Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavai Thedum Sooriyagandhigal
Nilavai Thedum Sooriyagandhigal
Nilavai Thedum Sooriyagandhigal
Ebook175 pages49 minutes

Nilavai Thedum Sooriyagandhigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nilavai Thedum Sooriyagandhigal

Read more from Rajeshkumar

Related to Nilavai Thedum Sooriyagandhigal

Related ebooks

Related categories

Reviews for Nilavai Thedum Sooriyagandhigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavai Thedum Sooriyagandhigal - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    பஸ்ஸின் அறுபது கிலோ மீட்டர் வேகத்தோடு விஜயமோகனின் யோசனைகளும் போட்டி போட்டன ஜன்னலில் தலை சாய்த்து, எதிர் காற்றின் தாக்குதலை அலட்சியப்படுத்தி உட்கார்ந்திருந்தான்.

    ஒரு பெண்ணின் சுயநலம் கலந்த மிரட்டலுக்கு செத்துப் போவேன் என்கிற மிரட்டலுக்குப் பயந்து...?

    பிரிமியா என்னை மிரட்டிப் பார்க்கறியா?

    கண்ணுக்குள் பிரிமியா நின்று கெஞ்சினாள்.

    ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கங்க. தப்பா நினைக்காதீங்க விஜய், சத்தியமா இது மிரட்டல் இல்லை.

    பின்னே என்னவாம்?

    எது, மேல நான் ஆசை வச்சாலும் முதல்லயே ரெண்டு விஷயத்தை டிசைட் பண்ணிக்குவேன். கிடைச்சா எப்படி அணுபவிக்கலாம் அல்லது கிடைக்காட்டி எப்படி என்னைத் தேத்திக்கலாம்! உங்க விஷயத்தில் நீங்க கிடைக்காட்டி செத்துப் போறதுதான் ஒரே தேறுதல்.

    முட்டாள்தனம் பிரிமியா.

    என்னோட இந்த முடிவுக்காக நீங்க கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டாம் விஜய்...

    வெகு சாமர்த்தியமான பேச்சு!

    இந்த விநாடியில்தான் பரிச்சயமான பெண்ணாகவே இருக்கட்டும். தெரிந்தே சாகவிட யாருக்கு மனசு வரும்?

    கடைசி கடைசியாய் நேற்றைக்குச் சொல்லிவிட்டான்.

    ஓகே பிரிமியா! அடுத்த வருஷம் இந்நேரம் மாமாவை நம்பிக்கையோட கல்யாண மண்டபம் புக் பண்ணச் சொல்லு.

    டிரைவர் பிரேக் அடித்ததில், யோசிப்புக் கலைந்து போக, பஸ் இரைச்சல் காதின் கவனத்துக்கு வந்தது.

    குறுக்கே புகுந்த ஓர் ஆட்டு மந்தை சாவகாசமாய்ச் சாலையின் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருக்க, பஸ் மீண்டும் வேகம் பிடித்தது.

    ஐந்தாவது நிமிடம் - கருமத்தம்பட்டியில் நின்று - புறப்பட்டு -

    அடுத்தடுத்த பதினைந்து நிமிடங்களில் அவிநாசி, பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, விஜயமங்கலம், பெருந்துறையைக் கடந்து ஹெட்லைட் வெளிச்சத்தோடு வாகனங்கள் எதிர்ப்பட ஈரோட்டைச் சமீபித்தது. பஸ் ஸ்டாண்டில் பயண அசதியோடு உதிர்ந்தான் விஜயமோகன்.

    சுற்றுப் பகுதியில் பத்துப் பதினைந்து நிமிடங்கள் அலைந்து சுமாரான லாட்ஜைப் பிடித்தான்.

    தூசி துடைக்கப்படாத ஃபேனுக்கடியில் மூட்டைப் பூசி கடிகளோடு அடுத்த நாளைய நினைப்போடு தூக்கம் வராமல் வெகு நேரம் புரண்டான்.

    காலையில் எழுந்ததுமே ஒரு ரூபாய் வெந்நீரில் உடலை நானைத்துக் கொண்டு புறப்பட்டான். லாட்ஜை விட்டு வெளியே வர, வர, எதிர்ப்பட்ட பல்ல கவுண்டம்பாளையம் பஸ்ஸைக் கை நீட்டி நிறுத்தி, காலி இருக்கை ஒன்றில் நிரப்பிக் கொண்டான்.

    அடுத்த பதினைந்தாவது நிமிஷத்தில் அந்தச் சின்ன கிராமத்தில் இருந்தான்.

    கிராமம் ஹைவேஸ் ரோடின் மேலாகவே இருந்தது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் மின் வசதி பெற்றிருந்தது. டீக்கடை ரேடியோ காலை ஏழேகால் மணி நியூஸைச் சிரத்தையாய் வாசித்துக் கொண்டிருக்க, வெளியே போட்டிருந்த மரப்பெஞ்சுகளில், தலையில் முண்டாசு சுற்றி வெற்றுடம்போடு தெரிந்த கிராமத்துப் பேர்வழிகள் கண்ணாடி டம்ளர்களில் இருந்த டீயை ஊதி, ஊதிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

    ரோடைக், கிராஸ் செய்தான் விஜயமோகன். வேட்டியை இடுப்புக்குக் கட்டி வாயில் சுருட்டோடு எதிர்ப்பட்ட அந்த ஆசாமியைக் கையசைப்பால் நிறுத்தினான் விஜய்.

    ஏங்க... தீப்தி டெக்ஸ்டைல்ஸுக்கு எந்தப் பக்கம் போகணும்?

    ஒரு விநாடி யோசித்த அந்த ஆசாமி கேட்டார்.

