Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagai Vilai Kel!
Ulagai Vilai Kel!
Ulagai Vilai Kel!
Ebook112 pages32 minutes

Ulagai Vilai Kel!

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Ulagai Vilai Kel!

Read more from Rajeshkumar

Related to Ulagai Vilai Kel!

Related ebooks

Related categories

Reviews for Ulagai Vilai Kel!

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagai Vilai Kel! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    ஆகாயப் பரப்பில் ஆஃப்செட் வண்ணங்கள் அச்சாகியிருந்த சாயந்தர நேரம் 6.15. சூரியன் ரத்தக் குளத்தில் தத்தளித்தான். எந்த விநாடியிலும் இருட்டு திடும் என்று சூழ்ந்துக் கொள்ளக்கூடிய நிலை.

    சிட்கோ தொழிற்பேட்டையை அடுத்து இருந்த அந்த கோடவுன் நகரத்து சந்தடிகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அந்த மிகப் பெரிய கோடவுன் - முள் வேலியின் சதுர பார்டர்க்கு மத்தியில் செளகரியமாய் உட்கார்ந்திருந்தது. நெற்றியில் 'கழிவுப் பஞ்சு கிடங்கு' என்று எழுதப்பட்ட போர்டு ஒன்று தெரிந்தது.

    கோடவுனுக்கு பக்கத்திலேயே - முக்கால் கிலோ மீட்டர் தொலைவில் - ரயில்வே ட்ராக் தெரிய - ஆறே கால் மணி பாசஞ்சர் ரயில் ஒன்று - இரைச்சலோடு வந்து கொண்டிருந்தது. கோடவுன் வாசலில் நின்றிருந்த வாட்ச்மேன் கன்னையாவுக்கு கையும் வாயும் நமநமத்தது பீடி ஒன்றை பற்றவைத்தான். ரயில் சத்தம் தான் அவனுக்கு பீடி குடிக்க அலாரம். பதினைந்து வருஷ பழக்கம். ரயில் தூரத்தில் போய் அந்த பிராந்தியம் மீண்டும் அமைதியாகி - கன்னையாவின் கையில் வைத்திருந்த பீடி பாதி கரைந்திருந்த போது தூரத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு ஜீப் வருவது தெரிந்தது. கன்னையாவின் புருவங்கள் உயர்ந்தது. பெரும்பாலும் சரக்கை - இறக்க - ஏற்ற லாரிகள் வரும். லாரிகளை விட்டால் முதலாளி தணிகாசலத்தின் கார் வரும்.

    'புதுசா இப்ப ஜீப் வருதே...?’

    கன்னையா ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருக்கும் பாதே-ஜீப் கோடவுனின் வேலியை நெருங்கியிருந்தது. இது பக்கத்தில் வர வர கன்னையாவின் கண்களில் கலவரம் பரவியது.

    அது போலீஸ் ஜீப்.

    ஜீப்பின் தலையில் சிவப்பு விளக்கு ஒன்று சுழன்றது, கேட்டுக்கு பக்கத்தில் வந்ததும் நின்றது. ஜீப்பிலிருந்து ‘தபதப்' வென்று நான்கைந்து கான்ஸ்டபிள்கள் குதித்தார்கள். முன் பக்கமிருந்து இன்ஸ்பெக்டர் செளந்தரராஜனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்கமும் தலைகளில் இருந்த தொப்பிகளை திருத்திக் கொண்டு இறங்கினார்கள். இருவர்க்குமே வயது முப்பத்தைந்திலிருந்து – நாற்பதுக்குள். செளந்தரராஜனுக்கு தொப்பை சற்றே தூக்கலாய் தெரிந்தது. காதோர கிருதா ஒரு மில்லி மீட்டர் அளவுக்கு மட்டும் சுண்ணாம்பு அடித்த மாதிரி நரைத்திருந்தது. சிவலிங்கம் ட்ரிம்மாகவும் - அவரைவிடக் கொஞ்சம் இளமையாகவும் தோற்றம் காட்டினார். லேசாக ராஜசேகரன் சாயலை வைத்திருந்தார்.

    அவர்கள் இருவரும் கோடவுனின் முன்புறக் கதவை நோக்கி வேகவேகமாய் போக- - கன்னையா ஓடி வந்து சேவித்தான்.

    செளந்தரராஜன் அதட்டலாய்க் கேட்டார்.

    யாரய்யா... நீ...?

    குடோன் வாட்ச்மேனுங்க...

    சாவி உங்கிட்டதானே இருக்கு...?

    ஆ... ஆமாங்கய்யா...

    பூட்டை தொறந்து வுடு...

    அய்யா...! விஷயம் என்னான்னு...?

    ராஸ்கல்! எதிர்க் கேள்வியா கேக்கறே... மரியாதை தொறடா கதவை.

    அய்யா... அதுக்கில்லைங்க... முதலாளிகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு...

    வாக்கியத்தை முடிப்பதற்குள் செளந்தரராஜன் கோபமான பார்வையில் அரண்டு போய் கோடவுன் பூட்டை விடுவித்தான் கன்னையா. கான்ஸ்டபிள் ஷட்டரை சர்ர்ரென்று உயர்த்தினார்கள்.

    உள்ளே மசமசப்பாய் இருட்டு. பெரிய சைஸ் சாக்கு மூட்டைகள் அம்பாரமாய் அடுக்கப்பட்டு தெரிந்தன.

    வாட்ச்மேன் லைட்டைப் போடு!

    கன்னையா ஸ்விட்ச் போர்டுக்கு போய் நான்கை ஸ்விட்ச்களைத் தட்ட கோடவுனின் மேற்கூரையில் இருந்த- ட்யூப்லைட்கள் வெளிச்ச உடம்பை காட்டின... கான்ஸ்டபிள்கள் கோடவுன் முழுவதும் பரவினார்கள். கன்னையா இன்ஸ்பெக்டரைப் பவ்யமாய் குனிந்தான்'.

    அய்யா...

    ம்...

    என்னோட முதலாளிக்கு நான் ஒரு போன் பண்ணிகிட்டுங்களா?

    அவர் தலையை ஆட்ட -

    கன்னையா அவசர அவசரமாய் டெலிபோனை நெருங்கி ரிஸீவரை எடுத்துக் கொண்டு டயலைச் சுழற்றினான். மறுமுனையில் ரிங் போய் சாவகாசமாய் ரிஸீவர் ஒக்கப்பட்டது.

    ஹலோ என்றது.

    அய்யா! வணக்கம்ங்க... நான் கோடவுன் வாட்ச்மேன் பேசுறேன்

    என்னடா...?

    முதலாளி தணிகாசலத்தின் குரலில் எரிச்சல் இருந்தது.

    அய்யா...! நம்ம கோடவுனுக்கு போலீஸ் வந்திருக்காங்க

    போ... போலீஸா...?

    ஆ... ஆமாங்கய்யா...

    எ... எதுக்கு வந்திருக்காங்க...?

    ஏதோ... சோதனை போடணுமாம்...

    அடிச் செருப்பாலே... என்னடா சோதனை...?

    "எனக்குத் தெரியல்லிங்க... ரொம்ப கெடுபிடி

    Enjoying the preview?
    Page 1 of 1