Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo! Puyal!
Poo! Puyal!
Poo! Puyal!
Ebook174 pages49 minutes

Poo! Puyal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Poo! Puyal!

Read more from Rajeshkumar

Related to Poo! Puyal!

Related ebooks

Related categories

Reviews for Poo! Puyal!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo! Puyal! - Rajeshkumar

    ராஜேஷ்குமார்

    1

    வீட்டுக்குள் நுழைந்த திவாகர் அறையின் மூலையில் இருந்த சூட்கேசைப் பார்த்துவிட்டு சமையலறை பக்கம் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.

    ஏய்... நிகிதா...

    சமையலறையிலிருந்து ஒரு சின்ன முனகல் சத்தம் கூட கேட்காமல் போகவே திவாகர் கோபத்தின் உச்சிக்குப் போய் சமையலறையை நோக்கி நடந்தான்.

    உள்ளே இருந்த சமையலறையைத் தொட்டு எட்டிப் பார்த்தான்.

    இலைப் பச்சை நிற மேக்ஸி உடைக்குள் நுழைந்திருந்த நிகிதா மிக்சிக்குள் எதையோ போட்டு அரைத்துக் கொண்டிருந்தாள்.

    நிகிதா....

    ம்....

    கூப்பிட்டது காதுல விழலை...?

    விழலையே....! மிக்சி சத்தம் போட்டுகிட்டிருக்கும்போது எப்படீங்க காதுல விழும்...?

    நான் உன்கிட்ட என்ன சொல்லிட்டுப் போனேன்...?

    என்ன சொல்லிட்டுப் போனீங்க...?

    சூட்கேசுல என்னோட டிரஸ்ஸை எல்லாம் எடுத்து வைக்கச் சொன்னேனா இல்லையா...?

    சொன்னீங்க...

    ஏன் எடுத்து வைக்கலை...?

    எனக்கு உண்மை தெரியணும்...

    என்ன உண்மை...?

    எங்கே போறீங்க...?

    ஆபீஸ் டூர் போறேன்.

    வர்றதுக்கு எத்தனை நாளாகும்?

    எப்படியும் பத்து பதினஞ்சு நாளாயிடும்.

    ஆபீஸ் டூர் போனா நாலைஞ்சு நாள்ல வேலையை எல்லாம் முடிச்சுகிட்டு ஊர் திரும்பிடலாம்ன்னு கேள்விப்பட்டேனே...? உங்களுக்கு மட்டும் எப்படி பத்து பதினைஞ்சு நாளாகும்....?

    உனக்கு இதெல்லாம் தேவையில்லாத விசயம். சூட்கேசுல டிரஸ்சை எடுத்து வைய்யின்னா எடுத்து வைக்க வேண்டியது மட்டும்தான் உன் வேலை.

    மன்னிச்சிடுங்க.... அப்படியெல்லாம் எந்திரத்தனமா வேலை பார்க்கிறதுக்கு ஒரு பெண்டாட்டி வேண்டாம். ரோபோட் போதும். நீங்க பேசாமே ஒரு ரோபோட் கழுத்துல தாலியைக் கட்டியிருக்கலாம்.

    திவாகரின் முகம் சிவந்தது.

    என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா போயிட்டிருக்குது....?

    நீங்க ஒரு மாதிரியா நடக்க ஆரம்பிச்சுட்டீங்க... நானும் அதுக்கு தகுந்தமாதிரி மாறிக்க வேண்டியதுதானே....?

    என்னடி.... பதிலுக்குப் பதில் பேசிகிட்டு....? மூணு வேளையும் உட்கார்ந்து திங்கிற கொழுப்பா....?

    இந்த வீட்ல நான் மட்டுமா மூணு வேளை உட்கார்ந்து சாப்பிடறேன்...?

    ஏய்....

    சும்மா கத்தாதீங்க... பொண்டாட்டி தர்ற மரியாதையைக் காப்பாத்திக்கத் தெரியலைன்னா அதுக்கு யார் என்ன செய்ய முடியும்....?

    திவாகர் தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு சில விநாடிகள் அவளையே முறைத்தான்.

    ஏய்....நிகிதா.... இன்னிக்கு உனக்கு என்னாச்சு? ஆபீஸ் வேலையா டூர் போறேன். எனக்கு வேண்டிய டிரஸ்சை எல்லாம் சூட்கேசுல எடுத்து வைக்கச் சொன்னேன். இதுக்குப் போய் இந்த ஆட்டம் ஆடறியா?"

    ஆட்டம் போடறது நீங்களா.... நானா....? நீங்க டூர் போற இலட்சணம் எனக்குத் தெரியாதா என்ன...? ஆபீஸ் டூர்ங்கிற பேரில் வெளியூர் போய் எவளையாவது ஜோடி சேர்த்துகிட்டு கொட்டம் அடிப்பீங்க. அந்த கூத்துக்காக இங்கே நான் சூட்கேசுல டிரஸ்சை எல்லாம் எடுத்து வைச்சு வழியனுப்பணுமா...?

    ஏய்...நிகிதா....

    அநாவசியமா எதுக்காக பல்லைக் கடிக்கறீங்க....? உங்க ஏக பத்தினி விரதம் சாயம் போய் ரொம் நாளாச்சு.

