Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthiya Poo Poothathu
Puthiya Poo Poothathu
Puthiya Poo Poothathu
Ebook124 pages28 minutes

Puthiya Poo Poothathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Puthiya Poo Poothathu

Read more from Rajeshkumar

Related to Puthiya Poo Poothathu

Related ebooks

Related categories

Reviews for Puthiya Poo Poothathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthiya Poo Poothathu - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    வசந்தி டைப்ரைட்டிங் மெஷினைத் தட்டுவதில் தீவிரமாய் இருந்தாள். கண்கள் வலது பக்கமாய் வைக்கப் பட்டிருந்த இன்வாய்ஸை பார்த்துக் கொண்டிருக்க - மருதாணி பூச்சிட்ட விரல்கள் ஆங்கில எழுத்துக்களின் மேல் வெகு லாவகமாய் ஒற்றி ஒற்றி எழுந்தன.

    அலுவலகம் இன்னும் வேலை நேரத்தை ஆரம்பிக்காத காலை மணி 9.55 ஹாலில் அரட்டை மிச்சமிருந்தது.

    புடவை டிசைன் நல்லாயிருக்கே... எங்க எடுத்தே...?

    நான் எடுக்கலை...

    பின்னே...?

    என் வீட்டுக்காரர் பெங்களூர் போயிருந்தப்ப எடுத்துட்டு வந்தது.

    உன் பாடு பரவாயில்லை. எனக்கும் ஒண்ணு வந்து வாய்ச்சிருக்கே காலத்துக்கும் தண்டம், ஒரு கர்ச்சீப்பை ஒழுங்கா வாங்கிட்டு வரத் தெரியாது.

    அந்தப் பெண் குரல்களை அமுக்கிக் கொண்டு ஆண்களின் அரசியல்.

    ஒரு கோடி ரூபாய் வாங்கியிருப்பார்னு நினைக்கிறியா?

    சேச்சே...! பிரதமர் அவ்வளவு சீப்பா போக மாட்டார். நம்ம ஊர் எம்.எல்.ஏ.வே ஒரு கோடி வாங்குவார். அந்த பிசாத்து காசைப் போய் ஏன் கை நீட்டி வாங்கியிருக்கப் போறார்.

    எதை நம்பறதுன்னு தெரியலை. ராணுவ ஆட்சி வந்து துப்பாக்கியைக் காட்டி கேட்டாதான் உண்மையை ஒத்துக்குவாங்க போலிருக்கு. குறுக்கே ஒரு குரல்.

    சிலிண்டர் எப்ப கிடைக்கும்னு தெரியலை. நாயா பேயா அலைஞ்சிட்ருக்கேன்...

    ஓடிப்போன சுதா ஒழுங்கா குடும்பம் நடத்தறாளா? இத்தனை பேச்சுக்களும் வசந்தியின் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருந்தன. கேட்டு அதை மனசுக்குள் ரசித்தபடி - டைப்ரைட்டிங் மெஷினை தட்டுவதில் கவனமாய் இருந்தாள்.

    அம்மா...

    பக்கவாட்டில் குரல் கேட்டது. திரும்பினாள்.

    ஆபீஸ் ப்யூன்.

    என்ன மருதாசலம்...?

    உங்களைப் பார்க்க விஸிட்டர் வந்துருக்காங்கம்மா...

    ஆணா... பெண்ணா?

    பொண்ணு...

    பேர் கேட்டியா?

    ம்... கேட்டேன். நிருபமான்னு சொன்னாங்க.

    வசந்தி உதட்டைக் கடித்து யோசித்தாள்.

    'நிருபமா...?' அவளுக்குக் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத பெயர். நெற்றி சுருங்கியது.

    'என்னோடு படித்தவளோ...?'

    வசந்தியின் மூளைப் பிரதேசம் ஒரு முறை பள்ளி நாட்களையும், கல்லூரி நாட்களையும் தோண்டிப் பார்த்தது. சோர்ந்தாள்.

