Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muththam Thedum Mugam!
Muththam Thedum Mugam!
Muththam Thedum Mugam!
Ebook278 pages1 hour

Muththam Thedum Mugam!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Muththam Thedum Mugam!

Read more from Rajeshkumar

Related to Muththam Thedum Mugam!

Related ebooks

Related categories

Reviews for Muththam Thedum Mugam!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muththam Thedum Mugam! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் ஜனங்களால் பிதுங்கி வழிந்தது.

    மண்டபத்தின் எல்லாப் பக்க சாலைகளிலும் வெளி நாட்டுக் கார்கள் விதத்துக்கொன்றாய் நின்றிருக்க, லாரிகளிலும் வேன்களிலும் கட்சிக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

    அந்தப் பக்கமாய் ஸ்கூட்டரில் போன ஒரு நபர் ஸ்கூட்டரை நிறுத்தி லாரிக்குப் பக்கத்தில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த தொண்டரிடம் கேட்டார்.

    மண்டபத்துல என்ன விசேஷம். கட்சி மாநாடா? அந்த தொண்டர் சிகரெட் புகை கசியும் வாயோடு ஸ்கூட்டர் நபரை அலட்சியமாய்ப் பார்த்தார்.

    நீ... இதே ஊர்தானே...?

    ஆமா...

    பேப்பர் படிக்கிறது... டி.வி. பார்க்கிற வழக்கமெல்லாம் உன்கிட்ட கிடையாது போலிருக்கு...

    நாலு நாள் வெளியூர் போயிருந்தேன்.

    அதான் உனக்கு விஷயமே தெரியலை...! இ.ம.க. கட்சி தலைவர் தங்கபாண்டியன் பொண்ணுக்கும், உ.ம.க. கட்சித் தலைவர் சேதுபதியோட மகனுக்கும் இன்னிக்குக் கல்யாணம்...

    தங்கபாண்டியனும் சேதுபதியும் அரசியலில் ரெண்டு துருவங்களாச்சே...! எப்படி இந்த கல்யாண சம்பந்தத்துக்கு ஒத்துக்கிட்டாங்க...?

    தொண்டர் தன் கையில் இருந்த சிகரெட்டை காலுக்கு கீழே போட்டு மிதித்துக் கொண்டே கோபமாய் அந்த ஸ்கூட்டர் பேர்வழியைப் பார்த்தார்.

    யோவ்... நீ... உண்மையிலேயே வெளியூர் போயிருந்தியா... இல்ல ஜெனரல் ஹாஸ்பிட்டல்ல மூணு மாசம் கோமாவில் படுத்திருந்துட்டு வர்றியா...? போன மாசமே உ.ம.க. கட்சித் தலைவர் சேதுபதி தன் லட்சக்கணக்கான தொண்டர்களோடு தாய் கட்சியான இ.ம.க.’வோடு ஜாய்ண் பண்ணிட்டார். இப்போ ஒரே கட்சிதான். கட்சி ஒண்ணாயிட்ட சந்தோஷத்தில் ரெண்டு பேரும் சம்பந்தியாயிட்டாங்க.

    அப்படியா...?

    "என்ன அப்படியா...? பாக்கறதுக்கு படிச்ச ஆள் மாதிரி இருக்கே... நாட்டு நடப்பையெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்க. பேப்பர் வாங்க காசு இல்லேன்னா பெட்டிக்கடை வாசல்ல நின்னு போஸ்டராவது படி...

    ஸ்கூட்டர் நபர் முறைக்க... தொண்டர் விழிகளை உருட்டிக் கொண்டு எகிறினார்.

    என்னய்யா முறைக்கிறே...?

    அதற்குள் இன்னொரு தொண்டர் வந்து ஸ்கூட்டர் நபரை நெருங்கி மெல்லிய குரலில் சொன்னார்.

    நீங்க போங்க ஸார்... ஆள் உற்சாக பானத்தில் மிதந்துட்டு இருக்கான். கட்சியில் வட்டச் செயலாளர் வேற. பேச்சு அப்படித்தான் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும் நீங்க கிளம்புங்க ஸார்...

