Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Advance Anjali
Advance Anjali
Advance Anjali
Ebook141 pages53 minutes

Advance Anjali

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Advance Anjali

Read more from Rajeshkumar

Related to Advance Anjali

Related ebooks

Related categories

Reviews for Advance Anjali

Rating: 4 out of 5 stars
4/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Advance Anjali - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    நிஜந்தன் தன் மோட்டார் பைக்கை - வீட்டுப் போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைய - ஸ்வேதா அவனுடைய தங்கை - எதிர்பட்டாள்.

    அண்ணா...!

    ம்...

    மாதுரி வந்திருக்கா...

    நிஜந்தன் நெற்றியைச் சுருக்கினான்.

    மாதுரி...?

    அதுக்குள்ளே பேரை மறந்துட்டியாண்ணா...? நீயெல்லாம் ஒரு க்ரைம் ப்ராஞ்ச் ஆபீஸர்...?

    உன்னோட தோழி மாதுரியைச் சொல்றியா...?

    அவளேதான்...

    ஏதோ ஒரு கேஸைப்பத்தி... சொல்றதுக்காக வர்றேன்னு... சொல்லியிருந்தா... இல்லையா...?

    ஏதோ ஒரு கேஸில்லை... அவளோட கணவர்... முரளிதரன்... ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காக... கிராமத்துக்கு போயிருந்தப்போ...

    ஓ... அந்த கேஸா...? பேயோ... ஆவியோ... வந்து அடிச்சுட்டு போயிட்டதா... சொன்ன நிஜந்தன் சிரித்தான்.

    அண்ணா...! சிரிக்காதே... அவ அழுது அழுது நைஞ்சு போன காயிதம் மாதிரி இருக்கா...! அந்த கேஸைப் பத்தி உன்கிட்டே ஏதோ சொல்றதுக்காக வந்திருக்கிறவகிட்டே... மூஞ்சியை கொஞ்சம் அனுசரணையா... வெச்சிக்கிட்டு கேளு... கேட்டுட்டு அவ மனசுக்கு கொஞ்சம் தைரியம் வர்ற மாதிரி பேசு...

    சரி... உத்திரவு...

    நிஜந்தன் தன் அடர்த்தியான கிராப்பை இரண்டு கைகளாலும் கோதிக் கொண்டே - ஸ்வேதாவின் அறைக்குள் நுழைய -

    சேலைத் தலைப்பைப் போர்த்துக் கொண்டு - உட்கார்ந்திருந்த அந்த கைம்பெண் எழுந்து நின்றாள். கவலை தூசு படிந்த முகம். அலம்பினால் அழகாய் இருப்பாள் போல் தோன்றியது. நெற்றியில் பொட்டும், கண்களில் மையும் இல்லாததால் முகத்தின் சோகம் அதீதமாய் தெரிந்தது.

    உதடுகள் மெலிதாய் வணக்கம் - என்று முனக - குச்சியான தன் நீண்ட விரல்களால் கும்பிட்டாள்.

    உட்காருங்க...

    நிஜந்தன் சோபாவைக் காட்டிவிட்டு - எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். ஸ்வேதாவும் - பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

    மாதுரி! உன்னோட கேஸைப் பத்தி என்னோட அண்ணன்கிட்டே ஏற்கெனவே சொல்லியிருக்கேன்... இருந்தாலும் நீயும் ஒருதடவை அந்தக் கேஸைப் பத்தி விளக்கமா சொல்லிடு...

    மாதுரி நிஜந்தனை ஏறிட்டாள். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

    "ஸார்! என்னோட கணவர் முரளிதரன் மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு சரித்திர ஆராய்ச்சிக்காக... கானாடுகாத்தானுக்கு பக்கத்தில் இருக்கிற கல்லல் கிராமத்துக்குப் போனார். அங்கே இருந்த குரங்குதுரை பழைய பங்களாவில் தங்கி - ஆராய்ச்சி பண்ணிட்டிருந்த அவர். திடீர்ன்னு ரத்தம் ரத்தமா கக்கி செத்துப் போனார், பாடியை போஸ்ட் மார்ட்டம் பண்ணின டாக்டர் என் கணவரோட இருதயத்துல இருக்கிற ஒரு முக்கியமான ரத்தக் குழாய் 'பர்ஸ்ட்' ஆனதாலே... ரத்தம் கக்கி செத்துப் போனதா... ரிப்போர்ட் குடுத்திருக்கார். போலீஸாரும் அந்த ரிப்போர்ட்டை வெச்சு - அது ஒரு இயற்கையான மரணம்ங்கிற முடிவுக்கு வந்து கேஸ் பைலை க்ளோஸ் பண்ணிட்டாங்க...

