Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vivek Jakkirathai
Vivek Jakkirathai
Vivek Jakkirathai
Ebook167 pages57 minutes

Vivek Jakkirathai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Vivek Jakkirathai

Read more from Rajeshkumar

Related to Vivek Jakkirathai

Related ebooks

Related categories

Reviews for Vivek Jakkirathai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vivek Jakkirathai - Rajeshkumar

    21

    தடயவியல் என்பது சில சட்டத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் கல்வி

    - விவேக்கின் டயரியிலிருந்து

    1

    சினிமாஸ்கோப் அகலத் திரையில் கிழட்டு கதாநாயகன், மேக்கப்மேனின் உபயத்தால் ஹீரோவாக மாறி மாட்டுவண்டியில் ஹெலிகாப்டரைத் துரத்திக் கொண்டிருக்க தியேட்டரில் விசில் பறந்தது. வில்லன் கையில் மெஷின் கன்னை வைத்துக் கொண்டு ஹீரோவையும் மாட்டையும் தவிர சகலத்தையும் சுட்டான்.

    பாக்ஸ் ஆபீஸில் உட்கார்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பத்குமார் தலையில் அடித்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஷோபனாவைப் பார்த்தான்.

    இதுக்குத்தான் தமிழ்ப்படம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னேன்.. நீ கேட்கலை....

    லாஜிக்கெல்லாம் பார்க்காதீங்க.

    ‘மூளையைக் கழட்டி ஓரமா வெச்சுட்டு படம் பார்க்க வரவும்’ன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டிருந்தா சரியா இருந்திருக்கும். நாற்பத்தேழு வயசு ஹீரோ பதினேழு வயசு பொண்ணோடு டூயட் பாடறது நம்ம தமிழ் படத்துல மட்டும்தான் நடக்கும். அங்கே பாரு மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே ஹெலிகாப்டர்க்கு தாவறார்.

    தியேட்டர் விசில் சத்தத்தில் உறைந்து போயிற்று.

    போலாமா ஷோபனா...? நான் இன்னும் கொஞ்ச நேரம் இந்த தியேட்டர்ல இருந்தா பிளேடு எடுத்துட்டுப் போய் ஸ்கிரீனை கிழிச்சிடுவேன்...

    ஷோபனா சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

    சரி வாங்க.. போலாம்...! படமும் இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் போலிருக்கு. கூட்டம் வந்துட்டா காரை எடுக்க முடியாது.

    சம்பத்குமாரும் ஷோபனாவும் எழுந்தார்கள். ஹீரோ இப்போது ஹெலிகாப்டரைப் பற்றிக் கொண்டு தொங்க - வில்லன் ஹீரோவின் கையை தன் பூட்ஸ் காலால் மிதித்து நெரித்துக் கொண்டிருந்தான்.

    இருங்க... பார்த்துட்டு போலாம் ஷோபனா நிற்க சம்பத்குமார் சிரித்தான்.

    ஹீரோ கீழே விழ மாட்டான்.. நீ தைரியமா வா ஷோபி...

    இருவரும் வெளியே வந்தார்கள்.

    சரிந்து போன காரிடாரில் நடந்தார்கள்.

    மணி என்னங்க...?

    பனிரெண்டரை..

    இனிமே செகண்ட் ஷோவுக்கெல்லாம் வரக்கூடாதுங்க.

    ஏன்...?

    தூக்கம் கெடுது... காலையில சீக்கிரமா எந்திரிக்க முடியறதில்லை... நீங்க எட்டு மணி வரைக்கும் படுத்து தூங்கற மாதிரி என்னால தூங்க முடியுமா...?

    இருவரும் காரிடாரை முடித்துக் கொண்டு கீழே வந்தார்கள்.

    பிரம்மாண்டமான அந்த காம்ப்பளக்ஸ் தியேட்டர்க்கு வலது பக்கமாய் கார் பார்க்கிங் தெரிய சம்பத்குமார் சொன்னான்.

    ஷோபி..! நீ இங்கேயே நில்லு.. நான் காரை ட்ரைவ் பண்ணி இங்கே கொண்டு வந்துடறேன். நீ அப்படி ஓரமா நில்லு...

    ஷோபனா ஓரமாய் போய் நின்று கொள்ள சம்பத் கார் பார்க்கிங்கை நோக்கிப் போனான்.

    பனியில் நனைந்து கொண்டிருந்த உயர்ந்த ஜாதிக்கார்களுக்கு மத்தியில் சம்பத்குமார் நடந்தபோது பின்பக்கம் அந்தக் குரல் கேட்டது.

    ஹலோ சம்பத்குமார்...!

    திரும்பினான்.

    ஒரு சீலோ கார்க்குப் பக்கத்தில் யாரோ மசமசப்பாய் தெரிந்தார்கள்.

    யாரு..?

    உருவம் நெருங்கி வந்தது.

