Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pulip Pori
Pulip Pori
Pulip Pori
Ebook152 pages45 minutes

Pulip Pori

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Pulip Pori

Read more from Rajeshkumar

Related to Pulip Pori

Related ebooks

Related categories

Reviews for Pulip Pori

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pulip Pori - Rajeshkumar

    ராத்திரி பதினோரு மணி.

    ‘டீ குடிக்கலாமா? வேண்டாம்... வீட்டில் ஜெனிஃபர் எனக்காக தூங்காமல் காத்திருப்பாள். டீ குடிக்க உட்கார்ந்தால் - பத்து நிமிஷம் கரைந்துவிடும்’ - டீ குடிக்கும் எண்ணத்தை ரத்து செய்து விட்டு மாத நாவல்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பெட்டிக் கடையில் சார்மினார் ஒன்றை வாங்கி - இலவச கயிற்று நெருப்பில் உயிரூட்டிக் கொண்டு - நடந்தான்.

    தெரு விளக்கு அணைந்து போயிருந்த அந்த இருட்டான சாலை வளைவுக்கு வந்த போது - ஷட்டர் சாத்தியிருந்த கடைப் பகுதியிலிருந்து குரல் கேட்டது. லாரன்ஸ்...

    லாரன்ஸ் உதட்டில் தொங்கிய சிகரெட்டோடு - திரும்பிப் பார்த்தான். இருட்டிலிருந்து கையசைத்துக் கூப்பிட்டார் இன்ஸ்பெக்டர் குபேர். மஃப்டியில் பேண்ட்டும் சர்ட்டுமாய் இருந்தார். லாரன்ஸ் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு - அவரை நெருங்கினான். ஸார்.. நீங்களா?

    நானே தான்.. வா.. இப்படி.. இருட்டுக்கு வந்துடு. லாரன்ஸ் அவசர அவசரமாய் சிகரெட்டை நாலு இழுப்பு இழுத்து விட்டு இருட்டுக்குள் போனான். இன்ஸ்பெக்டர் குபேர் அவன் தோளைத் தட்டினார்.

    என்ன இன்னிக்கு வேலை அதிகமா?

    ஆமா.. ஸார்...

    டி.எஸ்.பி. கிட்டே உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவர் கமிஷனரை கான்டாக்ட் பண்ணிட்டார்... கமிஷனர் உன் கூட பேச விரும்பறார்...

    கமிஷனர் என்கூட பேசணும்ங்கிறாரா?

    ஆமா..

    நான் எதுக்கு ஸார்? நீங்களே பேசி முடிவு பண்ணினா போதாதா?

    குபேர் சிரித்தார். கமிஷனர் உன்னைப் பார்க்க பிரியப்படறார்... லாரன்ஸ்... ஒரு பத்து நிமிஷம் வந்துட்டு போனாக்கூட போதும்... என்கிட்டே என்னென்ன கண்டிஷன் போட்டு பேசினியோ... அதே கண்டிஷனை அவர்கிட்டேயும் நீ சொல்லலாம்...

    அப்போ.. நாளைக்கு எத்தனை மணிக்கு ஸார் கமிஷனரைப் பார்க்கப் போறோம்?

    நாளைக்கா? குபேர் சிரித்தார். இன்னிக்கே.. இப்பவே கமிஷனரைப் பார்க்கப் போறோம்...

    இப்பவே வா...?

    இதோ பார் லாரன்ஸ்.. இந்த நேரத்துலதான் கமிஷனர் எந்த என்கேஜ்மெண்ட்டும் இல்லாமல் ஃப்ரீயாக இருப்பார். நிதானமா உட்கார்ந்து பேசிட்டு வரலாம்...

    நான் வீட்ல வேற சொல்லலை ஸார்...

    போற வழி தானே? காரை நிறுத்தி சொல்லிக்கலாம்...

    காரை எங்கே நிறுத்தியிருக்கீங்க ஸார்...?

    அதோ.. குபேர் கையைக் காட்ட - ரோட்டோர மரத்துக்கு கீழே இருட்டில் அம்பாசிடர் காரின் உடம்பு மினுமினுத்தது.

    இருவரும் காரை நோக்கிப் போனார்கள்.

    சாப்பிட்டியா லாரன்ஸ்?

    சாப்பிட்டுத்தான் பஸ் ஏறினேன் ஸார்.