    நீ அநாவசியமா சந்தேகப்படறே....? உண்மையாவே நான் ஆபீஸ் டூர்தான் போறேன்.... என்னை நம்பு....!

    உங்களை எப்படீங்க நம்பறது....? சந்தேகத்துக்கு அஸ்திவாரம் போட்டதே நீங்க நடந்துகிட்ட முறைதானே....? அன்னிக்கு ஒரு நாள் லோக்கல் லாட்ஜில் ரெய்டு நடந்தப்ப போலீசில் பிடிபட்டீங்க... நீங்க வெளியூர் போனதா நம்பியிருந்த எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியா இருந்தது.

    நிகிதா! அன்னிக்கு அப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்தது உண்மைதான. அதுக்கப்புறம் நான் திருந்திட்டேன்.

    ஆமா ஆமா....! திருந்திட்டீங்க.... இப்பெல்லாம் மாட்டிக்கிற மாதிரி தப்பு பண்றதில்லை... உங்க லீலைகளை எல்லாம் வெளியூரில் போய் வைச்சுக்கிறீங்க.... என்ன? நான் சொல்றது சரிதானே?

    திவாகர் மனசின் மையத்துக்குள் ததும்புகிற ஆத்திரத்தை கண்களுக்கு கொண்டு வந்தான்.

    இதோ பார்! தாலி கட்டின பாவத்துக்காக பொறுமையா உன்கிட்ட பேசிட்டிருக்கேன். உன்னைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. நான் இப்போ சுத்தமாத்தான் இருக்கேன்...

    நிகிதா எகத்தாளமாய் சிரித்தாள்.

    நீங்க சுத்தமா இருக்கிற இலட்சணத்துக்கு ஒரு உதாரணம் சொல்லட்டுமா?

    என்ன சொல்லப் போறே?

    போன வாரம் வெள்ளிக்கிழமை சாயந்தரம் ஆறு மணியிலிருந்து இராத்திரி ஒன்பது மணி வரைக்கும் நீங்க எங்கே இருந்தீங்க...?

    திவாகர் யோசித்துவிட்டு சொன்னான். ஆபீஸ் வேலையா ஒருத்தரை பார்க்கிறதுக்காக பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் போயிட்டு வந்தேன்.

    பொய்....

    பொய்யா....?

    "ஆமா... பொய்தான்! நீங்க பாப்பநாயக்கன்

    பாளையம் போகலை...."

    பின்னே...?

    கே.ஜி. தியேட்டர்ல பாப்கட்டிங் பண்ணிகிட்ட ஒருத்தியோடு உட்கார்ந்து படம் பார்த்தீங்க. உண்டா இல்லையா?

    திவாகரின் முகம் அட்டைக்கரி நிறத்துக்குப் போயிற்று. இதெல்லாம் உனக்கு யார் சொன்னது....?

    யார் சொன்னா உங்களுக்கு என்ன...? பாப் தலைக்காரியோடு சினிமாவுக்கு போனீங்களா இல்லையா....?

    திவாகர் முறைத்தான்.

    இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம். போனீங்களா இல்லையா....?

    என்னடி.... மிரட்டறியா?

    உங்களுக்கு அதுமாதிரி தோணினா அப்படியே வைச்சுக்கலாம்.

    ஆமாண்டி....! நான் போனேன். அதுக்கென்ன இப்போ...?

    இதைத்தாங்க நான் எதிர்பார்த்தேன்.... இப்ப உங்க சுத்தம் என்னாச்சு....?

    "இதோ பார் .... நான் ஒரு ஆம்பிளை. கொஞ்சம் அப்படியும் இப்படியுமாத்தான் இருப்பேன். நான் மட்டும் இல்லை. உலகத்துல எந்த ஆம்பிளையும் யோக்கியவான் கிடையாது. இதையெல்லாம் பொம்பளைங்க கண்டுக்கக்

    கூடாது."

    ஆகா....! எப்பேர்ப்பட்ட பொன்மொழி இது? கேட்கும்போதே உடம்பு புல்லரிச்சு போகுதுங்க. உங்களை மாதிரியான ஆம்பிளைங்க எப்படி வேண்டுமானாலும் ஊர் மேயலாம்... ஆனா வீட்ல இருக்கிற பொண்டாட்டிகள் மட்டும் உத்தமிகளா - பத்தினிகளா இருக்கணும். அப்படித்தானே....?

    ..........

    பொம்பளையும் ஒரு ஆம்பிளை மாதிரி நடக்க ஆரம்பிச்சா என்னாகும் தெரியுமா....?

    என்னடி மிரட்டறியா? உன்னால என்னை என்னடி செய்ய முடியும்...?

    கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் - இந்தப் பழமொழியை எல்லாம் இனிமே வேதவாக்கா நினைச்சுட்டிருக்க முடியாது. ஒழுக்கமா இருந்தாத்தான் புருஷன். இல்லேன்னா அசுரன். நீங்க இனிமே ஒழுக்கமா இல்லேன்னா...

    இல்லேன்னா....?

    சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுத்துடுவேன்...

    திவாகர் மிரட்சியைக் காட்டிக்கொள்ளாமல்

    Enjoying the preview?
    Page 1 of 1