    நிஜந்தன் குறுக்கிட்டான்:

    ஆனா... நீங்க... அதை இயற்கையான மரணமில்லைன்னு சொல்ல வர்றீங்க... இல்லையா...?

    ஆமா...

    எதனால் அந்த முடிவுக்கு வந்தீங்க...?

    என்னோட கணவர் ஆரோக்கியத்தைப் பத்தி எனக்குத் தெரியும்... ஸார். ரத்தக்குழாய் வெடிச்சு சாகிற அளவுக்கு இதய நோயாளியில்லை. எங்க ஃபேமிலி டாக்டர் கிட்டே அவர் எவ்ரி மன்த் செக்கிங் போவார். என்னைக் காட்டிலும் எங்க ஃபேமிலி டாக்டர்க்கு அவரோட ஹெல்த்தைப் பற்றி நல்லாவே தெரியும்... அவர் தீர்மானமா அடிச்சு சொல்றார். இரத்தக் குழாய் வெடிப்புங்கறது இதயநோய் உள்ளவங்களுக்குத்தான் சாத்தியம். எஃகு மாதிரி இருதயம் படைச்ச உங்க கணவர்க்கு அது சாத்தியமே இல்லைன்னு சொல்றார்

    உங்க டாக்டர் யார்...?

    பாலசுப்பிரமணியன்... அவர் ஒரு கார்டியாலஜிஸ்ட் கூட

    உங்க ஹஸ்பெண்ட் முரளிதரனுக்கு என்ன ஏஜ்.?

    இருபத்தெட்டு...

    அவர் என்ன ஆராய்ச்சிக்காக... கல்லல் கிராமத்துக்குப் போனார்?

    அவர் எம்.ஏ. படிச்ச ஹிஸ்டரி புரபஸர்... எம்.ஏ.வுக்கு மேலே ஏதாவது ஒரு துறையில் பி.எச்.டி. பண்ண விரும்பினார். தமிழ்நாட்ல ரொம்ப காலம் தங்கியிருந்த ஆங்கிலேய துரைகளைப் பத்தி - ஆராய்ச்சி செய்ய முடிவு பண்ணி - அது பத்தின விபரங்களை சேகரிக்க ஆரம்பிச்சார். சேகரிச்ச தகவல்கள்படி - ஆங்கிலேய துரைகள் வாழ்ந்த - கிராமங்களுக்கு போய் தங்கி - கட்டுரைகளை ப்ரிப்பேர் பண்ணிட்டு வந்தார். கடைசியா மூணு மாசத்துக்கு - முன்னாடி... கல்லல் கிராமத்துக்குப் போய் - 'குரங்குதுரை' வாழ்ந்த அந்த பழைய பங்களாவில் ஒருவாரம் தங்கியிருந்தப்பத்தான் செத்துப் போயிருக்கார்...

    நிஜந்தனுக்கு லேசாய் சுவாரசியம் தட்டியது.

    "குரங்குதுரைங்கிறது... அங்கே வாழ்ந்த ஆங்கிலேயனோட 'கேலிப் பெயர்' இல்லையா...?

    ஆமா... ஸார்... அந்த ஆங்கிலேய துரையோட முகம் ஒரு குரங்கை பார்க்கிற மாதிரியே இருக்குமாம்... அதனாலத்தான் அந்தப் பகுதி ஜனங்க... அவரை 'குரங்குதுரை'ன்னே கூப்பிட்டு வந்திருக்காங்க...

    உங்க கணவர் ஆராய்ச்சிக்காக தனியா போனாரா...? இல்லே கூட யாரையாவது கூட்டிகிட்டு போனாரா...

    அவர் தனியாத்தான் போனார். அவர்க்குன்னு அஸிஸ்டெண்ட்கள் யாருமில்லை...

    அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் எகானமிகல் வேல்யூ ஏதாவது இருந்ததா.?

    'நீங்க கேக்கிற கேள்வி எனக்கு புரியலை..."

    அதாவது... அந்த ஆராய்ச்சி... ஏதாவது புதையல், நகைகளை தேடற மாதிரியான முயற்சியா...?

    "நோ... நோ... இது ப்யூர்லி ஒரு எஜுகேஷனல் ரிசர்ச்... தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆங்கில துரைகளைப்

    Enjoying the preview?
    Page 1 of 1