Roja Mul Thurogam!
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsEngum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsVivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5
Related to Roja Mul Thurogam!
Related ebooks
Udhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nila! Rating: 5 out of 5 stars5/5Poi Satchi Rating: 0 out of 5 stars0 ratingsMaranam Unnai Mannikkattum Rating: 5 out of 5 stars5/5Karuppu Pournamigal and Villaiyaga Oru Kolai Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Maranangal Rating: 4 out of 5 stars4/5Uyir Meethu Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Puyalum Rating: 0 out of 5 stars0 ratingsPagal Nera Alligal Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Un Vasamadi Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuli Kadal! Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Ethiri Rating: 0 out of 5 stars0 ratingsOru Everst Thavaru Rating: 5 out of 5 stars5/5Oru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsAyokyan Rating: 4 out of 5 stars4/5Kadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5En Nizhalukkum Urakkamillai Rating: 0 out of 5 stars0 ratingsMannikkathey Marakkathey Rating: 0 out of 5 stars0 ratingsOru Sanikkilamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsIndre Kadaisi! Rating: 0 out of 5 stars0 ratingsMaranathai Varainthavan Rating: 5 out of 5 stars5/5Vellai Nirathil Oru Vaanavil and Matravai Neril Rating: 5 out of 5 stars5/5Xerox Kathali Rating: 5 out of 5 stars5/5Hello Dead Morning Rating: 5 out of 5 stars5/5Puthiya Paadal Paadu Rating: 5 out of 5 stars5/5Yetho... Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Roja Mul Thurogam!
0 ratings0 reviews
Book preview
Roja Mul Thurogam! - Rajeshkumar
25
1
அந்த கல்யாண மண்டபத்துக்கு முன்னால் போலீஸ் ஜீப் வந்து நின்றபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
மண்டப வாசலில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் புகைந்து கொண்டிருக்க உள்ளே இருந்த சொற்ப கும்பல் போலீஸ் ஜீப்பைப் பார்த்ததும் சலசலப்பை நிறுத்திக் கொண்டது.
இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களும் பூட்ஸ் சத்தங்களோடு மண்டபத்துக்குள் நுழைய, ஒரு பெரியவர் எதிர்கொண்டார்; கைகூப்பினார்.
வாங்க இன்ஸ்பெக்டர்...!
நீங்க...?
என் பேர் சிகாமணி. பொண்ணுக்கு தாய்மாமன்.
போன்ல பேசி கம்ப்ளைண்ட் கொடுத்தது...?
நான்தான்...
பெரியவர் பேசிக் கொண்டிருக்கும்போதே யாரோ ஒருவர் நாற்காலியை எடுத்துப்போட, இன்ஸ்பெக்டர் சாய்ந்தார். தொப்பி கைக்கு வந்து மடியில் வசதியாய் உட்கார்ந்து கொண்டது.
பெண்ணோட பேர் என்ன?
வைஜெயந்தி.
வயசு?
இருபத்தி மூணு.
படிச்சிருக்கா?
பி.ஏ. பாஸ் பண்ணியிருக்குங்க...
அந்த லெட்டர் எங்கே...?
சிகாமணி தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்தக் கடிதத்தை எடுத்து நீட்டினார்.
இன்ஸ்பெக்டர் வாங்கிப் பிரித்தார். சாய்வான கையெழுத்தில் அந்தப் பக்கம் முழுவதும் வரிகளாய் ஓடியிருந்தன.
அன்புள்ள மாமா அவர்களுக்கு, வைஜெயந்தி எழுதிக் கொண்டது. எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை. கட்டாயமாக எனக்குத் திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தீர்கள். அதன் விளைவு...? இப்போது நான் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. என் வாழ்க்கையை என் இஷ்டப்படி அமைத்துக் கொள்வதற்காகப் போகிறேன். என்னைத் தேட வேண்டாம். அம்மாவையும் அப்பாவையும் சின்ன வயதிலேயே இழந்து விட்ட என்னை வளர்த்துப் படிக்க வைத்த உங்களுடைய அன்பு உள்ளத்துக்கு என் நன்றி!
- இப்படிக்கு
வைஜெயந்தி.
