Karuvoolam
By Devibala
4/5
()
About this ebook
Read more from Devibala
Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Paatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Varunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karuvoolam
Related ebooks
Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsThoguthi Pangeedu Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKalavupona Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsThakka Vachuko! Rating: 4 out of 5 stars4/5Padma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsKaduthasi Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMudichugal Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsMadipichai! Rating: 0 out of 5 stars0 ratingsNeril Vandha Deivam! Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5கோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karuvoolam
1 rating0 reviews
Book preview
Karuvoolam - Devibala
12
1
கல்யாணத்துக்கு பிறகு ரேகா வாங்கும் முதல் சம்பளம்!
உற்சாகமாக இருந்தது. காலை 11 மணிக்கே சம்பளம் கைக்கு வந்துவிட்டது.
அரை நாள் லீவு போட்டாள். வெளியே வந்தாள்.
ரேகா எம்.சி.ஏ. படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்க்கிறாள்.
கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம்.
அழகான பெண். புத்திசாலி. எல்லாவற்றுக்கும் மேலாக தைரியசாலி! மனதில் பட்டதை படக்கென சொல்லி விடும் குணம் ரேகாவுக்கு நிறைய உண்டு.
ஒரு விதவை அம்மா - மல்லிகா. ஒரே ஒரு அக்கா - சரஸ்வதி.
அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சர்! அது கூட அப்பா இறந்த காரணமாக அம்மாவுக்குக் கிடைத்த வேலை.
அப்பா விபத்தில் இறக்கும்போது ரேகாவுக்கு 12 வயது.
சரஸ்வதிக்குப் பதினேழு. அப்பா சேமிப்பில் எதுவும் வைக்கவில்லை.
அது முதல் அம்மா பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை. கடுமையான உழைப்பாளி. பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து, தனியாக முப்பது பேருக்கு டியூஷன் எடுத்து, தவிர ஊறுகாய், சிப்ஸ் என வியாபாரம் வேறு.
அப்பா வேலை பார்க்கும்போது நடத்திய இந்த வியாபாரத்தைக் கைவிடவில்லை.
அதனால் பணமும் கணிசமாக சேர்ந்தது.
அக்கா சரஸ்வதி வெறும் பி.காம். தான் படித்தாள்.
காதல் கல்யாணம். ஜாதி கடந்த கல்யாணம். கடும் எதிர்ப்பு பிள்ளை வீட்டில்.
இங்கு முதலில் அம்மா - மல்லிகாவும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. வீடு ரணகளமாக இருந்து.
ஆறு மாத காலம் போராட்டம் தொடர்ந்தது.
அக்கா சரஸ்வதியும், அவள் காதலன் பன்னீரும் ஒரு நாள் கோயிலில் திருமணம் முடிந்து, பதிவும் செய்துகொண்டு வந்துவிட, யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.
இருவீட்டிலும் விலக்கி வைத்தார்கள்.
ரேகா சொல்லிச் சொல்லி, மல்லிகா மனசு கொஞ்சம் கரைந்து ஒப்புக்கொள்ள ஒரு வருடம் பிடித்தது.
இருவரும் வேலைக்குப் போவதால் யாரையும் எதிர்பார்க்கவில்லை.
அதனால் அக்காவுக்கு எந்தச் செலவும் இல்லை.
இருந்தாலும் தன்னிடமிருந்த நகைகள், பாத்திரப் பண்டங்களை அம்மா தந்தாள்.
ரேகாவின் படிப்புச்செலவு!
ரேகா எம்.சி.ஏ. முடித்ததும் இந்த வேலை கிடைத்துவிட்டது.
அம்மா மல்லிகா சோர்ந்துவிட்டாள்.
இழுத்துப் பிடித்து இந்த ரெண்டு வருஷங்களை ஓட்டிவிட்டாள்.
அடிக்கடி உடல்நிலை சீர்கெட்டு, லீவு போடும் நிலை உருவாக, ரேகாவுக்கு வேதனை.
நீ கட்டாய ஓய்வு வாங்கிட்டு வெளில வந்துடு!
உனக்குக் கல்யாணம் நடக்கணும். வேண்டாம்மா!
அதை அப்புறமா பார்க்கலாம்.
மேலும் ஆறு மாதங்கள் போக, மல்லிகா துவண்டுபோனாள்.
கட்டாய ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டாள். அது வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஒரு வசதியான பள்ளி. மல்லிகா வெளியே வரும்போது 12 லட்சம் வரை வந்தது.
