Manakkadhavu
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Paatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Poorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsSu(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVaruvathu Yaro? Rating: 2 out of 5 stars2/5Varunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manakkadhavu
Related ebooks
Chittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsMayaana Malarkal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsPorkkalap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMookkuthi Poo Meley Rating: 4 out of 5 stars4/5Thethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Iru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsGeetham... Sangeetham Rating: 4 out of 5 stars4/5Sonthakkaranga Rating: 4 out of 5 stars4/5Indru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsPor Megangal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsDevan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsArugamai Sugam Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Oru Naal Rating: 4 out of 5 stars4/5Idhayathai Thodalama? Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsArasaangath Thaali Rating: 0 out of 5 stars0 ratingsAthirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsMaakolam Rating: 0 out of 5 stars0 ratingsMarupakkam Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vennila... Rating: 5 out of 5 stars5/5Kaalathin Kattalai! Rating: 0 out of 5 stars0 ratingsAnthi Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsNavarathinam Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manakkadhavu
0 ratings0 reviews
Book preview
Manakkadhavu - Devibala
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
ஆசிரியா் அறை
இராஜதந்தரி
இன்றைய இந்திய அரசியலில் மிகச் சிறந்த இராஜதந்திரிகள் என்ற வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் வருவார்; கலைஞர் கருணாநிதியும் வருவார்.
ஜெயலலிதா இந்த வரிசையில் வர மாட்டார்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தன் சொந்த செல்வாக்கால்தான் அத்தனைமுறையும் வெற்றி பெற்றார். என்றாலும், மத்திய அரசுடன் இணக்கமான நிலையையே மேற்கொண்டார். அ.தி.மு.க மிகப் பெரிய - அதே நேரம் சுலப - வெற்றி பெற முக்கிய காரணகர்த்தாக்களாக அன்னை இந்திராகாந்தி, தோழர் - எம்.கல்யாண சுந்தரம் இருந்தார்கள். ஜனதா ஆட்சி வந்ததும் உடனே ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஒரு சுமுகமான சூழ்நிலையை மேற்கொண்டார் புரட்சித் தலைவர். அவர் எந்தக் காலத்திலும் ஒரு சாராரிடம் தனிப்பட்ட நட்பைக் காட்டியதில்லை.
கலைஞரின் நிலை வேறு... தனது கட்சியின் மேல்மட்டத் தலைவர்களுடன் இணக்கமான சூழ்நிலையையும் - மத்திய அரசுடன் சூழ்நிலைக்கு ஏற்ற கூட்டணியையும் மேற்கொள்வார். கூட்டணியில் இருக்கும்போது மாற்றுக் கட்சிக்காரர்களை விமர்சனம் செய்வதில் சளைத்தவரல்ல. 2003-ல் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுடன் கூட்டணி வைத்தார். அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸோடு கூட்டணி வைத்து ஏறக்குறைய 13 ஆண்டுகள் மத்திய - காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொண்டார்.
ஆனால் நன்கு படித்த - பொது அறிவு கொண்ட ஜெயலலிதா தமிழ்நாட்டில் அரசியல் செய்வது போலவே மத்தியிலும் தடாலடி அரசியலே செய்தார். இது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பதும் உண்மை.
மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜிக்கு தனிப்பெரும் பலம் இருந்தும் அவர் மத்திய அரசுடன் இணக்கமான நிலையை மேற்கொள்ளாததால் மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய மாநிலச் சலுகைகளைப் போராடித்தான் பெற்று வருகிறார்.
பிகாரில் சிறப்பான ஆட்சி செய்து - மக்களிடம் பெரிய செல்வாக்கு பெற்றிருந்தும் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் நட்பு இல்லாததால் - எதிரிக்கு பகைவன் நண்பன் என்பதற்கு பொருத்தமாக - பிகாரில் மாநில அரசியலில் தனது நேரடி எதிரியான லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ்குமார். தனியாக நின்று இருந்தாலும் ஓரளவிற்கு வெற்றி பெற்றுத்தான் இருப்பார். இருந்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளாமல் லல்லுவுடன் கூட்டணி வைக்க, லல்லுவுடனான அந்தக் கூட்டணியில், லல்லுவிற்கு சற்று அதிக எம்.எல்.ஏக்கள் கிடைத்து உள்ளனர்.