    ஸ்கூட்டர் நிலைமையை உணர்ந்து கொண்டு பறந்து விட, உற்சாகமான தொண்டர் நழுவி விட்ட வேஷ்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு கத்தினார்.

    யோவ்...! நீயெல்லாம் ஏன்ய்யா தமிழ் நாட்ல இருக்கே... எங்கேயாவது நைஜீரியாவுக்கோ உகாண்டாவுக்கோ போக வேண்டியதுதானே...?

    சரி... விடு சுதிரேசு... அரசியல் ஞானம் இல்லாதவன் கிட்டயெல்லாம் போய் பேசிகிட்டு. வா... நாம மண்டபத்துக்குள்ளாற போகலாம். முகூர்த்த நேரம் நெருங்கிட்டிருக்கு...

    இருவரும் மண்டபத்தை நோக்கிப் போனார்கள். மைக்கில் - யாரோ ஆவேசமாய் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    "அரசியலின் இரண்டு இமயங்கள் சென்ற மாதம் இணைந்ததை இந்த இந்தியாவே திகைப்போடு பார்த்தது. இங்கே தமிழ்நாட்டில் அரைவேக்காட்டுத்தனமாய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் வயிற்றில் புளியைக் கரைத்தோம். இல்லையில்லை... அமிலத்தை வார்த்தோம். நாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை அந்த உன்மத்தர்கள் உணரவில்லை. எப்போதுமே பிரிந்து கிடப்போம் என்று நினைத்தார்கள். ஏமாந்தார்கள். நாம் இப்போது புதிய சக்தியோடு புதிய சரித்திரம் ஒன்றை படைக்கப் புறப்பட்டுவிட்டோம். அதற்கான ஆரம்ப விழாதான் இந்த மணவிழா. தஞ்சை தந்த தங்கத் தலைவராம் தங்கபாண்டியன் அவர்களின் அருமைப் புதல்வி பெண்மை இலக்கணத்துக்குரிய பெட்டகம் ஜெயக்கொடிக்கும், சேலம் தந்த செம்மல் சேதுபதி அவர்களின் அடலேறு மைந்தன் செழியனுக்கும் இன்னும் சற்று நேரத்தில் இங்கே திருமணம் நடைபெற உள்ளது.

    கைதட்டல் மண்டபத்தில் இடியோசை மாதிரி எழ மேடையில் ப்ரின்ஸ் வெல்வெட் நாற்காலிகளில் பக்கம் பக்கமாய் உட்கார்ந்திருந்த தலைவர்கள் தங்கபாண்டியனும் சேதுபதியும் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். தங்க பாண்டியன் தலையைச் சாய்த்து சொன்னார்.

    தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமா இருக்காங்க.

    நமக்கு சொத்தே அதுதானே தலைவரே... இப்ப நடந்துட்டிருக்கிறது கல்யாணமில்லை. மாநாடு மாதிரி இருக்கு...

    விழாவுக்கு தலைமை வகித்த கட்சியின் அவைத் தலைவர் மைக்கில் சொன்னார்:

    இப்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மணமகனின் தந்தையுமான சேலம் தந்த செம்மல் சேதுபதி அவர்கள் பேசுவார்கள்...

    சேதுபதி எழுந்து மைக்குக்கு முன்பாய் வந்து நிற்க, ஒரு நீண்ட கைத்தட்டல் எழுந்து அடங்கியது. பேச ஆரம்பித்தார்.

    "என் உதிரத்தில் கலந்துவிட்ட உணர்ச்சித் துளிகளே! என் உயிரில் உறைந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விடிவெள்ளியாம் கட்டித்தங்கம் தலைவர் தங்கபாண்டியன் அவர்களே...! உங்கள் பாத கமலங்களுக்கு என் வணக்கப்பூக்கள்...

