Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nagaratha Nizhal Ondru!
Nagaratha Nizhal Ondru!
Nagaratha Nizhal Ondru!
Ebook118 pages39 minutes

Nagaratha Nizhal Ondru!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nagaratha Nizhal Ondru!

Read more from Rajeshkumar

Related to Nagaratha Nizhal Ondru!

Related ebooks

Related categories

Reviews for Nagaratha Nizhal Ondru!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nagaratha Nizhal Ondru! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    காஞ்சனாவின் கன்னத்தை இடதுகை விரல்களால் மெல்ல தட்டிவிட்டு சூட்கேஸை எடுத்துக் கொண்டான் பீட்டர்.

    நான் கிளம்பட்டுமா, காஞ்சனா...?

    காஞ்சனாவின் ரோஜா நிற முகம் லேசாய் வாடியிருக்க கண்கள் கலங்கியிருந்தன.

    ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?

    சரியா ரெண்டு மணிக்கு.

    பகல்ல ட்ரெய்ன் கிடையாதா...? ஒவ்வொரு தடவை வெளியூர் போகும்போதும் இந்த மிட் நைட் ட்ரெய்ன்லதானே போறீங்க...?

    என்ன செய்யறது காஞ்சனா...! இந்த ஒரு ட்ரெய்ன்தான் ஸ்ட்ரெய்ட் ட்ரெய்ன். பகல் நேரத்து ட்ரெய்ன்ல போனா திருவனந்தபுரம் போய் இன்னொரு ட்ரெய்ன் மாறணும்.

    எத்தனை நாள் டூர்? ஒரு வாரம் தானே.

    சொல்ல முடியாது. வேலை முடியலைன்னா டூரை கண்டினியூ பண்ண வேண்டியிருக்கும்.

    என்னங்க... கொஞ்சலாய் பீட்டரின் சட்டைக் காலரைப் பிடித்து அவன் தலையை இழுத்து தன் நெற்றியோடு அவனுடைய நெற்றியை மோதவிட்டாள்.

    இந்த மெடிக்கல் ரெப் வேலையை விட்டுட்டு நீங்க வேற வேலையைத் தேடிக்க முடியாதா…?

    ஏன்...? இந்த வேலைக்கு என்ன?

    மாசத்துல இருபது நாள் வெளியூர் போயிடறீங்க...! என்னால வீட்ல தனியா இருக்க முடியலை.

    பீட்டர் அவளுடைய கன்னத்தைத் தட்டினான். கொஞ்சநாள் பொறுத்துக்கோ. வேற ஒரு கம்பெனியில் வேலைக்கு சொல்லி வெச்சிருக்கேன். அந்த வேலை கிடைச்சுட்டா வெளியூர் பயணமே கிடையாது.

    நிஜமா...?

    நிஜமோ நிஜம்... பீட்டர் சொல்லிக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஆட்டோவை நோக்கிப் போனான்.

    டூரிலிருந்து திரும்பும்போது உனக்கு என்ன வாங்கி வரட்டும்?

    நீங்க சீக்கிரமே வந்தா போதும்.

    வந்துடறேன்... எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சு இருக்க ஆசையா என்ன...?

    ஆட்டோவில் ஏறி பீட்டர் கையசைக்க ஆட்டோ புறப்பட்டது.

    ஆட்டோ தெருமுனையில் சென்று மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனா கதவைச் சாத்தி தாழிட்டுக் கொண்டு உள்ளே போனாள்.

    சுவர் கடிகாரத்தில் நேரம் பார்த்தாள்.

    மணி 12.35.

    சமையலறைக்குப் பக்கத்தில் ஒரு போர்வைக்குள் சுருண்டு படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்த வேலைக்காரி பூங்காவனம் சத்தம் கேட்டு கொட்டாவியோடு எழுந்து உட்கார்ந்தாள்.

    அய்யா ரயிலுக்கு கிளம்பிட்டாராம்மா?

    ம்…

    மணி என்னம்மா?

    பனிரெண்டரை...

    பூங்காவனம் மறுபடியும் ஒரு நீளமான கொட்டாவியோடு போர்வைக்குள் நுழைந்துவிட காஞ்சனா தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். மின் விசிறியைச் சுழல வைத்துவிட்டு படுக்கைக்குச் சாய்ந்தாள்.

    டெலிபோன் கூப்பிட்டது.

    ‘இந்நேரத்துக்கு யார்...?’

    ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    மிஸ்டர் பீட்டர் வீடு தானே...?

    ஆமா...

    அவர் வீட்ல இருக்காரா...?

    இல்லை ... நீங்க யாரு...?

    நான் பாலச்சந்திரன். அவரோட ஆபீஸ் கொலிக்.

    ஓ...! நீங்களா...? உங்களைப் பத்தி அவர் நிறைய சொல்லியிருக்கார். அவர் இப்பத்தான் ஆபீஸ் விஷயமா டூர் கிளம்பிப்போனார்.

    ரயில்வே ஸ்டேஷனுக்குத்தானே?

    ஆமா...

    ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?

    ரெண்டு மணிக்கு.

    மும்பை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்தானே?

    ஆமாம்...

    சரி... நான் ஸ்டேஷன்ல போய் பார்த்துக்கிறேன்.

    ஏதாவது முக்கியமான விஷயமா?

    ஆமா... ஆபீஸ் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு ஸ்டேஷனுக்கு அவர் கிளம்பிப்போய் எவ்வளவு நேரம் இருக்கும்?

    இப்பத்தான் ஆட்டோவில் புறப்பட்டுப் போனார். இன்னும் ஸ்டேஷன்கூட போய் சேர்ந்து இருக்கமாட்டார்.

    ஓ…கே...! பீட்டரை நான் ஸ்டேஷன்ல மீட்! பண்ணிக்கறேன்… மறுமுனையில் பாலச்சந்திரன் ரிஸீவரை வைத்துவிட காஞ்சனாவும் ரிஸீவரை வைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள்.

    மனசு பூராவும் ஒரு வெறுமை பரவியது. ‘என்ன வாழ்க்கை இது...! மாதத்தில் இருபது நாள் ஊர் ஊராய் அலைகிற உத்யோகம்...! வீட்டில் இருக்கிற பத்து நாளும் ஆபீஸ் ஃபைல்கள் பார்க்கிற எக்ஸ்ட்ரா வேலை!’

    வெளியே வேலைக்காரி பூங்காவனத்தின் குறட்டைச் சத்தம் மெதுவான ரம்பம்போல் கேட்க ஆரம்பித்தது. காஞ்சனாவுக்கு தூக்கம் பிடிக்கவில்லை.

    புரண்டு புரண்டு படுத்தவளின் மனதில் பீட்டரை முதன்முதலாய் சந்தித்த நாளும் அதற்குப் பிறகு அவளை தீவிரமாய்க் காதலித்த நாட்களும் வீட்டைப் பகைத்துக் கொண்டு இரண்டு வருஷங்களுக்கு முன்னால் பதிவுத்

    Enjoying the preview?
    Page 1 of 1