Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Theera Visaarippathey Poi!
Theera Visaarippathey Poi!
Theera Visaarippathey Poi!
Ebook131 pages42 minutes

Theera Visaarippathey Poi!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Theera Visaarippathey Poi!

Read more from Rajeshkumar

Related to Theera Visaarippathey Poi!

Related ebooks

Related categories

Reviews for Theera Visaarippathey Poi!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Theera Visaarippathey Poi! - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    "குட்மார்னிங் ஸார்...! சொல்லிக் கதவைத் திறந்தபடி உள்ளே நுழைந்த தன்னுடைய பர்சனல் செக்ரட்ரி ஜானகிராமனை முறைத்தார் ஜோதிமயம். அவருடைய சதைப்பிடிப்பான கோதுமை நிற முகம் கோபத்தில் காரட் நிறத்துக்கு உயர்வதைக் கண்ட ஜானகிராமன் சட்டென்று நுனி நாக்கைக் கடித்து முகம் வியர்த்து ஸாரி" சொன்னார்.

    ஜோதிமயம் கோபம் குறையாத குரலில் கேட்டார்.

    எதுக்காக இந்த ஸாரி...?

    தெரியாமே இன்னிக்கு குட்மார்னிங் சொல்லிட்டேன் ஸார்...

    ஏன் இன்னிக்கு எனக்கு குட்மார்னிங் சொல்லக் கூடாது...?

    அது... வந்து... வந்து...

    ம்... சொல்லுங்க!

    இன்னிக்கு உங்க டாட்டர் சௌபர்ணிகா இறந்த நாள்.

    எனக்கு குட்மார்னிங் சொல்றதுக்கு முன்னாடி ஏன் இது உங்களுக்கு ஞாபகம் வரலை...?

    ஸாரி... ஸார்... வேற ஏதோ ஞாபகத்துல இருந்தேன்.

    என்ன ஞாபகம்...?

    அது... வந்து... வீட்ல கொஞ்சம் பிரச்னை ஸார்

    உங்களுக்கு ரெண்டு நாள் தர்றேன். உங்க வீட்டுப் பிரச்னைகளையெல்லாம் சால்வ் பண்ணிட்டு அப்புறமா ஆபீஸுக்கு வந்தா போதும்...

    ஸாரி... ஸார்...

    அதான்... மொதலிலேயே சொல்லிட்டீங்களே...! திரும்பத் திரும்ப அதையே ஏன் சொல்லிக்கிட்டு இருக்கீங்க? கையில் வெச்சிருக்கிற ஃபைலை அந்த டீபாய் மேல வெச்சுட்டு கிளம்புங்க. ரெண்டு நாளைக்கு வீட்ல இருந்து எல்லாப் பிரச்னைகளையும் முடிச்சுட்டு வாங்க.

    ஸ... ஸார்...

    ஜானகிராமன் தயங்க ஜோதிமயம் வாசலை நோக்கி கை காட்டினார்.

    கெட்லாஸ்ட்...

    இனிமேலும் அங்கே நின்று கொண்டிருந்தால் ஜோதிமயம் எரிகிற ஒரு கொள்ளியாய் மாறி விடுவார் என்பதைப் புரிந்து கொண்ட ஜானகிராமன் மெல்ல அறை வாசலை நோக்கிப் போனார்.

    ஜோதிமயம் கோபம் தணிந்தவராய் கார்ட்லெஸ் டெலிபோனை எடுத்து இண்டர்காம் பட்டனைத் தட்டி ஸ்டெனோ பானுவைக் கூப்பிட்டார்.

    பானு...!

    மறுமுனையில் பானுவின் குரல்.

    ஸார்...

    இப்ப நீ என்ன பண்ணிட்டிருக்கே?

    இன்வாய்ஸ் ,ஃபைலிங் ஸார்

    அதையெல்லாம் வேற யாராவது பார்க்கட்டும். இன்னிக்கும் நாளைக்கும் நீதான் எனக்கு பர்சனல் செக்ரட்ரி. ஜானகிராமன் ரெண்டு நாளைக்கு லீவ்ல போறார்..." –

    ஸார்...

    ஜானகிராமனை உடனடியாப் பார்த்து என்னோட ரெண்டுநாள் என்கேஜ்மெண்ட் ஷெட்யூல் லிஸ்டடை வாங்கிக்க...

    எஸ்...ஸார்...

    பி.ஆர்.ஓ. வந்துட்டாரா...?

    வந்துட்டார் ஸார்...