இன்ஸ்பெக்டர் கடிதத்தைப் பார்த்துவிட்டு சிகாமணியிடம் நிமிர்ந்தார். தன் மணிக்கட்டில் இருந்த வாட்சை ஒரு பார்வை பார்த்தபடி கேட்டார்...
இப்ப மணி பன்னிரெண்டரை. வைஜெயந்தி காணாமே போனது எத்தனை மணிக்கு உங்களுக்குத் தெரிந்தது.....?
பதினொன்றே முக்கால் மணியிருக்கும்...
மண்டபத்துல கிட்டத்தட்ட நூறு பேர் சொந்த ஜனம் இருக்கீங்க... இத்தனை பேரோட பார்வையிலும் படாமே வைஜெயந்தி எப்படி மண்டபத்தை விட்டு வெளியே போயிருக்க முடியும்?
அவ சாமர்த்தியமா ஒரு காரியம் பண்ணித்தான் மண்டபத்தைவிட்டு வெளியே போயிருக்கா இன்ஸ்பெக்டர்.
என்ன காரியம்...?
பதினோரு மணி சுமார்க்கு மண்டபத்துல திடீர்ன்னு கரண்ட் போயிடுச்சு. இந்த ஏரியாவில் அடிக்கடி கரண்ட் போறதும் கொஞ்ச நேரத்துல வர்றதும் சகஜம். கரண்ட் வர்றதுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தோம். அந்த நேரத்துலதான் வைஜெயந்தி டாய்லட் போகணும்னு கூட இருக்கிற பெண்கள்கிட்ட சொல்லிட்டு மண்டபத்துக்குப் பின்னாடி பக்கம் இருக்கிற டாய்லட் அறைக்குப் போயிருக்கா. போனவ அரைமணி நேரமாகியும் வரலை. ஒரு பெண்ணை அனுப்பி டாய்லட்டுக்குள்ள பார்க்கச் சொன்னோம். வைஜெயந்தி டாய்லட்டுக்கே போகலைன்னு அப்பத்தான் தெரிஞ்சுது. அதுக்கப் புறம்தான் இன்னொரு விஷயமும் புரிஞ்சுது...
என்ன...?
மண்டபத்துக்குள்ளே கரண்ட் தானாக போகலை. யாரோ ஃப்யூஸ் காரியரை மெயின் ஸ்விட்ச் போர்டிலிருந்து உருவி எடுத்திருக்காங்க...
அது யார்ன்னு தெரிஞ்சுதா?
தெரியலை...
வைஜெயந்திக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு அவ எழுதி வெச்சுட்டுப் போயிருக்கிற லெட்டரிலிருந்து தெரியுது... இஷ்டமில்லாத கல்யாணத்தை ஏன் பண்றீங்க...?
இப்ப கல்யாணம் வேண்டாம்ன்னு எல்லாப் பெண்களும் சொல்றதுதானேன்னு நினைச்சு கல்யாண ஏற்பாடுகளை மளமளன்னு பண்ணிட்டேன்.
இங்கே... மாப்பிள்ளை யாரு?
பக்கத்து ரூம்லதான் இருக்கார். பாவம் இடிஞ்சு போயிட்டார்!
சிகாமணி இன்ஸ்பெக்டரைக் கூட்டிக்கொண்டு பக்கத்து அறைக்குப் போக, கட்டிலில் சாய்ந்து கண்களை மூடியிருந்த அந்த நபர் எழுந்து உட்கார்ந்தார்.
கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது இருக்கலாம். பாதி வழுக்கையான தலை. பட்டு வேஷ்டியும் ஷர்ட்டும் ஒரு மாப்பிள்ளைக்குரிய தோற்றத்தை வேண்டா வெறுப்பாக கொடுத்திருந்தன..
இன்ஸ்பெக்டரின் கண்களில் அதிர்ச்சி.
இவராமாப்பிள்ளை...?
சிகாமணி தயக்கமாய் தலையாட்டினார்.
ஆ... ஆமா... ஸார்...
இன்ஸ்பெக்டர் கோபமானார்.
என்னய்யா... ஆமா...? மாப்பிள்ளைக்கு வயசு அதிகமாயிருக்கும் போலிருக்கே...?
