாஷ்யம்...! நான் எதுக்காக உங்களைப் பார்க்க வந்தேனோ... அந்தக் காரியத்தை முடிச்சுட்டு போகாமே இங்கிருந்து நகர மாட்டேன். போட்டோவில் இருக்கிற இந்தப் பெண்ணை உங்களுக்குத் தெரியும். இவ பேர் விஜயலட்சுமி. அப்பா, அம்மா இல்லாத இந்தப் பொண்ணு -மாமா வீட்டில் தங்கி ஒரு பட்டன் பாக்டரிக்கு ‘டெய்லி வேஜஸ்’ல வேலைக்கு போயிட்டிருந்தா. கண்ணுக்கு லட்சணமா இருக்கிற அவ மேல உங்க மகனோட பார்வை பட்டது. இவளைக் காதலிக்கிறதா சொல்லி நம்ப வெச்ச உங்க மகன் உடம்பைத் தொட்டு காரியம் முடிஞ்சதுமே - விலகிட்டான். வயித்தை நிரப்பிகிட்ட விஜயலட்சுமியை மாமா வீட்டைவிட்டு துரத்த - பட்டன் பேக்டரி முதலாளியும் வேலைக்கு வரக்கூடாதுன்னு சொல்ல - ரொம்ப சுலபத்துல பிளாட்பாரத்துக்கு வந்துட்டா...

    இந்தக்கதையை எல்லாம் வேற யார்க்கிட்டயாவது போய் சொல்லு... உன்னை மாதிரி எத்தனை பேர் இப்படி... கிளம்பி... இருக்...

    "வெயிட் மிஸ்டர் ராமபாஷ்யம்..! நான் ஏதோ உங்ககிட்டே நியாயம் கேட்டு... அந்தப் பொண்ணையே உங்க பையனுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1