    அந்தப் பெயரில் எந்த முகமும் மனசுக்கு தட்டுப்படவில்லை. மருதாசலம்...

    என்னம்மா...?

    அந்த நிருபமா என்னைத்தான் கேட்டாளா?

    ஆமாம்மா... டைப்பிஸ்ட் மிஸ். வசந்தியைப் பார்க்கணும்னு சொன்னாங்க.

    வசந்தி எழுந்தாள். மேஜை வரிசைகளுக்கு இடையில் நடைபோட ஆரம்பித்தாள். சென்ட்ரலைஸ்ட் ஏர்கண்டிஷனர் ஆபீஸ் மொத்தத்தையும் ஊட்டியின் சீதோஷ்ண நிலையில் வைத்திருந்தது.

    சீஃப் அக்கௌண்டன்ட் ஆபீஸரை கடக்கும்போது அவர், அவளை 'எங்கே போறே?' என்பது போல் பார்க்க யாரோ விசிட்டர் ஸார் என்று சொல்லி அறைக் கதவைத் திறந்து கொண்டு வசந்தி வந்தாள்.

    வராந்தாவின் மொசைக் புள்ளிகள் போலவே குழப்பமாய் 'யார் அந்த நிருபமா?' என்ற கேள்வி மீண்டும் மனசுக்குள் ஓடியது. வராந்தா விளிம்பில் வரிசையாய் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்த செம்மண் தொட்டிகளில் கல்வாழைச் செடிகள் சிவப்புப் பூக்களோடு சிரித்தன. வராந்தா முடிவில் படிகள் வந்தன. இறங்கினாள். ரிசப்ஷன் அறை வாசனையோடு வந்தது. அழகான ரிசப்ஷனிஸ்ட் உறுத்தாத நிறங்களில் சில பாலிமர் நாற்காலிகளில் - டீபாய் - ஆஷ்ட்ரே - ஹிண்டு. கண்ணாடி போட்ட ஷபாரி அணிந்த மனிதர் ஒரு சின்ன ப்ரீப்கேஸோடு உட்கார்ந்திருந்தார். அவரைத் தவிர - இன்னொரு நாற்காலியில் அந்தப் பெண் தெரிந்தாள். 'இவளா நிருபமா...?'

    வசந்தி அங்கே வந்ததுமே - அந்தப் பெண் ரிசப்ஷஸ்டை ஏறிட்டுப் பார்க்க - ரிசப்ஷனிஸ்ட் ஒரு இன்ஸ்டன்ட் புன்னகையோடு ஷி ஈஸ் மிஸ் வசந்தி என்றாள். அவள் உடனே எழுந்து - வசந்தியின் கையைப் பற்றிக் கொண்டு நான் நிருபமா என்றாள்.

    வசந்தி முழுதாய் அவளைத் தன் பார்வையில் நனைத்தாள்.

    வெண்ணிற சல்வார் கம்மிஸ் அணிந்திருந்தாள். அதில் லேசாய் அழுக்கு தீற்றல்கள். தலைமுடி கலைந்திருந்தது. அதுவே அவளுக்கு அழகாகவும் இருந்தது அவள் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் சின்னதாய் ஜிப் வைத்த பை ஒன்றை வைத்திருந்தாள்.

    வசந்தியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

    இவ்வளவு அழுக்கா இருக்கேன்னு பார்க்கறீங்களா...? நான் நேரா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இறங்கி வர்றேன்... ட்ரெயின் இன்னிக்கு மூணு மணி நேரம் லேட்.

    அவள் பேசின தமிழில் சற்று கொச்சை. ஒரு வடக்கத்திக்காரி பேசுகிற மாதிரியான தமிழ்.

    உங்களை யார்ன்னு எனக்குத் தெரியலையே?

    "ஓ... ஸாரி...

    Enjoying the preview?
    Page 1 of 1