Kelvi Pirakatum
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Madiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kelvi Pirakatum
Related ebooks
Puli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Ketten Thanthaai Rating: 5 out of 5 stars5/5நீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsThaanaagath Thriyum Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5தான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsKaasalavu Nesam! Rating: 0 out of 5 stars0 ratingsAlaikal Ointhuvidum! Rating: 0 out of 5 stars0 ratingsPoiththaan Aaganum Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsThaan Than Sugam Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAaravaaram Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Thirai Rating: 0 out of 5 stars0 ratingsபோகட்டும், விடு..! Rating: 0 out of 5 stars0 ratingsMelam Kotta Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsKaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Veyil Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Mudiyumaa Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kelvi Pirakatum
0 ratings0 reviews
Book preview
Kelvi Pirakatum - Devibala
12
1
கல்யாணம் முடிந்து பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது!
உள்ளூர் விருந்துகள், ஊட்டிக்கு தேனிலவு என அந்த பத்து நாட்களும் ஓடி விட்டது.
வரும் திங்கள் வேலையில் சேர வேண்டும்!
இன்னும் வீட்டில் முழுசாக ஒரு நாள் கூட தங்கவில்லை.
நாளை மறுவீட்டுக்கு- அம்மாவீட்டுக்குப்போக வேண்டும்!
விஜய் வெளியே போயிருந்தான்!
தாரிகா துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்!
தாரிகா எம்.காம் முடித்து விட்டு பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றுகிறாள். வயது இருபத்தி ஐந்து! அழகான- புத்திசாலிப் பெண். மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்த இரண்டாவது பெண். மூத்தவள் கல்யாணமாகி மதுரையில் இருக்கிறாள். மூன்றாவது, ஷோபனா. கல்லூரியில் கடைசி வருஷம். சகோதரன் இல்லை. மூன்றும் பெண்கள்!
அப்பா ரயில்வே உத்யோகம்! இன்னும் மூன்று வருடங்கள் சர்வீஸ் பாக்கி! அம்மா அரசாங்க பள்ளிக்கூடத்தில் டீச்சர்! ஓரளவுக்கு திட்டமிட்ட குடும்பம் என்பதால் அப்பா சின்னதாக ஒரு வீடும் கட்டி விட்டார். மூன்று பெண்களையும் படிக்க வைத்துவிட்டார்! யாரிடமும் கையேந்தி நிற்கவில்லை!
தாரிகாவை விஜய் பார்க்க வந்தபோதே அவனுக்குப் பிடித்துவிட்டது. விஜய் எம்.டெக் முடித்து நல்ல பதவியில் இருந்தான்!
தனியாகப் பேச விரும்பினான்!
தாரிகா சம்மதித்தாள்!
நீ கண்டிப்பா வேலைக்குப் போகணும்! ரெண்டு பேர் சம்பாத்தியதை வச்சு நிறைய நான் திட்டம் போட்டிருக்கேன்!
சரி!
கல்யாணமான முதல்நாளே தனிக் குடித்தனம்தான்!
ஏன்?
எனக்கு பிரைவஸி வேணும்! இப்ப அப்பா, அம்மா கூட நான் இருக்கற வீடு அம்பத்தூர்! அங்கிருந்து ரெண்டு பேரும் தினமும் டவுனுக்கு வரணும்! காலைல அஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சு, ஆறரைக்கே புறப்படணும்! வீடு திரும்ப தினமும் ராத்திரி எட்டரை ஆகும்!
இப்ப நீங்க அப்படித்தானே செய்யறீங்க?
என் கதை வேற தாரிகா! நான் ஆம்பிள! எழுந்து குளிச்சிட்டு புறப்படலாம்! ஆனா நீ வாழ வரப் போற பெண்! ஒரு உதவியும் செய்யாம எழுந்து வர முடியுமா? ராத்திரி வந்ததும் படுத்துட முடியுமா? தப்பா இருக்காது? இதுல ஆரம்பிச்சு விவகாரம் பெரிசாகும்! குடும்பத்துல பிளவு வரும்! வேண்டாமே! அதனால தனிக்குடித்தனம் பெஸ்ட்!
இதுக்கு உங்கப்பா, அம்மா சம்மதம் உண்டா?
எந்த ஒரு அப்பா, அம்மாவும் பிள்ளை தனிக்குடித்தனம் போறான்னா, சந்தோஷமா அனுப்பி வைப்பாங்களா? நெவர்!
அப்படீன்னா இதை நீங்க சொல்லவே இல்லையா?
சொல்லியாச்சு! எனக்கு எதையும் மூடி மறைச்சு பழக்கமில்லை! என் விருப்பம் அதுதான்! கட்டுப்பட்டுதானே ஆகணும்?
தாரிகா பேசவில்லை.
‘வெளிப்படையான பேச்சு - ஆனால் பிடிவாதக்காரன்!’
