Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paneer Nathi
Paneer Nathi
Paneer Nathi
Ebook139 pages41 minutes

Paneer Nathi

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465445
Paneer Nathi

Read more from Devibala

Related to Paneer Nathi

Related ebooks

Reviews for Paneer Nathi

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paneer Nathi - Devibala

    12

    1

    பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. ருக்மணி பதட்டமாக இருந்தாள். நெட்டில் ரிசல்ட் வந்து விட்டது. திவ்யா பாஸாகி விட்டாள். ருக்மணிக்கு போன உயிர் வந்து விட்டது.

    அன்றைக்கே பள்ளிக் கூடத்தில் மதிப்பெண்களை ஒட்டி விடுவார்கள் என்றார்கள். சி.பி.எஸ்.ஈ. பள்ளிக்கூடம்!

    திவ்யா தன் தோழிகளுடன் காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்து விட்டாள்! அதற்குள் தமிழ், ஆங்கில தினசரிகளில் மாநிலத்தில் முதலாவதாக தேறிய மாணவிகளின் பட்டியல் வெளியாகி, தொலைக்காட்சியிலும் செய்திகள்!

    திவ்யா, சக தோழிகளுடன் பள்ளிக்குள் நுழைந்தாள்!

    மதிப்பெண்கள் வந்து விட்டன.

    ஐம்பத்தி நாலு சதவீதம் பெற்றிருந்தாள் திவ்யா!

    உடன் வந்த தோழிகள் அத்தனை பேரும் எண்பது சதவீதத்துக்கு மேல் பெற்றிருந்தார்கள்.

    ஏழெட்டு பேர் தொண்ணூறு கடந்து நின்றார்கள்!

    அந்தக் கூட்டத்தில் மிகக் குறைவான மதிப்பெண்கள் பெற்றது திவ்யா மட்டும்தான்!

    மற்றவர்கள் எதில் நூறு என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க, இன்ஜினியரிங் காலேஜில் அட்மிஷன் வாங்க ஒரு கூட்டம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, திவ்யா விலகி வெளியே வந்தார்.

    முகம் வாடிக் கிடந்தது!

    அப்பா ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி! பன்னீர் செல்வம்! அம்மா ஒரு கல்லூரியில் பேராசிரியர். திவ்யா ஒரே பெண். சொந்த வீடு - கார் என வீட்டில் சகல வசதிகளும் உண்டு.

    பெற்றவர்கள் புத்திசாலிகள்.

    ஆனால் திவ்யாவுக்கு படிப்பு ஏறவில்லை.

    வைக்காத ட்யூஷன் இல்லை. எத்தனை கோச்சிங் வகுப்புகள் - பணத்தை செலவழிக்க அவர்கள் தயங்கவே இல்லை.

    கடந்த ஓராண்டாக பன்னீரும், ருக்மணியும் பட்டபாடு கொஞ்சமல்ல.

    எப்படியாவது எழுபது பர்சன்டை தாண்டிடு. நான் அட்மிஷனுக்குச் சொல்லி வச்சிருக்கேன். வாங்கிடலாம்!

    இதை ருக்மணி சொல்ல,

    பணத்தைத் தள்ளி, மானேஜ்மென்ட் கோட்டால வாங்கிடலாம் ருக்கு! கவலைப்படாதே!

    இது பன்னீரின் உறுதிமொழி!

    இதோ மதிப்பெண்கள் வந்து விட்டன!

    அம்மா இந்த நேரம் நெட்டில் பார்த்து, தகவல்களை சேகரித்திருப்பாள். பள்ளிக்கு வந்ததே அம்மா முகத்தை பார்க்கத் தெம்பில்லாமல் தான்!

    வீட்டுக்குப் போய்த்தானே தீர வேண்டும்!

    போகவே பிடிக்கவில்லை.

    உடன் வந்த தோழிகள் அத்தனை பேரும் பெரிய அளவுக்கு மார்க் வாங்கியதால், எதிர்கால திட்டங்கள் பொறி பறந்து கொண்டிருக்க, திவ்யாவுக்கு அங்கும் வேலையில்லை.

    ஒரு நொடியில் உலகம் சூன்யமாகி விட்டது.

    அழுகை பீறிட்டது.

    தனக்கு யாரும் இல்லாததைப் போல தோன்றியது!

    மெல்ல விலகி வெளியே வந்தாள்!

    அங்கு நின்றால், அவளது ஐம்பத்தி நாலு சதவீதத்துக்காக பரிதாபப்படுவார்கள். அந்த பரிதாபத்தில் ஒரு கேலி இருக்கும். கேலிக்கு பின்னால் சின்ன சந்தோஷம் தெறிக்கும். உள்ளே ஒரு குளிர்ச்சி பரவும்.

