Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nisha... Nisha... Odi vaa!
Nisha... Nisha... Odi vaa!
Nisha... Nisha... Odi vaa!
Ebook123 pages50 minutes

Nisha... Nisha... Odi vaa!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Nisha... Nisha... Odi vaa!

Read more from Rajeshkumar

Related to Nisha... Nisha... Odi vaa!

Related ebooks

Related categories

Reviews for Nisha... Nisha... Odi vaa!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nisha... Nisha... Odi vaa! - Rajeshkumar

    19

    1

    போலீஸ் கமிஷனர் பஞ்சாபகேசன் தனக்கு வந்து லெட்டரை இரண்டாவது முறையாக படித்துப் பார்த்தார்.

    மதிப்பிற்குரிய கமிஷனர் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நான் சாலமன் விக்டர். வலது இருபத்தேழு. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷனில் பி.ஈ. பட்டதாரி. அமெரிக்காவில் எம்.எஸ். படித்துவிட்டு சென்ற மாதம்தான் சென்னை திரும்பினேன். அங்கேயே ஒரு நல்ல வேலை கிடைத்த சந்தோஷத்தோடு சென்னை திரும்பிய எனக்கு ஒரு பயங்கர அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் உயிர்க்கு உயிராய் காதலித்த ஜெபமாலை என்னும் பெண் உயிரோடு இல்லை. அவள் ஏதோ விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இறந்து போய்விட்டதாக கேள்விப்பட்டேன். நோய் வந்து செத்துப்போகக்கூடிய அளவுக்கு என் ஜெபமாலை ஆரோக்கியமற்றவள் கிடையாது. அவள் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக என் மனத்துக்குப்பட்டது. உடனே எனது எல்லைக்குட்பட்ட ஹெச் 5 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் கொடுத்தேன். புகாரைப் படித்துப் பார்த்த அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் மஹாவிஷ்ணு அந்த கடிதத்தை இரண்டாய்க் கிழித்து, வேஸ்ட் பின்னில் போட்டுவிட்டு கேலியாய் என்னைப் பார்த்து புன்னைகைத்தார். இருக்கிற கேஸ்களை க்ளோஸ் பண்ணவே எங்களுக்கு நேரம் போதலை. அதுல பழைய கேஸ்களுக்கு உயிர் கொடுத்து நேரத்தை வீணாக்க விரும்பலை'ன்னு சொல்லிட்டார். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கலை. அதுக்கப்புறம் உங்களை நேர்ல பார்த்துப் புகார் கொடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். முடியலை. நீங்க பிஸியா இருக்கிறதாகவும் பார்க்க முடியாதுன்னும் உங்க உதவியாளர் சொல்லிட்டார். எனக்கு வேற வழி தெரியாததினால இந்த லெட்டரை உங்களுக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வெச்சிருக்கேன். நான் உயிருக்கு உயிராய் காதலிச்ச ஜெபமாலை நோய் தாக்கி இறந்து இருக்கவே முடியாது. அது இயற்கையானம் மரணம் கிடையாது. கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள என் ஜெபமாலையின் உடலை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தால், உண்மை வெளியே வரும். உண்மைகள் தூங்கிகிக்கொண்டு இருப்பது நீதித்துறைக்கு ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும். எனவே ஜெபமாலை விஷயத்தில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரவேண்டுமானால், அவளுடைய உடல் கல்லறைத் தோட்டத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு உடனடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவேண்டும். இது என் கோரிக்கை. இந்த கோரிக்கை அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் 49 வது மணி நேரத்தில் உங்கள் கமிஷனர் அலுவலகம் முன்பு நான் தீக்குளித்து இறந்துவிடுவேன். இதை தயவு செய்து ஒரு அரசியல்வாதியின் மிரட்டலைப் போல் நினைத்து அலட்சியப்படுத்தி விடவேண்டாம். என் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் நான் உயிர்விடுவது நிச்சயம். இன்று காலை பதினோரு மணியிலிருந்து என்னுடைய டெட்லைன் நேரம் தொடங்குகிறது.

    இப்படிக்கு

    சாலமன் விக்டர்.

    கமிஷனர் பஞ்சாபகேசன் லெட்டரைப் படித்து முடித்து - அதை பேப்பர் வெய்ட்டுக்குக் கீழே வைத்துவிட்டு டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக் கொண்டார். டயலில் எண்களைத் தட்டிவிட்டு காத்திருந்த மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    ஹலோ...

    இன்ஸ்பெக்டர் மஹாவிஷ்ணு...?

    எஸ்...! நீங்க...?

    கமிஷனர்...

    எதிர்முனையில் பதட்டமும் மரியாதையும் ஒரு சேர அரும்பியது.

    சொ... சொல்லுங்க ஸார்...

    கடந்த சில தினங்களுக்கு முன்னாடி சாலமன் விக்டர்ன்னு யாராவது உங்களை வந்து பார்த்து புகார் ஏதாவது கொடுத்தாங்களா...?

    ஆ...ஆமா... ஸார்...

    புகாரை ரிஸீவ் பண்ணிட்டீங்களா?

    இல்ல ஸார்...

    ஏன்...?

    அந்தப் புகார்ல உண்மை கிடையாது ஸார்.

    அது எப்படி உங்களுக்குத் தெரியும்...?

    ஸார்...! அந்த சாலமன் விக்டர்க்கு அந்தப் பொண்ணு ஜெபமாலை குடும்பத்து மேல ஏதோ பர்சனல் வென்ஜன்ஸன் இருக்கு. அதை தீர்த்துக்கத்தான் சாலமன் விக்டர் இப்படி ஒரு கோரிக்கையை வெச்சு பிரச்சனையை பெரிசு பண்ணி அசிங்கப்படுத்த நினைக்கிறான்.

    நோ... நோ...! சாலமன் விக்டர் எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தைப் பார்க்கும் போது அவர் அப்படிப்பட்டவரா இருப்பார்ன்னு எனக்குத் தோணலை... ஹி... ஈஸ் ஹைலி எஜுகேட்டட்! ஸ்டேட்ஸுக்குப் போய் படிச்சுட்டு வந்திருக்கார். அவர் கொடுத்த புகாரை நாம அலட்சியம் பண்ணமுடியாது. புகாரை வாங்கி ஃபைல் பண்ணிகிட்டு வேண்டிய ஸ்டெப்ஸை எடுங்க...

    ஸார்... அதுவந்து...!

    டூ... வாட்... ஐ... ஸே...

    "எஸ்...

    Enjoying the preview?
    Page 1 of 1