Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thai Manne Vanakam
Thai Manne Vanakam
Thai Manne Vanakam
Ebook145 pages34 minutes

Thai Manne Vanakam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Thai Manne Vanakam

Read more from Rajeshkumar

Related to Thai Manne Vanakam

Related ebooks

Related categories

Reviews for Thai Manne Vanakam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thai Manne Vanakam - Rajeshkumar

    20

    1

    சுவாசிக்காமல்கூட இருந்துவிடுவேன்! என் தாய் மண்ணை நேசிக்காமல் என்னால் இருக்க முடியாது.

    சென்னை.

    ராஜ்பவன்.

    பூ விரிகிற மாதிரியான தினுசில் அந்த வியாழக்கிழமையின் பொழுது விடிந்து கொண்டிருக்க பூஜையறையிலிருந்து கவர்னர் தேசாய் வெளிப்பட்டார்.

    அறுபது வயது. உத்தர பிரதேச உயரம். வெண்ணெயில் லேசாய் குங்குமம் கலந்து பிசையப்பட்ட மாதிரியான நிறம். நெற்றியின் மையத்தில் குங்குமமும் சந்தனமும் ஒன்றின் மேல் ஒன்று உட்கார்ந்து அந்த சதைப் பிடிப்பான முகத்துக்கு ஒரு களையைக் கொடுத்தது.

    பூஜையறையினின்றும் வெளிப்பட்ட தேசாய் பத்திரிக்கைகளை புரட்டிப் பார்க்கும் எண்ணத்தோடு ஹாலின் மையத்தை நோக்கிப் போக - அவருடைய அந்தரங்க செயலாளர் கபூர் எதிர்ப்பட்டார்.

    குட்மார்னிங்... - ஸார்

    குட்மார்னிங் மிஸ்டர் கபூர். சொல்லிக் கொண்டே நடக்க முயன்றவரை எக்ஸ்க்யூஸ்மி... சொல்லி கபூர் குரல் கொடுக்க தேசாய் நின்றார்.

    என்ன...?

    ஸார்... நீங்கள் பூஜையில் இருந்தபோது டெல்லியிலிருந்து - பிரதமர் அலுவலகத்திலிருந்து உங்களை இரண்டு முறை தொடர்பு கொள்ள முயன்றார்கள். நீங்கள் பூஜையில் இருப்பதாக சொன்னதும் பிறகு தொடர்பு கொள்ளப் போவதாக சொல்லிவிட்டார்கள்.

    என்ன விஷயம் என்று கேட்டீர்களா?

    கேட்டேன்...

    பதில் என்ன...?

    உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

    தேசாய் தலையில் அடித்துக் கொண்டார். இந்த டெல்லிக்காரர்களுக்கு வேறு வேலையே கிடையாது. தமிழக அரசைக் கலைக்க ஏதாவது ஒரு வலுவான காரணத்தை தேடித் கண்டுபிடிக்கச் சொல்கிறார்கள். பொழுது விடிந்து பொழுது போனால் டெல்லிக்காரர்களுக்கு இதே வேலையாய் போயிற்று.

    தேசாய் சலித்துக் கொண்டே போய் வெல்வெட் சோபாவுக்கு சாய்ந்தார். பி.ஏ. கபூர் பக்கத்தில் வந்து நின்று, முக்கியமான செய்திகளை ஸ்கெட்ச் பேனாவால் மார்க் செய்து வைத்திருந்த ஆங்கில நாளேடுகளைப் புரட்டி வைத்தார். தேசாய் ரீடிங் க்ளாஸை மாட்டிக் கொண்டு செய்திகளை நுனிப்புல் மேய்ந்தார். ஹிந்தியில் ஒரு கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்தி இன்றைய அரசியல்வாதிகளைத் திட்டிவிட்டு கபூரை ஏறிட்டார். மிஸ்டர் கபூர்

    ஸார்...

    இரண்டு நாட்களுக்கு முன்னால் நம் ராஜ்பவனின் பின்பக்க காம்பௌண்ட் கேட் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த ஒருவனை போலீஸில் ஒப்படைத்தோமே?

    ஆமாம் ஸார்...

    அவனைப் பற்றி ஏதாவது தகவல் போலீஸிடமிருந்து வந்ததா...?

    இல்லை ஸார்... இன்னமும் அவனிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    தேசாய் கோபமாய் நிமிர்ந்தார்.

    "என்னது...! ஆள் பிடிபட்டு இரண்டு நாட்களாகி விட்டது. இன்னுமா அவனிடம் விசாரணை முடிய வில்லை?