அடுத்த நிபந்தனை!
மூணு வருஷங்களுக்கு குழந்தை வேண்டாம்!
ஏன்?
முதல்ல நாம வாழ்க்கைல செட்டில் ஆகணும்! அப்புறமா பெத்துக்கலாம்!
தாரிகா எதுவும் பேசவில்லை.
உங்க வீட்டுக்கு நீங்க உதவி எதுவும் செய்யணுமா?
இப்ப இல்லை. தங்கச்சி கல்யாணம் வந்தா அப்பாவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டி வரலாம்!
சரி! அந்த நேரத்துல பார்த்துக்கலாம்!
விஜய்யின் அப்பா ஒரு ரசாயன தொழிற்சாலையில் அதிகாரி!
அம்மா, குடும்பத்தலைவி! ஒரு அக்கா, ஒரு தம்பி! அக்கா உள்ளூர்தான்! தம்பி பேங்கில் வேலை! வசதியுள்ள குடும்பம்தான்! விஜய்யை நம்பி இல்லை!
பரஸ்பரம் பிடித்து விட்டது!
நிச்சயதார்த்தம் நடந்து கல்யாணத் தேதியும் குறித்தாகிவிட்டது!
அக்கா ஊரிலிருந்து வந்து விட்டாள்!
விஜய் பேசியது வீட்டில் விவாதிக்கப்பட்டது!
எடுத்த எடுப்புல தனிக்குடித்தனம் எதுக்கு? கொஞ்ச நாள் பெரியவங்க கூட இருந்துட்டு, அப்புறமா வேணும்னா முடிவெடுக்கலாமே?
- இது தாரிகாவின் அம்மா சாரதா!
அக்கா வாணி இதைக் கடுமையாக எதிர்த்தாள்!
மாப்ளையே தனிக்குடித்தனம் போகலாம்னு சொல்லும்போது உனக்கென்ன கஷ்டம்?
புரியாம பேசாதேடி! முதல்ல பெரியவங்ககூட இருந்து எல்லாத்தையும் பழகிகிட்டா நல்லதில்லையா?
எதைப்பழகறது? எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்தாங்களா? இவளால தெனமும் அம்பத்தூர்லேருந்து ஆபீசுக்கு வந்துபோக முடியுமா? அவர் அழகா பேசியிருக்கார். ஒரு வேலை கூட இவ செய்யாம இருந்தா, அவங்களுக்கு அது புடிக்குமா?
அதெல்லாம் புரிஞ்சுக்குவாங்க! சனி, ஞாயிறு வரும்போது செய்யட்டும்!
"அம்மா! நான் கூட்டுக் குடும்பத்துல வாழப்போய் பட்ட செருப்படிபோதும்! இப்பவும் அதுதானே தொடருது? எங்க மாமியார் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டா! உள்ளூர் நாத்தனாரோட கொஞ்சல் வேற! வீட்ல வேலை ஓயறதில்லை!
எங்க வீட்டுக்காரர் எதையும் கண்டுக்கமாட்டார். ஊமைக் கோட்டான்! எனக்கு விடுதலையே இல்லை. தாரிகாவுக்கு எடுத்த எடுப்புல தனிக்குடித்தனம்! இது பெரிய யோகம்! யாருக்குக் கிடைக்கும்?"
அக்கா வாணியின் குரலில் பொறாமை தெரிந்தது!
அதில்லைடி! இவளுக்கு சமையல் தெரியாது. எதையும் கத்துக்கலை. தனியாப் போய் எப்படி தவிக்கப் போறாளோ?
தவிக்க மாட்டா! மாமியார் இருந்தா, குற்றம் குறை வரும்! புருஷன் மட்டுமே கூட இருந்தா, கேள்விகள் வராது! ஆம்பளைங்க அனுசரிச்சுப் போயிடுவாங்க! புரியுதா?
நாளைக்கு வயித்துல ஒண்ணு வந்துட்டா, உதவிக்கு ஆள் இல்லாம கஷ்டப்படணும்!
நீ எதுக்கு இருக்கே? கொண்டு வந்து வச்சுக்கோ!
அம்மா! அந்தக் கஷ்டமே வேண்டாம்! மூணு வருஷங்களுக்கு குழந்தை வேண்டாம்னு அவர் சொல்லியாச்சு!
ஏண்டீ?
அவரைத்தான் கேக்கணும்! வாழப்போறது வாடகை வீடு! பணம் சம்பாதிச்சு சொந்த வீட்டுக்கு புக் பண்ணிடணும்னு தீவிரமா இருக்கார்!
"சபாஷ்! விஜய் புத்திசாலி! எதிர்காலம் பற்றி எத்தனை அழகா திட்டம் போடறார்! நீ குடுத்து வச்சவடி! எனக்கும்