இதற்கு ஒரு ‘புள்ளி’ வைத்தால்தான் லல்லுவின் மிரட்டல் உருட்டல் இருக்காது என்ற நோக்கில் பா.ஜ.க.வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதாக அதிரடி அறிக்கை விட்டுள்ளார் நிதிஷ்.
இது ஒரு மிகப்பெரிய இராஜதந்திரம்!
லல்லுவிற்கு ‘செக்’ வைத்ததுபோல -
மத்திய அரசையும் பிகாருக்குக் கடமைப்பட வைத்து விட்டார்.
மத்திய அரசும் பா.ஜ.க.வின் ஆட்சி மற்றும் கூட்டணி இல்லாத மாநிலங்களில் அதிரடி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டை - அதுவும் பலமிருந்தும் பலமில்லாத அ.தி.மு.க ஆட்சியை - தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
உதாரணமாக டெல்லி, பாண்டிச்சேரியில் எதிர்கட்சித் தலைவர்களைவிட அதிகமாக அதிரடி நடவடிக்கை எடுக்க - அதற்குத் தகுந்த கவர்னர்களை நியமித்துள்ளது. பாண்டியின் கிரண்பேடி நியமன உறுப்பினர் மூன்று பேருக்கு மாநில முதல்வரை மீறி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததோடு, பாண்டியின் பல இடங்களுக்கு - குறிப்பாக தேர்வு மையம், மாணவர் சேர்ப்பு, நேர்முக தேர்வு மையம் போன்ற பல இடங்களுக்கு நேரில் சென்று பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கிறார்.
இந்த நடவடிக்கைகளால் கிரண்பேடிக்கு பாண்டி மக்களால் ஆதாயமோ அவர்களின் ஆதரவோ கிடைக்கப்போவது இல்லை. பாண்டி அரசியலில் கிரண்பேடிக்கு ஒரு குறிப்பிடும்படியான எந்த அரசியல் எதிர்காலமும் கிடையாது.
பொது விவகாரத்தை இத்துடன் ஒதுக்கிவிட்டு கொஞ்சம் சொந்தப் பேச்சு பேசலாமா?
நம்ம பத்திரிகை குடும்பத்தின் மூத்த பையன் ‘பாக்கெட் நாவ’லின் 350ஆவது சிறப்பிதழ் வந்துள்ளது. இதில் கடந்த 35 ஆண்டுகளாக க்ரைம் கதைகளில் கோலோச்சும் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்களின் நாவல்களுடன், ‘இரட்டையர்’ஆகிய ‘சுபா’வின் நாவலும்..
அவசியம் வாங்கிப் படியுங்க....
அன்புடன்,
ஜி.அசோகன்.
திரு. ஐ. எஸ். ஆறுமுகம் அவர்கள் கேட்ட அடுத்த கேள்வி:
அந்தப் படத்துக்கு வசனம் யார் தெரியுமா?
தெரியும். டைட்டில்ல பார்த்தேன். மு.சோமசுந்தரேஸ்வரர்.
(ரெண்டாவது தடவையாக நான் படத்தைப் பார்க்கிறப்போ கவனிச்சுவச்ச விஷயம்)
எதிர்முனையில், குட்! அவர் இப்ப தனியா படம் பண்ணப்போறாரு. ஹோட்டல்ல டிஸ்கஷன் நடக்குது. போய்ப்பாரு. உன்னைப் பத்தி சொல்லியிருக்கிறேன்.
சரிங்க அத்தான். ரொம்ப ரொம்ப தாங்ஸ்.
