Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Avanai Pudichirukku
Avanai Pudichirukku
Avanai Pudichirukku
Ebook141 pages58 minutes

Avanai Pudichirukku

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465438
Avanai Pudichirukku

Read more from Devibala

Related to Avanai Pudichirukku

Related ebooks

Reviews for Avanai Pudichirukku

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Avanai Pudichirukku - Devibala

    16

    1

    உணவு மேஜையின் மேல் பழங்கள், இனிப்பு, தாம்பூலம், பூ எல்லாம் பரவலாக இருந்தன! கூடவே விலை உயர்ந்த ஒரு சேலை, கொஞ்சம் மேக்கப் சாதனங்கள்.

    என்னங்க! எல்லாம் சரியா இருக்கா பாருங்க!

    விசுவநாதன் வந்து பார்த்தார்!

    எதுக்கு இத்தனை? நாம பொண்ணு பார்க்க மட்டும்தானே போறோம் ஈஸ்வரி?

    சரிங்க.. மனசுக்கு எல்லாம் புடிச்சுப் போய், ஒப்புதல் தாம்பூலம் மாதிரி மாத்தலாம்னு சொல்லிட்டா, நாம தயாரா இருக்கணுமில்லையா? எதுக்குமே ஒரு முன்ஜாக்ரதை இருந்தா தப்பா?

    பத்திரிகைல ‘முன்ஜாக்ரதை முத்தண்ணா’னு ஒரு காமெடி வரும்! அது நீதான்!

    உங்களுக்கெல்லாம் கேலியா இருக்கா?

    காலிங் பெல் அடிக்க விசுவநாதன் போய்த் திறந்தார்!

    பிரசாத் உள்ளே வந்தான். இரவு எட்டரை.

    பிரசாத்! நாளைக்கு லீவு போட்டாச்சு இல்லையா?

    அரைநாள்மா! காலைல பத்து மணிக்குத் தானே அங்கே இருக்கணும்? ஒரு மணி நேரம் தேவைப்படுமா? நம்ம வீட்டுக்கு வந்துட்டு 12 மணிக்கெல்லாம் நான் ஆபீசுக்குப் போகணும்!

    ஏண்டா இத்தனை ஹரிபரி? ஒரு நாள் லீவு போடக் கூடாதா?

    எதுக்கு லீவை வேஸ்ட் பண்ணணும்?

    ஏண்டா... நீ, உன் அப்பா எல்லாரும் எந்திரகதியாகத்தான் இருப்பீங்களா? இது சந்தோஷம்டா! நீ பொண்ணு பாக்க, நாம எல்லாரும் போறது சந்தோஷம்! உன் வாழ்க்கை தொடங்கப்போற நேரம்! இன்னொரு ஜீவன் இந்த வீட்டுக்கு வரப் போகுது! கல்யாணம் சந்தோஷமில்லையா?

    பிரசாத்! உங்கம்மா ரொம்ப அட்வான்ஸ். ரிசப்ஷனுக்கு என்ன சாப்பாடுனு இப்பவே யோசனை பண்ணி வச்சிருப்பா! வேடிக்கையா இல்லை?

    உங்கப்பாவுக்கு எப்பவுமே கேலிதான்! அந்தப் பொண்ணோட போட்டோ பார்த்தாச்சு! அவ படிப்பு, தகுதி, உத்யோகம் எல்லாம் நமக்குத் தெரியும்! குடும்ப பின்னணியும் தெரியும்! நிச்சயமா இது முடிவாகும்! அப்புறமா கற்பனை செஞ்சா என்ன தப்பு?

    அம்மா! எனக்குப் பசிக்குது! ராத்திரி என்ன?

    தோசை ஊத்தித் தர்றேன்டா! காரமா சட்னி அரைச்சு வச்சிருக்கேன்!

    கொஞ்சம் வடகறியும் பண்ணும்மா!

    இப்பவே பண்றேன்! நீ குளிச்சிட்டுவா!

    பிரசாத் உள்ளே போனான்!

    சரி! நாளைக்கு யாரெல்லாம் போகப்போறோம் ஈஸ்வரி?

    நாம நாலு பேர் தானே?

    யாரு நாலு பேரு?

    நீங்க, நான், பிரசாத், கோபி!

    உன் சின்னப் பிள்ளை கோபியா?

    ஆமாம்! அண்ணனுக்கு பொண்ணு பாக்க தம்பி வர வேண்டாமா?

    அவன் வருவானா முதல்ல?

    மூணு பேர் போகக் கூடாதுங்க! அவனையும் கூட்டிட்டுப் போகத்தான் வேணும்!