    உலகத்திலேயே இன்றைக்கு சந்தோஷமான மனிதன் யார் என்பதை சர்வே எடுத்தால் அது நானாகத்தான் இருக்க முடியும். நம் தலைவர் அவர்களுக்கு பாசத்தைப் பொழிகின்ற தாயுள்ளம். பால் மனம். இல்லாவிட்டால் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் புத்திகெட்டு கட்சியைவிட்டுப் பிரிந்து போய் தனியாய் கட்சி ஆரம்பித்து இப்போது திருந்தி வந்திருக்கிற என்னை அன்போடு அரவணைத்து... வா... தம்பி என்று வாய் நிறைய அழைத்து கட்சியில் எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து இருப்பாரா...? எல்லாவற்றுக்கும் மேலாய் சம்பந்தி என்ற உறவுச் சங்கிலியால் என்னை இறுகப் பிணைத்துக்கொண்டார். கட்சியில் இணைந்தபிறகு ஒருநாள் அவரிடம் ஓய்வாய் பேசிக்கொண்டிருந்த போது உங்கள் மகள் ஜெயக்கொடி எங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்று என் மனைவி ஆசைப்படுகிறாள்' என்று சொன்னேன். உடனே அவர் முகூர்த்தத்தை எந்த தேதியில் வைத்துக் கொள்ளலாம்' என்று கேட்டார்."

    சேதுபதி இப்படிச் சொன்னதுமே பலத்த ஆரவாரமும் கைத்தட்டலும் கிளம்பி இரண்டு நிமிஷம் வரை நீடித்து விட்டு ஓய்ந்தது.

    சேதுபதி தொடர்ந்தார்.

    இனி இப்படியொரு தலைவன் எந்தக் காலகட்டத்திலும் தோன்றப் போவதில்லை. என் உடம்பில் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரைக்கும் என் சுவாசப்பையில் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் இந்தத் தலைவனின் காலடியில் ஒரு தொண்டனாய் விழுந்து கிடப்பேன். சேதுபதி பேச்சை முடித்துக் கொண்டு இருக்கைக்குப் போய் அமர்ந்த பின்பும் கைதட்டல் நீடித்துக் கொண்டிருக்க தங்கபாண்டியன் எழுந்து மைக்கைப் பிடித்ததும் ஆரவாரம் பேரோசையாய் கிளம்பியது. அவர் பேச ஆரம்பித்தார்.

    நமது கட்சி ஒரு குடும்பம் மாதிரி. இதில் எப்போதும் எந்தக் காலத்திலும் யாரும் தனிக்குடித்தனம் போக ஆசைப்படக் கூடாது. சேதுபதி என்னிடம் கோபித்துக்கொண்டு போனார். இப்போது கோபம் ஆறி மனம் மாறி என்னோடு வந்து சேர்ந்திருக்கிறார். அதற்குரிய மரியாதையை நான் கொடுக்க வேண்டாமா...! காலம் பூராவும் உறவு நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அவரை என் சம்பந்தி ஆக்கிக் கொண்டேன். பழைய கதைகளை பேசுவதற்கான மேடை இதுவல்ல. இது மணமேடை. புதிய வாழ்க்கையொன்றை துவங்குவதற்காக ஜெயக்கொடியும் செழியனும் இங்கே காத்திருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    தங்கபாண்டியன் இப்படி சொன்னதும் மேடைக்கு முன்புறம் நாற்காலிகளில் மாலையும் கழுத்துமாய் உட்கார்ந்திருந்த ஜெயக்கொடியும் செழியனும் ரோஜா இதழ்கள் உதிரஉதிர மேடையை நோக்கிப் போனார்கள்.

    ஜெயக்கொடி ஊதா நிற பட்டுச் சேலையில் சொர்ணவிக்கிரகம் போல் ஜொலிக்க செழியன் ஒரு சினிமா ஹீரோ போல் கருநீல ஃபுல்சூட்டில் அமர்க்களம் செய்தான்.

    இருவரும் மேடையேறி பக்கம் பக்கமாய் நின்று மண்டபத்தில் நிரம்பியிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துக் கும்பிட்டார்கள். நாதஸ்வர இசைகாற்றில் பீறிட புரோகிதர் மேடையேறினார். கல்யாணச்சடங்குகள் ஆரம்பமாயின... சரியாய் அரை மணி நேரத்துக்குப் பிறகு செழியன் ஜெயக்கொடியின் கழுத்தில் தாலியைக் கட்ட மண்டபத்தின் எல்லாத் திசைகளிலும் பூமழை பொழிந்தது. தங்கபாண்டியனுக்கு கண்களில் சந்தோஷ நீர் கோர்த்துக் கொள்ள தோளில் போட்டிருந்த மேல் துண்டால் ஒற்றிக் கொண்டார். சேதுபதி கேட்டார்.