ரொம்ப அதிகமில்லை ஸார்... நாற்பத்திரெண்டுதான்
.
ரெண்டாந்தாரமா...?
ஆமா ஸார்...
இன்ஸ்பெக்டர் எரிச்சலானார்.
இப்படியொரு மாப்பிள்ளையை ஏற்பாடு பண்ணினா எந்தப் பொண்ணுதான் ஒடிப்போக மாட்டா...? வைஜெயந்தி ஓடிப்போனது நியாயம்தான். அவ எங்கேயாவது போய் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமா இருக்கட்டும்...
ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்...
மாப்பிள்ளை கையமர்த்திவிட்டு புன்னகைத்தான்; கேட்டான்.
நான் யார்ன்னு உங்களுக்குத் தெரியுதா?
இன்ஸ்பெக்டர் தலையாட்டினார்.
தெரியலையே...?
முகர்ஜி க்ரூப்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க...
அதைக் கேள்விப்படாமே இருக்க முடியுமா...? இண்டஸ்ட்ரியல் ஃபீல்டுல அது பிரசித்தமான பேராச்சே...
அந்த க்ரூப்புக்கு நான் ஜி.எம். ஜெனரல் மேனேஜர். பெயர் யதுநந்தன்.
சொன்னவன் தன் ப்ரீப்கேஸைத் திறந்து வெண்ணெயால் செய்த மாதிரி இருந்த விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நீட்டினான்.
அதை அவர் வாங்கிப் பார்த்துவிட்டு குரலில் கணிசமாய் மரியாதையையும் பணிவையும் கலந்து கொண்டார்.
ஸார்... பெரிய பதவியில் இருக்கிற நீங்களே இப்படி ஒரு பொண்ணோட விருப்பத்துக்கு எதிரா...
யதுநந்தன் சிரித்தான். யூ... ஸீ... மிஸ்டர் இன்ஸ்பெக்டர். நான் ஒண்ணும் வயசான கிழவன் இல்லை. அயாம் ஒன்லி ஃபார்ட்டிடூ... ஆரோக்கியமா இருக்கேன். நான் நினைச்சிருந்தா ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து என்னோட ஸ்டேட்டஸுக்குத் தகுந்த மாதிரி பெண் எடுத்திருப்பேன். பட்... எனக்குப் புடிக்கலை. என்னோட கம்பெனிக்கு ஒரு இண்ட்டர்வ்யூவுக்காக வந்த வைஜெயந்தியைப் பார்த்தேன், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். முறைப்படி அவளோட தாய் மாமன்கிட்ட வந்து பெண் கேட்டேன்.
யூ மே பி கரெக்ட் ஸார்... பட், வைஜெயந்திக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையே...?
சிகாமணி குறுக்கிட்டார். அவளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது. யாரோ அவ மனசைக் கலைச்சிருக்காங்க இன்ஸ்பெக்டர்... வைஜெயந்திக்கு இப்பேர்ப்பட்ட இடம் கிடைக்கக் கொடுத்து வெச்சிருக்கணும். ரெண்டாந்தாரமா ஒருத்தர்க்கு வாழ்க்கைப்படறது ஒண்ணும் பாவமான காரியம் இல்லை.
இருந்தாலும்...
இன்ஸ்பெக்டர் குரலை இழுத்துக் கொண்டிருக்கும் போதே யதுநந்தன் அறைக் கதவைச் சாத்திவிட்டு பக்கத்தில் வந்தான்.
இன்ஸ்பெக்டர்...! ஐ வான்ட் ஹர். நாளைக்குக் காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளே முகூர்த்தம். அந்த முகூர்த்த நேரத்துக்குள்ளே நான் அவ கழுத்துல தாலி கட்டியாகணும்! வைஜெயந்தி இந்த மெட்ராஸ் எல்லையை விட்டு அதுக்குள்ளே எங்கேயும் போயிருக்க முடியாது. நீங்க கொஞ்சம் விகரஸா ஸ்டெப்ஸ் எடுத்தா... அவளை மடக்கிடலாம். இன்னும் ஆறு மணி நேரம் டயம் இருக்கு. இந்த அவகாசத்துக்குள்ளே நீங்க மட்டும் வைஜெயந்தியை கண்டுபிடிச்சு என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டா... உங்களுக்கு அந்த நிமிஷமே அஞ்சுலட்ச ரூபாய் தாறேன்...