    காலைல புறப்படணும்! எட்டரைக்கு எழுந்து குளிச்சுத் தயாராகணும்! கோபி பத்துமணிக்குக் குறைஞ்சு எழுந்திருக்க மாட்டான். தினமும் அவன் ஆபீசுக்குப் போறதே பதினோரு மணிக்கு! அவன் வருவான்னு எனக்குத் தோணலை!

    சொல்லிப் பாக்கலாம்! ஒரேடியா மறுத்துட்டா வேற யோசிக்கலாம்!

    பிரசாத் குளித்து விட்டு வர, தோசை, வடைகறி தயாராக இருந்தது!

    பிரசாத் எம்.காம் முடித்து விட்டு ஒரு தனியார் வங்கியில் அதிகாரி! அடக்கமானவன்! அதிகம் பேச மாட்டான்! மற்றவர்கள் பத்து வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தைதான்! அதி புத்திசாலி. பெரிதாக அழகு இல்லை! ஆனால் கண்யமான தோற்றம்! ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லை! கடுமையான உழைப்பு! திட்டமிட்டு வாழ்பவன்! வயது 29! பெற்றவர்களிடம் மரியாதை! மொத்தத்தில் மற்றவர்கள் பார்த்து பெருமைப்படுமளவுக்கு நல்லவன்!

    அடுத்தவன் கோபி. 26 வயசு! பிரசாத்துக்கு நேர் எதிர்! பி.டெக் முடித்து விட்டு பி.பி.ஒ.வில் வேலை பார்ப்பவன்! அவனது வேலையே பகல் 12 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணி வரை நீடிக்கும்! அழகான இளைஞன்! வசீகரமாக இருப்பான்! எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு! கலகலப்பாக இருப்பான்! அவனைச் சுற்றி எந்த நேரமும் பெண்கள் கூட்டம் மொய்த்திருக்கும். யாராவது பச்சைக் கொடி காட்டினால், அந்தப் பெண்ணை விடமாட்டான்! வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவன்! அதற்கான வழிகள் எதுவாக இருந்தாலும் தயார்!

    பெற்றவர்களுக்கு பிரசாத் மேல்தான் அதிக பாசம்!

    இவனிடம் பல சங்கதிகள் பிடிக்காது!

    கண்டித்ததுண்டு! அதை கோபி பொருட்படுத்தியதே இல்லை!

    ஈஸ்வரிக்கு அவனைப் பற்றிய கவலை எப்போதும் உண்டு!

    அப்பா, பிள்ளை சாப்பிட்டு முடிக்க,

    என்னங்க! பரஸ்பரம் புடிச்சுப் போயிட்டா, நிச்சயத்தேதி, கல்யாணத்தேதி எல்லாம் குறிக்கணுமில்லையா?

    அதை அந்த நேரத்துல முடிவெடுக்கலாம் ஈஸ்வரி!

    ஆமாம்மா! அவங்க கூட கலந்து பேசினபிறகு தீர்மானிக்கலாம்!

    சரி! மணி பத்தாகப் போகுது! நீ படு பிரசாத்! காலைல சாமி ஆடி விட்ட மாதிரி இருக்கக் கூடாது!

    சரிம்மா!

    எல்லாரும் படுத்து விட்டார்கள்!

    இரவு 12 மணிக்கு காலிங் பெல் அழைக்க, ஈஸ்வரிதான் போய்த் திறந்தாள்!

    கோபி உள்ளே நுழைந்தான்!

    குப்பென மதுவின் வாடை வீசியது!

    இது தினசரி பழக்கம்தான்! வேலை முடிந்து வரும்போது தண்ணியடித்து விட்டுத்தான் வருவான்!

    இதற்காக ஈஸ்வரி பல முறை கண்டித்து, கடுமையாகப் பேசி, கண்ணீர் விட்டு - எல்லாம் செய்ததுண்டு!

    வேண்டாம்டா! விட்டுடா! இது ஒடம்பைக் கெடுத்து, உன் வாழ்க்கையை குட்டிச் சுவராக்கிடும்!

    அம்மா! நீ பயப்படாதே! நான் அளவுக்கு மீறி குடிக்கறதில்லை! ஒரு க்வாட்டர்தான்!

    சரிப்பா! தெனமும் குடிச்சா, ஒடம்புக்கு என்னாகும்?

    எதுவும் ஆகாது! நான் நல்லா சாப்பிடறேன்மா!

    விசுவநாதனும்

    Enjoying the preview?
    Page 1 of 1