    தலைவரே! என்ன இது?

    கட்சிக்கு தலைவனாயிருந்தாலும் ஒரு பெண்ணுக்கு அப்பா நான். அந்த உறவுக்கான கண்ணீர் இது... ஜெயக்கொடி தாயில்லாத பெண். நான் அவளை ரொம்பவும் செல்லமா வளர்த்துட்டேன். அவ அறியாமே ஏதாவது தப்பு பண்ணிட்டா அதை பெரிசுபடுத்தாமே... மன்னிச்சுடணும்...

    சேதுபதி பதறிப்போனார்.

    என்ன தலைவரே இது... உங்க பொண்ணு வேற... என்னோட பொண்ணு வேறயா? ஜெயக்கொடி எனக்கு மருமகள் கிடையாது... மகள். போதுமா? மொதல்ல அவங்க தலையில் அட்சதையைப் போட்டு ஆசீர்வாதம் பண்ணுங்க...

    தங்கபாண்டியன் மறுபடியும் நீரால் நிரம்பிவிட்ட கண்களை மேல் துண்டால் ஒற்றியபடி மணமக்களை நோக்கிப்போனார்.

    முதல் இரவு அறை. ராத்திரி மணி ஒன்பது.

    செழியன் பட்டுவேட்டி பட்டுசட்டையில் கட்டிலில் காத்திருக்க சுற்றிலும் சரம்சரமாய் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகையும் செண்பகப் பூக்களும் மூச்சை அடைத்துக்கொள்கிற மாதிரி மணத்தது. போதாக் குறைக்கு சந்தன ஊதுவத்தி புகைந்தது. செழியன் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் அந்தப் பெரிய அறைக்குள் நடைபோட ஆரம்பித்தான்.

    ஒன்பதேகால் மணிக்கு ஜெயக்கொடி உள்ளே வந்தாள். கையில் பால் ததும்பும் வெள்ளிச்சொம்பு. முகம் பூராவும் நாணச்சிவப்பு. உதட்டில் மலராத ரோஜா மொட்டு மாதிரி ஒரு சின்னப் புன்னகை. செழியன் அவளையே பார்த்தான்.

    ஜெயக்கொடி...

    ம்...

    தலையை நிமிர்த்தித்தான் என்னைப் பாரேன்.

    ஊஹும்... நான் பார்க்க மாட்டேன்.

    ஏன்?

    எனக்கு வெட்கமாயிருக்கு...

    இனிமே இந்த வெட்கத்தையெல்லாம் மூட்டைகட்டி அப்படி ஓரமா வைச்சிடணும்... என்ன?

    ம்...

    கையில பால் சொம்பை வைச்சிட்டு இன்னும் எவ்வளவு நேரத்துக்குத்தான் இப்படியே நின்னுட்டிருக்கப்போறே? அந்த ஸ்டூல் மேல சொம்பை வை...

    ஜெயக்கொடி பால் சொம்பை பக்கத்து ஸ்டூலின் மேல் வைத்துவிட்டு செழியனை தயக்கமாய் ஏறிட்டாள்.

    என்னங்க...

    சொல்லு... மார்புக்கு குறுக்காக கைகளைக்கட்டிக் கொண்டு புன்னகையோடு அவளையே பார்த்தான் செழியன். ஜெயக்கொடி சொன்னாள்.

    நான் உங்ககால்ல விழுந்து மொதல்ல ஆசிர்வாதம் வாங்கணுமாம்.

    யார் சொன்னது?

    பெரியவங்க...

    இவ்வளவு தானே...? சரி... கால்ல விழு... ஆசிர்வாதம் பண்ணிடறேன்.

    கிழக்கு பார்த்து நில்லுங்க. சிரித்துக் கொண்டே செழியன் கிழக்குத் திசை பார்த்து நிற்க -

    ஒரு மலர்கொத்து போல் ஜெயக்கொடி அவன் கால்களில் விழுந்தாள். விழுந்தவளைத் தொட்டுத்

    Enjoying the preview?
    Page 1 of 1