Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Xerox Kathali
Xerox Kathali
Xerox Kathali
Ebook131 pages45 minutes

Xerox Kathali

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Xerox Kathali

Read more from Rajeshkumar

Related to Xerox Kathali

Related ebooks

Related categories

Reviews for Xerox Kathali

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Xerox Kathali - Rajeshkumar

    14

    1

    காதல் மொழி:1

    டீன் ஏஜ் வயதில் ஹார்மோன்கள் செய்யும் கலாட்டாவின் பெயர்தான் காதல். கல்லூரியில் படிக்கும் 99.9 % மாணவ மாணவியர்க்கு வரப்பார்க்கும் ஒரு கட்டாய வியாதி. வந்துவிட்டால் பால் புளிக்கும். தேன் கசக்கும்.

    ஊட்டி.

    புல்கள் அந்தக் காலை பத்து மணி வேளையிலும் தலைகளில் பனிக்கிரீடங்கள் தரித்து சூரியனின் பயமுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஆட்சி செய்து கொண்டிருக்க, தூரத்து மலை உச்சி சிகரங்களில் உஜாலா வெள்ளை மேகங்கள் ஸ்லோமோஷனில் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தன.

    பொட்டானிக்கல் கார்டனில் இருந்தார்கள், ஜெயக்குமாரும் சிந்துவும்.

    நீங்க நினைப்பது போல் அவர்கள் இரண்டு பேரும் காதலர்கள்தான்.

    சிந்து: வயது 21. பி.எஸ்.ஸி. தாவரவியல் பட்டதாரி அழகாக இருந்தாள். கண்களுக்கும் கீழ் உதட்டுக்கும் போனஸ் மார்க் கொடுக்கலாம். எந்த உடைக்கும் சட்டென்று பொருந்திப்போகிற அளவுக்கு வாகான உடம்பு. ஜெயக்குமாரை கடந்த இரண்டு வருஷமாக காதலித்துக் கொண்டிருக்கும் சிந்துவுக்கு சமீபத்தில் கிடைத்த சந்தோஷமான உத்யோகம் வானத்தில் பறப்பது. மெட்ராஸ் சிங்கப்பூர் ஃப்ளைட்டில் நமஸ்கார் சொல்லி பட்டுப்புடவை கட்டிக்கொண்டு ரெடிமேட் புன்னகை புரியும் ஏர்ஹோஸ்டல். நான்கு இலக்க ஆரோக்கியமான சம்பளம்.

    இனி ஜெயக்குமார். வயது 27. எம்.ஏ. பட்டதாரி. ஒரு ரெப்யூட்டட் கம்பெனியில் ஸேல்ஸ் எக்ஸ்க்யூடிவ் போஸ்ட். உச்சபட்ச நான்கு இலக்க சம்பளம். சிந்துவைக் காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து கவிதை எழுத கற்றுக்கொண்டவன். (உதாரணத்துக்கு ஒரு கவிதை: கண்ணே! உன் கண்ணிமைகளை அப்படி படபடக்க வைக்காதே. என் இதயம் ஒரு சூறாவளியில் மாட்டிக் கொள்கிறது)

    இரண்டு பேரும் பொட்டானிகல் கார்டனின் புல்தரையில் மெதுவாக நடைபோட்டுக் கொண்டிருக்க, சுற்றிலும் டூரிஸ்ட் கூட்டம் உற்சாகக் கத்தல்களில் இருந்தது.

    ஜெய்... சிந்து கூப்பிட்டாள்.

    ம்...

    நாம ஊட்டிக்கு வந்து ரெண்டு நாளாகுது.

    சரி... அதுக்கென்ன இப்போ...?

    இந்த ரெண்டு நாள்ல... அதாவது மணிக்கணக்கு பார்த்தா இந்த நாற்பத்தெட்டு மணிநேரத்துல ஒரு நிமிஷம்கூட...

    ஒரு நிமிஷம் கூட...?

    நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம பேசவே இல்லை...

    சரி... இப்ப பேசிடுவோம்...

