Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kurithuvaithu Kol!
Kurithuvaithu Kol!
Kurithuvaithu Kol!
Ebook141 pages50 minutes

Kurithuvaithu Kol!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kurithuvaithu Kol!

Read more from Rajeshkumar

Related to Kurithuvaithu Kol!

Related ebooks

Related categories

Reviews for Kurithuvaithu Kol!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kurithuvaithu Kol! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பதரை மணியளவில் தமிழ்நாட்டின் எல்லா வீட்டு டீ.வி. திரைகளிலும் நடிகை சாருபாலாவின் அழகான 22 வயது முகம் க்ளோஸப்பில் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரத்தோடு புன்னகைத்துக் கொண்டிருந்தது.

    நேரடி ஒளிபரப்பு.

    ஆண் ரசிகர்களும் பெண் ரசிகைகளும் டெலிபோனில் சரமாரியாய், கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    நான் மயிலாப்பூரிலிருந்து ராஜலட்சமி பேசறேங்க.

    சொல்லுங்க ராஜலட்சுமி...! உங்க கேள்வி என்ன?

    நான் இப்போ கேட்கப்போகிற கேள்வி உங்களுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுக்கலாம்.

    "பரவாயில்ல... நீங்க எந்த கேள்வியை வேணும்ன்னாலும் கேட்கலாம்.

    அந்த ராஜலட்சுமி தயக்கத்தோடு கேள்வியைக் கேட்டாள். சினிமாவில் நடிக்க வரும் ஒரு பெண் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்டு அந்த துறையில் நீடித்து இருக்க முடியுமா...?

    சாருபாலா சிரித்தாள்.

    ஏன் முடியாது...! தாராளமாய் கற்போடு இருக்க முடியும்... என்னையே உதாரணத்துக்கு எடுத்துக்குங்க. நான் இந்த சினிமா உலகத்துல பிரவேசம் பண்ணின நாளிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் கற்போடுதான் இருக்கேன். இதை என்னால தைரியமா சொல்ல முடியும்... இந்த சினிமா உலகத்துல நல்லவங்களும் இருக்காங்க. கெட்டவங்களும் இருக்காங்க. - நம்மகிட்ட திறமையிருந்தா நாம யார்க்கும் பயப்பட வேண்டியது இல்லை. என்கிட்டேயும் சிலர் வாலாட்டிப் பார்த்து இருக்காங்க... அந்த வாலையெல்லாம் ஒட்ட வெட்டியிருக்கேன்...! பொதுவா சினிமா ஃபீல்டில் இருக்கிறவங்க எல்லாருமே காமாந்தகாரர்கள் என்கிற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கு. அப்படியொரு எண்ணம் இருக்கிறது தப்பு. சில பேர் பண்ற தப்பால இண்டஸ்ட்ரியில் இருக்கிற அத்தனை பேர்க்கும் கெட்ட பேர்.

    சாருபாலா பதில் சொல்லி முடித்ததும் - டெலிபோனில் இன்னொரு ஆண் குரல் கேட்டது.

    ஹலோ... சாரு...! நான் கோயமுத்தூரிலிருந்து சுவாமிநாதன் பேசறேன். உங்க நடிப்புன்னா எனக்கு உயிர். நீங்க நடிச்ச எல்லாப்படத்தையும் குறைந்தபட்சம் நாலைஞ்சு தடவையாவது பார்த்துடுவேன்.

    அப்படியா... ரொம்ப சந்தோஷங்க...! நீங்க என்ன கேள்வி கேட்க விரும்பறீங்க...?

    கேள்வி இதுதான் சாரு...! நீங்க நடிச்ச படங்களிலேயே உங்களை ரொம்பவும் பாதித்த படம் எது?

    பூஜைக்கு வராத பூக்கள்' என்கிற படம்

    அந்தப்படம் உங்களை எந்த வகையில் பாதிச்சது?

    அந்தப் படத்தோட ப்ரொட்யூஸர் எனக்கு பேசினபடி சம்பளத்தைக் கொடுக்காமே ஏமாத்திட்டார்...

    ஹலோ - சாரு... நான் கம்பத்திலிருந்து ஜேஸ்மின் ரமேஷ் பேசறேன்...!

    சொல்லுங்க ரமேஷ்...!

