Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Red Rose! Guest House!
Red Rose! Guest House!
Red Rose! Guest House!
Ebook186 pages1 hour

Red Rose! Guest House!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Red Rose! Guest House!

Read more from Rajeshkumar

Related to Red Rose! Guest House!

Related ebooks

Related categories

Reviews for Red Rose! Guest House!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Red Rose! Guest House! - Rajeshkumar

    23

    1

    சந்தனமும், குங்குமமும் கலந்த மாதிரியான ஒரு நிறத்தில் கிழக்குத் திசை விடிந்து கொண்டிருந்தது.

    பால்கனியில் நின்று அந்த வெள்ளிக்கிழமையின் விடியற்காலைக் காற்றை நுரையீரல்கள் இனிக்க இனிக்க சுவாசித்துக் கொண்டிருந்த விவேக்கை, பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோன் கனைத்துக் கூப்பிட்டது.

    விவேக் செல்ஃபோனை எடுத்து காதுக்குள் கொடுத்தான்.

    எஸ்...

    மிஸ்டர் விவேக்...?

    ஹோல்டிங்...

    மிஸ்டர் விவேக்...! சீஃப் மினிஸ்டர் வீட்டிலிருந்து அவருடைய பர்சனல் செக்ரட்ரி வீரராகவன் பேசறேன்...

    சொல்லுங்க ஸார்...

    நீங்க உடனே சி.எம். வீட்டுக்குப் புறப்பட்டு வரணும்.

    சி.எம். வீட்டுக்கா..?

    எஸ்...

    விஷயம் என்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா ஸார்...

    ஃபோன்ல சொல்லக்கூடிய விஷயமில்லை. நேர்ல வாங்க.. சி.எம். உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார். நீங்க அவர் வீட்டுக்கு வர்ற விஷயம் வேற யாருக்கும் தெரிய வேண்டாம். உயர் போலீஸ் அதிகாரிகளுக்குக்கூட இந்த விஷயம் தெரியக்கூடாது. ப்யூர்லி கான்ஃபிடென்ஷியல். சி.எம்.மைப் பார்க்க வர்ற விஷயம் உங்க மனைவிக்குக் கூடத் தெரிய வேண்டாம்... புறப்பட்டு வர்றீங்களா?

    இதோ..

    முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். போட் கிளப் ரோட்டில் இருக்கிற சி.எம்.வீட்டுக்கு வர வேண்டாம்.

    பின்னே..?

    பழவந்தாங்கல்ல அவர்க்கு ஒரு பங்களா இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...

    தெரியும்...

    அங்கே வந்துடுங்க. நானும் சி.எம்.மும் வெயிட் பண்றோம்.

    செல்ஃபோன் அணைந்தது.

    விவேக் பால்கனியை விட்டுக் கீழே வந்தான். ரூபலா குளித்துவிட்டு சமையலறைக்குள் டீ தயாரிப்பில் ஈடுபட்டிருக்க, பால் குக்கர் விசிலடித்தது.

    ரூபி...

    என்னங்க...

    எனக்கு டீ வேண்டாம்... நான் கிளம்பிட்டிருக்கேன்..

    எங்கே...?

    உத்யோக ரகசியம்.... சொல்ல அனுமதியில்லை. இப்பத்தான் செல்ஃபோன்ல மெஸேஜ் வந்தது.

    உடனே கிளம்பணுமா...?

    உடனே... உடனே...

    விவேக் தன்னுடைய அறைக்குள் நுழைந்து ஜாக்கிங் சூட்டை உருவிவிட்டு வேறு ட்ரஸ்ஸுக்கு மாறினான்.

    க்ரீம் நிற சஃபாரி.

    ரூபலா பின்னாடியே வந்தாள். கோகுல்நாத் அங்கிள் இன்னும் கொஞ்ச நேரத்துல வாக்கிங் புறப்பட்டுப் போக வந்துடுவாரே. அவர்க்கு நான் என்ன பதிலைச் சொல்லட்டும்....?

    வி.பி.ன்னு சொல்லு.. அவர் புரிஞ்சுக்குவார்.

    வி.பி.ன்னா...?

    வெரி பர்சனல்...

    விவேக் போர்டிகோவுக்கு வந்து நீலநிற மாருதிக்குள் திணிந்தான். ரூபலா காம்பௌண்ட் கேட்டைத் திறந்து வைக்க, மாருதி பாய்ந்து ரோட்டுக்கு வந்தது.

    வைகறை இருட்டும், பனியும் கை கோர்த்துக் கொண்டு எல்லா சாலைகளும் தெரிய விவேக் மாருதியை எண்பதில் விரட்டினான்.

    மூளைக்குள் யோசனை பிறாண்டியது.

    ‘சி.எம். இப்படி ரகசியமாய் அழைப்பது இரண்டாவது தடவை. இதற்கு முன் ஒரு தடவை தமிழகம் பூராவும் வெடிகுண்டு சம்பவங்கள் பரவலாய் நடந்தபோது இதற்குப் பின்னணியில் இருக்கும் தீய சக்திகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய என்னைக் கூப்பிட்டு ரகசியமாய்க் கலந்தாலோசித்தார்...’

    ‘இது இரண்டாவது அழைப்பு.’

    ‘எதற்காக இருக்கும்...?’

    சரியாய் இருபது நிமிஷ மாருதி பயணம்.

    பழவந்தாங்கல், லேசான வைகறை வெளிச்சத்தோடு வந்தது. சி.எம்.முக்கு சொந்தமான பங்களா இருக்கும் சாலைக்குள் மாருதியை நுழைத்து பங்களாவின் முகப்பை நெருங்கினான் விவேக்.

    சென்ட்ரியால் சில விநாடிகள் நிறுத்தப்பட்டு உள்ளே போனான்.