இன்ஸ்பெக்டர் அயர்ந்தார். அ... அஞ்சு லட்சம்...!
எஸ்... இது உங்களுக்கும் எனக்கும் இருக்கிற டீல். இப்பவே நீங்க அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கலாம்
சொன்ன யதுநந்தன், மறுபடியும் ப்ரீப் கேஸைத் திறந்து உள்ளே மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை எடுத்து இன்ஸ்பெக்டரின் கையில் திணித்தான்.
இன்ஸ்பெக்டரின் சிரிப்பு 70 எம்.எம். திரையாய் விரிந்தது. பணத்தை வாங்கி காக்கிச்சட்டையின் மார்புப் பகுதிக்குள் நுழைத்தபடி சொன்னார்:
யூ டோன்ட் வொர்ரி மிஸ்டர் யதுநந்தன்! இப்பவே போலீஸ் கண்ட்ரோல் ரூம் மூலமா தமிழ்நாட்டு எல்லையில் இருக்கிற எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் செக் போஸ்ட்களுக்கும் தகவல் கொடுத்துடறேன். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஈவன் ஏர்போர்ட்டுக்குக்கூட மெஸேஜை கன்வே பண்ணிடறேன். வைஜெயந்தியோட போட்டோ இருக்கா...?
இருக்கு...
குடுங்க... அப்படியே அடையாளங்களையும் சொல்லுங்க. காலையில ஆறு மணிக்குள்ளே மடக்கிக் கொண்டாந்துரலாம்.
முடியுமா...?
முடியுமாவா...? இந்த இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் வலையை வீசினா எந்த மீனும் மாட்டியாகணும். இது போலிஸோட விதியில் புதுவிதி.
சிகாமணி வைஜெயந்தியின் நான்கைந்து போட்டோக்களைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு கண்களை வியப்பில் விரித்தார்.
பொண்ணு ரொம்பவும் அழகாயிருக்காங்களே! போட்டோவைப் பார்க்கும்போதே ரோஜா நிறம்ன்னு தெரியுது. சுருட்டை முடி, பெரிய கண்கள், சிரிக்கும்போது கன்னத்துல விழற குழி. எல்லாமே நோட்டபிள் ஐடென்டிஃபிகேஷன்ஸ். ரொம்ப ஈஸியா மடக்கிடலாம்.
ப்ளீஸ்... டூ இட் இன்ஸ்பெக்டர்!
ஐந்து லட்ச ரூபாய் சந்தோஷத்தில் இன்ஸ்பெக்டர் நகர்ந்தார். சிகாமணியும் அவரைத் தொடர்ந்து நடக்க – யதுநந்தன் மறுபடியும் கட்டிலுக்கு வந்து சாய்ந்தான்.
கண்களை மூடி பத்து நிமிஷங்களைப் போக்கியிருந்த போது அறைக்குள் நடைச் சத்தம் கேட்டது. கண்களை மலர்த்தினான். எதிரே - அவனுடைய குடும்ப டாக்டர் மேத்தா நின்றிருந்தார். ஐம்பது வயது மேத்தா வடக்கத்தி பாணியில் பைஜாமாவும் வேஷ்டியும் அணிந்திருந்தார். யதுநந்தனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தப்படி பேசினார்.
விஷயம் கேள்விப்பட்டு வர்றேன். போலீஸ் பொண்ணைக் கண்டுபிடிக்குமா யது...?
ஷ்யூர்...! நான் தர்றதா சொல்லியிருக்கிற அஞ்சுலட்ச ரூபாய் நிச்சயமா வேலை செய்யும்...
யது...!
டாக்டர் வெகுவாய் குரலைத் தாழ்த்திக் கொண்டார்.
என்ன டாக்டர்...?
"உன்னோட கல்யாண விஷயத்துல போலீஸ் நுழைய