    பஞ்சு மில்லுங்களா?

    தலையசைத்தான் விஜயமோகன்.

    ஆமாங்க.

    தொண்ணூறு டிகிரி உடலைத் திருப்பி அருகில் போன சரளைக்கல் பாதையைக் காட்டினார்.

    பாருங்க. அதுலேயே போங்க... முக்கா மைல் நடக்கணும்...

    அந்தப் பாதைக்கு விஜயமோகன் போனபோது - அம்புக் குறியோடு போர்டே தெரிந்தது.

    WAY TO DEEPTI TEXTILES

    இரண்டு பக்கமும் முட்செடிகள் புதர் மாதிரி மண்டிச் கிடக்க, கற்றாழை செழித்த பாதைக்கு நடுவே நடந்தான். வெய்யில் அந்நேரத்துக்கே உறைத்தது முகம் வியர்த்தான் விஜய். இடையே திருப்பம் வந்தபோது, அங்கேயும் தீப்தி டெக்ஸ்டைல்ஸுக்கு வழி சொல்லி ஒரு போர்டு கோணலாய் நின்று கொண்டிருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்த ஒரு காக்கை அவனை ஓரப்பார்வை பார்த்தது.

    தொடர்ந்து நடந்தான் விஜயமோகன்.

    பதினைந்து நிமிஷம்! பெரிய இரும்பு கிராதிகேட் திறந்து வைக்கப்பட்டிருக்க, வலது பக்கம் மரக்கூண்டுக்குள் இரண்டு செக்யூரிட்டி கார்டுகள் தெரிந்தார்கள். நடந்து போய் அவர்களைச் சமீபித்தான் அவர்கள் விவரம் கேட்கும்முன் அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டரைக் காட்டினதுமே- ஒரு செக்யூரிட்டி கார்டு புன்னகை பூத்த முகமாகி உள்ளே கூட்டிப் போனான்.

    அலுவலக சம்பிரதாயங்கள் எல்லாமே முடிந்து போனதும் ஏ.ஈ. தேவராஜிடம் சேர்ப்பிக்கப்பட்டான்.

    ஏ.ஈ. தேவராஜ் சமீபத்தில் கல்யாணமாகித் தொப்பை போட்டிருந்தார். குத்த வருவது போன்ற கூர்மையான மூக்குக்குக் கீழே மீசையை ஒழுங்கில்லாமல் வளர்த்திருந்தார். சிரித்த பல் வரிசையில் பாக்குக் கறை ஒட்டியிருந்தது. சுருள் பட்டிருந்த முடிக்கு மேல் ஏராளமான பஞ்சுத் துணுக்குகள்.

    எதிர் நாற்காலியில் விஜயமோகனை உட்காரச் சொல்லி சொன்னார்.

    நாற்காலியில் விஜயமோகன் நிரம்பிக் கொண்டதும் கேட்டார்.

    உங்க பேர் விஜயமோகனா?

    ஆமா சார்... தலையசைத்தான்.

    டிகிரியை எப்ப முடிச்சீங்க?

    எயிட்டி ஃபோர்-எயிட்டி ஃபைவ்ல சார்...

    ஒரு வருஷம் சும்மா இருந்தீங்களா?

    "வேலைக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருந்தேன். எதுவும் கிடைக்கலை. மீன் டைம் எம்.எஸ்ஸி கரெஸ்பான்டென்ஸ் கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன்.

    இங்கே பிராஸஸ் எப்படின்னு தெரியுமா?

    தெரியும் சார், இன்டர்வ்யூக்கு வந்தப்பவே உள்ளே ஷாப் ஃப்ளோருக்கு வந்து பார்த்தேன்...

    இன்னொரு தடவை பார்க்கணும்ன்னு பிரியப்பட்டா வாங்க... உள்ளே போயிட்டு வரலாம்.

    விஜயமோகன் தலையசைத்தான். எழுந்தார்கள். அறைக் கதவைத் திறந்ததுமே - ஷாப் ஃப்ளோர்.

    ப்ளோர் ரூமிலிருந்து வரிசையாய் கார்டிங், டிராயிங், சிம்ப்ளெக்ஸ், ஸ்பின்னிங் என்று ஒவ்வொரு பிராஸஸ்ஸுக்காய்க் கூட்டிப்போய் விளக்கினார். இரைச்சலுக்கிடையே மெஷின்களை இயக்கி, இயங்கிக் கொண்டிருந்த தொழிலாளர் சிலருக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ரோவிங் செக்ஷனுக்கு வந்தபோது -

    மிஸ்டர் விஜயமோகன்...

    சார்?

    அங்கே சிம்ப்ளக்ஸ்ல ரோவிங் பாபின் எடுத்திட்டிருக்கானே அன்னக்கொடி

    விஜயமோகன் அந்த மெஷினுக்குப் பின்னே பார்வை செலுத்தினான்.

    தேவராஜ் குறிப்பிட்ட அந்த அன்னக்கொடி மெஷினுக்குப் பக்கத்தில் எதையோ மென்று கொண்டிருக்கும் உதடுகளோடு தெரிந்தான். சிவப்பான சின்னக் கண்கள். முடிக்கற்றைகள் இரண்டு மூன்று மோதிர வளையங்களாய் நெற்றியில் விழுந்திருந்தது. அவன் அசைகிறபோது ஆடியது எண்ணெயில் ஊறப் போட்ட உளுந்து நிறம் காக்கி யூனிபார்ம் மெஷின் அழுக்கோடும், கசங்கலோடும் கரடு முரடாய் அவன் மேல் படிந்திருந்தது.

    "சொல்லுங்க

    Enjoying the preview?
    Page 1 of 1