பென்ஷன் பணமாக மாதந்தோறும் ஆறாயிரம் தர சம்மதித்தார்கள்.
மேலும் ஒரு வருடம். ரேகாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அதற்கே ஆயிரம் இடக்கு.
நானும் போயிட்டா நீ என்ன செய்வே?
எனக்கென்னடீ? பழகின இடம். பென்ஷன் வருது. நான் சமாளிச்சுப்பேன்.
இந்த வீட்டுக்கு வாடகை எட்டாயிரம் ரூபாய். உனக்கு பென்ஷனே ஆறாயிரம் ரூபாய்தான். எப்படிம்மா நீ சாப்பிடுவே?
மல்லிகா சிரித்தாள்.
ஊறுகாய், சிப்ஸ் தவிர, சின்ன மெஸ் மாதிரி நடத்தினா போதும்டி!
இனிமேல் அதெல்லாம் முடியாதம்மா!
முடியும் ரேகா!
பிரகாஷ் பெண் பார்க்க வந்தான். இவளை ரொம்பப் பிடித்துவிட்டது. பிரகாஷ் எம்.பி.ஏ. படித்தவன். பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் அதிகாரி. நல்ல சம்பளம். பெற்றவர்களும் வசதியானவர்கள். வீடு, கார் என நகரின் மையத்தில் வசிப்பவர்கள். பிரகாஷ் மூத்தவன். தவிர ஒரு தங்கை.
அவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை!
என்ன முடியுமோ, அதைச் செய்யுங்க!
என்று சொல்லிவிட்டார்கள்.
இந்த இரண்டு வருடங்களில் ரேகா சம்பாதித்த பணம் கணிசமாக சேர்ந்திருந்தது.
ஆனால் ரேகா வேலைக்கு நிச்சயமாகப் போக வேண்டும் என்பதில் பிரகாஷ் திடமாக இருந்தான்.
ரேகா-பிரகாஷ் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதமே கல்யாணத் தேதியும் முடிவாகி விட்டது.
இருவரும் வாரத்தில் ஒரு நாள் வெளியே போனார்கள்.
ஹோட்டல், சினிமா, ஷாப்பிங் என வெளுத்துவாங்கினார்கள்.
உற்சாகம் கரை புரண்டது.
ரேகா, பிரகாஷ் வீட்டுக்குப் போவதும், பிரகாஷ் ரேகா வீட்டுக்கு வருவதும், சாப்பிடுவதும் அடிக்கடி நிகழ்ந்தது.!
இரண்டு குடும்பங்களுக்கும் பரஸ்பரம் பிடித்துவிட்டது.
"அம்மா! நீ தனியா இருப்பியா-?
கண்டிப்பா இருப்பேன்! இருந்துதான் தீரணும். உன் கூட நானும் வர முடியுமா? உன் வீட்ல பெரியவங்ககூட நான் வாழ முடியுமா! எனக்கும் தன் மானமில்லையா? நீ சந்தோஷமா இருக்கறதுதான் முக்கியம்.
கையில் இருந்த பணம் மொத்தத்தையும் போட்டு கல்யாணத்தை நன்றாகவே நடத்தினார்கள்.
அம்மாவை விட்டுப் பிரிவதுதான் ரேகாவுக்கு சங்கடமாக இருந்தது.
இதப்பாரு! அடிக்கடி உன்னை வந்து நான் பாத்துக்கறேன்! நீ கஷ்டப்பட்டு இந்த ஊறுகாய், சிப்ஸ் சங்கதிகளை இழுத்து விட்டுக்காதே! எப்ப வேணும்னாலும் போன் பண்ணு. நான் ஓடி வந்துர்றேன்!
தேனிலவு, இத்யாதிகள் முடிந்து, வரவே பத்து நாட்களாகிவிட்டது.
வீட்டில் சமையல், வீட்டுவேலைகளை கவனிக்க ஆட்கள் இருந்தார்கள். மாமாவுக்கு பிஸினஸ் இருந்ததால், பணத்துக்கு பிரச்சினை இல்லை. ரேகாவுக்கு எந்தத் தொல்லையும் இல்லை. அங்கே மாமா, அத்தை யாருமே யாரிடமும் பூசிக்கொள்ளவில்லை. யாரையும் சார்ந்து இருக்கவும் இல்லை.
இதோ கல்யாணம் முடிந்து வேலையில் சேர்ந்துவிட்டாள் ரேகா!
பிரகாஷ் கார் வைத்திருந்தான். காலை, மாலை