    உங்களுக்கு கல்யாணம் எப்போ...?

    உங்களுக்கெல்லாம் தெரியாமல் நடக்காது

    காதல் கல்யாணமாக இருக்குமா?

    ஸாரி...! எனக்கு அப்பா அம்மா இருக்காங்க! என்னைப் பெத்து வளர்த்தவங்கதான்... என்னோட கல்யாணத்தையும் முடிவு பண்ணுவாங்க... நான் யாரையம் காதலிக்க மாட்டேன். காதலிக்கிற எண்ணமும் எனக்கு இல்லை...!

    சரி... காதலைப் பத்தி உங்க அபிப்பிராயம் என்ன?

    அது ஒரு அஹிம்சையான ஹிம்சை...! சில விநாடி சிரிப்புக்குப் பின் - டெலிபோனில் இன்னொரு குரல் கேட்டது.

    ஹலோ சாருபாலா...! நான் திருப்பூரிலிருந்து சிவா பேசறேன். சினிமா உலகம் இப்போது எப்படி இருக்கிறது?

    டீ. வி. சானல்களைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறது...!

    உங்களோட உண்மையான வயது என்ன?

    1979-ல் பிறந்தேன். சாவகாசமாய் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

    உங்களுக்கும் ஹீரோ உதய்க்கும் ஏதோ தகராறாமே...! உண்மையா...?

    உண்மைதான்...! காதல் காட்சிகளில் நடிக்கும்போது கொஞ்சம் எல்லை மீறினார். நாசூக்காய் சொல்லிப் பார்த்தேன். கண்டித்தும் பார்த்தேன். கேட்கவில்லை...

    அப்புறம்...!

    கொடுக்கவேண்டிய மரியாதையைக் கொடுத்தேன்

    என்ன மரியாதை...!

    வெளியே சொல்வது நாகரீகம் இல்லை. அது என்ன மரியாதை என்று நடிகர் உதய்க்கு மட்டும் தெரிந்தால் போதும்

    சில விநாடிகள் விளம்பர இடைவேளைக்குப் பின் டெலிபோன் பேட்டி தொடர்ந்தது.

    வணக்கம் சாருபாலா...! சினிமா உலகில் நீங்க ரொம்பவும் துணிச்சலானவங்கன்னு பேர் எடுத்து இருக்கீங்க. இந்த துணிச்சல் உங்களுக்கு பகையைத் தேடிக் கொடுக்குமே! வரக்கூடிய எதிர்ப்புக்களை சமாளிக்க உங்களால் முடியுமா...?

    சாருபாலா சிரித்தாள்.

    என்னோட மனசுக்கு சரின்னு பட்டதைச் சொல்றேன். செய்யறேன். நான் யார்க்கும் எந்த கெடுதலையும் செய்யலையே!

    நீங்க அரசியலுக்கு வருவீங்களா...?

    மாட்டேன்...

    ஏன்...?

    அரசியல் போன வருஷம் வரைக்கும் ஒரு சாக்கடையா இருந்தது. இப்போ ஒரு செப்டிக் டேங்கா மாறிடுச்சு... மூளை இருக்கிறவங்க யாராவது செப்டிக் டேங்க்குள்ளே இறங்குவாங்களா...?

    டெலிபோனில் சிரிப்பொலி கேட்டுக் கொண்டு இருக்கும்போதே டீ.வி. கேமரா சாருபாலாவின் முகத்துக்கு க்ளோஸப்பாய் வந்து ஃப்ரீஸாகி கீழே 'தொடரும்' என்ற வார்த்தை - ஸ்லோமோஷனில் ஜனித்தது. பின் சாருபாலாவின் முகம் மறைந்து டீ.வி. காம்பியரின் முகம். தெரிந்தது.

    வணக்கம் நேயர்களே! நடிகை சாருபாலாவின் துணிச்சலான பேட்டி அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் நேரடி ஒளிபரப்பாக இருக்கும். கேள்விகளை கேட்க விரும்பும் நேயர்கள் முன்கூட்டியே தங்களுடைய பெயர்களையும் டெலிபோன் எண்களையும் டீ.வி. நிலையத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். கேள்விகள் பிறர் மனம் புண்படும்படி இருக்கக்

    Enjoying the preview?
    Page 1 of 1