    என்னைத் தெரியலையா சம்பத்குமார்... நான் தியானேஷ்வரன். இன்-டெக் இண்டஸ்ட்ரியல் எக்ஸிபிஸனில் ரெண்டு பேரும் ஒரு தடவை மீட் பண்ணிகிட்டோமே...?

    எஸ்... எஸ்...! ஹவ்... ஆர்.. யூ...?

    வெரி ஃபைன்...! நீங்களும் உங்க மனைவியும் படத்துக்கு வந்தீங்க போலிருக்கு...?

    ஆமா...! நீங்க...?

    நானும் படத்துக்குத்தான்... பட் தனியா வந்தேன். ஒய்ஃப் ஊருக்கு போயிருக்கா...

    நல்லவேளை... அவங்க இந்தப் படத்தை பார்க்கிற கொடுமையிலிருந்து தப்பிச்சுட்டாங்க...

    தியானேஷ்வரன் சிரித்தார்.

    வெரி ஹாரிபிள்...! இப்படியொரு பாடாவதி படத்தை எடுக்கிறதுக்காக கோடிக்கணக்குல பணத்தை செலவு பண்றாங்க. அந்தப் பணத்தை வெச்சு ஒரு இண்டஸ்ட்ரி கட்டினாலாவது ஒரு முந்நூறு நானூறு பேர்க்கு வேலை கிடைக்கும்...

    அப்படீன்னு பார்த்தா சினிமா யார் எடுக்கிறது...? இன்னிக்கு இந்தியாவில் இருக்கிற மக்கள் வயித்துக்கு சோறு இல்லாததைப் பத்திக்கூட கவலைப்படமாட்டாங்க.. புதுசா படம் வரலைன்னா கன்னத்துல கையை வெச்சுகிட்டு உட்கார்ந்துடுவாங்க... பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புதுப்படம் வரலைன்னா தமிழன் பண்டிகையே கொண்டாட மாட்டான்.

    சரியாச் சொன்னீங்க.. சம்பத்குமார்..! பை.. த.. பை... பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு..?

    எல்லாமே ஸ்மூத் கோயிங்... எக்னாமிக்கல் லிபரலைசேஷன் வந்தாலும் வந்தது... திங்க்ஸ் ஆர் குட். உங்க டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் எப்படி...?

    ஃப்ளோரிஷ்ஷா இருக்கு.... ஒரு நாளைக்கு நம்ம மில்லு பக்கம் வாங்களேன்.

    அவசியம் வர்றேன்... ஸி... யூ... குட்நைட்.

    குட் நைட். சம்பத்குமார் கையசைத்து விடை பெற்றுக் கொண்டு கார் பார்க்கிங்கின் கோடியில் இருந்த தன்னுடைய காண்டஸா காரை நோக்கிப் போனான்.

    கார்க் கதவின் லாக்கை விடுவித்து உள்ளே போய் சாவியை சொருகி இக்னீஷியனை உசுப்பினான். அது ஆரோக்யமாய் கனைத்து விட்டு நகர்ந்தது.

    இடைவெளிக்கிடையில் காரை மெதுவாய் உருட்டிக் கொண்டு ஷோபனா நின்றிருந்த இடத்துக்கு வந்தான்.

    லேசாய் வியப்புக்குப் போனான்.

    ஷோபனா நின்றிருந்த இடம் வெறுமையாக இருந்தது.

    ‘இவள் எங்கே போனாள்...?’

    சம்பத்குமார் காரை விட்டு இறங்கி முகம் பூராவும் குழப்பத்தை ஒட்ட வைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

    கண்களுக்கு தட்டுப்படவில்லை.

    தியேட்டர்க்குள்ளே ஹீரோ வில்லனை புரட்டி எடுத்துக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் விசில் சத்தம் காதைத் துளைத்தது.

    ‘ஷோபனா எங்கே..?’

    சம்பத்குமார் பயத்தோடு காரிடார் பக்கம் பார்த்து கொண்டிருக்கும் போதே - ஒரு தூணின் மறைவிலிருந்து மெள்ள வெளிப்பட்டாள் ஷோபனா. வேகமாய் அவனை நோக்கி வந்தாள்.

    சற்றே கோபமாய் அவளைப் பார்த்தான் சம்பத்குமார்.

    ஷோபி...! இது என்ன விளையாட்டு?

    கோபிச்சுக்காதீங்க.. டூ வீலர் பார்க்கிங்கில் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வண்டியை எடுக்க வந்துட்டார். அவர் கண்ணுல படாமே மறைய வேண்டியதாயிடுச்சு...

    சம்பத்குமார் நோகாமல் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

    இந்தப் பயம் எப்ப உன்னை விட்டுப் போகுமோ?

    வெரி சிம்பிள்..

    என்ன...?

    உங்க கையால தாலியைக் கட்டிகிட்ட பிறகு...

    உடனே அந்த விஷயத்துக்கு வந்துடுவியே...! வந்து கார்ல ஏறு...

    ஷோபனா சுற்றும் முற்றும் பார்த்து

    Enjoying the preview?
    Page 1 of 1