Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoppil Thani Maram
Thoppil Thani Maram
Thoppil Thani Maram
Ebook131 pages55 minutes

Thoppil Thani Maram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465452
Thoppil Thani Maram

Read more from Devibala

Related to Thoppil Thani Maram

Related ebooks

Reviews for Thoppil Thani Maram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoppil Thani Maram - Devibala

    14

    1

    கவிதாவை நாளைக்கு பெண் பார்க்க வரப்போகிறார்கள்!

    ஜாதகம் பொருந்தி, போட்டோ பார்த்து, பிடித்து, நேரில் பார்க்க வரப்போகிறார்கள்!

    கவிதா எம்.காம். படித்து, அதற்குமேலும் கொஞ்சம் டிகிரிகளைச் சேர்த்துக் கொண்டு பெரிய நிறுவனம் ஒன்றில் இளநிலை அதிகாரியாக பதவி! வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மாதம் அறுபதாயிரம் வரை சம்பளம். மற்ற எல்லா வசதிகளும்! கார் ஓட்டத் தெரியும். சகலமும் தெரிந்த வசீகரமான பெண் கவிதா!

    அம்மா குடும்பத்தலைவி!

    அப்பா அரசாங்க உத்யோகம் - இன்னும் மூன்று வருடங்கள் சர்வீஸ் உள்ளவர்.

    சொந்த வீடு - ஓரளவுக்கு வசதியான மேல்தட்டு நடுத்தர வர்க்கம்.

    இத்தனை இருந்தும் குடும்பத்தில் ஒரு குழப்பம்.

    இது கவிதாவை நாடி வரும் இரண்டாவது வரன்!

    அப்படியானால் முதல் வரன்?

    எல்லா தகுதிகளும் உள்ள நல்ல குடும்பம் ஒன்று முதல் வரனாக வந்தது!

    பெண் பார்க்க வரும் நாள்!

    அவங்ககிட்ட எல்லா விஷயங்களையும் சொல்லிடலாமா? அப்பா கேட்டார்!

    அதென்ன விஷயம்?

    கவிதாவின் அண்ணன் ராஜாதான் அந்தக் குடும்பத்தில் பிரச்சினை! அவனும் பி.டெக். எம்.பி.ஏ. முடித்து ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பெரிய வேலை.

    அவனுடன் வேலைபார்க்கும் சக என்ஜினியர் மதுவை ராஜா காதலிக்கத் தொடங்கியதுதான் விபரீதம்!

    அவள் வேறு ஜாதிப் பெண்!

    இதே படிப்பு, பெரிய சம்பளம், அழகு என சகல தகுதிகளும் உள்ள பெண்.

    அவர்கள் குடும்பத்தில் முதல் படிப்பாளி! காரணம்- அவளது அப்பா படிக்கவில்லை. தஞ்சாவூர் பக்கம் ஒரு விவசாயி. அம்மாவுக்கு படிப்பில்லை. ஒரு தங்கை. அவள் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

    நட்பாகத் தொடங்கி, ராஜா, மதுவைக் காதலிக்கத் தொடங்கினான்.

    அழகு முதல் அந்தஸ்து வரை எல்லாம் உள்ள பெண் மது!

    இங்கே மகளிர் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வேலை பார்க்கிறாள்.

    பெற்றவர்களும், தங்கையும் தஞ்சையில்!

    முதலில் இந்தக் காதல் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானது.

    காரணம்? ஜாதி!

    இரு குடும்பமும் கடுமையாக எதிர்த்தது!

    பிறகு இங்கே ராஜாவின் அம்மா கெஞ்சியும், அழுதும் பிள்ளை மனதை மாற்றப் பார்த்து எதுவும் நடக்கவில்லை. ஒருகட்டத்தில் பிள்ளை பிரிந்து விடுவானோ என்ற பயம் தோன்ற, கணவர் மனதை மாற்றும் முயற்சியில் இறங்க, கடுமையான போராட்டம் நடந்தது.