    என்னை இண்டர்காம்ல கான்டாக்ட் பண்ணச் சொல்லு...

    எஸ்.ஸார்... ஜோதிமயம் கார்ட்லெஸ்ஸைக் கவிழ்த்து விட்டு மேஜைக்கு பக்கவாட்டில் இருந்த அழைப்பு மணியின் பொத்தானை விட்டு விட்டு இரண்டு தடவை அழுத்தினார். ப்யூன் மாரிமுத்துவுக்கான அழைப்பு அது. அடுத்த இரண்டாவது நிமிடம் ரிடையர்மெண்ட்டுக்கு நான்கைந்து வருஷமே பாக்கி வைத்து இருந்த மாரிமுத்து எட்டிப்பார்த்தான்.

    அய்யா...

    உள்ளே வா மாரிமுத்து...

    வந்தான். ஜோதிமயத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாய் நின்றான். ஜோதிமயம் குரலைத் தாழ்த்திக் கொண்டு கேட்டார்.

    பீடி வெச்சிருக்கியா?

    இல்லிங்கய்யா

    ஏண்டா...வெச்சிருப்பியே?

    பீடி குடிக்கிறதை நிப்பாட்டிட்டேன்யா.

    பெண்டாட்டி சொல்லியா...?

    இல்லீங்கய்யா...! ராத்திரி பூராவும் வறட்டு இருமல்! கேன்ஸர் வந்துடும்ன்னு டாக்டர் சொன்னார்ங்க...!

    உடனே பயந்துட்டியா...?

    ஜோதிமயம் சிரித்தார் வெறுப்பாய்.

    அதெல்லாம் சும்மாடா...! என்னோட அப்பாவும் தாத்தாவும் நூத்தி ரெண்டு வயசுவரைக்கும் பீடியும் சுருட்டும் புடிச்சாங்க. கடைசி வரைக்கும் கல்லுக்கணக்கா இருந்தாங்க. ஒரு நோய் நொடி கூட. எட்டிப் பார்க்கலை. போய் ஒரு பீடிக்கட்டு வாங்கிட்டு வா...

    சரிங்கய்யா... மாரிமுத்து தலையாட்டிவிட்டு வெளியேறிப் போக இண்டர்காம் சிவப்பு விளக்கை எரியவிட்டபடி கூப்பிட்டது. ஜோதிமயம் ரிஸீவரை எடுக்காமல் பட்டனை அழுத்திவிட்டு பேசினார்.

    யாரு...?

    ஸார்... நான் பி.ஆர்.ஓ... வரதன்...

    இன்னிக்கு வந்த எல்லா ந்யூஸ் பேப்பர்ஸையும் கலெக்ட் பண்ணிட்டியா...?

    பண்ணிட்டேன் ஸார்...

    எல்லாத்தையும் என்னோட ரூமுக்கு கொண்டா!

    இப்பவேவா ஸார்...?

    இல்ல... ராத்திரி இருட்டின பிறகு கொண்டா...! யோவ்...! உடனே கொண்டாய்யா... நீயெல்லாம் ஒரு பி.ஆர்.ஓ...!

    ஸாரி ஸார்...

    அந்த ஸாரியை நீயே கட்டிக்கோ எரிச்சலாய் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டு எக்ஸிக்யூட்டீவ் நாற்காலிக்கு சாய்ந்த போது அறைக்கதவு தட்டப்பட்டது. உள்ளே வரலாம் என்பதற்கு அடையாளமாய் பஸ்ஸர் கொடுத்தார் ஜோதிமயம்.

    ஸ்டெனோ பானு கதவைத் திறந்துகொண்டு மெல்ல எட்டிப்பார்த்தாள்.

    ஓ... நீயா...? வாம்மா...

    பானு உள்ளே வந்தாள். கையில் சின்னதாய் ஒரு டயரி.

    என்னம்மா...?

    இன்னிக்குப் பூராவும் உங்களுக்குள்ள என்கேஜ்மெண்ட்ஸை க்ராஸ் செக் பண்ணிக்கலாம்ன்னு வந்தேன் ஸார்.

    ஜானகிராமன் போய்ட்ராரா?

    போய்ட்டார் ஸார். ரொம்பவும் ஃபீல் பண்ணினார் ஸார்...

    "ஃபீல் பண்ணட்டும்...! நீயே சொல்லும்மா. என்னோட ஒரே பொண்ணு சௌபர்ணிகாவை

    Enjoying the preview?
    Page 1 of 1