    உனக்காக ஒரு மணி நேரமா இங்கே காத்திட்டிருக்கேன்...

    ஸாரி ஸார்.. இன்னிக்கு கொஞ்சம் நேரமாயிடுச்..."

    காரை நெருங்கினார்கள். இன்ஸ்பெக்டர் குபேர் ட்ரைவிங் சீட்டுக்குப் போனார். நீயும் முன்னாடியே வந்துடு லாரன்ஸ்...

    லாரன்ஸ் முன்னால் வந்து உட்கார கார் புறப்பட்டது. பல்லாவரம் ரோடுகள் வெறிச்சிட்டு போயிருக்க கார் வேகம் பிடித்தது.

    லாரன்ஸ்...

    ஸார்...

    நீ செய்யப் போகிற உதவிக்காக கமிஷனர் ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்.. உனக்கு வேண்டிய வசதிகளை செஞ்சு கொடுக்கச் சொல்லியிருக்கார்...

    எனக்கு எந்த வசதியும் வேண்டாம் ஸார்.. எனக்கு தேவையானது நிம்மதியான வாழ்க்கை. அது கிடைச்சா போதும்...

    கண்டிப்பா அது உனக்கு கிடைக்கும்... ஐந்து நிமிஷ பயணத்திற்குப் பின் - கார் அந்தோணியார் நகர்க்குள் நுழைந்து - சர்ச் ரோட்டில் திரும்பியது.

    ஸார்.. காரை இப்படியே நிறுத்திக்குங்க.. நான் வீட்ல போய் சொல்லிட்டு வந்துடறேன்...

    ஏன்... காரை வீட்டு வரைக்கும் கொண்டு வர்றேனே?

    வேண்டாம் ஸார்.. அம்மாவும் அப்பாவும் காரைப் பார்த்துட்டு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாங்க...

    சரி.. இப்படியே நிறுத்திக்கிறேன்... போய்ட்டு சீக்கிரமா வா... குபேர் காரை ரோட்டோரமாய் ஒதுக்கி நிறுத்த - லாரன்ஸ் இறங்கி - இருட்டான அந்த மண்ரோட்டில் நடந்து - தன் வீட்டை நோக்கிப் போனான். குப்பைத் தொட்டியருகே படுத்திருந்த தெரு நாய் ஒன்று - எழுந்து நின்று ‘வள்’ளென்று குரைத்து - லாரன்ஸ் அந்தத் தெருக்காரன்தான் என்று ஊர்ஜிதமானதும் - பழையபடி வாலைச் சுருட்டிக் கொண்டு - படுத்துக் கொண்டது.

    லாரன்ஸ் வேக வேகமாய் நடந்து - வீட்டின் வேலிப்படலைத் தள்ளினான். உள்ளே விளக்கெரிந்து கொண்டிருந்தது.

    திண்ணையில் -

    ஜெனிஃபர் உட்கார்ந்து கன்னத்திற்கு முட்டு கொடுத்திருந்தாள். லாரன்ஸைப் பார்த்ததும் ஓடி வந்தாள்.

    எ.. ன்.. னங்க.. இன்னிக்கு இவ்வளவு நேரம்?

    கேட்ட ஜெனிஃபர் அழகாக இருந்தாள். இருட்டிலும் அவள் முகம் பிரகாசமாய் தெரிந்தது. கழுத்தில் சிலுவை மின்னியது.

    ஜெனிஃபர்.. சத்தம் போடாதே.. அம்மாவும் அப்பாவும் தூங்கிட்டாங்களா?

    இப்பத்தான் படுக்கப் போனாங்க...

    சரி.. நீ சாப்பிட்டு படுத்து தூங்கு.. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துடறேன்....

    என்னது? மறுபடியும் வெளியே போறீங்களா?

    உஸ்.. சத்தம் போடாதே! ஒரு அவசரமான வேலை.. கார்ல வந்து ஒருத்தர் காத்திட்டிருக்கார்...

    யாரது?

    வந்து எல்லாமே சொல்றேன்...

    போய்ட்டு எப்ப வருவீங்க...

    ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்.

    ஏன்... இந்த வேலையை பகல்ல பார்க்க முடியாதா?

    முடியாதுங்கிறதுனாலத்தான்... இந்த ராத்திரியில போறேன்...

    Enjoying the preview?
    Page 1 of 1