    வீடும், காரும், அந்தஸ்த்தும் இருக்கலாம். ஆனா நீ படிக்காம போனா, என்ன மரியாதை மிஞ்சும்!’

    ‘நாளை சமூகத்தில், கல்யாண மார்க்கெட்டில் நீ காலூன்றி நிற்க முடியுமா?’

    கேள்விகள் எழும்!

    படித்தவர்கள், ஜெயித்தவர்கள் ஒன்று கூடி பார்க்கும் பார்வையில் கூசிப் போகும்.

    கூடாது! இவர்களிடம் சித்ரவதைப் படுவதைவிட, வீட்டுக்குப் போவது மேல்!

    புறப்பட்டு விட்டாள்! தன் டூ வீலரில் ஏறி அமர்ந்தாள்!

    திவ்யா போறியா?

    முதுகில் மோதிய குரலை அலட்சியப் படுத்திவிட்டு, வேகமாக வண்டியை எடுத்தாள்.

    வீட்டுக்கு வந்து விட்டாள்.

    அம்மா கல்லூரிக்குப் போகவில்லை. கார் நின்றது! அப்பா - தன் காரை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

    உள்ளே நுழைந்தாள் திவ்யா!

    அம்மா ருக்மணி போனில் பேசிக் கொண்டிருந்தாள், அப்பாவுடன்!

    ஆமாங்க! அம்பத்தி நாலு! பார்டர்ல தேறியிருக்கா! ஆமாங்க! இதைவிட பெயிலாகியிருக்கலாம். இந்த மார்க்கை வச்சிட்டு என்ன செய்யறது? சரி! நீங்க வீட்டுக்கு வாங்க! பேசிக்கலாம். ஆமாம்! என்னால கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல முடியலை. ரொம்பக் கேவலமா இருக்கு. நான் வெளில தலைகாட்ட முடியாம லீவு போட்டு ஒக்காந்திருக்கேன். நீங்களும் வாங்க!

    வைத்தாள். நிமிர்ந்தாள்!

    திவ்யா எதுவும் பேசாமல் அம்மாவைக் கடந்து நடக்க,

    நில்லுடி!

    திவ்யா நின்றாள்!

    எத்தனை கோச்சிங், ட்யூஷன்னு முட்டிக்கிட்டோம். இன்னும் கொஞ்சம் கவனமா நீ உழைச்சிருந்தா, எழுபதைத் தாண்டியிருந்தா, ஏதாவது செஞ்சிருக்கலாமே? பணத்தைத் தள்ளினாக்கூட அட்மிஷன் கிடைக்காதே?

    திவ்யா எதுவும் பேசலை!

    பேசவும் முடியாது! பேசி லாபமில்லை!

    அப்படியே நின்றாள்!

    அப்பா பன்னீர் உள்ளே நுழைந்தார்!

    என்ன சொல்றா உம்பொண்ணு?

    அவ பெரிசா ஜெயிச்சிருந்தா, உங்க பொண்ணு! இப்ப என் பொண்ணா? ஒருத்தர் தோற்கும் போது யாரும் பக்கத்துல வரமாட்டீங்களே?

    அருகில் வந்தார் பன்னீர்! எதுக்கு ருக்கு நீ புலம்பற?

    புலம்பாம? அவமானமா இருக்குங்க! தாங்கிக்க முடியலை. நான் ஒரு காலேஜ் பேராசிரியர். கிட்டத்தட்ட துணை முதல்வர் பதவி அடுத்த வருஷம். எங்கிட்ட படிச்ச பசங்க இன்னிக்கு பெரிய பதவில. வெளிநாட்ல. இப்படி பேர் சொல்லும்படியா வாழறாங்க. ஆனா எம் பொண்ணு இப்படி அசிங்கமா நிக்கறாளே! சொல்லவே கூசுது. எங்க காலேஜ் அட்டெண்டர் பையன் என்ன மார்க் தெரியுமா? தொண்ணூத்தி ஆறு பர்சன்ட்! அவன் மெடிக்கலுக்கு முயற்சி பண்றான். எங்கிட்ட வந்து ஆலோசனை கேக்கறான். அவன் பள்ளிக்கூடம் தாண்டலை. இன்னிக்கு காலேஜ்ல அவனைச் சுத்திக் கூட்டம் நிக்குது! என்னையும் கேப்பாங்க! என்ன சொல்லுவேன் நான்? நாக்கைப் புடுங்கிட்டு சாகணும். வெளில தலைகாட்ட முடியலை.

    குமுறி விட்டாள்!

    "எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1