    நேற்று மாலை வரைக்கும் அந்த செய்திதான் ஸார். பிடிபட்டவன் இதுவரைக்கும் வாயைத் திறந்து பேசவில்லையாம்.

    அவன் வாயைத் திறக்கவேயில்லை என்றால் அவனிடம் ஏதோ தப்பு இருக்கிறது என்றும் அர்த்தம்.

    இது விஷயமாய் டி.ஜி.பி.யை உங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லட்டுமா ஸார்...?

    வேண்டாம். இன்று மாலை வரை பார்ப்போம்.

    எஸ்... ஸார்... தலையாட்டிய கபூர் தன் கையில் வைத்திருந்த எக்ஸிக்யூடீவ் டயரியைப் பிரித்து வைத்துக் கொண்டார்.

    இன்றைக்கு முழுவதும் உள்ள உங்களுடைய எங்கேஜ்மெண்ட்களை ஒரு தடவை படித்துக் காட்டிவிடட்டுமா ஸார்?

    அதெல்லாம் அப்படியே இருக்கட்டும் கபூர். என்மகள் தேவதா இன்றைக்கு ஹைதராபாத்திரிலிருந்து வருகிறாள். ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பிவிட்டீர்களா...?

    ஐந்து மணிக்கே கார் போயாயிற்று ஸார். ட்ரெயின் ஒரு மணி நேரம் லேட்.

    தேசாய் தன் மணிக்கட்டில் மின்னிய ரோலக்ஸ் வாட்ச்சைப் பார்த்து விட்டு சொன்னார்.

    அப்படியென்றால் ட்ரெயின் ஏழு மணிக்குத்தான்!

    ஆமாம் ஸார்

    சரி... அதற்குள் நான் என் யோகா பயிற்சிகளை முடித்துக் கொண்டு வந்துவிடுகிறேன்.

    தேசாய் எழுந்து மாடிப்படிகளில் உயர்ந்து வழக்கமாய் யோகா செய்யும் அறைக்குள் நுழைந்தார். குளிர்ச்சியில் உறைந்து போயிருந்த மார்பிள் தரைப்பரப்பில் நடந்து வலதுபக்க மூலையில் போய் சப்பணமிட்டு உட்கார்ந்தார். கைக்கு எட்டும் விதத்தில் இருந்த ஸ்விட்ச் போர்டில் ஒரு பட்டனைத் தட்ட எங்கோ ஒளிந்திருந்த ரேடியோ ஸ்பீக்கர் மெலிதாய் 'ஓம்' என்ற வார்த்தையை இசைலயத்தோடு ரீங்காரம் செய்தது.

    கிட்டத்தட்ட அரைமணி நேர யோகா பயிற்சிக்கும் பின் தேசாய் அறையினின்றும் வெளிப்பட்டார். பக்கத்து அறையில் மணக்க மணக்க காப்பியோடு வெள்ளுடுப்பு யூனிஃபார்மில் பணியாள் காத்திருந்தான்.

    குட்மார்னிங் ஸார்

    அவன் பவ்யமாய் சொன்ன குட்மார்னிங்கை தலையசைப்பில் ஏற்றுக் கொண்டு காபிக் கோப்பையை எடுத்து உதட்டுக்குக் கொண்டு போன விநாடி - ஜிப்பா பாக்கெட்டில் இடம் பிடித்திருந்த அவருடைய பர்சனல் செல்போன் முனகி முனகி கூப்பிட்டது. ஒரு வாய் காப்பியை உறிஞ்சிக் கொண்டே செல்போனின் ஹேண்ட்செட்டை எடுத்துக் காதுக்குப் பொருத்தினார்.

    எஸ்...

    மறுமுனையில் மகள் தேவதாவின் குரல்.

    டாடி...! குட்மார்னிங்...

    தேசாய் உடம்பு முழுக்க மலர்ந்தார்.

    தேவதா... நீயாம்மா...! இப்ப எங்கிருந்து பேசறே...?

    "மெட்ராஸ் சென்ட்ரல்லயிருந்து. ரயில் இப்பத்தான் வந்தது. ஸ்டேஷன்

    ப்ளாட்பாரத்தில் இப்போ நடந்துகிட்டே பேசிட்டிருக்கேன். இன்னும் இருபது நிமிஷத்துல உங்க பக்கத்துல இருப்பேன்..."

    ஜர்ணி கம்ஃபர்டபிளா இருந்ததாம்மா...?

    ம்...

    ராத்திரி நல்லா தூங்கினியா?

    Enjoying the preview?
    Page 1 of 1