இரு, இரு. நான் உன்னை சிபாரிசு பண்ணலே, அறிமுகம்தான் பண்றேன்! அவரை ‘இம்ப்ரஸ்’ பண்ணுறது உன் பொறுப்பு.
சரிங்க அத்தான்.
ரொம்ப நேரம் யோசிச்சேன்.
‘சிபாரிசு’, ‘அறிமுகம்’. ஆமாம். இரண்டுக்குமே பெரிய வித்தியாசம் இருந்தது. இவரை நீங்க எனக்காக கண்டிப்பாகச் சேர்த்துக்கணும்.
- இது சிபாரிசு. இந்தப் பையன் திறமையானவன். உங்களுக்குப் பிடிச்சிருந்தா வேலைக்கு வச்சுக்கோங்க
- இது அறிமுகம்.
ஆக, ஐ.எஸ். ஆறுமுகத்தின் அறிமுகத்தில் போகும் நான், அந்த இயக்குநர் சோமசுந்தரேஸ்வரரை எப்படி இம்ப்ரஸ் பண்ணுறது? பொதுவாக, நாம் ஒரு புதுநபரைச் சந்திக்கப் போகும்போது, அவரை எப்படி இம்ப்ரஸ் பண்றது என்று யோசிப்போம். அதற்கென்று பிரத்யேக ஆடை அணிவோம். முதல்நாளில் இருந்தே அந்தச் சந்திப்புக்கு நமக்குள் நாமே தயாராகிக் கொண்டிருப்போம்.
புதிய நபரைப் பார்த்தவுடன், முதலில் எப்படி விஷ் பண்ணுவது? எந்த வார்த்தையை முதலில் பிரயோகிப்பது? - இப்படி எல்லாம் தயாராகித்தான் போவோம். நானும் போயிருக்கிறேன். ஆனால் அத்தனையும் வேஸ்ட். அப்படி தயாராகப் போகும் சந்திப்பெல்லாம் சம்பிரதாயமாக இருக்கும். வெறும் சாதாரண பேச்சளவிலேயே முடிந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால், பைசாவுக்குப் பிரயோஜனமில்லை. அதனாலே பிரத்தியேகமாக என்னை எந்தவிதத்திலும் தயார்படுத்திக் கொள்ளவில்லை.
என் திறமையை நான் சந்திக்கப்போகும் இயக்குநர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பத்திரிகைகளில் நான் எழுதி வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு, நான் போட்ட நாடகங்களின் நோட்டீஸ்கள், நான் எழுதி வைத்திருந்த திரைக்கதைகள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி ஒரு ஃபைல் போட்டுக் கிளம்பினேன்.
மாரிஸ் ஓட்டல் - டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்தது. அப்போது அது பெரிய ஓட்டல்களுள் ஒன்று.
ரிசப்ஷனிஸ்ட் சொல்லி லிப்டில் ஏறி ‘காரிடா’ரில் நடந்து ரூம் பெல்லை அழுத்தினேன். ஏனோ, அதுவரை காஷுவலாக இருந்த எனக்கு உடம்புக்குள் உதறல் எடுத்தது. கதவு திறந்தது. ஒருவர் எட்டிப் பார்த்தார்.
யாருங்க?
டைரக்டர் சோமசுந்தரேஸ்வரர் சாரைப் பார்க்கணும்!
என்றேன்.
ஐ.எஸ்.ஆறுமுகம் சொல்லி வந்திருக்கீங்களோ?
ஆமாம்
என்றேன்.
உள்ளே வாங்க.
இப்போது குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன்.
ஏற்கனவே அங்கு என்னை அமரவைத்த உதவி இயக்குநரோடு சேர்த்து இன்னும் மூன்று பேர் அங்கு இருந்தனர்.
டைரக்டர் வர்றதுக்கு கொஞ்சம் நேரமாகும். உட்காருங்க
என்று கூறி, என்னை அமர வைத்தபின் அவர்கள் மறந்துவிட்டார்கள்.
அவர்களுக்குள்