Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hydrogen Pookkal
Hydrogen Pookkal
Hydrogen Pookkal
Ebook145 pages38 minutes

Hydrogen Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Hydrogen Pookkal

Read more from Rajeshkumar

Related to Hydrogen Pookkal

Related ebooks

Related categories

Reviews for Hydrogen Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hydrogen Pookkal - Rajeshkumar

    19

    1

    கேள்வி: இந்தியா பூமிக்கு அடியில் மூன்று ஹைட்ரஜன் அணுகுண்டுகளை வெற்றிகரமாக வெடிக்க வைத்து ஒரு வல்லரசு நாடாக மாறியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனின் இருதயத்தையும் குளிர்ச்சி அடைய வைக்கிற செய்தி. பட், ஒரு அணுகுண்டு வெடித்து சிதறும் போது எவ்வளவு உஷ்ணம் வெளிப்படுகிறது தெரியுமோ?

    பதில்: 10 லட்சம் சென்டிகிரேட் டிகிரி. நாற்பது சென்டி கிரேட் டிகிரி வெய்யிலுக்கே தவித்துப் போகிற மனிதகுலம் இந்த 10 லட்சம் சென்டிகிரேட் உஷ்ணத்தை எதிர் கொள்ளும் போது நிலைமை எப்படியிருக்கும்...? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பயம் வரும். இந்த அணுகுண்டு வேண்டுமா என்கிற நினைப்பு வரும்,

    பரங்கிமலை கண்டோன்மெண்ட்டை நோக்கி அந்த க்ரே நிற அர்மடாவேன் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தது.

    தலைக்கு மேல் பதினோரு மணி முற்பகல் வெய்யில் காற்று அமிலமாய் வீசியது.

    வேன் போய்க் கொண்டிருந்த சாலையின் இரண்டு பக்கத்திலும் புளியமரங்கள் கைகோர்த்து வர, தொலைவில் மலைத்தொடர்கள் உஜாலாவின் நீலம் போட்ட மாதிரி வெள்ளை நிற மேகங்களோடு துண்டு துண்டாய் தெரிந்தது.

    வேனின் பின்புறம் டி.எஸ்.பி. சுப்ரபாதம் யூனிஃபார்மோடு சாய்ந்து இருந்தார். காதில் மினி வயர்லெஸ் போன் ஒட்டியிருந்தது. மழை பெய்கிற மாதிரியான இரைச்சலுக்கு நடுவே டிபார்ட்மெண்ட்டுக்கே உரிய சம்பாஷணை,

    நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?

    ஸாரி ஸார்... இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வர வில்லை.

    சுப்ரபாதம் வயர்லஸ்ஸில் இரைந்தார்.

    செண்பகபுரம் ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் நடந்து கொண்டிருக்கிற ஒரு இனக் கலவரத்தை அடக்க ஒரு மணி நேரம் போதும். இரண்டு நாளாய் அங்கே முகாம் போட்டுக்கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...? வேளா வேளைக்கு சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா...?

    வயர்லஸ் மறுமுனை பவ்யமாய் பதில் சொல்லியது.

    ஸார்... நீங்கள் சொன்னது போல் அந்த செண்பகபுரம் ஒரு சிறிய கிராமம்தான். ஆனால் ஜனத்தொகை அதிகம். போதாத குறைக்கு வெளியூரிலிருந்து இரண்டு கோஷ்டிகளின் ஜாதி மக்களும் வந்து விட்டார்கள். போலீஸ் கலவரத்தை அடக்க அதிகார பிரயோகம் செய்யும்போது இரண்டு கோஷ்டிகளுமே ஒன்று சேர்ந்து கொண்டு போலீஸைத் தாக்குகிறார்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது என்பது கலெக்டரின் உத்தரவு. துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுத்து இருந்தால் கலவரத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கலாம் ஸார்...

    வேண்டாம்... துப்பாக்கி சூடு மட்டும் வேண்டவே வேண்டாம்... அது கலெக்டரின் உத்தரவு மட்டும் இல்லை. முதலமைச்சரின் பிரத்யேக உத்தரவும் கூட. தடியடிப் பிரயோகம் செய்தே நிலைமையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

    எஸ் ஸார்...