    இப்படி உட்கார்ந்து பேசலாமா?

    ம்...

    பனி ஈரத்தோடு இருந்த புல்வெளியில் பக்கம் பக்கமாய் தோள்களை உரசிக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

    அரை நிமிஷ மௌனத்துக்குப் பிறகு சிந்து கேட்டாள்.

    எப்ப நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாம்?

    நீ எப்ப சொன்னாலும் நான் ரெடி. இதே பொட்டானிக்கல் கார்டன் புல்தரையில் இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு கல்யாணத்தை வெச்சுக்கிட்டாலும் அடியேனுக்கு பரிபூர்ண சம்மதமே...!

    சிந்து ஜெயகுமாரின் தலையில் தட்டினாள். ஜெய் பீ சீரியஸ்... இந்த விளையாட்டு பேச்செல்லாம் வேண்டாம். நாம இந்த ஊட்டியைவிட்டு கிளம்பறதுக்கு முந்தி நம்ம மேரேஜ் டேட்டை ஃபிக்ஸ் பண்ணியாகணும்... எங்கப்பா சிகாகோவிலிருந்து இன்னும் ரெண்டு நாளைக்குள்ளே மெட்ராஸுக்கு திரும்பிடுவார். அவர்கிட்ட நான் தேதியைச் சொல்லியாகணும்...

    ஜெய் சிரித்தான். சிந்து...! நம்ம கல்யாணத்தை நீ எந்த தேதியில் ஃபிக்ஸ் பண்ணினாலும் எனக்கு ஓகே தான். உனக்காவது உன்னோட ஸைடில் அப்பா இருக்கார். எனக்கு என்னோட ஸைடில் உறவுன்னு சொல்லிக்க யாரும் இல்லை. எனக்கு இந்த உலகத்துல இருக்கிற ஒரே உறவு நீ மட்டும்தான். இப்போதைக்கு காதலிக்கிற உறவு. நாளைக்கு தாலி கட்டியதும் மனைவி என்கிற உறவு.

    சரி...! நான் ஒரு தேதியைச் சொல்லட்டுமா?

    சொல்லு...

    வர்ற வெள்ளிக்கிழமை இருபத்திமூணாம் தேதி.

    உங்கப்பாகிட்ட நீ கன்சல்ட் பண்ண வேண்டாமா...?

    அவர்தான் ஏற்கனவே பச்சைக் கொடி காட்டிட்டாரே...!

    இருந்தாலும் முறைப்படி கன்சல்ட் பண்ண வேண்டாமா...?

    சிந்து சிரித்தாள்.

    என்னோட அப்பாவைப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே... அவர் ஒரு ஜோவியல் டைப். எனக்கு வயசு பதினெட்டானதுமே கூப்பிட்டு இதோ பாரம்மா! இன்னியிலிருந்து நீ மேஜர். ஒரு ஃப்ரீபேர்ட். நான் வருஷத்துல ஆராய்ச்சி, செமினார் அது இதுன்னு உலகம் பூராவும் சுத்திட்டிருப்பேன். ஸோ உன்னை கவனிக்கவும் உனக்கொரு நல்ல வரனாய் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கவும் எனக்கு அவகாசம் கிடையாது. நீ யாரையாவது காதலிச்சா அந்த காதலுக்கு குறுக்கே நிக்கிற குறுகிய எண்ணம் எனக்குக் கிடையாது. உனக்கு மனசுக்கு பிடிச்சிருந்தா நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனா நான் ஊரில் இருக்கிற நேரமா பார்த்து கல்யாண தேதியை வெச்சுக்கோ'ன்னு சொன்னார். இதைவிட எனக்கு ஒரு நல்ல அப்பா, உங்களுக்கு ஒரு நல்ல மாமனார் கிடைப்பாரா என்ன...?

    சரி... வர்ற வெள்ளிக்கிழமை நம்ம கல்யாணத்தை வெச்சுக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பட் ஒரே ஒரு கண்டிஷன்...

    என்ன...?

    "நம்ம சாந்தி முகூர்த்தத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1