    போர்டிகோவில் செக்ரட்ரி வீரராகவன் ஒருவித தவிப்போடு காத்திருந்தார்.

    வாங்க... மிஸ்டர் விவேக்...!

    விவேக் அவரோடு போர்டிகோ வராந்தாவில் நடந்து கொண்டே கேட்டான்.

    ஸார்.. எனி அன்ஃபார்ச்சுனேட் இன்சிடெண்ட்?

    எஸ்...

    என்ன..?

    அதை சி.எம்.மே சொல்வார்....

    அந்தப் பெரிய பங்களா நிசப்தமாய் இருந்தது. வேலைக்காரர்கள் யாரும் தட்டுப்படவில்லை.

    ஹாலுக்குள் நுழைந்து அதன் மையத்திலிருந்து முளைத்திருந்த மாடிப்படிகளில் உயர்ந்து - முதலமைச்சரின் அறைக்கு முன்பாய் வந்து நின்றார்கள்.

    இறுக்கமாய் சாத்தியிருந்த ரோஸ்வுட் கதவைத் தட்டிவிட்டு வீரராகவன் உள்ளே நுழைய - விவேக்கும் பின் தொடர்ந்தான்.

    முதலமைச்சர் சத்தியவதி சோபாவுக்கு தளர்வாய் சாய்ந்திருப்பது தெரிந்தது. பக்கத்திலேயே சத்தியவதியின் கணவர் கவலை தரித்துக் கொண்ட முகமாய் தெரிந்தார்.

    சத்தியவதிக்கு ஐம்பது வயது. ஒல்லியான உடம்பு வாகு. சிவப்பு நிறம். நரை கலந்த தலை முடி ஒரு கொண்டையாய் மாறியிருக்க, காதுகளில் சின்னச் சின்னதாய் தங்கக் கம்மல்கள் மின்னியது. வெளிர் நீல நிறத்தில் இருந்த ஒரு ஆர்கன்ஸா சேலை உடம்பில் பரவியிருந்தது.

    சத்தியவதியின் கணவர் குருராஜன் முடி கொட்டிய தலையோடு வேஷ்டி ஜிப்பாவில் இருந்தார்.

    விவேக் உள்ளே நுழைந்து சத்தியவதிக்கு முன்பாய் நின்று சல்யூட் வைக்க அதை மௌனமாய் ஏற்றுக் கொண்டு சோபாவைக் காட்டினார்.

    உட்கார்ங்க... விவேக்...

    விவேக் உட்கார்ந்தான்.

    சத்தியவதி சில விநாடிகள் மௌனித்துவிட்டு பின்பு விவேக்கை ஏறிட்டபடி சொன்னாள்.

    உங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒரு உதவியைக் கேட்கத்தான் இவ்வளவு காலை நேரத்தில் உங்களை வரவழைத்திருக்கிறேன்.

    விவேக் தன் முகத்தில் ஒரு பெரிய ஆச்சர்யக் குறியை ஒட்ட வைத்துக் கொண்டு சத்தியவதியை ஏறிட்டான்.

    சொல்லுங்க மேடம்...

    சத்தியவதி வீரராகவனைப் பார்க்க, அவர் அந்தப் பார்வையைப் புரிந்து கொண்ட மாதிரி உள்ளே இருந்த ஒரு அறைக்குள் சென்று கையில் காசட்டோடு வெளியே வந்தார்.

    விவேக்கின் குழப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கும் போதே செக்ரட்ரி வீரராகவன் அந்த காஸட்டை பக்கத்தில் இருந்த வீடியோ டெக்குக்குக் கொடுத்து டி.வி.யை ஆன் செய்தார்.

    டி.வி. திரை வெளிச்சப் புள்ளிகளோடு சில விநாடிகள் காட்சி கொடுத்துவிட்டு திடும்மென்று ஒரு பச்சைப்பசேல் காட்டுப் பகுதியைக் காட்டியது.

    படம் நிசப்தமாய் ஓடியது.

    காட்டுப் பகுதியில் இருந்த ஒற்றையடிப் பாதையொன்றை காமிரா காட்டிக் கொண்டே போக - காட்சி சட்டென்று மாறி ஒரு மலைக்குகையைக் காட்டியது.

    காட்சி தத்திக் கொண்டே மலைக்குகைக்குள் போக ஒரு தீப்பந்தம் எரிவது தெரிந்தது.

    மஞ்சளாய் ஒரு வெளிச்சம் பரவி இருட்டை விரட்டியடித்து, துப்பாக்கிகளோடு நிற்கும் இரண்டு பேரைக் காட்டியது.

    முகங்கள் தெளிவாய் இல்லை.

    காமிராவின் கோணம் இப்போது மாறி குகையின் மூலையைக் காட்ட - பார்த்துக் கொண்டிருந்த...

    விவேக்கின் பார்வை உன்னிப்பாயிற்று.

    குகையின் மூலைக்குள் இரண்டு பேர் ஒண்டிக்கொண்டு குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

    ஒரு ஆண், ஒரு பெண். கைகளிலும், கால்களிலும் புழுதி மண் அப்பியிருக்க கண்களில் பயம். உடுத்தியிருந்த ஆடைகள் கிழிபட்டு தொங்கின. பெண் அழுது கொண்டிருந்தாள்.

    சத்தியவதி இப்போது விவேக்கிடம் திரும்பினாள் விவேக்...! நீங்க பார்த்திட்டிருக்கிற இவங்க யார் தெரியுமா?

    யார் மேடம்..?

    என்னோட பொண்ணு ராஜகுமாரியும், மாப்பிள்ளை கணேஷ்ராமும்...

    விவேக் திடுக்கிட்டுப் போய் சத்தியவதியைப்

    Enjoying the preview?
    Page 1 of 1