    நான் இப்போது ஸ்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன். இதுவரைக்கும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்...?

    முப்பத்தியேழு பேர் ஸார்...

    பழைய குற்றவாளிகள் யாராவது இப்போது கைது செய்யப்பட்டவர்களில் இருக்கிறார்களா?

    ஆறு பேர் இருக்கிறார்கள் ஸார்...

    அவர்களை மட்டும் தனியே ஐஸோலேட் செய்து வையுங்கள்.

    எஸ்... ஸார்...

    டி.எஸ்.பி. சுப்ரபாதம் வயர்லெஸ்ஸை மெளனமாக்கிவிட்டு சீட்டுக்கு சாய்ந்து உட்கார்ந்தார். வேன் டிரைவர் வேனை ஓட்டியபடியே டி.எஸ்.பி.யை திரும்பிப் பார்த்தார்.

    "ஸார் இந்த செண்பகபுரம் கிராமத்துல ரெண்டு மூணு தடவை இப்படி இனக் கலவரம் ஏற்படறதும், அந்தக் கலவரத்துல அம்பது அறுபது பேர் சாகறதும் வாடிக்கையாப் போச்சு. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி; இந்தக் கிராமத்து இனக்கலவரம் பிரசித்தம். கலவரம் நடந்து முடிஞ்ச பின்னாடி செத்தவங்க குடும்பத்துக்கு நிதி உதவி தர்றதுக்காக மந்திரிகள் வர்றதும், ஆறுதல் வார்த்தைகள் சொல்லிட்டுப் போறதும் வழக்கமாப் போச்சு. அங்கே இனக்கலவரம் நடக்காமே இருக்கணும்ன்னா ஸார் ஒரே ஒரு வழிதான் இருக்கு அந்த வழி அரசாங்கத்துக்கும் தெரியும். ஆனா,

    எந்த அரசாங்கமும் அதைச் செய்ய முன் வர்றதில்லை."

    சுப்ரபாதம் நிமிர்ந்தார்.

    நீ என்ன சொல்றே சேது...?

    ஸார்... அந்தக் கிராமத்துல தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த குடியிருப்புகள் கொண்ட ஒரு பகுதி இருக்கு. அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுகிற கழிவுத் தண்ணீர் மேட்டுக்குடி ஜனங்க வசிக்கிற குடியிருப்பைக் க்ராஸ் பண்ணிப் போகுது. வெயில்காலத்துல எந்தப் பிரச்னையும் இருக்காது ஸார். ஆனா மழைக்காலத்துல மழைத் தண்ணியோடு சேர்ந்து கழிவுத் தண்ணியும் தெருவுக்கு வந்துடும். கலவரத்துக்கு இந்த சின்னப் பிரச்னைதான் காரணம். அரசாங்கம் நினைச்சா இந்தப் பிரசனையை வாரம், பத்துநாளைக்குள்ளே சால்வ் பண்ணிடலாம்.

    அதை ஏன் பண்ண மாட்டேங்கறாங்க...?

    அதான் புரியலை ஸார்.

    இதில் ஏதோ அரசியல் இருக்குன்னு நினைக்கிறேன்

    சுப்ரபாதம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வயர்லெஸ் சிவப்பு கண்ணோடு உயிர் பெற்றது. மைக்ரோ ரிஸீவரை எடுத்துக் காதுக்கு கொடுத்தார்.

    ரிஸீவரில் சில குழப்பமான சத்தங்கள். ப்ரீக்வென்ஸி அலைகள் மோதிக் கொள்ளும் மழை பெய்கிற மாதிரி இரைச்சல்.

    சுப்ரபாதம் குரல் கொடுத்தார்.

    எஸ்...

    மறுமுனையில் இரைச்சல் நீடித்தது.

    ஹலோ...

    இரைச்சல் அதிகமாயிற்று. அடங்குவதற்காக சில விநாடிகள் காத்திருந்தார்.

    முழுசாய் ஒரு நிமிஷம் கரைந்ததும் இரைச்சல் நின்று போயிருக்க, இரண்டு ஆண்குரல்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1