    அவர் ஒப்புக்கொள்ளவேயில்லை!

    நமக்கு ஜாதி ஜனம், உறவுகள் நிறைய இருக்கு. ஜாதி கடந்த ஒரு பெண்ணை மருமகளா எப்படி மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்த முடியும்? நம்ம கௌரவம் என்னாறது? நான் இதுக்கு ஒருக்காலும் ஒப்புக்க மாட்டேன்!

    தீர்மானமாக மறுத்து விட்டார்!

    அம்மா நிலைகுலைந்தாள்!

    ஆனால் தங்கை கவிதாதான், அண்ணனுக்கு பக்கபலமாக நின்று விட்டாள்!

    நீங்க சொல்ற எதுவுமே தப்பில்லைப்பா! ஆனா அவனுக்கு மதுவை புடிச்சிருக்கு. அவளுக்கு படிப்பு, உத்யோகம், அழகுனு எல்லாமே இருக்கு! குணமும் நல்ல குணம்.

    உனக்கெப்படி தெரியும்?

    நான் பார்த்துப் பழகியிருக்கேன்!

    நீ எப்படி...?

    அண்ணன் கூட்டிட்டுப் போனான். நீங்க ரெண்டு பேரும் கடுமையா எதிர்க்கறீங்க. அவன விட்ற முடியுமா? அவனோட சந்தோஷம் பெரிசுனு நான் நினைக்கிறேன்!

    பெத்தவங்களை அவன் மதிக்கலை!

    இதுல உங்க மதிப்பு எங்கே சரிஞ்சது? அவனோட விருப்பத்தை நீங்கதான் ஒப்புக்கலை. அதனால உங்க பிள்ளையை நீங்க ரெண்டு பேரும் மதிக்கலை.

    என்ன உளர்ற?

    அப்பா! புரிஞ்சுக்குங்க! காலம் மாறிட்டே வருது. தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கற உரிமைகூட ஒருத்தருக்கு இல்லைனா, அது நியாயமில்லை.

    நம்ம ஜாதி அல்லாத ஒரு பெண் எப்படி நம்ம வீட்ல வந்து வாழ முடியும்?

    இன்ன ஜாதினு நெத்தில எழுதி ஒட்டியிருக்கா! நம்ம வீட்டுக்கு வாழ வந்தா, நம்ம பழக்கங்களை பழகிக்கறா. நம்மோட ஒருத்தியா ஆகப்போறா. இதுல என்ன கஷ்டம்?

    இல்லை! நான் ஒப்புக்க மாட்டேன்!

    ஒப்புக்கலைனா, அவன் வீட்டை விட்டுப் போகட்டும்!

    இங்குதான் அம்மாவின் ரகளை தொடங்கியது!

    என் பிள்ளையை பிரிந்து நான் இருக்க மாட்டேன்!

    அப்ப நீயும் போயிடு!

    பிரச்சினை வலுத்து கவிதா போராடி, கடைசிவரை அவர் சம்மதிக்கவே இல்லை!

    ராஜா நொந்து போனான்!

    கவிதா அவனை முடுக்கி விட்டாள்!

    விளைவு? ஒரு கோயிலில் வைத்துக் கல்யாணம் நடந்தது! உடனே பதிவும் செய்யப்பட்டது!

    இரண்டுபேரும் மணக்கோலத்தில் வந்து நின்றார்கள்!

    அப்பா ஆசீர்வதிக்கவில்லை! அம்மா அழுதாள்!

    ராஜா, கவிதாவிடம் வந்தான்!

    நான் என்ன செய்யட்டும் கவிதா?

    உன் கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல தங்கலாமில்லையா?

    தாராளமா!

    முதல்ல அதைச் செய்! அவகாசம் எடுத்துட்டு வீட்டைப் பாரு! போய்க்கிட்டே இரு!

    மது அருகில் வந்தாள்.

    "எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1